Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் ஏன் சிறந்தவள்
2 posters
Page 1 of 1
பெண் ஏன் சிறந்தவள்
![பெண் ஏன் சிறந்தவள் Image-330](https://rammalar.files.wordpress.com/2021/08/image-330.png)
-
அறிவியல் சொல்லும் 10 விஷயங்கள்
மாறும் என்பதைத் தவிர மற்ற எல்லாமே மாறிக்
கொண்டிருந்தாலும், மனம் கசக்கிற வேளைகளில்
‘பொம்பளையா மட்டும் பொறக்கவே கூடாது’ என்ற
வருத்தம் மட்டும் இன்னும் மாறவில்லை.
பெரிய பதவி, சுய சம்பாத்தியம் என சமூகத்தின் உயர்
மட்டத்தில் இருக்கும் பெண்களிடமும், இந்த வார்த்தைகளை
அவ்வப்போது கேட்க முடிகிறது.
‘உண்மையில், ஆண்களைவிட பெண்கள் பல விதங்களிலும்
பல விஷயங்களிலும் பெஸ்ட்’ என்கிறார் வாழ்வியல்
மேம்பாட்டுத் துறை நிபுணர் அசோக் தாமோதரன்.
1. கல்விக்கு அதிபதி!
10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வு முடிவுகள் வரும்போது
ஒரு விஷயத்தைக் கவனித்திருப்பீர்கள். பெரும்பாலும்
முதல் இடம் பிடிப்பவர்கள் மாணவிகளாகவே இருப்பார்கள்.
கல்விக்கு அதிபதியான சரஸ்வதி ஒரு பெண் தெய்வம்
என்ற காரணமாக இருக்கலாம் என்று வேடிக்கைக்காகச்
சொன்னாலும், அதையும் தாண்டி பல விஷயங்கள்
பெண்களிடம் உள்ளன.
படிக்காவிட்டால் எதிர்காலத்தில் கஷ்டப்பட வேண்டியிருக்கும்
என்ற விழிப்புணர்வும், தொலைநோக்குப் பார்வையும்,
பெற்றோரின் சிரமமும் சேர்ந்து கூடுதல் அக்கறையை
பெண்களிடம் உண்டாக்கி விடுகிறது.
மாணவர்களைப்போல விளையாட்டுத்தனமோ, கவனச்
சிதறலோ மாணவிகளிடம் இல்லை என்பதும் கூடுதல் பலம்.
மாணவிகள் கல்வியில் முன்னணியில் இருப்பதன் ராஜ ரகசியம்
இதுதான்!
2. வேலைக்கு நாங்க கியாரன்டி!
ஒரு வேலையில் ஈடுபட்டுவிட்டால், அந்த வேலையை சிறப்பாக
செய்து முடிப்பது ஆண்களின் திறன் என்றாலும், அவர்களுக்கு
ஏதாவது பிரச்னை என்றால் வேலையில் கவனம் இருக்காது.
பெண்கள் வேலையையும் தனிப்பட்ட பிரச்னை களையும்
குழப்பிக் கொள்வதில்லை.
அலுவலகத்துக்குச் சரியான நேரத்துக்கு வருவதிலும் பெண்களே
முதலிடம் பிடிக்கிறார்கள். அடிக்கடி டீ சாப்பிடுவதற்கு, புகைப்
பிடிப்பதற்கு வெளியில் செல்கிற பழக்கமும் ஆண்களிடம்
இருக்கும் பெரிய மைனஸ்.
பெண்களிடம் இதுபோன்ற குறைபாடுகள் இல்லை.
3. ஆரோக்கியம் பழகு!
சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற
பழமொழிக்கேற்றாற் போல உடலை சரியாக வைத்துக் கொள்ள
வேண்டும் என்ற அக்கறை பெண்களிடம் இயல்பாகவே உண்டு.
ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், மது, புகை, பாக்கு வகைகள்
என்று உடலைக் கெடுத்துக் கொள்ளும் தீய பழக்கங்கள்
பெரும்பாலும் ஆண்களுக்கே இருக்கிறது. இந்தப் பழக்கங்கள்
இருப்பவர்களை ஒதுக்கித் தள்ளும் அளவுக்கு பெண்கள் உடல்
நலக்கேடான பழக்கங்களை வெறுக்கிறார்கள்.
4. பாதுகாப்பான பயணம்
ஆண்கள் மரபு ரீதியாகவே போட்டியிட்டு வெல்லும் குணாதிசயம்
கொண்டவர்கள். சாகசம் செய்வதிலும் அவர்களுக்கு ஆர்வம்
அதிகம். துரதிர்ஷ்டவசமாக ஆண்களுக்கு எமனாக அமைவதே
இந்த போட்டி மனப்பான்மையும் சாகச உணர்வும்தான்.
பெண்கள் அப்படி உயிரைப் பணயம் வைத்து வாகனம்
ஓட்டுவதில்லை. ஆனால், விரைவாகவும் முறையாகவும்
வாகனங்களை இயக்குவதில் திறமை கொண்டிருக்கிறார்கள்.
அதனாலேயே பெண்களால் ஏற்படும் சாலை விபத்துகள்
குறைவாகவே இருக்கின்றன.
5., பெண்கள் ஏன் அழகாக இருக்கிறார்கள்?
இந்தக் கேள்விக்கு ‘நீங்கள் ஆண்களாக இருப்பதால்…’ என்று
பதில் சொல்லிவிட முடியும். ஆனால், ஒரு பெண்ணே இன்னொரு
பெண்ணிடம் பொறாமை கொள்வதும், ஆசைப்படுவதெல்லாம்
ஏன்? பேரன்பும் பெருங்கருணையும் கொண்டவர்கள் என்பதைப்
போலவே பேரழகுக்கு சொந்தக்காரர்களாகவும் பெண்களே
இருப்பதை, ஆண்களே பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்வார்கள்.
‘மயில், சேவல், சிங்கம் என்று மற்ற உயிரினங்களில் எல்லாம்
ஆண் இனத்தை அழகாகப் படைத்த இறைவன், மனித இனத்தில்
மட்டும் பெண்களை அழகாகப் படைத்து ஆண்களைக் கிறுக்குப்
பிடிக்க வைத்துவிட்டான்’ என்று நடிகர் சிவக்குமார் குறிப்பிட்டது
நினைவிருந்தால் இது புரியும்!
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பெண் ஏன் சிறந்தவள்
6. மதுரையா? சிதம்பரமா?
வீட்டில் யாருடைய நிர்வாகம் என்பதை ஜாலியாக விசாரிக்கும்
இந்தக் கேள்வி முன்பு மிகவும் பிரபலம். பெண்களின் நிர்வாகம்
என்றால் மதுரை (மீனாட்சி) என்றும் ஆண்களின் நிர்வாகம் என்றால்
சிதம்பரம் (நடராஜர்) என்றும் சொல்லி வந்தார்கள். சிக்கனம்,
வீட்டுக்கான தேவைகளில் தெளிவு, எதிர்கால சேமிப்பு என்று
ஆண்கள் பலவீனமாக இருக்கும் ஏரியாக்களில், பெண்கள்
அலட்டிக் கொள்ளாமலேயே ஸ்கோர் பண்ணுகிறார்கள்.
அதனால்தான், ‘நீயே பாத்துக்கம்மா…’ என்று பெரும்பாலான
வீடுகளில் ஆண்கள் சரண்டராகி விடுகிறார்கள். நான்கு பேர்
பொறாமைப்படுகிற அளவிலோ, பெருமைப்படுகிற அளவிலோ,
ஒரு குடும்பம் சிறப்பாக செயல்பட்டு வந்தால், பின்னணியில்
ஒரு பெண் இருக்கிறாள் என்பதே நிஜம்!
7. சூழலுக்கு ஏற்றாற்போல செயல்படுதல்
Survival of the fittest என்று சூழலுக்கு ஏற்றாற்போல
தங்களை வலிமையாக மாற்றிக்கொண்டு தப்பிப் பிழைக்கிற
உயிரினங்களைப் பற்றிச் சொல்வார்கள். இந்தக் குணம்
பெண்களிடம் அதிகம் உண்டு. காதல் விஷயத்திலே எடுத்துக்
கொண்டால் கூட, காதல் கனிந்து திருமணமாகக் கைகூடுவதில்
பெண்களின் மன உறுதியே பெரும்பங்கு வகிக்கிறது.
சூழல் சரிவராத பட்சத்தில் பிரிவை ஏற்றுக் கொள்கிறவர்களும்
பெண்கள்தான். காதல் பிரிவில் வலி என்பது ஆண், பெண்
இருவருக்கும் ஒரே அளவுதான் என்றாலும், எல்லாவற்றையும்
தாண்டி, ‘அடுத்து என்ன’ என்று பெண்கள் செயல்பட ஆரம்பித்து
விடுகிறார்கள்.
ஆண்களும் யதார்த்தத்தைப் புரிந்து மாறிவிடுகிறார்கள்தான்.
ஆனால், அவர்களுக்கு நீண்ட அவகாசம் தேவைப்படுகிறது.
‘இது சரியா, தவறா’ என்ற விவாதங்களுக்குள் செல்லாமல்,
யதார்த்தத்துக்கு ஏற்றாற்போல மாறிவிடும் பெண்களின் இந்த
குணத்தையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். அதனால்,
‘இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சுபோச்சுடா’ என்று
டாஸ்மாக் பேக்கிரவுண்டில் பாட்டு போடுவதெல்லாம் சில்லி
மேட்டரே!
8. நேருக்கு நேர்!
நேர்முகத் தேர்வுகளில் பதற்றம் இல்லாமல் சிறப்பாகச்
செயல்படுவதிலும், தகவல் தொடர்பிலும், ஆண்களைவிட பெண்களே
சிறப்பானவர்கள் என்கிறார்கள் மனித வள மேம்பாட்டுத்துறையினர்.
இதனால்தான், நேர்முகத்தேர்வின் வெற்றி சதவிகிதத்திலும் பெண்களே
முதல் இடத்தில் இருக்கிறார்கள். பெண் என்ற காரணத்தால் வேலை
கிடைத்துவிட்டது என்று சொல்வதெல்லாம் உண்மையை புரிந்து
கொள்ளாத மேலோட்டமான குற்றச்சாட்டே!
9. கண்ணீர் நல்லது!
‘ஆண்கள் என்றால் அழக்கூடாது, புலம்பக் கூடாது’ போன்ற சமூக
மாயையால் ஆண்கள் பெரும்பாலும் பிரச்னைகளை வெளியில் காட்டிக்
கொள்வதில்லை. ஒரு பிரச்னையை பகிர்ந்து கொண்டால் உதவி
செய்கிறவர்களைவிட கேலி செய்கிறவர்கள் அதிகம் என்ற
எண்ணத்தாலும் பிரச்னைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்வதில்லை.
பெண்களுக்கோ பிரச்னை மூட்டைகளை மனதுக்குள் சுமக்கிற பழக்கம்
இல்லை. மொழித்திறனும் பெண்களுக்கு அதிகம் என்பதால்
மற்றவர்களிடம் அதைப் பேசி மனதை லேசாக்கிவிடுவார்கள்.
அதனால்தான், ஆண்கள் அளவுக்கு பெண்களுக்கு மன அழுத்தம்
போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதில்லை.
10. வீடும் கட்டிடமும்
ஒரு பெண் காலடி வைத்த பிறகுதான் ஒரு கட்டிடம் வீடு என்ற கௌரவம்
பெறுகிறது. இல்லாவிட்டால், அது வெறும் கட்டிடம் மட்டுமே என்று
சொல்வதுண்டு. பெண்கள் ஊருக்குப் போய்விட்டு ஒரு வாரம் கழித்துத்
திரும்பி வந்தால், அந்த வீடு என்ன நிலையில் இருக்கும் என்பது நமக்குத்
தெரிந்ததுதான்.
பேச்சலர்களின் அறைக்கும் பெண்கள் தங்கியிருக்கும் அறைக்கும்
இருக்கும் வித்தியாசத்துக்கும் இதுவே அடிப்படை. நான்கு ஆண்கள்
இருந்தாலும் விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும் என்பதும் அதற்காகத்தான்.
அதனால்தான், ‘சக்தி இல்லையென்றால் சிவனே இல்லை’
என்றார்கள்.ஆகவே, இனி மறந்தும் ‘பொம்பளையாப் பொறக்கக் கூடாது’
என்ற வசனத்தைச் சொல்லாதீர்கள்…
நன்றி- குங்குமம் தோழி
![பெண் ஏன் சிறந்தவள் End_ba10](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
சிவா and T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: பெண் ஏன் சிறந்தவள்
எல்லாம் சரிதான் ஒரு குறிப்பிட அளவு.
பெண்களிடம் உள்ள ஒரு குறை.
அவர்கள், அவர்களுடைய மாமியார் /நாத்தனார் /ஓரகத்தி இவர்களை பற்றி குறை கூறுவதில் வல்லுநர்கள்.ஆனால் அதே குறை அவர்கள் தாயார் வழி வந்தவர்கள் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.இரட்டை நிலைப்பாடுகள்.
ஆனால் ஆண்கள் தங்கள் மாமனார் /மாமியார்/சகலை /மச்சினன்மார்கள் பற்றி எல்லாம் குறை கூறி திரிவதில்லை. இதுவும் கடந்து போகுமென வாய் மூடி ஆகவேண்டிய காரியத்தை பார்ப்பார்கள்.
மாறுபட்ட கருத்துக்கள் இருக்க வாய்ப்புண்டு.
பெண்களிடம் உள்ள ஒரு குறை.
அவர்கள், அவர்களுடைய மாமியார் /நாத்தனார் /ஓரகத்தி இவர்களை பற்றி குறை கூறுவதில் வல்லுநர்கள்.ஆனால் அதே குறை அவர்கள் தாயார் வழி வந்தவர்கள் செய்தால் கண்டுகொள்ளவே மாட்டார்கள்.இரட்டை நிலைப்பாடுகள்.
ஆனால் ஆண்கள் தங்கள் மாமனார் /மாமியார்/சகலை /மச்சினன்மார்கள் பற்றி எல்லாம் குறை கூறி திரிவதில்லை. இதுவும் கடந்து போகுமென வாய் மூடி ஆகவேண்டிய காரியத்தை பார்ப்பார்கள்.
மாறுபட்ட கருத்துக்கள் இருக்க வாய்ப்புண்டு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆணை விடச் சிறந்தவள் பெண்…மகாத்மா காந்தி
» பெண்தான் சிறந்தவள்
» நானே சிறந்தவள் ...!
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
» பெண்தான் சிறந்தவள்
» நானே சிறந்தவள் ...!
» பெண் குழந்தைகள்... பெண் தெய்வங்கள்: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்
» ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|