ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Today at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:37 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Today at 12:21 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 12:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:02 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கன்னட விடுகதைகள் (81 - 88)

2 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Empty கன்னட விடுகதைகள் (81 - 88)

Post by Dr.S.Soundarapandian Thu Jul 29, 2021 3:26 pm

First topic message reminder :

கன்னட விடுகதைகள் (1 - 10)

1 . காலில்லாது நடக்கும்; வாயில்லாது பேசும் ; அநேகருக்கு வயிறு நிரப்பும் வீடு !
அது என்ன?
விடை : ஆறு
( ‘காலில்லதே நடெவுது; பாயில்லதே நுடியுவுது; இதர ஹொட்டே ஹலவக்கே மனெயாகிருவுது’ )
( ‘உத்தரா : நதி’)

2 .குடுவையில் மிளகு !
அது என்ன?
விடை : பப்பாளிப் பழம்
( ‘குடிகெயல்லி மெனஸு !’ )
( ‘உத்தரா : பப்பாயி’)

3 . மேலே பச்சை , உள்ளே சிவப்பு , தின்றால் குளிர்ச்சி !
அது என்ன?
விடை : தர்பூசணி
( ‘ மேலே ஹசிரு , ஒளகே கெம்பு , திந்தரே தம்ப்பு !’ )
( ‘உத்தரா : கல்லங்கிடி’)

4 . தாவினால் அனுமான் , கத்தினால் ராவணா, உட்கார்ந்தால் முனிராமன் !
அது என்ன?
விடை : தவளை
( ‘ஹாரிதரே ஹனுமந்தா, கூகிதரே ராவணா , குனிதரே முனிராமா !’ )
( ‘உத்தரா : கப்பா ’)

5 . சின்ன வீட்டில் நிறைந்துள்ள சில்லுகல் !
அது என்ன?
விடை : பற்கள்
( ‘சிக்க மனேலி சிக்க தும்பிவே !’ )
( ‘உத்தரா : ஹல்லு ’)

6 . உயரமான மரத்தில் சிவப்புச் சாமியார் !
அது என்ன?
விடை : கொட்டைப் பாக்கு மரம்
( ‘உத்த மரதல்லி கெம்பு சந்யாசி !’ )
( ‘உத்தரா : அடிகெ காயி ’)

7 . உன் வயிறு மீது என் வயிறு !
அது என்ன?
விடை : திருகைக் கல்
( ‘நின்ன ஹொட்டேய மேலே நன்ன ஹொட்டே !’ )
( ‘உத்தரா : ராகி கல்லு ’)

8. செத்தவனே தன் சாவை ஊரெல்லாம் சொல்லுகிறான் !
அது என்ன?
விடை : பலாப் பழம்
( ‘சத்தவனே சாவின சுத்தி தகொண்டு ஹோக்தானே !’ )
( ‘உத்தரா : ஹலசின ஹன்னு ’)

9 . சின்னப் பெட்டி ; தங்கப் பெட்டி; மூடி திறந்தால் முன்னூறு பெட்டிகள் !
அது என்ன?
விடை : மாதுளம் பழம்
( ‘சிக்க சிக்க பெட்டகே, சின்னதே பெட்டகே , முச்சி தெகதரே முன்னூரு பெட்டகே !’ )
(‘உத்தரா : தாளிம்பி ஹன்னு’)

10 . விரித்து விடலாம் ; வெட்டி விடலாம்; ஆனால் சாப்பிட முடியாது !
அது என்ன?
விடை : கூந்தல்
( ‘சில்லோ துண்டே, குய்யோ துண்டே , தின்னோ தில்லா !’ )
(‘உத்தரா : கூதலு’)
- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Empty கன்னட விடுகதைகள் (71 - 80)

Post by Dr.S.Soundarapandian Fri Aug 13, 2021 7:14 pm


கன்னட விடுகதைகள் (71 - 80)

71 .அதற்குக் கால்கள் இருக்கும், ஆனால் கை இல்லை ! இடுப்பு இருக்கும் , ஆனால் தலை இல்லை ! அதற்குப் பல ஓட்டைகள் உண்டு !
அது என்ன?
விடை : முழுக்காற் சட்டை (full pant)
( ‘காலுன்ட்டு கையில்லா ! நடுவுன்ட்டு தலெ யில்லா ! ரந்த்ரக ளுன்ட்டு ! ’ )
( ‘உத்தரா : ப்யான்ட்டு’)

72 . நாக்குண்டு , பேச முடியாது ! முள்ளுண்டு , ஆனால் புதர் இல்லை !
அது என்ன?
விடை : பேனா
( ‘நாளிகெயுன்ட்டு , மாதாடுவு தில்லா! முள்ளுன்ட்டு , பொதே யல்லா ’ )
( ‘உத்தரா : பென்னு’)

73 .நல்ல கோழி , முள்ளிலே முட்டை இட்டது !
அது என்ன?
விடை : எலுமிச்சம் பழம்
( ‘ ஒள்ளெ கோளி முள்ளலி மொட்டெ இக்கதே !’ )
( ‘உத்தரா : நிம்பி ஹன்னு ’)

74 . புல் விரும்பும் தேவர் அவர் ! வருஷத்துக்கு ஒரு தடவை வருவார் !
அவர் யார் ?
விடை : கணபதி
( ‘கரிகே ஆசெ தேவரு ! வர்ஷக்கொம்மே பர்த்தானே !’ )
( ‘உத்தரா : கணபதி ’)

75 . கல்லை மிதிக்கும் ! முள்ளை மூடும்! ஆனால் தண்ணீரைக் கண்டால் நின்றுவிடும் !
அது என்ன?
விடை : செருப்பு
( ‘ கல்லன்னு துளியுத்தே! முள்ளன்னு மூயுத்தே ! நீரு கண்ட்ரே நில்லுத்தே!)
( ‘உத்தரா : சிப்பலி ’)

76 . நீல ஏரியில் வெள்ளை மீன் !
விடை : நட்சத்திரம்
( ‘நீலி கெரேலி பிளி மீனு ! ’ )
( ‘உத்தரா : நக்க்ஷத்ரா ’)

77 . கன்ணுக்குத் தெரியாது , பிடிக்கவும் முடியாது !
அது என்ன?
விடை : காற்று
( ‘ கண்ணிகே காணூதில்லா ! கையிகே சிகூதில்லா !’ )
( ‘உத்தரா : காலி’)

78 . மடித்தால் , மொட்டு ! விரித்தால், பூ! வாசனையே இல்லை !
விடை : குடை
( ‘ மடிசிதரே மொக்கு ! பிடிசிதரே ஹூவு ! பரிமள வில்லா , வாஸ்னே இல்லா !’)
(‘உத்தரா : கொடெ ’)

79 . தங்கம் வெளியே எறியப்படுகிறது ! வெள்ளி சாப்பிடப்படுகிறது !
அது என்ன?
விடை : வாழைப் பழம்
( ‘ சின்னா பிசாடுத்தாரே ! பெள்ளி திந்தாரே’ )
(‘உத்தரா : பாளெ ஹன்னு ’)

80 . எழுத்துகள் இருக்கும், புத்தகமல்ல ! சிங்கம் அதில் இருக்கும் , காடு அல்ல ! வட்டமாக இருக்கும் , சக்கரமல்ல ! நான் யார் ?
விடை : காசு
( ‘ அக்ஷரா ளித்தரூ , புஸ்தக வல்லா! ஸிம்ஹ வித்தரூ , அரண்ய வல்லா ! குண்டா கித்தரூ , சக்ர மல்லா ! நானு யாரு ? ’ )
(‘உத்தரா : நாண்யா ’)

- கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Empty கன்னட விடுகதைகள் (81 - 88)

Post by Dr.S.Soundarapandian Sat Aug 14, 2021 12:24 pm

கன்னட விடுகதைகள் (81 - 88)

81 . விருந்தாளி வருகின்றான் , போகின்றான் ! ஆனால் அவன் வரும் வழி மட்டும் தெரியவில்லை!
அது என்ன?
விடை : காற்று
( ‘ஹோத னென்ட்டா, பந்த னென்ட்டா, பந்த தாரி கொத்தில்லா ! ’ )
( ‘உத்தரா : நெரளு ’)

82 . கண்ணுக்கு , அருகாமை !காதுக்குத் தூரம் !
அது என்ன?
விடை : அடிவானம்
( ‘கண்ணிகே ஹத்திரா , காலிகே தூரா! ’ )
( ‘உத்தரா : திகந்தா’)

83 .கிராமம் இருக்கு , ஆனால் ஆள் யாரும் இல்லை! ஆறு இருக்கு , ஆனால் தண்ணி இல்லை! சாலை இருக்கு, வாகனம் எதுவும் இல்லை ! நான் யார் ?
விடை : வரை படம் (map)
( ‘ ஊருன்ட்டு ஜன ரில்லா ! நதி யுன்ட்டு நீரில்லா ! ரஸ்தெ யுன்ட்டு வாஹன வில்லா ! ஹாகதரே நான் யாரு ?’ )
( ‘உத்தரா : பூ படா ’)

84 . இரண்டு சகோதரர்களும் முந்திச் செல்ல முயல்கின்றனர் ! ஆனால் ஒருவரும் முந்திச் செல்வதில்லை !
அது என்ன ?
விடை : கால்கள்
( ‘அண்ணா தம்மா இப்பரூ நாமுந்தே தாமுந்தே என்னுத்தாரே ! ஆதரே யாரூ முந்தே ஹோகுவதில்லா !’ )
( ‘உத்தரா : காலுகளு ’)

85 . இரண்டு பேர் போய்க்கொண்டும் வந்துகொண்டும் இருப்பார்கள் ! ஆனால், வேறு இருவர் போனால் திரும்பி வரவே மாட்டார்கள் !
அது என்ன?
விடை : செல்வம் , வறுமை. உயிர், மானம்.
( ‘ ஹோகுத்தா பருத்தா இருவுது எரடு, எரடூ ஹோதமேலே பரலாரவு !)
( ‘உத்தரா : ஸிரிதனா, படதனா. ப்ராணா , மானா ’)

86 . நாம் கடித்தால், அதுவும் கடிக்கும் ! அதுவாகக் கடிக்காது ! அது பாம்பும் அல்ல , தேளுமல்ல !
விடை : மிளகாய்
( ‘கச்சிதரே மாத்ர கச்சுவுது ! ஹாவல்லா , சீளல்லா ! ’ )
( ‘உத்தரா : மெனசின காயி ’)

87 . கடையிலிருந்து வாங்கி வா; அதன் முன் இருந்து அழு !
அது என்ன?
விடை : வெங்காயம்
( ‘ அங்கடியல்லி தரோது; அதர முந்து கூத்து அளூது !’ )
( ‘உத்தரா : ஈருள்ளி ’)

88 . இரண்டு வீட்டுக்கும் ஒரு பொதுச் சுவர் !
விடை : மூக்கு
( ‘ எரடு மனெகே ஒந்தே தூல!’)
(‘உத்தரா : மூகு ’)
கன்னட மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததைத், தமிழ் மொழியாக்கமும், எழுத்துப் பெயர்ப்பும் செய்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.
(கன்னட மூலமும் ஆங்கில மொழியாக்கமும் thinkbangalore.com)
***


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கன்னட விடுகதைகள்   (81 - 88) - Page 2 Empty Re: கன்னட விடுகதைகள் (81 - 88)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum