புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
சங்ககால சமையல் I_vote_lcapசங்ககால சமையல் I_voting_barசங்ககால சமையல் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்ககால சமையல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 10:03 pm

சங்ககால சமையல் 17

தமிழ் மக்களின் தனித்தன்மையையும், அவர்களது சிந்தனை திறனையும், தொன்மையையும் மிகத் திறம்படக் காட்டுவது சங்க இலக்கியம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் தமிழ் மக்கள் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை போன்ற ஐவகை நிலங்களுக்கு ஏற்ப கிடைத்த உணவுப் பொருட்களை கொண்டு சமைத்து வாழ்ந்தனர். வாழும் இடத்தில் கிடைத்த பொருட்களை கொண்டு மன்னரும் ஊர் மக்களும் உணவை தயாரித்து, உபசரித்துள்ளனர். அந்த வகை உணவுகளை பற்றி விவரித்துள்ளார் சமையல் கலைஞர் பிரியா பாஸ்கர்.


கீரை கடைசல்


தேவையானவை:


பசலைக் கீரை - 1 கட்டு,
சீரகம் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
நெய் - 1 டீஸ்பூன்,
பொடித்த மிளகு - 1/2 டீஸ்பூன்,
வரக்கொத்துமல்லி - 1 டீஸ்பூன்.

செய்முறை:


கீரையை நன்கு கழுவி நறுக்கிக் கொள்ளவும். 200 மி.லி. தண்ணீர் சேர்த்து கீரையை வேக வைக்கவும். கடாயில் நெய் சேர்த்து சூடானதும் சீரகம், மல்லியை சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த கீரை, உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சூடு ஆறியவுடன் மத்தில் நன்கு கடையவும். உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும், வைட்டமின்களும் கீரையில் உள்ளது.


தோல் உளுத்தம் பருப்பு பொங்கல்


தேவையானவை :


அரிசி - 100 கிராம்,
வெல்லம் - 150 கிராம்,
உளுத்தம் பருப்பு - 200 கிராம்,
நெய் - 2 மேஜைக்கரண்டி,
தேங்காய்துருவல் - 3 மேஜைக்கரண்டி,
ஏலக்காய் - 3.

செய்முறை :


1 : 3 என்ற அளவு தண்ணீரை சேர்த்து அரிசி மற்றும் உளுந்தை நன்கு குழைய வேக வைக்கவும். பொடித்த வெல்லத்தைத் தண்ணீரில் சேர்த்து கரைத்து, தனியே பாகு செய்து கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து தேங்காய்த் துருவல், பொடித்த ஏலக்காயைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதனுடன் குலைய வேக வைத்த அரிசி, உளுந்தைச் சேர்த்து நன்கு கிளறவும். கூடவே வெல்லப் பாகைச் சோர்த்து கொதிக்க விட்டு கிளறி இறக்கவும். சுவையான உளுத்தம் பருப்பு பொங்கல் தயார்.


கருணைக்கிழங்கு வறுவல்


தேவையானவை :


கருணைக்கிழங்கு - 300 கிராம்,
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்,
நெய் - தேவையான அளவு,
மிளகுத்தூள் - தேவையான அளவு,
உப்பு - சுவைக்கு ஏற்ப.

செய்முறை:


கருணைக்கிழங்கை கழுவிச் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து வடித்துக் கொள்ளவும். இதில் மிளகுத்தூளைச் சேர்த்து பிரட்டவும். கடாயில் நெய் சூடானதும் பிரட்டிய கிழங்கை ஒன்றன் பின் ஒன்றாக பொன்னிறமாகப் பொரிக்கவும்.


பருத்திக் கொட்டைப் பால்


தேவையானவை :


பருத்திக்கொட்டை - 300 கிராம்,
அரிசி - 5 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் - 100 கிராம் (பால் எடுக்கவும்),
இஞ்சி - சிறிதளவு,
ஏலக்காய் - 2,
வெல்லம் - தேவையான அளவு.

செய்முறை :


பருத்தியை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, மிக்ஸி யில் அரைக்கவும். உடன் தோல் சீவிய இஞ்சி, ஏலக்காயைச் சேர்த்து அரைக்கவும். அரைத்த மாவை பச்சை வாடைப் போகும் வரை கொதிக்க விடவும். அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து அதனுடன் பொடித்த வெல்லத்தை பருத்தி பாலுடன் சேர்த்து கொதிக்க விடவும். கெட்டியாக வரும் பொழுது அதனுடன் தனியே அரைத்து வைத்துள்ள தேங்காய் பாலைச் சேர்த்து, அடுப்பைச் சிம்மில் வைத்து நன்கு கலக்கவும். சுவையான பருத்திப்பால் தயார்.


தினை பால் ரைஸ்


தேவையானவை :


தினை - 200 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
பால் - 200 மி.லி. (காய்ச்சிய பால்).

செய்முறை :


தினை அரிசியை நன்கு இடித்து அதன் உம்மியை புடைத்து அகற்றி சுத்தம் செய்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு 3 கப் அளவு தண்ணீர், உப்பு சேர்த்து, வேக வைக்கவும். சாதத்தின் சூடு ஆறியவுடன், சூடானப் பாலைச் சேர்த்து நன்கு குழைய பிசைந்து சாப்பிடவும்.


மாதுளை ரசம்


தேவையானவை :


மாதுளை முத்துக்கள் - 1 கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பொடித்த மிளகு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
வெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி.

செய்முறை :


கடாயில் வெண்ணெயை சேர்த்து, சூடாகி உருகும் போது, நறுக்கிய கறிவேப்பிலை, பொடித்த மிளகைச் ேசர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய மாதுளை பழத்தின் முத்துக்கள் மற்றும் உப்பை சேர்க்கவும். மாதுளையின் சாறு வரும் வரை வதக்கவும்.


மூங்கிலரிசி அவரை புளியங்கூழ்


தேவையானவை :


மூங்கிலரிசி - 100 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
அரிசி - 100 கிராம்,
மிளகு (பொடித்தது) - தேவையான அளவு,
சீரகம் - 1 டீஸ்பூன்,
புளிச்சாறு - 2 மேஜைக்கரண்டி,
அவரை பருப்பு - 50 கிராம்,
தண்ணீர் - தேவையான அளவு,
மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
கடுகு - 1/2 டீஸ்பூன்.

செய்முறை :


ஒரு அகலமான பாத்திரத்தில் கழுவிச் சுத்தம் செய்த மூங்கிலரிசி மற்றும் அரிசியைச் சேர்த்து போதுமான உப்புடன் சுமார் 3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக விடவும். அதனுடன் தனியே வேக வைத்த அவரைப்பருப்பைச் சேர்த்து மிக்ஸ் செய்யவும். கூடவே சீரகம் மற்றும் மிளகைச் சேர்க்கவும். தனியே கரைத்து வைத்த புளிக் கரைசலை சிறிது தண்ணீர் ேசர்த்து வேக வைத்த அரிசி, அவரைப் பருப்புடன் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நறுக்கிய கறிவேப்பிலையை கொண்டு அலங்கரிக்கவும்.


அரிசி குழாய் புட்டு


தேவையானவை :


புழுங்கல் அரிசி - 300 கிராம்,
உப்பு - தேவையான அளவு,
தேங்காய்த் துருவல் - 200 கிராம்,
தண்ணீர் - தேவையான அளவு.

செய்முறை :


கழுவி சுத்தம் செய்த அரிசியை வெயிலில் உலர்த்தி காய வைத்து, மாவு அரைக்கும் மெஷினில் கொடுத்து அரைக்கவும். அரிசி மாவில் போதுமான உப்பு, தண்ணீர் சேர்த்து, உதிரியாகப் பிசைந்து கொள்ளவும். புட்டுக் குழாயில் முதலில் தேங்காய்ப் பூவைப் போட்டு அடுத்து ஒரு கை அளவு புட்டுமாவைச் சேர்த்து, குழாயின் மேல் பாகம் வரை நிரப்பவும். கலத்தில் போதுமானத் தண்ணீர் ஊற்றி, குழாயை அதில் பொருத்தி வேக வைக்கவும். புட்டுக்குழாயின் மூடியிலுள்ள துவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும்.


முந்நீர் பானம்


தேவையானவை


பனை நுங்கு - 5,
கரும்புச்சாறு - 100 மி.லி,
இளநீர் - 1.

செய்முறை:



பனை நுங்கை ஓட்டைப் போட்டு, அதன் நீரைத் தனியே எடுக்கவும். அதனுடன் சீவி உடைத்த இளநீரைச் சேர்க்கவும். இனிப்பு மற்றும் ஜீரணச் சக்தியை தரக் கூடிய கரும்புச் சாற்றை மிக்ஸ் செய்து, இனிதாகப் பருகவும்.


கருணைக்கிழங்கு புளிக்குழம்பு


தேவையானவை :


கருணைக்கிழங்கு - 500 கிராம்,
புளி - 1 எலுமிச்சை அளவு,
மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்,
பட்டை - ஒரு இன்ச் அளவு,
சோம்பு - 1 டீஸ்பூன்,
கடுகு - ½ டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
தோல் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
துருவிய தேங்காய் - 100 கிராம்,
இஞ்சி - ½ இன்ச்,
கிராம்பு - 2,
நெய் - 1 மேஜைக்கரண்டி,
மிளகு - 1 டீஸ்பூன்.

செய்முறை :


கழுவி சுத்தம் செய்த கருணைக் கிழங்கை பாத்திரத்தில் போதுமான தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் சுமார் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, நறுக்கிய இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகு, கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். சூடு ஆறியவுடன் நன்கு மைய அரைக்கவும்.

மீதமுள்ள நெய்யில் கடுகு, உளுந்தப் பருப்பைச் சேர்த்து தாளிக்கவும். கூடவே மஞ்சள்தூள், கறிவேப்பிலையைச் ேசர்க்கவும். அதனுடன் வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிய கருணைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்த விழுதைக் பிரட்டவும். கரைத்து வைத்த புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து, போதுமான தண்ணீர், உப்பு சேர்த்து குழம்பை நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

[thanks]குங்குமம் தோழி[/thanks]



சங்ககால சமையல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக