Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 4:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள்
Page 1 of 1
தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள்
தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள்
![தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள் 3z0y3xr](https://i.imgur.com/3z0y3xr.jpg)
ஒருவருக்கு தானம் கொடுப்பது மிகவும் நல்ல விஷயம். ஆனாலும் ஆன்மீக முறைப்படி ஒரு சில பொருட்களை நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கும் பொழுது அந்த பொருள்களோடு சேர்ந்து நம்மிடம் இருக்கக்கூடிய அதிர்ஷ்டமும், லட்சுமியும் சென்று விடுவாள் என்று ஒரு ஐதீகம் உள்ளது. அதனால் நீங்கள் கொடுக்கக்கூடிய பொருள்களை தெரிந்துகொண்டு அதன் பிறகுதான் தானம் கொடுக்க வேண்டும்.
இந்தப் பொருள்களை தப்பித்தவறி கூட நீங்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்க கூடாது. அப்படி நீங்கள் கொடுத்தால் உங்களுடைய அதிர்ஷ்டம் குறைந்துவிடும். எப்பொழுதுமே நீங்கள் ஒருவருக்கு தானம் கொடுக்கும் பொழுது கிழிந்த துணிகளை தானமாக கொடுக்க கூடாது. உங்களுடைய வீடுகளில் அதிக நாட்கள் நீங்கள் பயன்படுத்தி அந்த துணி கிழிந்து போயிருக்கும். அப்படிப்பட்ட துணிகளை எக்காரணத்தைக் கொண்டும் பிறருக்கு கொடுக்காதீர்கள்.
நீங்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய துணி கிழிந்து போகாமல் இருந்தால் அந்தத் துணியை நீங்கள் தானமாக கொடுக்கலாம். கிழிந்த துணிகளை உங்களுடைய வீட்டில் வைப்பதை தவிர்த்து விடுங்கள். கிழிந்த துணிகளை நீங்கள் மற்றவர்களுக்கு தானமாக கொடுக்கும் பொழுது அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.
உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய பொருட்கள் உடைந்த பொருட்களாக இருந்தால் அந்த பொருட்களை நீங்கள் தானமாக பிறருக்கு கொடுக்க கூடாது. அதுமட்டுமல்லாமல் உடைந்த பொருள்களை உங்களுடைய வீட்டிலும் வைத்திருக்கக் கூடாது. உடைந்த பொருட்களை நீங்கள் உங்களுடைய வீடுகளில் வைத்திருந்தாலோ அல்லது பிறருக்கு தானமாக கொடுத்தாலோ கண்டிப்பாக அது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய துடைப்பத்தை நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது. அப்படி நீங்கள் கொடுத்து விட்டால் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய லட்சுமியை தானமாக கொடுப்பதாக அர்த்தம். அதையும் மீறி ஒருவருக்கு நீங்கள் துடைப்பத்தை தானமாக கொடுத்தால் உங்களுக்கு மிக அதிக அளவிலான பண பிரச்சனைகள் ஏற்படும். அது போல ஒரு துடைப்பத்தை நீங்கள் உங்களுடைய காலால் மிதிக்க கூடாது.
பிளாஸ்டிக் பொருள்களையும் இன்னொருவருக்கு தானமாக கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இப்படி நீங்கள் பிளாஸ்டிக் பொருட்களை இன்னொருவருக்கு தானமாக கொடுத்தால் உங்களுடைய வளர்ச்சி தடைபடும். அதாவது பொதுவாக வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் இப்படிப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தானமாக கொடுத்தால் அவர்களுக்கு வியாபாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படும்.
ஆனால் உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக்கால் ஆன பொம்மைகளை நீங்கள் பிறருக்கு தானமாக தரலாம். அதுவும் இது குழந்தைகளுக்கு தானமாக கொடுப்பது சிறந்தது. உணவுப் பொருட்களில் உங்களுடைய வீடுகளில் கெட்டுப்போன உணவுப் பொருட்களை நீங்கள் யாருக்காவது தானமாக கொடுத்தால் அது உங்களுக்கு அதிகப்படியான செலவுகளை ஏற்படுத்தும். ஆனால் உங்களுடைய வீடுகளில் மீந்து போகிற உணவுகளை கண்டிப்பாக நீங்கள் பிறருக்கு தானமாக கொடுக்கலாம். கெட்டுப்போன உணவுகளை மட்டும் யாருக்கும் தானமாக கொடுக்க கூடாது.
உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய கூர்மையான பொருட்களை நீங்கள் யாருக்காவது தானமாக கொடுத்தால் உங்களுடைய வீட்டில் துரதிஷ்டம் ஏற்படத் தொடங்கும். சாயங்காலம் ஆன பிறகு உங்களுடைய வீட்டிலிருந்து இரும்பு சம்பந்தப்பட்ட பொருள்களையோ, உப்பையோ, உறைமோரையோ யாருக்கும் கடனாகவோ, தானமாக கொடுக்க கூடாது. இது உங்களுடைய வீட்டில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி கடனாளி ஆக்கி விடும் உங்களை.
நீங்கள் உணவுப் பொருட்களை தானமாக கொடுத்து அதன் மூலமாக மற்றவர்கள் பசி ஆறினார்கள் என்றால் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய வறுமை குறையும். உங்களிடம் இருக்கக்கூடிய அதிகப்படியான கடன் பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்க தொடங்கும்.
நீங்கள் பயன்படுத்தாத புது துணியையோ அல்லது பயன்படுத்திய நல்ல துணியையோ பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது உங்கள் ஆயுள் அதிகரிக்கும். உங்களுடைய வீடுகளில் யாராவது உடல்நிலை சரியில்லாமல் இருந்தால், நீங்கள் யாராவது ஒரு நான்கைந்து பேருக்கு துணியை தானமாக கொடுத்தால் உடல்நிலை சரி இல்லாமல் இருப்பவர் உடைய உடல்நிலை சரியாகும். அவருக்கு கொடுக்கக்கூடிய மருத்துவ சிகிச்சைகள் விரைவாக நல்ல பலனைக் கொடுக்கும்.
நீண்ட காலமாக குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தேனை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும்.
தீபத்தை ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்குக் கொண்டு செல்லக்கூடாது. ஆனால் கோவிலுக்கு தேவையான தீபம் சம்பந்தப்பட்ட பொருட்களை தானமாக கொடுக்கும் பொழுது கண்பார்வை தெளிவாகும்.
பொதுவாக வீடுகளில் அரிசியை தானமாக கொடுப்பார்கள். கிராமங்களில் இப்போதும் பல வீடுகளில் அரிசியை தானமாக பெறுவதும், அரிசியை தானமாக கொடுப்பதும் நடக்கிறது. இப்படி அரிசியை தானமாக கொடுக்கும் பொழுது நீங்கள் செய்யக்கூடிய எல்லா பாவங்களும் தீரும் என சொல்லப்படுகிறது.
நெய்யை நீங்கள் தானமாக பிறருக்கு கொடுக்கும் பொழுது உங்கள் உங்கள் உடலில் இருக்கக்கூடிய பல்வேறு விதமான நோய்களும் தீரும் என சொல்லப்படுகிறது.
நீங்கள் பாலை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது உங்களுடைய வீடுகளில் இருக்கக்கூடிய கஷ்டமான, துக்கமான நிலைமைகள் மாறும்.
தம்பதிகள் தயிரை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கிடையே மனது ஒற்றுமை அதிகரிக்கும். மிகவும் சந்தோஷமான வாழ்க்கையை நடத்துவார்கள்.
படிக்கும் குழந்தைகள் பழங்களை தானமாக கொடுக்கும் பொழுது அவர்களுக்கு படிப்பதற்கு நல்ல அறிவு, ஞானம், புத்தி அதிகரிக்கும்.
திருமணமாகாமல் இருக்கக்கூடிய ஏழைப் பெண்களுக்கு தங்கம் வெள்ளியை நீங்கள் தானமாக கொடுக்கும் பொழுது உங்களுடைய வாழ்வு மிகச் சிறந்த முன்னேற்றத்தை அடையும்.
நீங்கள் தேங்காயை பிறருக்கு தானமாக கொடுக்கும் பொழுது நீங்கள் நினைத்த காரியம் சீக்கிரம் மிகப்பெரிய வெற்றியை அடையும். ஏதாவது முக்கியமான செயல்கள் செய்யவிருக்கும் பொழுது நீங்கள் தேங்காயை தானமாக கொடுத்து விட்டு செய்யும்பொழுது அந்த காரியம் மிகச் சிறந்த வெற்றியை அடையும்.
நெல்லிக்கனியை நீங்கள் ஒருவருக்கு தானமாக கொடுத்தால் உங்களுடைய வாழ்க்கை முழுவதும் புத்தி அதிகரித்துக் கொண்டே இருக்கும். படிக்கும் மாணவர்கள் இதை தானமாக கொடுக்கலாம் அவர்களுடைய புத்தி கூர்மை அதிகரிக்கும்.
இந்த தானங்களில் உங்களால் நீங்கள் என்னென்ன தானங்களை செய்ய முடியுமோ அந்த தானங்களை எல்லாம் செய்து அதனுடைய எல்லா பலனையும் அடைந்து வாழ்வில் சந்தோஷமாக வாழுங்கள்.
முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தானமாக கொடுக்கக்கூடிய | கொடுக்கக்கூடாத பொருட்கள் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜி-7 தலைவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி அசத்திய பிரதமர் மோடி...என்னென்ன பொருட்கள்?
» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
» சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!
» சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது
» சிவன்கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நல்லூர் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
» காஞ்சி மடத்துக்கு வீட்டை தானமாக வழங்கினார் எஸ்.பி.பி
» சிறுநீரகத்தை தானமாக கொடுத்து கணவர்களை காப்பாற்றிய மனைவியர்!
» சென்னையில் தானமாக பெறப்பட்ட இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது
» சிவன்கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நல்லூர் - கல்வெட்டு கண்டுபிடிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|