ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by சிவா Tue Aug 17, 2021 6:28 am

First topic message reminder :


அனைத்து சாதி அர்ச்சகர் என்ற திட்டம், தொல் அர்ச்சக குடிகளை அழிக்கும் திட்டம் என்பதில் துளியும் சந்தேகமே இல்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை, அனைத்து சாதியிலும் அர்ச்சகர்கள், பல காலமாக அவரவர் சார்ந்த கோயில்களில் இருந்தே வருகிறார்கள்.

அதேநேரத்தில், தமிழக பெரும்பான்மை ஆகம கோயில்களில் பல நூறாண்டுகளாக சிவாச்சாரியார், பட்டாச்சாரியர் என்ற இரு மரபுகளே பூஜை செய்து வருகிறார்கள்.

இவர்களே பிரதான அர்ச்சககுடிகள். ஒரு சிறுபான்மை மரபு. பாரம்பர்யம் மிக்க தொல்குடிகள்.

நாட்டுப்பசுவைப் போல, இவர்களைப் பாதுகாக்க வேண்டியது இந்த சமூகக் கடமை.

பாரதத்தின் உச்சியில் உள்ள காஷ்மீர் பண்டிட்களைப் போல்... பாரதத்தின் பாதமான தமிழகத்தில் உள்ள இந்த அர்ச்சககுடிகளுக்கு நடந்த அடையாள அழிப்பை, அராஜகத்தை சொல்லி மாளாது.

இத்தகைய அரசியலால் வைணவ அர்ச்சககுடிகள் பலரும் இடம் மாறிவிட்டனர். பெரும்பாலானவர் கோயிலை விட்டு வெளியேறி, தங்கள் வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொண்டு விட்டனர்.

மீதி இருப்பது சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளே. கிராமங்களிலும் ஆகம கோயில்களிலும் இன்றுவரை தொண்டு செய்து வருகின்றனர்.

கடந்த 100 ஆண்டு பிராமண வெறுப்பு அரசியல், இந்த சிவாச்சாரியார் அர்ச்சககுடிகளை படிப்படியாக அடையாள அழிப்பை, உரிமை அழிப்பை செய்துவருகிறது.

ஊருக்கு ஒரு குடி குடும்பமாக உள்ள இந்த அர்ச்சககுடிகளும், தங்கள் சக்திக்கு மீறி இந்த திராவிட மிஷனரி அரசியலை எதிர்த்தே வருகிறார்கள்.

ஆனால் எவ்வளவு காலம் எதிர்த்துக்கொண்டே இருப்பது........

உண்மையில் தமிழகத்தில் குரலற்றவர்களாய் உள்ள ஒரே சமூகம் சிவாச்சாரியார் சமூகமே. எந்த மீடியாவும், கட்சியும், அமைப்பும், சாதி சங்கங்களும், மடங்களும், ஆன்மீக அமைப்புகளும், சைவ அமைப்புகளும் ஒரு சிறு முனகல் அளவுகூட அர்ச்சககுடிகளின் உரிமைகளை அவர்கள் நிலையை, வலி, வருத்தங்களை இந்நிமிடம் வரை பேசவில்லை என்பதே துரதிருஷ்ட உண்மை.

இங்கே பொது சமூகத்தில், உள்ள பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் என்று பலரும் இந்த அனைத்து சாதிஅர்ச்சகர் என்ற நிலை வந்துவிட்டால், பிராமணர்களை ஒடுக்கிவிட்டோம் என்ற மாயை மனோநிலையில் உள்ளார்கள்.

அனைத்து சாதி அர்ச்சகர் நிலையால் ஒரு துரும்பு அளவுக்குக்கூட வைதிக, வேத, கன்னட, தெலுங்கு, கணக்குபிள்ளை பிராமணர்களுக்கு ஒரு பாதிப்பும் கிடையாது .

மற்ற பிராமணர்களுக்கு, சிவாச்சாரியார் களுக்கு எதிரான ஒரு நிலை வந்துவிட்டதே என்ற வருத்தம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் பிராமணர்களுக்கு ஒரு இழப்பும் இதனால் இல்லை.

காரணம் இவர்கள் எவரும் ஆகமகோயில் பூஜையோ, சிவாலய பூஜையோ செய்யவில்லை.

திராவிடவாதிகள், பிராமண எதிர்ப்பு என்ற வகையில், பாரம்பர்ய அர்ச்சக தொல்குடிகளை அழித்ததே இவர்கள் கண்ட பலன்.

எந்த அர்ச்சககுடிகளை ஒடுக்குகின்றார்கள் என்றால்,
கோயில் வழிபாட்டுக்கென்றே சிவபெருமான் சிருஷ்டித்த, ஆகமப்படி உருவாக்கப்பட்ட குடியாகிய #ஆதிசைவ அந்தணர்களுக்கு எதிராகவே இந்த ஒடுக்குதல் நடைபெறுகிறது.

பல நூறாண்டுகளாக #கோயில் வழிபாட்டிற்கென்றே உள்ள குடியாகிய, சமூகமாகிய, ஆதிசைவ #அந்தணர்களுக்கு எதிராகவே இந்த அனைத்துசாதி அர்ச்சகர் சட்டம் வலியுறுத்தப்படுகிறது.

இன்றைக்கு பல கிராமங்களில், கடந்த 100 ஆண்டு அரசியலால் #கோயில்வழிபாட்டுகுடிகளாகிய ஆதிசைவ குருக்கள்கள்
#திராவிடஅரசியல் கொடுமை தாங்காமல் வெளியேறிவிட்டார்கள் .

கிராம சிவாலயங்களில் சட்டம் போடாமலேயே அனைத்து சாதி அர்ச்சகர் நடைமுறைக்கு வந்துவிட்டது .

ஆக, இருக்கும் பெரும் ஆகமக் கோயிலுக்கே அனைத்துசாதி அர்ச்சகர் போட்டி. அங்குள்ள ஆதிசைவ அர்ச்சககுடிகளையும் ஒடுக்குவதே இனி வரும்கால திட்டம்.

இப்படியான நிலையால் அர்ச்சககுடிகள் In செக்யூர் நிலைக்கு தள்ளப்பட்டதோடு, தங்கள் வாரிசுகளை ஆகம கல்வி பயில வரும்காலத்தில் அனுப்புவார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுவிட்டது. அதோடு அர்ச்சகுடி குடும்பங்களே ஒரு அச்சத்தில் உள்ளனர்.

இன்றைய நிலையில் ஆகம கல்வி பயின்ற சிவாச்சாரியார் இளைஞர்கள் சுமார் 5000 பேராவது உள்ளார்கள். அவர்களின் மனோநிலை, எதிர்காலம் கேள்விக்குறியே.

கல்வி படிப்பும் இவர்கள் படிக்கவில்லை என்பதால் தனியார் கோயில், வெளிநாடு கோயில் என சுயத்தை இழக்கவேண்டியதுதான்... நடோடிகளாய் சுற்றவேண்டியதுதான்...

வரும்காலத்தில் நீதிமன்றம் என்ன இந்த விசயத்தில் முடிவெடுக்கு என தெரியவில்லை..... பார்ப்போம்.

தமிழக தொலைக்காட்சி, பத்திரிகையாளர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு தமிழகத்தில் #ஆதிசைவர் என்று ஒரு சமூக குடி பற்றி தெரியுமா? புரிதல் உண்டா? என்பது சந்தேகமே?

இப்படியே சென்றால் கோயில் சார்ந்த ஆதிசைவர் என்ற குடி தமிழகத்தில் இருந்தது என்பதை #பெரியபுராணத்திலும், #சைவபுராணம் புத்தகத்தில் மட்டுமே காண முடியும்.

சிவார்ப்பணம்.
தில்லை கார்த்திகேயசிவம்.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by aanmeegam Wed Aug 18, 2021 8:17 am

கர்ப்பகிரகத்தில் எல்லோரும் நுழையலாம் என்ற சட்டத்தால், இவ்வளவு காலம் தனியாகவே தரிசிக்கப்பட்ட இறைவனின் சிலைகள், இன்னும் சில காலங்களில் முக்கிய பிரமுகர்களுடன் செல்ஃபி புகைப்படங்களாக வெளிவரும்.. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 433338962
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by சிவா Wed Aug 18, 2021 10:29 am

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 EZOlqp8
தமிழக சட்டசபை முதன் முறையாக சமூக வலைதளங்களை அங்கீகரித்திருக்கின்றது.

ஆம், இந்த புதிய அர்ச்சக நியமனம் , ஈரோட்டு ராம்சாமியின் நெஞ்சில் தைத்த முள்ளை புடுங்கிய முள் அகற்றிய அர்ச்சகர்களின் நியமணத்தின் எதிர்ப்பு சட்டசபையில் எதிரொலித்தது

அதற்கு உறுப்பினரும் அமைச்சரும் ஏன் முதலமைச்சரே சமூக ஊடகங்களை குறிப்பிட்டிருப்பது சமூக ஊடகங்களையும் அரசு ஊடகமாக அங்கீகரித்திருப்பதை அறிவிக்கின்றது

தமிழக சட்டசபையில் இப்பிரச்சினை அவர்களாலே எழுப்பபட்டது, ஆம் அதிமுக உறுப்பினர்களோ பாஜக உறுப்பினர்களோ வாயே திறக்கா நிலையில் (அதுதான் ஏன் என்று தெரியவில்லை மத நல்லிணக்க உறுப்பினர்களாகிவிட்டார்கள் போல)

திமுகவின் எழிலன் இதுபற்றி "நன்றி" தெரிவித்திருக்கின்றார்

அந்த நன்றிக்கு பதில் சொல்லித்தான் சிக்கலில் சிக்கியிருக்கின்றார் மு.க ஸ்டாலின்

ஆம், அவரின் பதிலில் ஏற்கனவே கருணாநிநிதி இந்த சட்டத்தை கொண்டு வந்து அது சட்டசிக்கலால் தடை பட்டதை சுட்டி காட்டுகின்றார்

அதாவது ஆகம விதிகளில் அரசு தலையிட உரிமை இல்லை என நீதிமன்றம் கருணாநிதிக்கு சொன்னதை இங்கே மறைமுகமாக நினைவுகூறுகின்றார்

ஆக இதே போல் தான் இப்பொழுது வெளியிட்டிருக்கும் ஆணையும் அதே சட்டத்தால் நீக்கபடும் என்கின்றார்

சட்ட சிக்கல் இருப்பதை ஒப்புகொள்கின்றார், அச்சட்டம் அப்படியே இருக்கும்பொழுது தந்தையினை போலவே தானும் நீதிமன்ற தீர்ப்பை ஏற்கும் கட்டாயம் உருவாகும் என்பதும் அவருக்கு தெரிகின்றது

இனி என்னாகும்?

கருணாநிதியின் அறிவிப்பு போலவே ஸ்டாலினின் அறிவிப்பும் நீதிமன்றத்தால் தடை செய்யபடும், நீட் தேர்வில் திமுக நிலைப்பாடு போலவே இவ்விவகாரமும் அப்படியே இருக்கும்

ராம்சாமியின் நெஞ்சில் குத்திய முள் கருணாநிதியின் கையில் குத்தியது போல் இனி ஸ்டாலினார் கையிலும் குத்தலாம்

இனி பின்னாளில் உதயநிதி ஸ்டாலின் இந்த முள்ளை பிடுங்க முயற்சிக்கலாம், அவர் கையும் அதே போல் கிழிபடலாம்

எனினும் சமூக வலைதளங்களை சட்டசபையில் அங்கீகரித்து பரீசிலனைக்கு எடுத்த அமைச்சரவைக்கு வாழ்த்துக்கள்.

முகநூல் பகிர்வு


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by சிவா Wed Aug 18, 2021 6:51 pm



சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோயில்களில் 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற சட்டத்தின் படி பணி நியமன ஆணை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில், அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "திமுக தலைவர் ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் முதல்வராக ஆகி இருக்கிறார். திக ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார். சென்னை, கே.கே.நகர் பள்ளி விவகாரத்தில் தவறாக செயல்பட்டார்ஆசிரியர் ஒருவர் செய்த தவறுக்கு, அந்தப் பள்ளியை அரசுடைமையாக்க முயல்கிறார் என்றதும், அந்த பிரச்னைக்குள் தலையிட்டேன். 'சட்ட ரீதியில் நடவடிக்கை எடுப்பேன், ஆட்சியைக் கலைப்பேன்' என சொன்னதும், ஸ்டாலின் பின்வாங்கினார்.

இப்பொழுது திடீரென, திக சொன்னதை கேட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கி இருக்கிறார்.

திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதை போற்றி மகிழ்கின்றனர். '51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்' என்று, திகவினர் சொல்லி மகிழ்கின்றனர்.

இந்திய அரசியல் சட்டத்தின்படிதான் இந்து அறநிலைய சட்டம் - 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55-ன் படி, அறநிலையத் துறை கோயில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்குதான் அதிகாரம் உள்ளது.

கோயிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது..? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை மு.க.ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். முதல்வர் என்பதால் அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது.

இப்படித்தான் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோயிலை தீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் என்பது பல நுாற்றாண்டுகளாக தீட்சிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது, அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கெனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன்.

ஆகவே, இந்த உத்தரவை உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை மு.க.ஸ்டாலின் மதிக்காமல், இந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன்.
இதை புரிந்து கொண்டு, மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார்" என்று சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சுவாமிஜி. வழக்கில் வெற்றி பிரார்த்தனை..


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by சிவா Sun Aug 22, 2021 9:55 am

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனத் தெரித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் பாரம்பரியமாக இருக்கக் கூடிய அனைத்து கோயில்களிலும் அந்தந்த ஆகம விதிகளின் படியே பூஜைகள் நடைபெற வேண்டும்.

அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் நடைமுறைகளை மாற்றுவதற்கு உரிமை கிடையாது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூட உள்ளது.

நமது பாரம்பரியமான சம்பிரதாயத்தை மாற்றுவது தமிழக அரசுக்குநல்லது இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை, தமிழக அரசு நீக்க வேண் டும்.

பாரம்பரியம் மாறாமல் எப்போதும்போல் அந்தந்த கோயில்களில் அந்தந்த ஆகம விதிகளின்படியே பூஜைகள் நடக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிடுவார் என நம்புகிறோம் .


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by சிவா Sun Aug 22, 2021 10:00 am

போலி அர்ச்சகர்கள் கடைகளில் போலி சமான் இருப்பது போல் கோயில்களிலும் போலி அர்ச்சகர் பயங்கரவாத நாஸ்திக அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்

.

தீட்சை பெற்றவர் மட்டுமே கோயிலில் அர்ச்சகராக முடியும் .

கும்பாபிஷேகம் நடைபெற்ற திருக்கோயிலில் திருமேனிகளைத் தீண்டிப் பூஜை செய்யும் உரிமை பெறுவதற்கு நிர்வாண தீட்சை, அபிஷேக தீட்சை என்று இரண்டு விதமான தீட்சைகள் உள்ளன. சிவத் திருமேனிகளைத் தீண்டிப் பூஜை செய்ய வழங்கப்படுவது அபிஷேக தீட்சை எனப்படும் ஆச்சார்ய தீட்சை. அபிஷேக தீட்சை பெற்றவர்களே சிவாச்சாரியர்கள். இவர்கள் சிவ மேனிகளைத் தவிர பிற மேனிகளைப் பூஜிக்காதவர்கள் .

ஆண் பெண் தெய்வ உருவங்களைத் தீண்டிப் பூஜிக்கும் உரிமையை அளிப்பது நிர்வாண தீட்சை. இவர்கள் லிங்கப் பரம்பொருள் முதலான சிவ மேனிகளைத் தீண்டிப் பூஜிக்க முடியாது .

அபிஷேக தீட்சை பெற்றவர்கள் மட்டுமே மற்றவர்க்கு தீட்சை வழங்கும் உரிமை உடையவர் . தீட்சை என்பது தகுதி உள்ளவர்க்கு மட்டுமே வழங்கப்படுவது.

பிராமண வேஷம் போட்டுக் கொண்டு ஊரை ஏமாற்றும் புது அர்ச்சகர்கள் யாரிடம் என்ன தீட்சை எப்போது எப்படிப் பெற்றார்கள்* ?

பூணூல் அணியும் மங்கலகரமான நிகழ்ச்சி எப்போது யார் மூலம் நடந்தது. ? *பூணூல் அணிந்தவர் மூன்று வேளையும் சந்தி வந்தனம் (சந்தியா வந்தனம்) செய்ய வேண்டும்* . பிராமண வேஷதாரிகள் சந்தி வந்தனம் செய்வார்களா ? *அபிஷேகம் எப்படிச் செய்யப்படும் என்பதைத் தொலைக் காட்சியில் கூட பார்த்து அறியாத இந்த நாஸ்திக ஜென்மங்களுக்கு* சந்தி வந்தனம் பற்றி என்ன தெரியும் ?

*நேற்று பிராமணன் மார்பிலிருந்து பூணூலை அறுத்த, பன்றிக்குப் பூணூல் அணிவித்த ஈன ஜென்மங்கள் இன்று தங்கள் மார்பில் பூணூல்* அணிந்து கொண்டுள்ளன.

கோயில் எதற்கு ? கல்லுக்குப் பால் எதற்கு என்று கேட்ட பிசாசுகள் இன்று கோயிலுக்கு வந்து பஞ்ச கச்சம் அணிந்து கொண்டு அதே கல்லுக்குப் பால் ஊற்றுகின்றன. இவை யெல்லாம் *புத்தி சுவாதீனம் உள்ளவர்கள் செய்யும் செயலா* ? பைத்தியங்கள் அரசாள்கின்றன.

தமிழ் நாட்டில் நடக்கும் கொடுமைகளை யெல்லாம் கண்டிக்கும் *நல்ல மனிதர் உள்ள மானிடக் கட்சி* எதுவும் இல்லை. எல்லாக் கட்சிகளும் அக்கிரமத்தை அநியாயத்தை *பதவிப் பிரமாணத்தை மீறிச் சட்ட விரோதமாக ஜாதி வெறி கொண்டு குடிமக்களுக்கு ஒரு சமூகத்திற்குச் செய்யப்படும் கொடுமையைக் கண்டிக்காமல் ஆதரிக்கும் கொடிய காட்டு மிருகங்களின் கட்சிகளாகவே உள்ளன.

சிவப்பிரியா


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by T.N.Balasubramanian Sun Aug 22, 2021 4:05 pm

ஆயிரம் காரணங்கள் ஸ்டாலின் கூறினாலும் அவை யாவும் முன்னுக்கு பின் முரணானவை.
நாம் எடுத்துக்காட்ட முடியும்.
ஆனால் திமுகவின் தலைமை முக குடும்பத்திற்கே.

முக -ஸ்டாலின்-உதயநிதி --அவர் மகன் ---பெயர் தெரியாதுங்கோ.
முக வின் சமகால அன்பழகன் குடும்பத்தினர் யாரும் வரமுடியவில்லை. 
முக அழகிரி .....ம்கூம் ....வரக்கூடாது என டெல்லி பக்கம் ஒதுக்கப்பட்டார்.
அவர் அதை சரியாக பயன் படுத்திக்கொள்ளவில்லை.---மொழி பிரச்னை.
அவரது வழி தோன்றல்கள் --நிதிகள் --
முரசொலி மாறன் -முக வின் வெற்றிக்கு வழி வகுத்தவரும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.படித்தவர். அவரும் பிழைத்த அவரது குடும்பத்தினர் பிழைக்க வழி வகுத்தார்.
ஒருவர் இந்தியாவின் முதல் ஐந்து பணக்காரர்களில் ஒருவர்.
மற்றவர் டில்லிக்கு 
இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.
அது அவர்கள் சாம்ராஜ்யம்.
கோயில் எப்பிடி போனால் என்ன ?.......இன்னும் குட்டி சுவராக்கி குட்டையை குழப்பி ....
ஆண்டவர்தான் காப்பாற்றவேண்டும்.--அல்லது ஆளுகிறவர்தான்   காப்பாற்றவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by Dr.S.Soundarapandian Tue Aug 24, 2021 11:39 am

ramanking சூப்பர் ! சூப்பருங்க


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by T.N.Balasubramanian Tue Aug 24, 2021 1:33 pm

ராமன்கிங் அவர்கள் ஆங்கில பதிவு நீக்கப்படுகிறது.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கருத்துக்களை தமிழில் பதிவு செய்யவும்.

@ramanking


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by பொன்.தமிழ்வாணன் Tue Aug 24, 2021 9:47 pm

இறைவன் அனைவருக்கும் பொதுவனவர் , பக்தி உள்ளவர் அர்ச்சகர் ஆகலாம்
பொன்.தமிழ்வாணன்
பொன்.தமிழ்வாணன்
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 2
இணைந்தது : 28/11/2011

Dr.S.Soundarapandian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by சிவா Wed Aug 25, 2021 6:58 am

பொன்.தமிழ்வாணன் wrote:இறைவன் அனைவருக்கும் பொதுவனவர் , பக்தி உள்ளவர் அர்ச்சகர் ஆகலாம்
மேற்கோள் செய்த பதிவு: 1350554

என் குடும்பமும் பல தலைமுறைகளாக கோவிலில் அர்ச்சகர் குடும்பம் தான். எங்கள் வீட்டின் பெயரே பூசாரி வீடுதான். ஆனால் நாங்கள் பிராமின் இல்லையே.

இதுபோல் தமிழகம் முழுதும் அனைத்து சாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளார்கள்.

இப்பொழுது பிரச்சனை என்னவென்றால் இந்துகளை வெறுக்கும் திமுக இதில் ஏன் தலையிட வேண்டும்.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் - Page 2 Empty Re: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum