ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்

2 posters

Go down

பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன் Empty பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்

Post by ayyasamy ram Sat Aug 14, 2021 8:24 am

மதுரை என்றவுடன் நம் நினைவிற்கு வருவது மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலும், மதுர மல்லியும், மல்லிகையைப் போன்ற இட்லியும் தான்.


அவ்வூர் விழா என்றால் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதும், ஓர் ஏழைத்தாயின் துயர் துடைக்க தானே ஓர் கூலி ஆளாக வந்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்டதும் விமரிசையான பாரம்பரிய திருவிழாவாகும்.


பரமனுக்கு ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது; எழையிடம் உள்ளதை, அவன் அன்போடு கொடுப்பதை பரமன் ஏற்பான் என்பதை விளக்கும் அந்த விழாவினைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்!


மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் அரசவையில் அமைச்சர் பணி புரிந்து வந்த தென்னவன் மிகச்சிறந்த சிவபக்தன். அவன் அரசுக்குத் தேவையான குதிரைகளை வாங்கச் செல்லுங்கால், திருப்பெருந்துறை சிவபெருமானின் பேரன்பிற்குப் பணிந்து, மன்னன் பரி வாங்கக் கொடுத்தனுப்பிய பெரும் செல்வங்களைக் கொண்டு ஆலயங்கள் கட்டி, சிவப்பணியில் ஈடுபட்டு, மாணிக்கவாசகப் பெருமானாக அறியப்பட்டார்.


பின்னர் ஞாபகம் வந்து ஈசனிடம் வேண்டி தன் நிலைகுறித்து வருத்தமுற்றார். "கவலையை என்னிடம் விட்டு மதுரைக்குச் செல்; ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்தடையும் என மன்னனிடம் சொல்' என்று கூறி நரியை பரியாக்கி ஒரு திருவிளையாடலை முக்கண்ணன் நடத்தினார்.


அமைச்சர் சொல்படி குதிரை வராததால் சிறையில் அடைக்கப்பட்டார். பின் வைகை ஆற்றின் சுடுமணலில் அவரை நிற்க வைத்து சித்ரவதை செய்தான். ஈசன் பதறி பக்தனைக் காப்பாற்ற வைகையில் வெள்ளப் பெருக்கினை ஏற்படுத்தினார். கரை உடைந்தது. மன்னன் திகைத்துபோய் வீட்டிற்கு ஓர் ஆள் கரையை அடைக்க வரவேண்டுமென தண்டோரா போடச் செய்தான்.


மதுரையம்பதியில் பிட்டு விற்றுப் பிழைக்கும் "வந்தி' என்ற பெயர் கொண்ட ஓர் அநாதை மூதாட்டி இதனைக் கேள்வியுற்று தனக்கு யாருமில்லையே நான் என் செய்வேன்... என்று வருந்தி ஆலவாய் அண்ணலை வேண்டி நின்றாள்.



தயாபரன் ஈசன் - ஓர் மண் வெட்டியுடன் கூலியாளாக அக்கிழவியின் கண்ணில் பட்டார்.


""ஏனப்பா! அரச ஆணையை மீறமுடியாது. அதனால் எனக்காக நீ சென்று வேலை செய்கிறாயா..? இங்குள்ள புட்டில் உதிரியானதை உனக்குக் கூலியாகத் தருகிறேன்'' என்று கூறி அதனைத் தந்தாள்.


பரமனும் ருசித்து உண்டு, பின் அவளுக்காக வைகை கரைக்கு தலையில் மண் சுமந்து கொண்டு, உடைப்பை அடைக்கச் சென்றான்.


சிறிது வேலை செய்துவிட்டு அப்படியே அந்தக் கரையில் பாவனையாக உறங்கி விட்டான். பாண்டிய மன்னன் வேலை நடப்பதை மேற்பார்வையிட நேரில் வந்தான்.


அங்கு இந்த கூலி தூங்குவதைப் பார்த்து தன் கையிலுள்ள பிரம்பினால் அவன் முதுகில் அடிக்கிறான். அப்படி அடித்த அந்த அடி, உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் முதுகிலும் பட்டு வலிக்க, சுந்தரேசுவரர் சுந்தர வடிவாய் தரிசனம் தந்து அருள்பாலித்தார்.


"பேறுபெற்ற வாழ்வு என்பது, நாமும் நாம் சுமப்பதும் பிறருக்கு உதவுவதாய் இருத்தலே ஆகும்' என்பதே இதன் தத்துவமாகும்.


இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிட்டுத் தோப்பு மைதானத்தில் ஆவணி மூலத்திருவிழாவின் போது பிட்டுத் திருவிழாவும் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முடிவில் படைக்கப்பட்ட பிட்டு அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு 18.08.2021 -இல் இவ்விழா நடைபெறவுள்ளது.


-
தினமணி-வெள்ளிமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன் Empty Re: பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்

Post by T.N.Balasubramanian Sat Aug 14, 2021 8:57 pm

பிட்டுக்கு பிரம்படி பட்ட பரமன் கதை தெரியும் 

bit க்கு பிரம்படி பட்ட பையன் கதையும் தெரியும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன் Empty Re: பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்

Post by ayyasamy ram Sun Aug 15, 2021 9:20 am

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க!


-
தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் நடந்த மருத்துவ தேர்வில்,
சில மாணவர்கள் மிகவும் வித்தியாசமாக காப்பி அடித்திருக்கிறார்கள்.

மூக்கு கண்ணாடிகளில் கேமராவை பொருத்தி, அதிலிருந்து முழு
புத்தகத்தையே தேர்விற்கு எடுத்து சென்றிருக்கிறார்கள்.

அட உண்மைதாங்க...! மூக்கு கண்ணாடியில் பொருத்தி இருந்த
கேமராவினால் வினா தாளை படம் எடுத்து வெளியில் இருந்த
நண்பர்களுக்கு அனுப்பி இருக்கிறார்கள். அவர்களும் வினாவுக்கான
பதில்கள் அடங்கிய புத்தக தாள்களை படம் எடுத்து  ஸ்மார்ட் வாட்ச்சிற்கு
அனுப்ப ரொம்பவும் அமைதியாக பிட் அடித்திருக்கிறார்கள்.

இந்த மோசடியை யாரோ கண்டுபிடித்து பேஸ்புக்கில் பதிவேற்ற,
தாய்லாந்து அரசு மொத்தமாக மருத்துவ தேர்வையே ரத்து செய்து
விட்டது. அதனால் இன்னொரு புதுமையான முறையை இணையத்தில்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்...!
-
குறிப்பு:
இது நடைபெற்று ஐந்து ஆண்டுகள் ஆகிறது...
பிட் அடிப்பதில் தற்போதைய முன்னேற்றம் அறியப்பட வேண்டும்..!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன் Empty Re: பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்

Post by T.N.Balasubramanian Sun Aug 15, 2021 5:41 pm

இவர்கள் எல்லாம் மருத்துவர்களாக மாறி ......
ஆண்டவா நோயாளிகளை காப்பாற்று.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன் Empty Re: பிட்டுக்கு பிரம்படிபட்ட பரமன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum