ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 3:24 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Today at 3:20 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Today at 1:48 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Today at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

Go down

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Empty இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

Post by ayyasamy ram Fri Aug 13, 2021 8:43 am

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 704399
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:
-
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 16288141291138

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Empty Re: இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

Post by ayyasamy ram Fri Aug 13, 2021 8:45 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.

பதிவு செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்
தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணைய
தளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும்
பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள்
கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது
மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின்
அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு
கடந்த2008-ல் உறுப்பு தானத் திட்டத்தைதொடங்கியது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது
மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய
குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்புமாற்று
அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை
அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள்
பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை,
ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம்
கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவு
செய்து காத்திருக்கின்றனர். இதில்,ஆண்டுக்கு 2 லட்சம் பேர்
சிறுநீரகம் பெற காத்திருக்கும் நிலையில் 8 ஆயிரம் பேருக்கும்.

கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் பேர்
காத்திருக்கும் நிலையில் 1,700 பேருக்கும், 15 ஆயிரம் பேர் இதய
மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில்
250 பேருக்கும் மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன.

உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம்பேர்
தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர்.

தமிழகம் தொடர்ந்து முன்னிலை


உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல
ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக,
தமிழகத்தில் கடந்த 2008 முதல் 2020 வரை 1,393 பேரிடமிருந்து
7,831 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில்
இதுவரை சிறுநீரகத்துக்காக 6,158 பேரும், இதயத்துக்காக 28 பேரும்,
நுரையீரலுக்காக 39 பேரும், கல்லீரலுக்காக 418 பேரும் காத்திருப்பு
பட்டியலில் உள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்

உறுப்பு தான விழிப்புணர்வை அதிகரிக்க சமூகத்தில்
பிரபலமானவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம்
நடத்தலாம். மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி ஏற்பு
நிகழ்ச்சிகளை நடத்தலாம். அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள
அட்டைகள், பேருந்து / ரயில் பயணச் சீட்டுகளில் உறுப்பு தானம்
குறித்து விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்குக்
கொடுக்காமல், மனிதர்கள் உயிர்வாழ கொடுப்போம்!

-பெ.ராஜ்குமார்
நன்றி-இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum