Latest topics
» கருத்துப்படம் 02/07/2024by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
திரைத்துளிகள் - தொடர் பதிவு
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
திரைத்துளிகள் - தொடர் பதிவு
First topic message reminder :
பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-
-
வில்லனாக மிரட்டி, குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருப்பவர் பசுபதி.
ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஏற்று நடித்த ரங்கன் கதாபாத்திரம் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பு மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் இருந்ததாக விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தாம் சமூக வலைத்தளத்தில் இயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பசுபதி, தம்மை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக ‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னையின் வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
“நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி,” என்று பசுபதி கூறியுள்ளார்.
தமிழ்முரசு-sg
பசுபதி: மனதுக்கு நெருக்கமான பாத்திரம்
-
-
வில்லனாக மிரட்டி, குணச்சித்திர வேடங்களில் கவனம் ஈர்த்து, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமாகி இருப்பவர் பசுபதி.
ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ஏற்று நடித்த ரங்கன் கதாபாத்திரம் தனது திரை வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் தன் மனதுக்கு நெருக்கமானது என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பசுபதி. அவருடைய நடிப்பு மிக இயல்பாகவும் கச்சிதமாகவும் இருந்ததாக விமர்சகர்களும் ரசிகர்களும் வெகுவாகப் பாராட்டி உள்ளனர்.
இந்நிலையில், தாம் சமூக வலைத்தளத்தில் இயங்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பசுபதி, தம்மை பாராட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருக்கின்ற திரை ரசிகர்கள் கொண்டாடுகிற படமாக ‘சார்பட்டா பரம்பரை’ வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சென்னையின் வாழ்வியலையும் குத்துச்சண்டையையும் களமாகக் கொண்ட யதார்த்தமான படைப்பைப் பார்த்து அனைவரும் வியந்து பாராட்டுகிறார்கள். தான் எடுத்துக்கொண்ட கதையை, சொல் நேர்த்தி, செயல் நேர்த்தியுடன் படைப்பதில் வித்தகர் ரஞ்சித். ரங்கன் வாத்தியாராக என்னைச் செதுக்கியதற்கு அவருக்கு என் நன்றிகள் பல. என் திரை வாழ்க்கையில் ரங்கன் முக்கியமானவன், நெருக்கமானவன்.
“நண்பர் ஆர்யாவுடன் நடித்ததில் என்னிடம் மேலும் பெருமை சேர்ந்துகொள்கிறது. என்னுடன் நடித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். 22 ஆண்டுகள் என்னுடைய திரைப் பயணத்தில் என்னுடன் பயணம் செய்த அனைவருக்கும் நன்றி,” என்று பசுபதி கூறியுள்ளார்.
தமிழ்முரசு-sg
jairam இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
மக்கள் பிரச்சினைக்காக களத்தில் இறங்கும் 4 கதாநாயகிகள்
-
-
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை
இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு,
‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்ஷா
ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-
‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும்
பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால்,
படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள்
இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து
இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி
குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது.
சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும்
சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக
இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில்
குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே
கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது.’’
தினத்தந்தி
-
-
திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ஜனை’ படத்தை
இயக்கியவர், சுந்தர்பாலு. இவர் அடுத்து இயக்கிய படத்துக்கு,
‘கன்னித்தீவு’ என்று பெயர் சூட்டியிருக்கிறார்.
இதில் வரலட்சுமி, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னாசவேரி, சுபிக்ஷா
ஆகிய 4 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
படத்தை பற்றி டைரக்டர் சுந்தர்பாலு கூறிய தாவது:-
‘‘கன்னித்தீவு என்ற பெயர் பொதுமக்கள் மத்தியில், மிகவும்
பிரபலமானது. ‘கன்னித்தீவு’ என்றாலே துணிச்சல் என்பதால்,
படத்துக்கு இந்த பெயரை வைத்தோம். படத்தில் 4 கதாநாயகிகள்
இருப்பதால், பெயர் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.
படத்தின் உச்சக்கட்ட காட்சியை ஒரு தீவில் படம்பிடித்து
இருக்கிறோம். வடசென்னையில் உள்ள ஒரு வீட்டு வசதி
குடியிருப்பில் வசிக்கும் 4 பெண்களை பற்றிய கதை, இது.
சின்ன வயதில் இருந்தே தோழிகளாக இருக்கும் அவர்கள் 4 பேரும்
சமூக அக்கறை உள்ளவர்கள். அந்தப் பகுதியில் நீண்டகாலமாக
இருந்து வரும் ஒரு பிரச்சினையை தீர்க்க போராட்டத்தில்
குதிக்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள்.
அந்த வெற்றியே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறுகிறது.
அதை தோழிகள் 4 பேரும் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதே
கதை. இந்தப் படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது.’’
தினத்தந்தி
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
கேரளாவில் வசிக்கும் கன்னியாகுமரி கதாநாயகி!
-
-
நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது
இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன்
தொடங்கினார்.
அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை
தொடர்ந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற
பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில்
நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.
‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய
தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான
கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’
என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும்
தமிழ் பெண் என்கிறார்.
அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!
தினத்தந்தி
-
-
நடிகர் திலீப்பை விட்டு பிரிந்த பின், மஞ்சுவாரியர் தனது
இரண்டாவது ரவுண்டை மலையாள பட உலகில் எதிர்பார்ப்புடன்
தொடங்கினார்.
அவர் நடித்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படம் மிகப்பெரிய வெற்றியை
பெற்றது. அதைத்தொடர்ந்து நம்பிக்கையுடன் தனது நடிப்பை
தொடர்ந்தார்.
அவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.
இந்த வெற்றிகள், அவருக்கு ‘ராசியான கதாநாயகி’ என்ற
பெயரை பெற்றுக்கொடுத்தது. ‘அசுரன்’ (தமிழ்) படத்தில்
நடிக்கும் வாய்ப்பையும் வாங்கிக்கொடுத்தது.
‘‘அந்த படத்தின் அமோக வெற்றியை தொடர்ந்து நிறைய
தமிழ் பட வாய்ப்புகள் வந்தன. எல்லாமே ஒரே மாதிரியான
கிராமத்து கதைகளாக இருந்ததால், நடிக்க சம்மதிக்கவில்லை’’
என்று கூறும் மஞ்சுவாரியர் தன்னை கேரளாவில் வசிக்கும்
தமிழ் பெண் என்கிறார்.
அவருடைய சொந்த ஊர், கன்னியாகுமரியாம்!
தினத்தந்தி
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
உடல்நிலை வதந்தி: நடிகை சாரதா விளக்கம்
-
-
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா.
இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல
படங்களில் நடித்துள்ளார்.
குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம்,
என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன்
போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக
நடித்தார்.
சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில்
சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர்
வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின்
மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் உயிருடன் நலமாக இருக்கிறேன்.
எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும்
நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான
செயலில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
-
-
தமிழ், தெலுங்கு திரையுலகில் 1960 முதல் 1990 வரை
முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சாரதா.
இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுடன் இணைந்து பல
படங்களில் நடித்துள்ளார்.
குங்குமம், வாழ்க்கை, ஞான ஒளி, துலாபாரம்,
என்னைப்போல் ஒருவன், நினைத்ததை முடிப்பவன்
போன்றவை சாரதா நடிப்பில் வந்த முக்கிய படங்கள்.
மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்தின் அம்மாவாக
நடித்தார்.
சாரதாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. இந்த நிலையில்
சாரதா உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் திடீர்
வதந்தி பரவியது. இதனால் அதிர்ச்சியான பலரும் சாரதாவின்
மொபைல் நம்பருக்கு போன் செய்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதற்கு சாரதா விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “நான் உயிருடன் நலமாக இருக்கிறேன்.
எனக்கு எந்த நோயும் இல்லை. எனவே வதந்திகளை யாரும்
நம்ப வேண்டாம். வதந்தி பரப்ப இதுபோன்ற கீழ்த்தரமான
செயலில் ஈடுபட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
உடல் தோற்ற கேலிக்கு இளம் நடிகை எதிர்ப்பு
-
-
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா
ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த
இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன்
100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில்
நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி
படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன்
காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று
விமர்சனங்கள் வந்தன.
குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி
இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை
அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள்
வருந்துகின்றனர்.
ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ
கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை
கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும்
செய்வேன்.
இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து
இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை
குறைக்கவில்லை’’ என்றார்.
தினத்தந்தி
-
-
அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய்தேவரகொண்டா
ஜோடியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்த
இளம் நடிகை ஷாலினி பாண்டே தமிழில் ஜி.வி.பிரகாசுடன்
100 சதவீத காதல், ஜீவாவுடன் கொரில்லா ஆகிய படங்களில்
நடித்துள்ளார். தற்போது 2 இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
ஷாலினி பாண்டே அளித்துள்ள பேட்டியில், “அர்ஜுன் ரெட்டி
படத்தில் நான் குண்டாக நடித்து இருந்தேன். உடல் பருமன்
காரணமாக எனக்கு அடுத்தடுத்த படங்கள் வரவில்லை என்று
விமர்சனங்கள் வந்தன.
குண்டாக இருக்கிறார், வயிறு சரியில்ல. கால் ஒரு மாதிரி
இருக்கிறது என்றெல்லாம் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகளை
அதிகமாக கேலி செய்கிறார்கள். இதை கேட்டு நிறைய நடிகைகள்
வருந்துகின்றனர்.
ஆனால் நான் வருத்தப்படுவது இல்லை. நடிகைகளை இப்படி உருவ
கேலி செய்வது சரியல்ல. உடல் வாகு எப்படி இருக்கிறதோ அதை
அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை
கதைக்கு தேவை என்றால் உடம்பை கூட்டவும், குறைக்கவும்
செய்வேன்.
இப்போதுகூட இந்தி படத்தில் டான்சராக நடிக்க உடம்பை குறைத்து
இருக்கிறேன். மற்றவர்கள் என்னை கேலி செய்ததற்காக உடம்பை
குறைக்கவில்லை’’ என்றார்.
தினத்தந்தி
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்
-
-
இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட
நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து
எதிர்ப்புக்கு உள்ளானார்.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை
கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை
எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர்.
பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி
அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார்.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.
ராமாயணம் படத்தில் கரீனா கபூர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு
கிளம்பியது. இந்த நிலையில் கரீனா கபூருக்கு பிறந்த 2-வது ஆண்
குழந்தைக்கு ஜெகாங்கீர் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல்
பரவி மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
1606-ம் ஆண்டு சீக்கிய குருவான அர்ஜுன் தேவை சிறையில்
அடைத்து கொடுமைப்படுத்திய முகலாய மன்னன் ஜெகாங்கீர்
பெயரை குழந்தைக்கு சூட்டுவதா? என்று வலைத்தளத்தில்
கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
தினத்தந்தி
-
-
இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட
நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து
எதிர்ப்புக்கு உள்ளானார்.
இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை
கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை
எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர்.
பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி
அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார்.
இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.
ராமாயணம் படத்தில் கரீனா கபூர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு
கிளம்பியது. இந்த நிலையில் கரீனா கபூருக்கு பிறந்த 2-வது ஆண்
குழந்தைக்கு ஜெகாங்கீர் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல்
பரவி மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
1606-ம் ஆண்டு சீக்கிய குருவான அர்ஜுன் தேவை சிறையில்
அடைத்து கொடுமைப்படுத்திய முகலாய மன்னன் ஜெகாங்கீர்
பெயரை குழந்தைக்கு சூட்டுவதா? என்று வலைத்தளத்தில்
கண்டனங்கள் கிளம்பி உள்ளன.
தினத்தந்தி
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
தனி ஒருவனாய் விமானத்தில் பயணித்த மாதவன் – வைரலாகும் வீடியோ
-
-
நடிகர் மாதவன், கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற
பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள
நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில்
கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி
இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.
அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத பயணமாக மாறி உள்ளது.
ஏனெனில், அந்த விமானத்தில் சக பயணிகள் இன்றி அவர் மட்டுமே
பயணித்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மாதவன்,
“இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக
இருந்தது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர
வேண்டும் என வேண்டுகிறேன்.
அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்”
என குறிப்பிட்டுள்ளார்.
மாலைமலர்
-
-
நடிகர் மாதவன், கல்பேஷ் இயக்கும் ‘அம்ரிகி பண்டிட்’ என்கிற
பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மலையாள
நடிகை மஞ்சு வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடைபெற்று வருகிறது. இதில்
கலந்து கொள்வதற்காக நடிகர் மாதவன், கடந்த மாதம் 26-ந் தேதி
இந்தியாவில் இருந்து துபாய் சென்றுள்ளார்.
அந்த பயணம் அவருக்கு மறக்க முடியாத பயணமாக மாறி உள்ளது.
ஏனெனில், அந்த விமானத்தில் சக பயணிகள் இன்றி அவர் மட்டுமே
பயணித்துள்ளார்.
இந்த அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மாதவன்,
“இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் மறுபுறம் சோகமாக
இருந்தது. இத்தகைய கடினமான சூழல் விரைவில் முடிவுக்கு வர
வேண்டும் என வேண்டுகிறேன்.
அப்போது தான் அன்புக்குரியவர்கள் அருகில் இருக்க முடியும்”
என குறிப்பிட்டுள்ளார்.
மாலைமலர்
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் சந்தானத்தின் 3 படங்கள்?
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்
வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து
வருகிறார்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பை
பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம்,
டிக்கிலோனா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு
தயாராக உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளதால் இந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட பேச்சு
வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கியும், டிக்கிலோனா
படத்தை கார்த்திக் யோகியும், சபாபதி படத்தை ஸ்ரீனிவாசராவும்
இயக்கி உள்ளனர். இப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
-
-
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம்
வந்த சந்தானம், தற்போது படங்களில் ஹீரோவாக நடித்து
வருகிறார்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான பாரிஸ் ஜெயராஜ்
திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பான வரவேற்பை
பெற்றது. தற்போது இவர் நடித்துள்ள சபாபதி, சர்வர் சுந்தரம்,
டிக்கிலோனா ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு
தயாராக உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள்
மூடப்பட்டுள்ளதால் இந்த படங்களை ஓடிடி-யில் வெளியிட பேச்சு
வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில் சர்வர் சுந்தரம் படத்தை ஆனந்த் பால்கியும், டிக்கிலோனா
படத்தை கார்த்திக் யோகியும், சபாபதி படத்தை ஸ்ரீனிவாசராவும்
இயக்கி உள்ளனர். இப்படங்களின் ஓடிடி வெளியீடு குறித்த
அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
மாலைமலர்
Re: திரைத்துளிகள் - தொடர் பதிவு
‘புட்ட பொம்மா’ மூலம் ஹீரோயினாக அறிமுகமாகும் அஜித்தின் ரீல் மகள்
-
-
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’
படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள்
என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும்
விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக
நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள்
செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும்
நடித்துள்ளார்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின்
தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக
நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது
-மாலைமலர்
-
-
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’
படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா.
அவர் இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார்.
இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள்
என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. இதையடுத்து அனிகா மீண்டும்
விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக
நடித்திருந்தார்.
இந்த படத்தில் இருவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள்
செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதுதவிர நானும் ரவுடிதான், மிருதன் போன்ற தமிழ் படங்களிலும்
நடித்துள்ளார்
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கப்பேலா’ படத்தின்
தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக
நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என
எதிர்பார்க்கப்படுகிறது
-மாலைமலர்
Page 2 of 2 • 1, 2
Similar topics
» திரைத்துளிகள் - தொடர் பதிவு
» இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» ஓம் நமசிவாயா - தொடர் பதிவு
» மழை நிலவரம் - தொடர் பதிவு
» இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு
» நகைக்கடை உரிமையாளர்கள் தொடர் கடையடைப்பு...தொடர் பதிவு !
» ஓம் நமசிவாயா - தொடர் பதிவு
» மழை நிலவரம் - தொடர் பதிவு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|