புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
6 Posts - 20%
viyasan
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
213 Posts - 42%
heezulia
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
203 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தமிழ் மருத்துவம் - Page 7 I_vote_lcapதமிழ் மருத்துவம் - Page 7 I_voting_barதமிழ் மருத்துவம் - Page 7 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் மருத்துவம்


   
   

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 27, 2021 11:51 pm

First topic message reminder :



கோட்பாடு விளக்கம்

சித்த மருத்துவக் கோட்பாடு என்பது, அம்மருத்துவம் எந்தக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு மருத்துவம் செய்யப் படுகின்றதோ அக்கொள்கையின் அடிப்படையைக் குறிப்பிடுவதாகும்.

மருத்துவக் கோட்பாடு

உடலைப் பற்றி அறிவது; உடலில் தோன்றும் நோய்களைக் கண்டறியும் கருவிகளை உருவாக்குதல்; நோய்களுக்கான காரணங் களைக் கூறல்; நோய்களுக்குரிய மருந்துகளை உடலியலுக்கு ஏற்றவாறு அமைத்தல்; மருந்துகளால் நோய்களைத் தீர்க்கும் முறைகளை வகுத்தல்; நோயிலிருந்து விடுபடல்; தடுத்தல்; பாது காத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மருத்துவக் கோட்பாடு உருவாக்கப்படும்.

சித்த மருத்துவக் கோட்பாடு

சித்த மருத்துவக் கோட்பாடு ஐம்பூதக் கொள்கையை அடிப் படையாகக் கொண்டது. இந்த உலகம் ஐம்பூத மயமானது; இந்த உலகத்திலுள்ள உயிர்கள் அனைத்தும் அவற்றால் உருவானவையே; மனித உடலும், உடல் உறுப்புகளும் ஐம்பூதங்களை ஆதாரமாகக் கொண்டு உருவானவை; உடலில் தோன்றும் நோய்களுக்குக் காரணமாக அமைவதும், அந்நோய்களைத் தீர்க்கும் மருந்துப் பொருள்களும், மருந்தும் பஞ்சபூதச் சேர்க்கையினாலேயே உருவா கின்றன. இயற்கையாகத் தோன்றிய பஞ்சபூத முறைக்கு மாறாக அமையும் மருந்துகள், பயன் தர மாட்டா என்னும் கருத்துகளின் அடிப்படையில் வகுக்கப் பெற்றதாகும்.

பஞ்சபூதம்

பஞ்சபூதம் என்பது, நிலம், தீ, நீர், காற்று, ஆகாயம் என்னும் ஐந்தாகும். இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லா விட்டாலோ, குறைந்தாலோ உயிர்கள் தோன்றவும் வாழவும் வழியில்லை. உயிர்கள் தோன்றவும் உய்யவும் காரணமாக அமைவது பஞ்ச பூதமாகும்.

"" நிலம், தீ, நீர், வளி, விசும் பொடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்''1

இந்த உலகம், பஞ்சபூதங்களின் கலவையால் உருவானதே என்று, தொல்காப்பியம் உரைக்கிறது.

உலகமும் பஞ்சபூதமும்

உலகம் பஞ்சபூதங்களின் கலவையினால் உருவாகியிருப்பதைப் போல, நிலவுலகில் உருவாகி யிருக்கும் பொருள்களும் பஞ்சபூதங் களின் கலவையால் அல்லது சேர்க்கையால் உருவானவை.2 பஞ்ச பூதங்களின் தொகுதியே உயிரினங்களை உருவாக்கின என்பதால், உயிர்த் தோற்றத்திற்குப் பஞ்சபூதங்களே ஆதியாக அமைவது தெரிய வருகிறது.3

“ வாறான சனங்களுக்கும் ஐந்து பூதம்
மருவியதோர் தேவதைக்கும் ஐந்து பூதம்
தாறான அண்டமெலாம் ஐந்து பூதம்
சதாசிவமாய் நின்றதுவும் ஐந்து பூதம்
கூறான யோனியெல்லாம் ஐந்து பூதம்
குரும்பனே ஐந்தினால் எல்லாம் ஆச்சு''4

என்று, சட்டைமுனி உரைக்கின்றார். ஐம்பூதங்களால் உருவானவை மனிதர் மட்டுமல்ல, தேவதைக்கும் அவைதாம். சதாசிவமாய் நின்ற தெய்வத்துக்கும் அவைதாம். உயிரினங்கள் அனைத்துக்கும் அவைதாம். அவற்றால்தான் அனைத்துமே உருவாயிற்று என்று தெளிவுபடுத்துவர்.

உயிரினங்கள் பஞ்சபூதங்கள் அல்லாமல் வேறு முறையில் உருவானவை அல்ல என்பதே இதன் அடிப்படைக் கருத்து.

ஒரு பொருளின் மூலத்தைக் கண்டுரைப்பதைப் போல, உயிரினங்கள் அனைத்திற்கும் மூலமாய் நிற்பது பஞ்சபூதங்கள் என எண்ணினர்.




தமிழ் மருத்துவம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 28, 2021 1:28 am

காலமும் கற்பமும்

சாகா நிலையை எய்துவதற்காகவும், நோயற்ற வாழ்விற்காகவும் மருத்துவ, ஞான நூல்கள் கற்பங்களைக் கூறியுள்ளன. அக்கற்பங்களை உண்பதற்கு நாள்கள் குறிக்கப்படுகின்றன. கற்பங்களைப் பௌர்ணமி நாளிலும், மூன்றாம் பிறை நாளிலும் உண்ண வேண்டும் என்பர்.

காலமும் யோகமும்

யோக முறைகளைப் பின்பற்றிச் சித்த நிலையைப் பெற முயல் பவர்கள், எந்தெந்தக் காலங்களிலிருந்து தொடங்க வேண்டும் என்பதற்கு அரிய முறைகளைக் கூறக் காண்கிறோம்.

யோகிகள் தங்கள் செயல் ஆவணி, மார்கழி, ஐப்பசி, பங்குனி, வைகாசி, ஆடி, தை ஆகிய ஏழு மாதங்களில் தொடங்கினால் குற்ற மில்லை.

மேஷம், மீனம், கன்னி, அவிட்ட நட்சத்திரங்களும்

குரு, மதி, புகர், புந்தி ஆகிய இலக்கினங்களும்

மீனம், வில், துலை, கன்னி ஆகிய இராசிகளும்

பஞ்சமி, சஷ்டி, சத்தமி, தசமி, திருதிகை, சதுர்த்தி

ஆகிய திதிகளும் குருபூசை, சிவபூசை, தீட்சை

ஆகியவற்றுக்கு நல்ல நாள்களாகும் என்பர்.

காலமும் நோயும்

நோயுற்றது எந்த நாள் என்பதை அறிந்தால், இயல்பாக எந்த நாளில் அந்த நோய் போகும் என்பதை அறிய விண்மீன்களைக் கொண்டும்324 திங்களைக் கொண்டும்325 அறிந்துள்ளனர். விண்மீன், திங்கள் ஆகியவற்றின் கதிர் இயக்கங்கள் மனித நோயின் ஆற்றலைக் குறைக்கவும் கூட்டவும் வல்லவை என்பது இதனால் பெறப்படும். இது, நாளோடும், கோளோடும் நோய்களுக்கும் மனித உடல் நலத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை அறிய வழிவகுக்கும் எனலாம்.

அறுவை சிகிச்சைக்குரிய காலம்

அறுவை சிகிச்சை என்பது மருத்துவ உலகின் மகத்தான சாதனை எனலாம். இதன் தொடக்கம் என்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாது. வேல்பட்ட புண்ணைத் தைக்கும் முறை326 நம் முன் னோர்கள் வகுத்த முறை என்பது தெரியவரும். அவ்வாறு புண் களையோ நோய்ப் பகுதிகளையோ நீக்கவோ, சரிசெய்யவோ செய்யப் படுகின்ற அறுவை மருத்துவத்தை எந்தெந்த நாளில் எந்தெந்தப் பகுதிகளில் செய்யக் கூடாது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரையிலும், பௌர்ணமி தொடங்கி அமாவாசை வரையிலும் மனித உடலில், ‘அமுத நிலைகள்’ சுழன்று கொண்டிருப்பதாகவும், அதன் சுழற்சியின் போது, ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியிலும் நின்று செல்லும். அந்தப் பகுதி எது என்பதை அறிந்து,அந்த நாளில் அந்தப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யாதிருப்பது நலமென்பர். அது மட்டுமல்ல, அந்த நாளில் அந்தப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்பட்டாலோ, குத்து வெட்டு போன்றவை ஏற்பட்டாலோ, பாம்பு, அட்டை, சிலந்தி போன்றவை கடித்தாலோ நோய் தீராமல் மரணம் ஏற்படும் என்றும், திதிகளை அறிந்து அறுவை சிகிச்சை செய்தால் நோய் நீங்குமென்றும் கூறப்படுகிறது.327 இவ்வாறான அமுத நிலைச் சக்கரம் ஒன்றை மதனநூல் உரைத்திடக் காணலாம். அந்தந்த திதிகளில் அந்தந்த நிலைகளில் அமுதம் நிற்கு மெனவும், அவ்விடத்தைத் தொட்டாலே இச்சை உச்ச நிலையை அடையுமெனவும், அந்த நிலைக்கு எட்டாமிடம் நஞ்செனவும், அவ்விடத்தைத் தொட்டால் இச்சையில் வெறுப்பு ஏற்படுமெனவும் கூறப்படும். (அமுதநிலை இணைப்பு 14).

உயிர்க்கதிரலை

வானவெளியில் வீசப்படும் மின்காந்த நுண்ணலைகள் (இணிண்ட்டிஞி ணூச்தூண். ஈணூ. ஏ.ஆர். மில்லிகன் என்பவரால் 1925–ல் கண்டுபிடிக்கப்பட்டது.) விண்மீன்களின் இடையிலிருந்து வருவதாகக் கருதப்படுகிறது.

அதேபோல், பூமியின் நடுவிலுள்ள நெருப்புக் குழப்பிலிருந்து வீசப்படும் பூகம்பக் கதிர் அலைகள் பூமியில் நில அதிர்வை ஏற்படுத்தி பல அழிவுகளை உண்டாக்கு கின்றன. அதே போல் மனித உடம்பினுள் உயிர்க் கதிரலை வீசப்படுகிறது. அது உலா வந்து கொண்டிருக்கும் பகுதிகளில் (உறுப்பு) காயமோ கத்தியோ பட்டால் அக்கதிர்கள் அப்புண்களின் வழியே வெளியேறிவிடும். அதனால், உயிர்க்கதிர் உடலிலிருந்து வெளி யேறினால் மரணம் ஏற்படுகிறது. இக்கதிருக்கு மருத்துவ நூல் வைத்த பெயரே அமுதநிலையாகும்.

இதனைக் கொண்டு பார்த்தால், வானவெளியாகிய அண்டத்திலும் பூமியாகிய பிண்டத்திலும் என்ன நிகழ்கிறதோ அதுவே, மனித உடம்பிலும் நிகழ்கிறது எனக் கண்டனர் போலும். இதன் முழு உண்மைகளையும் கண்டறிய அறிவியல் துறை அறிஞர்கள் ஆராய்ந்து அறிய வேண்டும்.


தொகுப்புரை

தமிழ் மருத்துவம் பஞ்சபூதக் கோட்பாட்டு முறையால் வகுக்கப் பட்டுள்ளது.

உலகப் பொருள்கள் அனைத்தும் பஞ்சபூதக் கூறுகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பஞ்சபூதம், நோயை உருவாக்கும் காரணியாகவும், நோயைத் தணிக்கும் மருந்தாகவும், உடலைக் காக்கும் கற்பமாகவும், சாகாக் கலைக்குரிய சித்தியாகவும் அறியப்பட்டிருக்கிறது.

நோய்த் தேர்வு முறைகளும், மருந்து தயாரிப்பு முறைகளும் அறிவியல் முறையாக அமைந்துள்ளன.

அவசர மருத்துவம், நீண்டகால மருத்துவம் என மருத்துவம் வகைப்படுத்தப் பட்டுள்ளன.

உணவுப் பொருள்களே மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன.

நோய்வரும் வழிகளும், நோயணுகா நெறிகளும் கண்டறியப் பட்டுள்ளன.

தமிழ் மருத்துவம், ஒரு முழுமையான மருத்துவம் என்பதுடன், மிகுந்த பயன்மிகு மருந்துகளையும் கொண்டிருக்கிறது.

தமிழ் மருத்துவம், தமிழர் நாகரிகத்தில் ஓர் அங்கமாக அமைந்துள்ளது.

மூலம்: தமிழ்க்குயில்




தமிழ் மருத்துவம் - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 28, 2021 11:27 am

தமிழ் மருத்துவம் எனும் சித்த மருத்துவம் இன்னும் தாழ்நிலையிலேயே உள்ளது! அறிவியல் முறையில் இம் மருத்துவ உண்மைகளை ஏன் நிரூபிக்கத் தவறுகிறார்கள்? இதற்கான முயற்சி கூடவா எடுக்கக் கூடாது?



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக