புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
44 Posts - 60%
heezulia
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
2 Posts - 3%
viyasan
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
236 Posts - 42%
heezulia
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
13 Posts - 2%
prajai
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சம்பளம் Poll_c10சம்பளம் Poll_m10சம்பளம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்பளம்


   
   
DRPAVALAN
DRPAVALAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 25/07/2021

PostDRPAVALAN Sun Jul 25, 2021 2:10 pm

சம்பளம்

( சிறுகதை)

காலை மணி 11 இருக்கும். வீட்டின் அழைப்பு மணி குருவியின் ஓசையில் கூவியது. பிள்ளைகள் இருவரும் ஆன்லைனில் வகுப்பில் பாடம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இளைய மகன் ஒன்றாம் வகுப்பு படிக்கிறான். அவனோடு நானும் இணைந்துப் பாடத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசிரியை ஆங்கிலம்,  கணிதம்,  சமூகவியல் என்று மூன்று பாடங்களை நடத்தும் ஆசிரியர். அது மட்டும் அல்ல அந்த ஒட்டுமொத்த மாணவர்களுக்கும் வகுப்பு ஆசிரியரும் கூட. அதனால் எப்பொழுதும் மாணவர்கள் மீது கொஞ்சம் அக்கறையும்,  உரிமையும் உடையவர் போல் அவருடைய செயல்பாடு எதிரொலிக்கும். ஒரு வேளைப் பள்ளி திறந்திருந்தால் வகுப்பறையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் போலும். ஆன்லைனில் மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் இடையிடையே எரிச்சல் அடைவதை வலிந்து கட்டுப்படுத்தி kindly can you mute please என்ற வார்த்தையை அடிக்கடி உச்சரித்துக்கண்டே இருப்பார். ஆசிரியர் ஏதாவது கேள்விகள் கேட்டால் போதும் குழந்தைகள் ஆர்வம் மிகுதியால் பதில் சொல்லத் தொடங்கி விடுவார்கள் அந்நேரம் எஃகோ சத்தத்துடன் இரைச்சலாக இருக்கும். அந்நேரத்தில் ரயில் நிலையங்களில் அடிக்கடி ஒரு கம்ப்யூட்டர் வாய்ஸ் வருவதைப் போல kindly passenger attention please என்பதைப் போல அந்த ஆசிரியர் உச்சரித்துக் கொண்டே இருப்பார். அந்நேரத்தில் மற்ற பெற்றோர்களுக்கும் கொஞ்சம் வருத்தமாகத் தான் இருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட மாணவியின் தாயார் பக்கத்தில் இருந்துகொண்டு mute open செய்து  பதில் சொல்லு...  பதில் சொல்லு...  என்று சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருப்பாள். 45 நிமிட வகுப்பறையில் குறைந்தது ஐந்தாறு முறையாவது அந்த மாணவியின் பெயரைச் சொல்லி please mute.... Can you please mute என்று சொல்லும்போது அந்த அம்மாவின் மீது நமக்கே எரிச்சல் வரதான் செய்யும்.

 என்னுடைய மகனுக்குப் பெரிய அளவிற்கு ABCD... 26 எழுத்துக்கள் வரிசையாகச் சொல்லவும் தெரியாது. எழுதவும் தெரியாது. அதனால் அவன் எதற்கும் பதில் சொல்ல விரும்ப மாட்டான். அவனுக்குத் தெரிந்தது இரண்டு மூன்று வார்த்தைகள் தான். வகுப்பறை தொடங்கும்போது good morning Miss என்றும், முடியும்போது thank you miss, buy miss என்றும் எப்படா வகுப்பு முடியும்.... முடியும்... என்று எதிர்பார்த்தவனுக்கு கிடைத்த பரிசு போல உடனே வெளியேறி விடுவான். அதனால் அவன் பதில் தெரியாமல் மாட்டிக் கொண்டு அசிங்கப்படவும் மாட்டான்.

 அவன் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் LKG மட்டுமல்ல UKGயும் தேர்ச்சிப் பெற்று முதல் வகுப்பிற்கு சென்றதே பெரிய விஷயம் தான். அதனால் அவன் பதிலேதும் சொல்லாமல் அமைதி காப்பான். அப்பொழுதுதான் ஒரு குருவியின் கீச்சொலி சத்தத்தில் காலிங்பெல் அலரி மெதுவாக அமிழ்தபோது கதவைத் திறந்து பார்த்தால், 30 வயதிற்குள் மதிக்கத் தக்க பெண் ஒருவள் வீட்டு காலிங் பெல்லை அழுத்தியதோடு,  அடுத்த வீட்டு Bellலையும் அழுத்தி விட்டு எங்கள் வீட்டு வாசற்படியை முகம் பார்த்துக் காத்திருந்தாள்.

 அவள் ஒரு முன்கள பணியாளர். தெருவைக் கூட்டிக் பெருக்கி சுத்தம் செய்வது தான் அவளுடைய பிரதான வேலை.  நான் இப்பொழுது குடியிருக்கும் இந்த வீட்டுக்கு வருவதற்கு முன்னால் இந்த வீட்டைப் பெருக்கி கழுவி கொடுப்பதற்கு எவ்வளவு ஆகும் என்று கேட்டேன். அப்பெண்மணி கொஞ்சமும் தயங்காமல் 800 ரூபாய் கொடுங்க சார் என்றாள். வெறும் 600 சதுர அடி கொண்ட இந்த வீட்டுக்கு 800 ரூபாய் கேட்ட போது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன். ஆனால் அந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஏற்பாடு செய்துவிட்டேன்.  அன்றையிலிருந்து அந்தப் பெண்ணுக்கும் என்மீது கொஞ்சம் கோபம் இருந்ததை அவளுடைய பார்வையே காட்டிக் கொடுக்கும். அப்படி தான் அந்த முன்களப் பணியாளர் பெண்ணுக்கும் எனக்குமான உறவு இருந்தது. அந்தப் பெண் இப்போது வீட்டுவாசலில் நின்று கொண்டிருக்கிறாள்.

 என்னம்மா என்று வேண்டா வெறுப்போடு கேட்டேன் அந்தப் பெண்ணும் என்னை எதிர்பார்த்திருக்க மாட்டாள். இல்லையெனறால் நான் இந்த வீட்டிற்கு வந்து ஏறக்குறைய ஓராண்டாகும் இந்தச் சூழலில் அந்த வார்த்தை வாயிலிருந்து வந்து இருக்காது. யாருக்கோ பதில் சொல்வதைப் போல நாங்க போராட்டம் நடத்த போறோம்
 எங்களுக்குண்டான சம்பளத்தை கேட்டும்,  வேலைய நிரந்தரம் பண்ண சொல்லியும் கார்ப்ரேசங்காரங்கிட்ட சொல்லிப் போராட்டம் நடத்தலாம் என்று முடிவு பண்ணி இருக்கோம். அதனால நாங்க தெருவிலேயே சோறு ஆக்கிப் போராட்டம் பண்றதுக்கு உங்களால முடிஞ்சா அஞ்சோ? பத்தோ? குடுங்க என்று படபடவென்று பொரிந்து தள்ளிவிட்டு அமைதியானாள்.

நான் தொடர்ந்து எதையோ கேட்க நினைத்தபோது அதை அவளும் உணர்ந்து தான், முடிஞ்சா குடுங்க இல்லனா விடுங்க என்று சொன்னாள். நான் எரிச்சலடைந்து காசு கொடுக்காமல் அல்லது கோபப்பட்டு அனுப்பி விடுவேன் என்பதுதான் அச்சொல்லின் சாரமாக இருந்திருக்கும்.

அவள் இப்படியாக என்னிடம் பொரிந்து தள்ளிக்கொண்டே இருக்கும்போது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் ஒருவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்திருப்பான்.

கொஞ்சம் இருமா என்று சொல்லிவிட்டு என்னுடைய பர்ஸில் இருந்து ஐம்பது ரூபாயைக் கொண்டு வந்து கொடுத்து உங்க போராட்டம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லி அனுப்பிவிட்டேன். அவள் கேட்ட தொகையை விடக்விடக்கூடுதலாகக் கொடுத்ததனாலோ என்னவோ தெரியவில்லை அந்தப் பெண்மணியும் இதுவரை இருந்த கோபம் தணிந்ததைப் போலப் புன்முறுவலுடன் தேங்க்ஸ் சார் என்றாள்.

அவர்களுக்குண்டான சம்பளத்தைக் கேட்டும்,  வேலைய நிரந்தரம் பண்ணச் சொல்லியும் கார்ப்ரேசங்காரங்கிட்ட சொல்லிப் போராட்டம் நடத்த அந்தம்மா ஒன்று கூடிப் போராடுகிறார்கள். ஆனால், என்னுடைய பேராசிரியர் பணி?

”மாணவர்களிடம் முழுக்கட்டணத்தையும் கட்டச்சொல்லுங்கள்.. இல்லை... நீங்களே அப்பெற்றோர்களிடம், நீங்கள் பீஸ் கட்டினால்தன் எங்களுக்குச் சம்பளம் கொடுப்பார்கள் என்று ஓப்பனாகச் சொல்லுங்கள்” என்று சொல்லியதை நான் யாரிடம் சொல்ல?


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 25, 2021 5:49 pm

ஓ, இதனால் தான் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து கட்டணத்தை செலுத்தச் சொல்லி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளதா?

என்ன செய்வது, இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் யாரையும் குறை சொல்லி பயனில்லை.

ஒவொருவரும் மற்றவர்களின் நிலைமைகளை புரிந்து கொண்டு செயல்படுவது ஒன்றே சிறந்த தீர்வாக அமையும்.



சம்பளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக