by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
டோக்கியோ ஒலிம்பிக் 2020
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
இன்று லீக் சுற்றில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஸ்பெயின் அணியை சந்தித்தது.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி 3-0 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது. இந்தியா ஒலிம்பிக் தொடரில் இந்திய ஆடவர் அணி 2-வது வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
தற்காப்பு கலைகளில் ஒன்றான ஜூடோ போட்டியில் ஆண்கள் 66 கிலோ பிரிவில் ஜப்பானின் ஹிபுருமி அபேவும், பெண்கள் 52 கிலோ பிரிவில் அவரது தங்கை உடே அபேவும் தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே நாளில் அண்ணன்-தங்கை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் வில்வித்தை தனிநபர் வெளியேற்றுதல் சுற்று நடைபெற்றது.
இந்தியாவின் தீபிகா குமாரி, பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் ஆண்கள் அணி பிரிவில் இந்தியாவின் பிரவீன் ஜாதவ், தருண் தீப் ராய், அதானு தாஸ் ஆகியோர் கொண்ட அணி தோல்வியடைந்தது. இதே போல், தனிநபர் சுற்றில் தருண் தீப் ராய் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார்.
தீபிகா குமாரி வில்வித்தை ரீகர்வ் முதல் சுற்றில் பூடான் வீராங்கனை கர்மாவை 6-0 என்ற கணக்கில் மிக எளிதாக வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபரை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 25-26, 28-25, 27-25, 24-25, 26-25 என வீழ்த்தினார். இதன் மூலம் காலிறுதிக்குள் நுழைந்தார் தீபிகா குமாரி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெண்களுக்கான 69-75 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்புடன் மோதினார்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பூஜா ராணி, அல்ஜிரியா வீராங்கனை இச்ராக் சாய்ப்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சிமோன் பைல்ஸ் 4 பிரிவுகளில் தங்கப் பதக்கம் வென்றார். இதே போல், அணி பிரிவிலும் அமெரிக்காவுக்கு தங்கப்பதக்கம் வென்று கொடுத்தார்.
ஆல் ரவுண்டு பிரிவில் 5 முறையும், புளோர் பிரிவில் 5 முறையும், பேலன்ஸ் பீம் பிரிவில் 3 முறையும், வாலட் பிரிவில் 2 முறையும் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சிமோன் பைல்ஸ், உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையாக கருதப்படுகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று கணிக்கப்பட்ட நிலையில், நேற்று நடைபெற்ற அணி பிரிவு இறுதிப்போட்டியில் இருந்து திடீரென விலகினார். இதனைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த ஆல் ரவுண்டு தனிநபர் பிரிவு இறுதிப்போட்டியில் இருந்தும் விலகுவதாக சிமோன் பைல்ஸ் அறிவித்துள்ளார்.
தனது மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு இறுதிப்போட்டியில் இருந்து விலகியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். மன நலன் மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிமோன் பைல்ஸின் முடிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு அளித்த ரசிகர்கள், அவர் விரைவில் மீண்டுவர வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
[ltr]டோக்கியோ: 32வது ஒலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பாட்மின்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஆடவர் குத்துச்சண்டையில் சதீஷ்குமாரும் காலிறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றனர். அதேபோல், ஆடவர் ஹாக்கி அணியும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றது.[/ltr]
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதில், பாட்மின்டன் லீக் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, 'ஜே' பிரிவில் இடம் பெற்றிருந்தார். முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற சிந்து, தனது மூன்றாவது போட்டியில் டென்மார்க்கின் பிலிச்பெல்ட்டை எதிர்கொண்டார். துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-15, 21-13 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர், காலிறுதிக்கு முன்னேறினார். நாளை (ஜூலை 30) நடைபெறவுள்ள காலிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியுடன் மோதவுள்ளார்.
அதேபோல், ஆடவர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் சதீஷ்குமார், ஜமைக்கா வீரர் பிரவுனை 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். உஜ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த பகோடிர் ஜலோலோவை சந்திக்கிறார்.
இந்திய ஆடவர் ஹாக்கி அணியும் காலிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது. காலிறுதிக்கு முந்தைய போட்டியில் அர்ஜெண்டினா உடன் மோதிய இந்தியா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.
ஆடவர் பிரிவு வில்வித்தை போட்டியில் இந்தியாவின் அதானு தாஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
[size=14]மேரிகோம் தோல்வி:
குத்துச்சண்டையில் மகளிருக்கான 51 கிலோ எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மேரிகோம் கொலம்பியாவின் இன்கிரிட் வலென்சியா மோதினார்கள். இதில், மேரிகோம் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
நன்றி தினமலர்.[/size]
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேரிகோம் தோல்வியடைந்தது ஏமாற்றமளிக்கிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
-
-
ஒலிம்பிக்கில் இந்தியா அதிகப் பதக்கம் வெல்ல முடியாதது
விளையாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கலாம்.
பதக்கங்கள் வெல்வதைத் தாண்டி, ஒலிம்பிக் போட்டிகள்
குறித்து நாம் மகிழ்ச்சியடைய சில நல்ல அம்சங்கள்
உள்ளன.
ஹரியாணாவைச் சேர்ந்த அசோக் குமார் மல்யுத்தப்
போட்டிக்கான நடுவராகவும், குஜராத்தைச் சேர்ந்த
தீபக் ஜிம்னாசியப் போட்டி நடுவராகவும் இந்த ஒலிம்பிக்
போட்டியில் செயல்பட்டிருக்கிறார்கள்.
நடப்பு ஒலிம்பிக் ஜிம்னாசியப் போட்டிகளில் இந்தியாவின்
ஒரே நம்பிக்கையாக இருந்த பிரணதி, இறுதிப் போட்டிக்குத்
தகுதிபெறத் தவறினார்.
2016 ஒலிம்பிக்கில் பின்னப் புள்ளிகளில் வெண்கலப்
பதக்கத்தை தீபா கர்மாகர் தவறவிட்டார். அதேநேரம், ஒலிம்பிக்
ஜிம்னாசியப் போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்த முதல்
இந்தியர் என்கிற பெருமையை தீபக் பெற்றுள்ளார்.
முன்னாள் ஜிம்னாசிய வீரரான இவர், அந்தப் போட்டிகளில்
பெரிதாகச் சோபிக்க முடியாத நிலையில், இளம் வயதிலேயே
நடுவராகிவிட்டார். 21 வயதில் நடுவரான அவர், 33 வயதில்
2021 ஒலிம்பிக் போட்டிக்கு நடுவராகியுள்ளார். முன்னதாக
காமன்வெல்த் போட்டிகள், ஆசியப் போட்டிகள், உலக
சாம்பியன்ஷிப் போட்டிகளில் இவர் நடுவராகச் செயல்
பட்டுள்ளார்.
மல்யுத்தத்தின் தாய்நிலமாகக் கருதப்படுகிற ஹரியாணாவைச்
சேர்ந்த அசோக்குமார், இந்திய விமானப் படையில் பணிபுரிந்தவர்.
பணிக் காலத்தில் மல்யுத்தப் போட்டிகளால் ஈர்க்கப்பட்டு,
சர்வதேச நடுவராகும் அளவுக்கு வளர்ந்தார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த அணியின் தலைமைப்
பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டுள்ளார். ஒலிம்பிக்கில்
இந்தியா சோபித்த துறைகளில் ஒன்று மல்யுத்தம். ஒரு வெள்ளி,
நான்கு வெண்கலம் உட்பட ஐந்து பதக்கங்கள் இதுவரை
கிடைத்துள்ளன.
மதிப்புமிக்க உலகளாவிய போட்டிகளுக்கு நடுவராகத்
தேர்ந்தெடுக்கப்படுவது சாதாரண காரியமல்ல. அந்த
உயரத்தை மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இந்தியர்களே
எட்டுகிறார்கள்.
ஆதி - இந்து தமிழ் திசை
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம் உறுதியானது. குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறினார்
ஜப்பானின் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்கள் ‘வெல்டர் வெயிட்’ பிரிவில் (64–69 கிலோ) இந்தியாவின் 23 வயது வீராங்கனை லல்வினா போர்கோஹெய்ன், சீன தைபேயின் சென் சின்னை 24, எதிர்கொண்டார். முதல் சுற்றில் லவ்லினா 3–2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
சென், சின்னை விட சற்று உயரம் அதிகமாக இருந்த லவ்லினா, இம்முறை சரமாரி குத்துக்களை விட்டார். ஐந்து நடுவர்களும் சாதகமாக புள்ளிகள் வழங்க, இரண்டாவது சுற்றை 5–0 என வென்றார். மூன்றாவது சுற்றிலும் மிரட்டிய இவர் 4–1 என வசப்படுத்தினார். மூன்று சுற்று முடிவில் லவ்லினா 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் ‘உலக சாம்பியன்’ துருக்கியின் புசானெசை ஆக. 4ல் சந்திக்கவுள்ளார்.
பதக்கம் உறுதி
குத்துச்சண்டை போட்டிகளை பொறுத்தவரையில் அரையிறுதிக்கு முன்னேறினால் குறைந்தபட்சம் வெண்கல பதக்கம் வழங்கப்படும். இதன் படி இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கத்தை உறுதி செய்ய உற்சாகத்தில் லவ்லினா, மேடையில் ஆர்ப்பரித்தார்.
சிம்ரன்ஜித் தோல்வி
பெண்கள் ‘லைட் வெயிட்’ பிரிவில் (57–60 கிலோ) இந்தியாவின் சிம்ரன்ஜித், தாய்லாந்தின் சூடாபோர்னை சந்தித்தார். மூன்று சுற்றிலும் சொதப்பிய சிம்ரன்ஜித், எதிர்ப்பு காட்டாமல் சரண் அடைய, 0–5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
|
|