Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டோக்கியோ ஒலிம்பிக் 2020
5 posters
Page 7 of 9
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
டோக்கியோ ஒலிம்பிக் 2020
First topic message reminder :
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
Last edited by சிவா on Fri Jul 23, 2021 11:59 pm; edited 2 times in total
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
அர்ஜெண்டினாவிடம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி
-
-
இன்றைய போட்டியின்போது, இந்திய அணியின் குர்ஜித் கவுர்
பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோலை அடித்தார்.
அதேநேரத்தில் அர்ஜென்டினா வீரர் மரியா நோயல்
இரண்டு பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்தார். அதன்மூலம்,
அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின்
இறுதிப் போட்டிக்கான கனவு தகர்ந்தது.
இருப்பினும், இந்திய அணிக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு
உள்ளது. இங்கிலாந்து அணியுடன் அடுத்து நடக்கவுள்ள போட்டியில்
இந்திய அணி வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கம் வெல்ல
முடியும்.
நியூஸ் 18
-
-
இன்றைய போட்டியின்போது, இந்திய அணியின் குர்ஜித் கவுர்
பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோலை அடித்தார்.
அதேநேரத்தில் அர்ஜென்டினா வீரர் மரியா நோயல்
இரண்டு பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்தார். அதன்மூலம்,
அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியின் மூலம், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின்
இறுதிப் போட்டிக்கான கனவு தகர்ந்தது.
இருப்பினும், இந்திய அணிக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு
உள்ளது. இங்கிலாந்து அணியுடன் அடுத்து நடக்கவுள்ள போட்டியில்
இந்திய அணி வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கம் வெல்ல
முடியும்.
நியூஸ் 18
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
பிரிட்டனுடன் விளையாடி வெண்கலம் பெற வாழ்த்துகள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஹாக்கியில் இந்தியாவை அடித்துக்கொள்ள உலகத்தில் வேறு நாடு இல்லை என்ற வரலாறு இருந்தது என்பது தற்போது பலருக்கும் தெரியாது..
வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்த்த நாள் இன்று..
ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:
தங்கம்: 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980.
வெள்ளி: 1960
வெண்கலம்: 1968, 1972, 2020*
41 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோம், இது இந்திய ஹாக்கி சகாப்தத்தின் புதிய தொடக்கமாகும்.
நன்றி இந்திய ஹாக்கி அணி & பயிற்சியாளர் கிரஹாம் ரீட்.
வரலாற்றை மீண்டும் திரும்பிப் பார்த்த நாள் இன்று..
ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி:
தங்கம்: 1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980.
வெள்ளி: 1960
வெண்கலம்: 1968, 1972, 2020*
41 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோம், இது இந்திய ஹாக்கி சகாப்தத்தின் புதிய தொடக்கமாகும்.
நன்றி இந்திய ஹாக்கி அணி & பயிற்சியாளர் கிரஹாம் ரீட்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஸ்கோர் 9 - 1 என இருந்தது!
இப்போது ஒரு நிமிடம் கூட
இல்லை; கடைசி 45 வினாடிகள்..
எதிரியை புரட்டி போட்டு வின் பை
fall முறையை தவிர வேறு வழியே
இல்லை ரவிக்குமாருக்கு..
அதே போல் கடைசி 30 வினாடியில்
தன் பலம் கொண்ட மட்டும் முயன்று
எதிரியை புரட்டினார் ரவிகுமார்..
அந்த இடத்தில் தான் தோல்வியில்
இருந்து தப்பிக்க நுர்இஸ்லாம்
Sanayev குறுக்கு புத்தியால் நம்
ரவிக்குமாரை பல்லால் கடித்தான்..
ரவிக்குமாருக்கு எவ்வளவு
வலித்திருக்கும் என்று
கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
ஆனால் அந்த வலியையும் விட,
அவர் வீரமும், தேசத்தின் மீது
கொண்ட அபரிமிதமான பற்றும்,
அந்த வலியை பொறுத்து கொண்டு
எதிரியை கீழே புரட்டி போடும்
சக்தியை தந்தது ரவிகுமாருக்கு...
இறுதியில் வென்றார் அவர்...
இனிமேலாவது போலியான
சினிமா ஹீரோக்களை கொண்டாடுவதை விட்டு...
அன்பு தம்பி ரவிக்குமார்
போன்ற ரியல் ஹீரோக்களை கொண்டாடுவோம்..
நேற்று இந்தியா மூன்று
தோல்விகளை சந்தித்தாலும்...
உன் வெற்றி மட்டுமே நேற்று
எனக்கு உறக்கத்தை தந்தது..
தங்க பதக்கத்தோடு வா!
உன்னை கொண்டாட 130 கோடி நெஞ்சங்கள் காத்துகிடக்குது..
இன்று ரவிகுமார் தஹியாவின்
இறுதி போட்டி காண தவறாதீர்கள்
நண்பர்களே!
#ஜெய்_ஹிந்த்
இப்போது ஒரு நிமிடம் கூட
இல்லை; கடைசி 45 வினாடிகள்..
எதிரியை புரட்டி போட்டு வின் பை
fall முறையை தவிர வேறு வழியே
இல்லை ரவிக்குமாருக்கு..
அதே போல் கடைசி 30 வினாடியில்
தன் பலம் கொண்ட மட்டும் முயன்று
எதிரியை புரட்டினார் ரவிகுமார்..
அந்த இடத்தில் தான் தோல்வியில்
இருந்து தப்பிக்க நுர்இஸ்லாம்
Sanayev குறுக்கு புத்தியால் நம்
ரவிக்குமாரை பல்லால் கடித்தான்..
ரவிக்குமாருக்கு எவ்வளவு
வலித்திருக்கும் என்று
கொஞ்சம் யோசித்து பாருங்கள்..
ஆனால் அந்த வலியையும் விட,
அவர் வீரமும், தேசத்தின் மீது
கொண்ட அபரிமிதமான பற்றும்,
அந்த வலியை பொறுத்து கொண்டு
எதிரியை கீழே புரட்டி போடும்
சக்தியை தந்தது ரவிகுமாருக்கு...
இறுதியில் வென்றார் அவர்...
இனிமேலாவது போலியான
சினிமா ஹீரோக்களை கொண்டாடுவதை விட்டு...
அன்பு தம்பி ரவிக்குமார்
போன்ற ரியல் ஹீரோக்களை கொண்டாடுவோம்..
நேற்று இந்தியா மூன்று
தோல்விகளை சந்தித்தாலும்...
உன் வெற்றி மட்டுமே நேற்று
எனக்கு உறக்கத்தை தந்தது..
தங்க பதக்கத்தோடு வா!
உன்னை கொண்டாட 130 கோடி நெஞ்சங்கள் காத்துகிடக்குது..
இன்று ரவிகுமார் தஹியாவின்
இறுதி போட்டி காண தவறாதீர்கள்
நண்பர்களே!
#ஜெய்_ஹிந்த்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
கடித்த அந்த ஆளுக்கு எச்சரிக்கை -நீக்கம் எதுவும் இல்லையா?
ஊடகங்களில் செய்தி ஏதுமில்லை.
ஊடகங்களில் செய்தி ஏதுமில்லை.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிக்குமார்; இந்தியாவுக்கு 5வது பதக்கம்
டோக்கியோ: ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளி வென்றார் ரவிக்குமார். பைனலில் ரஷ்யாவின் ஜாவுரிடம் 4-7 என தோல்வியடைந்தார்.
ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. மல்யுத்தம் ஆண்கள் 'பிரீஸ்டைல்' 57 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா, 23, களமிறங்கினார். இதில் ரஷ்யாவின் ஜாவுர் உகுவேவை 26, எதிர்கொண்டார். மொத்தம் 6 நிமிட போட்டி, தலா 3 நிமிடம் கொண்ட இரு 'பீரியடு' ஆக நடத்தப்பட்டது. கடைசியாக பங்கேற்ற 15 சர்வதேச தொடர்களில், 12 தங்கம் உட்பட 14 பதக்கம் வென்றவர் ஜாவுர். தவிர 2 முறை உலக சாம்பியன் ஆனவர் என்பதால் ரவிக்குமார் மிக எச்சரிக்கையாக மோதினார்.
ஆனால் தொடர்ந்து 15 போட்டிகளில் வென்ற வேகத்தில் வந்த ஜாவுர், முதல் 'பீரியடில்' 2 புள்ளியை பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இவர் 4-2 என முந்தினார். இரண்டாவது 'பீரியடில்' ரவிக்குமார் ஆதிக்கம் செலுத்துவார் என நம்பப்பட்டது. மாறாக ரவிக்குமார் பிடியில் இருந்து எளிதாக நழுவினார் ஜாவுர். ஒருகட்டத்தில் ரவிக்குமார் 4-7 என பின்தங்கினார். கடைசி நேரத்தில் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி வரை ரவிக்குமார் மீளவே இல்லை. முடிவில் 4-7 என தோல்வியடைந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
பெண்கள் ஹாக்கி வெண்கல பதக்கம் நழுவியது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
உணர்ச்சிவசப்பட்டு அழுத இந்திய மகளிர் ஹாக்கி அணியினர்: ஊக்கமளிக்கும் வார்த்தைகள் கூறிய பிரதமர்: வைரலாகும் வீடியோ
பிரதமர் மோடியுடனான உரையாடலின் போது இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடித் தோல்வி அடைந்தது. இதனால், மகளிர் ஹாக்கி அணியின் பதக்கக் கனவு தகர்ந்தது.
இது குறித்து பிரதமர் "ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் நாம் ஒரு பதக்கத்தை இழந்தோம். ஆனால் நமது ஹாக்கி அணி புதிய இந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்கிறது" என்று பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், மகளிர் ஹாக்கி அணியினிரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், வீராங்கனைகள் போராடி தோல்வியுற்றதை நினைத்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட அவர்களைப் பிரதமர் தேற்றுகிறார். அந்தக் காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்வதாக உள்ளது.
பிரதமர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் அருமையாக விளையாடினீர்கள். உங்களின் நான்கைந்து ஆண்டு கால கடின உழைப்பு பதக்கமாக மாறாவிட்டாலும் கூட உங்களின் வியர்வை இந்தியாவின் கோடிக்கணக்கான மகள்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அதனால், நீங்கள் ஏமாற்றமடையாதீர்கள்" என்று கூறினார்.
அப்போது சில வீராங்கனைகள் அழுதனர், அதற்கு பிரதமர் மோடி, "தயவுசெய்து நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறது. இதில் ஏமாற்றமடைவதற்கு ஒன்றுமில்லை. இந்திய ஹாக்கி மறுமலர்ச்சி கண்டுள்ளது. அது உங்களால் தான் சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார்.
பிரதமர் தனது உரையாடலின் போது வீராங்கனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு நலம் விசாரித்தார். நவ்நீத் கவுரிடம், அர்ஜென்டினாவுடனான போட்டியின்போது ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டதா என்று விசாரித்துக் கொண்டார்.
வந்தனா கட்டாரியா, சலீமா டெடெ ஆகியோரையும் பிரதமர் பாராட்டினார். பின்னர், அணியின் கேப்டன் ராணி ராம்பால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். பயிற்சியாளர்கள் ஜோர்ட் மாரிஜ்னேவிடம் பேசி அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்தமைக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
பயிற்சியாளரும் பிரதமரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி கூறியுள்ளாா்.
நன்றி ; Ashokan Ashokan
பிரதமர் மோடியுடனான உரையாடலின் போது இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் உணர்ச்சிவசப்பட்டு உடைந்து அழுதது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இதில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 3-4 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் கடுமையாக போராடித் தோல்வி அடைந்தது. இதனால், மகளிர் ஹாக்கி அணியின் பதக்கக் கனவு தகர்ந்தது.
இது குறித்து பிரதமர் "ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் நாம் ஒரு பதக்கத்தை இழந்தோம். ஆனால் நமது ஹாக்கி அணி புதிய இந்தியாவின் மனநிலையை பிரதிபலிக்கிறது" என்று பாராட்டிப் பேசியிருந்தார்.
இந்நிலையில், மகளிர் ஹாக்கி அணியினிரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசிய காட்சிகள் வெளியாகியுள்ளது.
அதில், வீராங்கனைகள் போராடி தோல்வியுற்றதை நினைத்து உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட அவர்களைப் பிரதமர் தேற்றுகிறார். அந்தக் காட்சிகள் அனைவரையும் நெகிழச் செய்வதாக உள்ளது.
பிரதமர் பேசுகையில், "நீங்கள் அனைவரும் அருமையாக விளையாடினீர்கள். உங்களின் நான்கைந்து ஆண்டு கால கடின உழைப்பு பதக்கமாக மாறாவிட்டாலும் கூட உங்களின் வியர்வை இந்தியாவின் கோடிக்கணக்கான மகள்களுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. அதனால், நீங்கள் ஏமாற்றமடையாதீர்கள்" என்று கூறினார்.
அப்போது சில வீராங்கனைகள் அழுதனர், அதற்கு பிரதமர் மோடி, "தயவுசெய்து நீங்கள் கண்ணீர் சிந்தாதீர்கள். ஒட்டுமொத்த தேசமும் உங்களைப் பார்த்து பெருமிதம் கொள்கிறது. இதில் ஏமாற்றமடைவதற்கு ஒன்றுமில்லை. இந்திய ஹாக்கி மறுமலர்ச்சி கண்டுள்ளது. அது உங்களால் தான் சாத்தியமாகியுள்ளது" என்று கூறினார்.
பிரதமர் தனது உரையாடலின் போது வீராங்கனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு நலம் விசாரித்தார். நவ்நீத் கவுரிடம், அர்ஜென்டினாவுடனான போட்டியின்போது ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டதா என்று விசாரித்துக் கொண்டார்.
வந்தனா கட்டாரியா, சலீமா டெடெ ஆகியோரையும் பிரதமர் பாராட்டினார். பின்னர், அணியின் கேப்டன் ராணி ராம்பால் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். பயிற்சியாளர்கள் ஜோர்ட் மாரிஜ்னேவிடம் பேசி அணிக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்தமைக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
பயிற்சியாளரும் பிரதமரின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு நன்றி கூறியுள்ளாா்.
நன்றி ; Ashokan Ashokan
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 7 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
Similar topics
» டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
Page 7 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|