புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
11 Posts - 4%
prajai
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
2 Posts - 1%
jairam
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 13, 2021 8:43 am

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 704399
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:
-
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 16288141291138

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 13, 2021 8:45 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.

பதிவு செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்
தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணைய
தளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும்
பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள்
கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது
மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின்
அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு
கடந்த2008-ல் உறுப்பு தானத் திட்டத்தைதொடங்கியது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது
மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய
குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்புமாற்று
அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை
அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள்
பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை,
ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம்
கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவு
செய்து காத்திருக்கின்றனர். இதில்,ஆண்டுக்கு 2 லட்சம் பேர்
சிறுநீரகம் பெற காத்திருக்கும் நிலையில் 8 ஆயிரம் பேருக்கும்.

கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் பேர்
காத்திருக்கும் நிலையில் 1,700 பேருக்கும், 15 ஆயிரம் பேர் இதய
மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில்
250 பேருக்கும் மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன.

உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம்பேர்
தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர்.

தமிழகம் தொடர்ந்து முன்னிலை


உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல
ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக,
தமிழகத்தில் கடந்த 2008 முதல் 2020 வரை 1,393 பேரிடமிருந்து
7,831 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில்
இதுவரை சிறுநீரகத்துக்காக 6,158 பேரும், இதயத்துக்காக 28 பேரும்,
நுரையீரலுக்காக 39 பேரும், கல்லீரலுக்காக 418 பேரும் காத்திருப்பு
பட்டியலில் உள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்

உறுப்பு தான விழிப்புணர்வை அதிகரிக்க சமூகத்தில்
பிரபலமானவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம்
நடத்தலாம். மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி ஏற்பு
நிகழ்ச்சிகளை நடத்தலாம். அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள
அட்டைகள், பேருந்து / ரயில் பயணச் சீட்டுகளில் உறுப்பு தானம்
குறித்து விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்குக்
கொடுக்காமல், மனிதர்கள் உயிர்வாழ கொடுப்போம்!

-பெ.ராஜ்குமார்
நன்றி-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக