புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_m10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_m10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 6%
heezulia
குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_m10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_m10குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 30, 2021 7:00 pm

குறட்டை விடுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், உடன் தூங்குபவர்களின் குறட்டையால் பலரும் தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். தூங்கும் நேரத்தில் அருகில் ஒருவர் குறட்டை விட்டால் அது எரிச்சலாகவும் வெறுப்பாகவும் இருக்கும்.

குறட்டை விடுபவர்கள் நிம்மதியாக தூங்குகிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. அவ்வப்போது குறட்டை விட்டால் கூட பரவாயில்லை. தினமும் குறட்டை விடுபவர்கள், குறட்டையின் சத்தம் கூடி குறைந்தால் அது மிகவும் ஆபத்து என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்களில் நான்கில் ஒருவருக்கும் பெண்களில் மூன்றில் ஒருவருக்கும் இரவில் குறட்டை ஏற்படுவதாக நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

குறட்டை எப்படி ஏற்படுகிறது?

சுவாசிக்கும் காற்றானது மூச்சுக்குழாய் வழியே நுரையீரலை அடைகிறது. இந்த பாதையில் தடைகள் ஏற்பட்டால் திசுக்கள் அதிர்வுறுவதால் குறட்டை ஏற்படுகிறது.

தூங்கும்போது உங்கள் நாக்கு, தொண்டை பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடைகின்றன. அந்த நேரத்தில் காற்று செல்லும்போது சுவாசப்பாதை சுருங்கியிருப்பதால் திசுக்கள் அதிர்வுறுகின்றன. மேலும் மல்லாந்து படுக்கும்போது நாக்கு சிறிது உள்வாங்கி தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் சுவாசப் பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை ஏற்படுகிறது.

குறட்டை விடுவது ஆபத்தா?

குறட்டை விடுவதை பெரும்பாலும் ஒரு சாதாரண பிரச்னையாக நினைத்தாலும் அதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அவ்வப்போது குறட்டை வந்தால் பெரிதாக பிரச்னை இல்லை.

ஆனால், தினமும் குறட்டை விடுவது, அதிக நேரம் குறட்டை விடுதல், குறட்டையின் சத்தத்தில் மாறுபாடு இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.

ஏனெனில் குறட்டை சத்தம் அதிகமாக இருக்கும்போது மூச்சு அதிகமாக உள்ளிழுக்கப்படும்போது சுவாசப் பாதையில் அடைப்பு ஏற்பட்டு முழுவதுமாக மூச்சு நின்றுவிட கூட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒழுங்கற்ற சுவாசத்துடன் குறட்டை விடுவது இதய நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். மூச்சுத்திணறல் குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஸ்லீப் அப்னியா தூக்கக் கோளாறும் காரணமாக இருக்கலாம்.

குறட்டை ஏன் ஏற்படுகிறது?

உடல் பருமன் அல்லது அதிக எடை குறட்டை ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மேலும் மூக்கடைப்பு, சைனஸ் பிரச்னை, தொண்டைப் பிரச்னைகள், தைராய்டு, மது அருந்துவது, புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை ஏற்பட காரணமாகலாம். எனினும் சில பழக்கவழக்கங்களில் மாற்றம் செய்வதன் மூலம் குறட்டை வராமல் தடுக்கலாம்.

உடல் பருமன்

உடல் எடை அதிகரித்த பின்னர்தான் குறட்டை விடும் பழக்கம் உங்களுக்கு வந்தது என்றால் உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கலாம். பெரும்பாலாக உடல் பருமன் கொண்டவர்கள் கழுத்துப் பகுதியில் அதிக கொழுப்பைக் கொண்டிருக்கிறார்கள். இது சுவாசப்பாதையின் அளவைக் குறைக்கிறது.

உடல் பருமனாக இருப்பவர்கள் எடையைக் குறைக்கும் பட்சத்தில் குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

தூங்கும் நிலை

தூங்கும் நிலையைப் பொருத்தும் குறட்டை ஏற்படுகிறது. மல்லாந்து படுத்தால் குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் அல்லது குறட்டை ஏற்படுவது தொடர்ந்து அதிகரிக்கலாம். ஏனெனில் மல்லாந்து படுக்கும்போது சுவாசப்பாதைகள் அதிகம் சுருங்குகின்றன.

எனவே, தூங்கும்போது பக்கவாட்டில் படுத்தால் குறட்டையின் தீவிரம் மற்றும் அதிர்வெண் கணிசமாகக் குறைகிறது.

சுவாசப்பாதை

மூக்குத் துவாரங்களை நன்றாக திறந்து வைப்பதன் மூலமாக குறட்டையைத் தடுக்கலாம். அதாவது மூக்கடைப்பு உள்ளிட்ட நாசித் துவாரங்களை அடைக்கக்கூடிய வகையில் இருக்கக்கூடாது.

சூடான எண்ணெய் மசாஜ் அல்லது நாசியில் சில சொட்டுகள் எண்ணெய் விடுவதன் மூலம் மூக்கடைப்பை சரி செய்யலாம். படுக்கைக்கு முன் சூடாக தண்ணீர் அல்லது தேநீரும் அருந்தலாம்.

உடல் நீர்ச்சத்து

உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பது குறட்டையைத் தவிர்ப்பது மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பராமரிக்க உதவும்.

உடலில் நீர்ச்சத்து குறையும்போது சுவாசப் பாதையில் காற்றின் சரியான ஓட்டத்தைத் தடுத்து குறட்டை ஏற்படுத்தும்.

எனவே ஆண்கள் தினமும் குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் அதேநேரத்தில் பெண்கள் தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

புகை பிடித்தல், மது அருந்துதல்

மேல் சுவாசப்பாதை வீக்கம் காரணமாக புகை பிடிப்பவர்களில் குறட்டை ஏற்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். புகைபிடிப்பதை விட்டுவிடுவது குறட்டைக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும் என்கின்றனர்.

அதுபோல, ஆல்கஹால் என்பது சுவாசப்பாதையைச் சுற்றியுள்ள தசைகளை தளர்த்தும். எனவே, படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன்பு வரை குடிப்பதைத் தவிர்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள இவற்றை தினமும் முயற்சி செய்தால் வெகு விரைவில் மாற்றங்களைக் காணலாம் என்றும் இதனை முயற்சி செய்தும் பயனில்லை என்பவர்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுவதும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.

தினமணி




குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 30, 2021 7:20 pm

குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? 103459460 குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? 3838410834
-
குறட்டை ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி? Sleep.jpg?w=768&dpr=1

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 31, 2021 2:07 pm

தூங்கும்போது பக்கவாட்டில் படுத்தால் குறட்டையின் தீவிரம் மற்றும் அதிர்வெண் கணிசமாகக் குறைகிறது.

இதுவும் சுலபமான தீர்வுதான்.

ஆனால் தூங்கும் போது மல்லாந்து படுப்பதோ /கை மாறி படுப்பது --நம் கையில் இல்லை 
அனிச்சையாக ஏற்படுகின்றது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக