Latest topics
» வலைவீச்சு- ரசித்தவைby ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
டோக்கியோ ஒலிம்பிக் 2020
5 posters
Page 1 of 9
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
டோக்கியோ ஒலிம்பிக் 2020
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 A00359426932fa5f820d426b519ec29e](https://i.pinimg.com/736x/a0/03/59/a00359426932fa5f820d426b519ec29e.jpg)
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சாதித்தது என்ன?
120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, ஒலிம்பிக்ஸ் போட்டிகளில்
இருக்கும் இடம் தெரியாது. பதக்கப் பட்டியலில் கடைசி வரிசையில்தான் இடம்பிடிக்கும். திறமைக்குப்
பஞ்சமில்லை என்றாலும் ஏனோ இந்திய வீரர்களுக்கு எப்போதும் ஒலிம்பிக் பதக்கம் என்பது
எட்டாக்கனிதான். இதையும் தாண்டி, ஒலிம்பிக்ஸில் இந்திய வீரர்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாக முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கமே சர்ச்சைக்குரியது. இந்தியா, 1900 பாரிஸ் ஒலிம்பிஸில்,
நார்மன் பிச்சர்ட் என்கிற ஆங்கிலே ய வீரரை அனுப்பியது. அவரும் அத்லெடிக்கில் இரண்டு
வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றார். ஆனால், நார்மன் இங்கிலாந்து சார்பாக கலந்துகொண்டதாக
ஒரு சர்ச்சை பின்னால் கிளம்பியது. 1908க்குப் பிறகுதான் விளையாட்டு வீரர்கள், ஒரு நாட்டின்
சார்பாக ஒலிம்பிக்ஸூக்கு அனுப்பப்பட்டார்கள். அதற்கு முன்புவரை, வீரர்கள் தங்கள் விருப்பத்துடன்
கலந்துகொண்டதால், நார்மனின் சாதனைக்கு இங்கிலாந்தும் உரிமை கோருகிறது. ஆனால்,
ஒலிம்பிக் ஆவணங்களில், நார்மன் இந்தியராகவே குறிப்பிடப்பட்டுள்ளார். அதன்பிறகு 1920
பெல்ஜியம் ஒலிம்பிக்ஸில்தான், ஒரு குழுவை அனுப்பியது இந்தியா. 5 இந்திய வீரர்கள்
கலந்துகொண்ட அந்த ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை.
1928 ஆம்ஸ்டர்டம் ஒலிம்பிக்ஸில், இந்திய ஹாக்கி அணி தம் முதல் தங்கப் பதக்கத்தை வென்றது.
அதற்குப் பிறகு, அடுத்த ஆறு ஒலிம்பிக்ஸிலும் இந்திய ஹாக்கி அணி தங்கத்தை மட்டுமே வென்றது.
அதற்குப் பிறகு, இரண்டு ஒலிம்பி க்ஸ்களில் தங்கம் வென்று, எட்டு முறை முதலிடம் பிடித்தது.
கடைசியாக 1980 மாஸ்கோ ஒலிம்பிக்ஸில் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. அதற்குப் பிறகு
28 வருடங்கள் கழித்து, முதல்முறையாக தனி நபராக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கித் தந்தார்
அபினவ் பிந்திரா.
1980க்கு முன்னால், ஹாக்கி அணி பெற்றுக்கொடுத்த பதக்கங்களைத் தவிர இந்தியாவுக்கு 1952
ஒலிம்பிக்ஸில் மல்யுத்தத்தில் கே.டி. ஜாதவ் ஒரு வெண்கலப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
ஒலிம்பிக்ஸில், முதல் பதக்கம் பெற்ற இந்தியர் என்கிற பெருமையை அடைந்தார். 1980க்குப் பிறகு
அடுத்த மூன்று ஒலிம்பிக்ஸ்களில் இந்தியா ஒரு பதக்கமும் பெறவில்லை. இந்திய ஹாக்கி
அணியின் தரமும் இந்தக் காலகட்டத்தில் குறைந்து, மற்ற அணிகளோடு போட்டி போடமுடியாத நிலை
ஏற்பட்டது.
1996, 2000 ஒலிம்பிக்களில் லியாண்டர் பெயஸ், கர்ணம் மல்லேஸ்வரி ஆகியோர் வெண்கலப்
பதக்கங்களையும் 2004ல் ரதோர் வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றார்கள். 2008 பீஜிங்
ஒலிம்பிக்ஸில்தான் இந்திய அணி அதிக பதக்கங்களைப் பெற்றது. ஒரு தங்கமும் இரண்டு
வெண்கலப் பதக்கங்களும் கிடைத்தன. இந்திய அணி வேறு எந்த ஒலிம்பிக்ஸிலும் 3
பதக்கங்களைப் பெற்றது கிடையாது என்பதால் நாடே அதைக் கொண்டாடியது. அதிலும் ஆடவர் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக் போட்டியில்
தனிநபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்கிற பெருமையைப் பெற்றார்.
குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தைப் (வெண்கலம்) பெற்றுத் தந்தார்
விஜேந்தர் சிங்.
2012 லண்டன் ஒலிம்பிக்ஸ் மேலும் அமர்க்களமாக அமைந்தது. மல்யுத்த வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார். துப்பாக்கிச் சுடுதலில் விஜய் குமாருக்கு வெள்ளி கிடைத்தது.
ஒலிம்பிக்ஸில் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் (வெண்கலம்) வென்ற முதல் இந்திய வீராங்கனை
என்கிற பெருமையைப் பெற்றார் சானியா நெவால். இதனால் இந்தியாவில் ஒரு பாட்மிண்டன் அலையை உண்டாக்கினார். அதேபோல குத்துச்சண்டையிலும் வெண்கலம் வென்று
சாதனை படைத்தார் மேரி கோம். துப்பாக்கிச் சுடுதலில் ககன் நரங்கும் மல்யுத்தத்தில் யோகேஸ்வர்
தத்தும் வெண்கலப் பதக்கங்களை வென்றார்கள். லண்டன் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 2 வெள்ளி
4 வெண்கலப் பதக்கங்கள் என மொ த்தமாக 6 பதக்கங்கள் கிடைத்தன. அதற்கு முன்பு இந்தியா
இத்தனை பதக்கங்களைப் பெற்றதில்லை.
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2-ஆக சுருங்கியது.
மல்யுத்தத்தில் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். பாட்மிண்டனில் பி.வி. சிந்து வெள்ளிப்
பதக்கம் வென்று இந்திய ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.
டோக்கியோவில் இந்தியாவுக்கு எப்படியும் 10 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.வி. சிந்து (பாட்மிண்டன்), செளரப் செளத்ரி, மானு பாக்கர், திவ்யான்ஸ் பன்வார், இளவேனில்,
யாஷாஸ்வினி தேஸ்வால், அபிஷேக் வர்மா, (துப்பாக்கிச் சுடுதல்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்),
மீராபாய் சானு (எடை தூக்குதல்), ரவி தாஹியா, பஜ்ரங் பூனியா, வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித்
பங்கால் (குத்துச்சண்டை) போன்ற வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள் என்கிற நம்பிக்கையை
ஏற்படுத்தியுள்ளார்கள். இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பலிக்கட்டும்.
Last edited by சிவா on Fri Jul 23, 2021 11:59 pm; edited 2 times in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஒலிம்பிக் துளிகள்
*ஒலிம்பிக் பதக்க நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள்,பதக்கம் வழங்குவோர் என யாரும் போட்டோ எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்
*206 நாடுகளை சேர்ந்த 11000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
*இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினர் நிறவெறிக்கு எதிராக முதல் ஆட்டத்தின் போது முழங்காலில் சிறிது நேரம் நிற்க உள்ளனர்.
*வில்வித்தை, தடகளம், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டெபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் கலப்பு பிரிவில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
*டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.அவற்றில் நான்கு இந்த ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறது.. கராத்தே, ஸ்கேட்டிங்,sport climbing, surfing
ஆகியவற்றோடு 13 ஆண்டுக்கு முன் நீக்கப்பட்ட பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் சேர்க்கப்பட்டுள்ளது.
*கிரிக்கெட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் ஒலிம்பிக்கில் நடத்தப்படுவதில்லை.
*டிராக், நீச்சல், டிரையத்லான், வில்வித்தை மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட கலப்பு பாலின அணிகளுக்கான ரிலேக்கள் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இந்த வருடம் நடைபெற உள்ளது.
*கொரொனா காரணமாக இரு அணிகளும்.. ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை எனில் இரு அணிகளுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
*ஒலிம்பிக் பதக்க நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள்,பதக்கம் வழங்குவோர் என யாரும் போட்டோ எடுத்துக் கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்
*206 நாடுகளை சேர்ந்த 11000 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
*இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியினர் நிறவெறிக்கு எதிராக முதல் ஆட்டத்தின் போது முழங்காலில் சிறிது நேரம் நிற்க உள்ளனர்.
*வில்வித்தை, தடகளம், ஜூடோ, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டெபிள் டென்னிஸ் விளையாட்டுகளில் கலப்பு பிரிவில் போட்டிகள் நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
*டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளது.அவற்றில் நான்கு இந்த ஒலிம்பிக்கில் அறிமுகமாகிறது.. கராத்தே, ஸ்கேட்டிங்,sport climbing, surfing
ஆகியவற்றோடு 13 ஆண்டுக்கு முன் நீக்கப்பட்ட பேஸ்பால் மற்றும் சாப்ட்பால் சேர்க்கப்பட்டுள்ளது.
*கிரிக்கெட் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட போட்டிகள் ஒலிம்பிக்கில் நடத்தப்படுவதில்லை.
*டிராக், நீச்சல், டிரையத்லான், வில்வித்தை மற்றும் டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட கலப்பு பாலின அணிகளுக்கான ரிலேக்கள் உள்ளிட்ட பல விளையாட்டுக்கள் இந்த வருடம் நடைபெற உள்ளது.
*கொரொனா காரணமாக இரு அணிகளும்.. ஹாக்கி போட்டியின் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை எனில் இரு அணிகளுக்கும் தங்கப்பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
இந்தியா
19ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று வந்துள்ளது.இதுவரை 9 தங்கம், 7 வெள்ளி,12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது. ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் (1920,1924,1976,1984,1988,1992) பதக்கமின்றி நாடு திரும்பியுள்ளது. ஜப்பானின் டோக்கியோ 2021 ஒலிம்பிக்கில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் என 119பேர் 16பிரிவுகளில் 85 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்ட Hindustani Way எனும் பாடலை அனன்யா, நிர்மிகா சிங்,சிஷிர் சமந்த் எழுத அனன்யா பாடியுள்ளார். துவக்க விழாவில் இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்.
நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான்.
*ஆறு முறை சாம்பியனான மேரி கோம் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி இது.
*மஹாராஷ்டிராவை சேர்ந்த தீபக் காப்ரா ஜிம்னாஸ்டிக் அம்பயராக ஒலிம்பிக்கில் பணியாற்ற உள்ளார்.
*இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மற்ற விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.
*தமிழகத்தில் இருந்து 12 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.பவானி தேவி (ஃபென்சிங்); சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்); சரத் கமல் (டேபிள் டென்னிஸ்); நேத்ரா குமனன், கணபதி, மற்றும் வருண் (படகோட்டம்); அரோக்கியா ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி (ரிலே ரேஸ்); மற்றும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்).
*தமிழக வீரர்கள் 12 பேருக்கும் ஊக்கத் தொகையாக ஐந்து இலட்சம் தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 3 கோடி அறிவித்துள்ளன
இந்த ஆண்டு பதக்கங்கள் விளையாட்டு வீரர்களின் கழுத்தில் அணிவிக்கப்பட மாட்டாது. மேடைக்கு முன் பதக்கங்கள் கொண்டு வரப்படும். அவர்களே எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். குழு புகைப்படம் எடுக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமாதானத்திற்காகவும், நட்புறவின் அடிப்படையிலும் நடைபெறும் இப்போட்டிகள் எவ்வித இடர்பாடும் இன்றி நடந்து முடிய வேண்டுமென பிரார்த்திக்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.ஒவ்வொரு வீரர்களும் தாய்நாட்டின் பெருமையினை உலகளவில் பறைசாற்ற காத்துள்ளனர்.
உலகமே இவர்களின் வெற்றியை உற்று நோக்கி கரவொலி எழுப்ப எதிர்பார்த்துள்ளனர்.
"முதல் அடியிலும், முடிவு அடியிலும் ஒரே விழிப்புணர்வுடன் இருப்பவனுக்கே சிகரங்கள் சாத்தியம். அதில் ஏறிய பிறகு அவனே சிகரமாகி விடுகிறான்" எனும் வெ.இறையன்புவின் வரிகள் விளையாட்டு வீரர்களுக்கே முழுவதும் பொருந்துகிறது.
திறமையின் மூலம் வெல்லும் அனைவரும் போற்றதலுக்குரியவர்களே! அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும் வணக்கத்திற்குரியவர்களே! வரவேற்க காத்திருப்போம்.
19ம் நூற்றாண்டின் துவக்கம் முதல் இந்தியா ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று வந்துள்ளது.இதுவரை 9 தங்கம், 7 வெள்ளி,12 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளது. ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் (1920,1924,1976,1984,1988,1992) பதக்கமின்றி நாடு திரும்பியுள்ளது. ஜப்பானின் டோக்கியோ 2021 ஒலிம்பிக்கில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் என 119பேர் 16பிரிவுகளில் 85 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானால் உருவாக்கப்பட்ட Hindustani Way எனும் பாடலை அனன்யா, நிர்மிகா சிங்,சிஷிர் சமந்த் எழுத அனன்யா பாடியுள்ளார். துவக்க விழாவில் இந்தியாவின் சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் இருவரும் தேசியக் கொடியை ஏந்திச் செல்வர்.
நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள். 85 பந்தயங்களில் நமது அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான்.
*ஆறு முறை சாம்பியனான மேரி கோம் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டி இது.
*மஹாராஷ்டிராவை சேர்ந்த தீபக் காப்ரா ஜிம்னாஸ்டிக் அம்பயராக ஒலிம்பிக்கில் பணியாற்ற உள்ளார்.
*இந்திய வீரர்கள் கலந்து கொள்ளும் போட்டி சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும். மற்ற விளையாட்டு தூர்தர்ஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். ஆன்லைன் பார்வையாளர்களுக்கு, சோனி எல்.ஐ.வி.யில் நேரலையில் இருக்கும்.
*தமிழகத்தில் இருந்து 12 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.பவானி தேவி (ஃபென்சிங்); சத்தியன் ஞானசேகரன் (டேபிள் டென்னிஸ்); சரத் கமல் (டேபிள் டென்னிஸ்); நேத்ரா குமனன், கணபதி, மற்றும் வருண் (படகோட்டம்); அரோக்கியா ராஜீவ், நாகநாதன் பாண்டி, தனலட்சுமி, சுபா வெங்கடேசன், ரேவதி வீரமணி (ரிலே ரேஸ்); மற்றும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்).
*தமிழக வீரர்கள் 12 பேருக்கும் ஊக்கத் தொகையாக ஐந்து இலட்சம் தமிழக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
*டெல்லி, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 3 கோடி அறிவித்துள்ளன
இந்த ஆண்டு பதக்கங்கள் விளையாட்டு வீரர்களின் கழுத்தில் அணிவிக்கப்பட மாட்டாது. மேடைக்கு முன் பதக்கங்கள் கொண்டு வரப்படும். அவர்களே எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். குழு புகைப்படம் எடுக்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமாதானத்திற்காகவும், நட்புறவின் அடிப்படையிலும் நடைபெறும் இப்போட்டிகள் எவ்வித இடர்பாடும் இன்றி நடந்து முடிய வேண்டுமென பிரார்த்திக்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள்.ஒவ்வொரு வீரர்களும் தாய்நாட்டின் பெருமையினை உலகளவில் பறைசாற்ற காத்துள்ளனர்.
உலகமே இவர்களின் வெற்றியை உற்று நோக்கி கரவொலி எழுப்ப எதிர்பார்த்துள்ளனர்.
"முதல் அடியிலும், முடிவு அடியிலும் ஒரே விழிப்புணர்வுடன் இருப்பவனுக்கே சிகரங்கள் சாத்தியம். அதில் ஏறிய பிறகு அவனே சிகரமாகி விடுகிறான்" எனும் வெ.இறையன்புவின் வரிகள் விளையாட்டு வீரர்களுக்கே முழுவதும் பொருந்துகிறது.
திறமையின் மூலம் வெல்லும் அனைவரும் போற்றதலுக்குரியவர்களே! அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவராயினும் வணக்கத்திற்குரியவர்களே! வரவேற்க காத்திருப்போம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஒலிம்பிக் சின்னங்கள்
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 YIyLQh2](https://i.imgur.com/YIyLQh2.jpg)
ஒலிம்பிக் என்றவுடன் முதலில் நினைவுக்கு ஐந்து வளையங்களுடைய ஒலிம்பிக் கொடி ஆகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ’பியரி டி கூபர்டீன்’ என்பவரால் 1912ஆம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து கண்டங்களை குறிப்பதாக ஒலிம்பிக் சட்டத்தின் 8ஆவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் உள்ள நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பதாலேயே, இந்த நிறங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
Immortal spirit of antiquity என்று துவங்கும் பாடலை கிரேக்க பாடலாசிரியர் கோஸ்டிஸ் பலமாஸ் எழுதி சமராஸ் இசையமைத்த இப்பாடலே ஒலிம்பிக் கீதமாகும். சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் எனும் இலத்தின் மொழி சொற்கள் ஒலிம்பிக்கின் தாரக மந்திரமாகும். தமிழில் "வேகமாய், உயர்வாய், வலுவாய்"என மொழிபெயர்த்தால் கிடைப்பது.
ஒலிம்பிக் போட்டியில் ரொக்கப்பரிசு கிடையாது. தங்கம், வெள்ளி, வெண்கலப் பரிசுகள் வழங்கப்படும். பதக்கத்தில் கிரேக்க பெண் கடவுள் நைக்கியின் பெயர் இருக்கும்.
நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு அமைப்புகளில் ஒலிம்பிக் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் Miraitowa என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், Someity என பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் ஆகும்.
1980 ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சின்னங்கள் அந்நாட்டின் சிறப்பை விளக்கும் வகையில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 YIyLQh2](https://i.imgur.com/YIyLQh2.jpg)
ஒலிம்பிக் என்றவுடன் முதலில் நினைவுக்கு ஐந்து வளையங்களுடைய ஒலிம்பிக் கொடி ஆகும். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ’பியரி டி கூபர்டீன்’ என்பவரால் 1912ஆம் ஆண்டு, இந்த கொடி உருவாக்கப்பட்டது.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஒருங்கிணைந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து கண்டங்களை குறிப்பதாக ஒலிம்பிக் சட்டத்தின் 8ஆவது விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதில் உள்ள நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை ஆகிய 6 நிறங்களில் ஏதாவது ஒரு நிறமாவது ஒலிம்பிக்கில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் தேசியக் கொடிகளிலும் இடம் பெற்றிருக்கும் என்பதாலேயே, இந்த நிறங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
Immortal spirit of antiquity என்று துவங்கும் பாடலை கிரேக்க பாடலாசிரியர் கோஸ்டிஸ் பலமாஸ் எழுதி சமராஸ் இசையமைத்த இப்பாடலே ஒலிம்பிக் கீதமாகும். சிடியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் எனும் இலத்தின் மொழி சொற்கள் ஒலிம்பிக்கின் தாரக மந்திரமாகும். தமிழில் "வேகமாய், உயர்வாய், வலுவாய்"என மொழிபெயர்த்தால் கிடைப்பது.
ஒலிம்பிக் போட்டியில் ரொக்கப்பரிசு கிடையாது. தங்கம், வெள்ளி, வெண்கலப் பரிசுகள் வழங்கப்படும். பதக்கத்தில் கிரேக்க பெண் கடவுள் நைக்கியின் பெயர் இருக்கும்.
நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு அமைப்புகளில் ஒலிம்பிக் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் Miraitowa என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், Someity என பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் ஆகும்.
1980 ம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சின்னங்கள் அந்நாட்டின் சிறப்பை விளக்கும் வகையில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஒலிம்பிக் தடகள போட்டி : குன்னூர் ராணுவ மைய வீரர்கள் பங்கேற்பு
-
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Tamil_News_large_2806092](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2806092.jpg)
-
குன்னுார் : டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜ், 30 மற்றும் நாயக் சுபேதார் இர்பான், 31 ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக தடகள பிரிவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் கடந்த 6 மாதங்களாக வெலிங்டன் தங்கராஜ் ஸ்டேடியத்தில் ராணுவ விளையாட்டு மையம் சார்பில், பயிற்சியாளர் லெப்., கர்னல் ஹேமந்த் ராஜ் தலைமையில், தடகளத்தில் தீவிர பயிற்சி பெற்றனர்
-
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Gallerye_170652145_2806092](https://img.dinamalar.com/data/gallery/gallerye_170652145_2806092.jpg)
-
ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், 400 மீ., தொடர் ஓட்டத்த்தில் ஆரோக்கிய ராஜ் பங்கேற்கிறார்.
இவர் ஏற்கனவே பல தேசிய போட்டிகளில் தங்க பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்
ஒலிம்பிக்கில் 20 கி.மீ., தூரம் நடை போட்டியில் பங்கேற்கும் இர்பான், ஏற்கனவே பல்வேறு நடை போட்டியில் 6 தங்கபதக்கங்கள் வென்றவர்.
இவர்களுக்கு பாராட்டு தெரிவித்த எம்.ஆர்.சி., கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், “ராணுவ விளையாட்டு மைய வழிகாட்டுதலின் படி எம்.ஆர்.சி, பயிற்சியாளர்களால் தீவிர பயிற்சி பெற்றுள்ளனர். வீரர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் ஒலிம்பிக்கில் தகுதி பெற்று நாட்டிற்கும், நமது ராணுவத்திற்கும், ரெஜிமென்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக சென்றுள்ளனர்.
இந்த பங்களிப்பு பழமைவாய்ந்த ரெஜிமென்டிற்கு பெருமை சேர்த்து மணிமகுடமாக அமைய பெற்றுள்ளது. ” என்றார்.
தினமலர்
-
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Tamil_News_large_2806092](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2806092.jpg)
-
குன்னுார் : டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் தடகள போட்டியில் பங்கேற்கின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரை சேர்ந்த அர்ஜுனா விருது பெற்ற சுபேதார் ஆரோக்கிய ராஜ், 30 மற்றும் நாயக் சுபேதார் இர்பான், 31 ஆகியோர் கடந்த 6 ஆண்டுகளாக தடகள பிரிவில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இவர்கள் கடந்த 6 மாதங்களாக வெலிங்டன் தங்கராஜ் ஸ்டேடியத்தில் ராணுவ விளையாட்டு மையம் சார்பில், பயிற்சியாளர் லெப்., கர்னல் ஹேமந்த் ராஜ் தலைமையில், தடகளத்தில் தீவிர பயிற்சி பெற்றனர்
-
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Gallerye_170652145_2806092](https://img.dinamalar.com/data/gallery/gallerye_170652145_2806092.jpg)
-
ஜப்பான் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், 400 மீ., தொடர் ஓட்டத்த்தில் ஆரோக்கிய ராஜ் பங்கேற்கிறார்.
இவர் ஏற்கனவே பல தேசிய போட்டிகளில் தங்க பதக்கங்களும், ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார்
ஒலிம்பிக்கில் 20 கி.மீ., தூரம் நடை போட்டியில் பங்கேற்கும் இர்பான், ஏற்கனவே பல்வேறு நடை போட்டியில் 6 தங்கபதக்கங்கள் வென்றவர்.
இவர்களுக்கு பாராட்டு தெரிவித்த எம்.ஆர்.சி., கமாண்டன்ட் ராஜேஷ்வர் சிங் கூறுகையில், “ராணுவ விளையாட்டு மைய வழிகாட்டுதலின் படி எம்.ஆர்.சி, பயிற்சியாளர்களால் தீவிர பயிற்சி பெற்றுள்ளனர். வீரர்களின் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் ஒலிம்பிக்கில் தகுதி பெற்று நாட்டிற்கும், நமது ராணுவத்திற்கும், ரெஜிமென்டிற்கும் பெருமை சேர்க்கும் விதமாக சென்றுள்ளனர்.
இந்த பங்களிப்பு பழமைவாய்ந்த ரெஜிமென்டிற்கு பெருமை சேர்த்து மணிமகுடமாக அமைய பெற்றுள்ளது. ” என்றார்.
தினமலர்
சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஒலிம்பிக் கிராமத்தில் வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள்?
டோக்கியோ ஒலிம்பிக் கிரமத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க விளையாட்டு வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் வழங்கப்படுகிறது என்பது உண்மைல்ல என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் யோசனையை ஊக்குவித்து வருகின்றனர். கிராமத்தை விட்டு வெளியேறியவுடன் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
டோக்கியோ 2020 இன் அமைப்பாளர்கள் நான்கு ஆணுறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 160,000 ஆணுறைகளை வழங்கி உள்ளனர்.
ஆணுறைகளை விநியோகிப்பது விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல, ஆனால் விளையாட்டு வீரர்கள் (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்) விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று அமைப்பாளர்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் ஒரு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கையை அறிமுகபடுத்தி உள்ளனர். இது விளையாட்டு வீரர்கள் நெருக்கத்தை குறைக்க ஊக்கப்படுத்தும்.
தற்போது வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன, மேலும் அவை ஒரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியானது.
இதுகுறித்து அமெரிக்க தொலைதூர ஓட்டப்பந்தய்வீரர் பால் செலிமோ தனது டுவிட்டரில் படுக்கையின் படங்களை பகிர்ந்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-
"டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் படுக்கைகள் அட்டைப் பெட்டியால் தயாரிக்கபட்டு வழங்கப்படுகிறது. இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுகளுக்கு அதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு படுக்கைகள் ஒரு தனி நபரின் எடையை மட்டுமே தாங்க கூடியதாக உள்ளது.
படுக்கை இடிந்து விழுந்தால் தரையில் தூங்க வேண்டும். இந்த நேரத்தில் நான் தரையில் எப்படி தூங்குவது என பயிற்சி செய்யத் தொடங்குவேன்; காரணம் என் படுக்கை இடிந்து விழுந்தால், தரையில் தூங்குவதற்கான பயிற்சி எனக்கு இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் கிரமத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க விளையாட்டு வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் வழங்கப்படுகிறது என்பது உண்மைல்ல என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 87 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போட்டி அமைப்பாளர்கள் மொத்தம் 12 புதிய பாதிப்புகளை உறுதி செய்து உள்ளனர். இதில் இரண்டு விளையாட்டு வீரர்கள் உட்பட, மொத்தம் 87 ஆக உயர்ந்து உள்ளது என தெரிவித்து உள்ளனர்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் அமைப்பாளர்கள் ஜப்பானில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் யோசனையை ஊக்குவித்து வருகின்றனர். கிராமத்தை விட்டு வெளியேறியவுடன் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகளை வழங்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
டோக்கியோ 2020 இன் அமைப்பாளர்கள் நான்கு ஆணுறை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து ஒலிம்பிக் கிராமத்தில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு 160,000 ஆணுறைகளை வழங்கி உள்ளனர்.
ஆணுறைகளை விநியோகிப்பது விளையாட்டு வீரர்களின் கிராமத்தில் பயன்படுத்தப்படுவதற்காக அல்ல, ஆனால் விளையாட்டு வீரர்கள் (எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ்) விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக என்று அமைப்பாளர்கள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் ஒரு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கையை அறிமுகபடுத்தி உள்ளனர். இது விளையாட்டு வீரர்கள் நெருக்கத்தை குறைக்க ஊக்கப்படுத்தும்.
தற்போது வீரர்களுக்கு 'பாலியல் எதிர்ப்பு' படுக்கைகள் வழங்கப்பட்டு உள்ளன, மேலும் அவை ஒரு நபரின் எடையை மட்டுமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என தகவல் வெளியானது.
இதுகுறித்து அமெரிக்க தொலைதூர ஓட்டப்பந்தய்வீரர் பால் செலிமோ தனது டுவிட்டரில் படுக்கையின் படங்களை பகிர்ந்து உள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-
"டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் படுக்கைகள் அட்டைப் பெட்டியால் தயாரிக்கபட்டு வழங்கப்படுகிறது. இது விளையாட்டு வீரர்களிடையே நெருக்கத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. விளையாட்டுகளுக்கு அதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கு படுக்கைகள் ஒரு தனி நபரின் எடையை மட்டுமே தாங்க கூடியதாக உள்ளது.
படுக்கை இடிந்து விழுந்தால் தரையில் தூங்க வேண்டும். இந்த நேரத்தில் நான் தரையில் எப்படி தூங்குவது என பயிற்சி செய்யத் தொடங்குவேன்; காரணம் என் படுக்கை இடிந்து விழுந்தால், தரையில் தூங்குவதற்கான பயிற்சி எனக்கு இல்லை என்று அவர் கூறி உள்ளார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
ஒலிம்பிக் 2021ல் நடைபெற்றாலும்
ஒலிம்பிக் 2020 என்றே விளம்பரப்படுத்தப்படுகிறது.
ஒலிம்பிக் 2020 என்றே விளம்பரப்படுத்தப்படுகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக் கோலகல துவக்கம்
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக துவங்கியது.
டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23) கோலகலமாக துவங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்குமு் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இன்றைய துவக்க விழாவில், ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஒலிம்பிக் துவக்க விழா அணிவகுப்பில் இந்தியாவின் சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத்சிங் தேசியக் கொடியை ஏந்திச்சென்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
![](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2808168.jpg)
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது. தேசிய கொடி ஏந்தி வந்த நமது வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி
டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23) கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில் இன்று நடந்த துவக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத்சிங் உள்ளிட்ட 19 வீரர்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏந்திச்சென்றனர்.
நேரடி ஒளிபரப்பை தனது அலுவலக இல்லத்தில் டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி , தேசிய கொடியுடன் அணிவகுத்து மைதானத்திற்குள் நமது வீரர்கள் நுழைந்தவுடன், நாற்காலியிலிருந்து எழுந்து நின்று கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: டோக்கியோ ஒலிம்பிக் 2020
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கம் வாய்ப்புள்ள துப்பாக்கி சுடுதலில் இந்திய நட்சத்திரங்கள் இளவேனில், சவுரப் சவுத்ரி இன்று களம் காணுகிறார்கள்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. முதல் நாளில் பதக்கபோட்டிகள் எதுவும் கிடையாது. 2-வது நாளான இன்று மொத்தம் 11 தங்கப் பதக்கத்துக்குரிய போட்டிகள் நடக்கின்றன. இந்த ஒலிம்பிக்கின் முதல் தங்கப்பதக்கம் துப்பாக்கி சுடுதலில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிளில் வழங்கப்படுகிறது.துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டையை ஆரம்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏனெனில் துப்பாக்கி சுடுதலில் இந்தியா 15 பேர் கொண்ட வலுவான அணியை அனுப்பியுள்ளது. அவர்கள் குரோஷியாவில் பயிற்சிகளுடன் போட்டிகளில் பங்கேற்று விட்டு டோக்கியோவுக்கு வந்துள்ளனர். துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் மற்றும் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகிய பிரிவுகளில் தகுதி சுற்று
மற்றும் இறுதிப்போட்டி இன்று அரங்கேறுகிறது.
10 மீட்டர் ஏர் ரைபிளில் இந்திய வீராங்கனைகள் அபூர்வி சண்டிலா, இளவேனில் வளறிவான் ஆகியோர் அடியெடுத்து வைக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்த 21 வயதான இளவேனில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் 2 முறை தங்கம் வென்றவர். ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக வலம் வரும் அவர் பதக்க மேடையில் ஏறுவதற்குரிய வாய்ப்பு அதிகம். ராஜஸ்தானைச் சேர்ந்த 28 வயதான அபூர்வி தரவரிசையில் 11-வது இடம் வகித்தாலும் உலக போட்டியில் மகுடம் சூடிய அனுபவம் உண்டு. தனது முழு திறமையை வெளிப்படுத்தினால் அவரும் அசத்தலாம்.தகுதி சுற்றில்
மொத்தம் 49 பேர் பங்கேற்கிறார்கள். இதில் இருந்து டாப்-8 வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவார்கள். இறுதி சுற்று இந்திய நேரப்படி காலை 7.15 மணிக்கு நடக்கிறது.
அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டலில் இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, சவுரப் சவுத்ரி குறி வைக்கிறார்கள். இவர்கள் தங்களது பிரிவில் உலக தரவரிசையில் முதல் 2 இடங்களில் இருப்பதால் எதிர்பார்ப்புக்கு குறைவில்லை. வழக்கறிஞர் படிப்பு படித்து விட்டு 2017-ம் ஆண்டில் துப்பாக்கியை கையில் எடுத்து இன்று ‘நம்பர் ஒன்’ நிலையை எட்டியிருக்கும் அபிஷேக் வர்மா 2019-ம் ஆண்டு உலக துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் கைப்பற்றியவர். 19 வயதான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சவுரப் சவுத்ரி இளையோர் விளையாட்டிலும், ஆசிய விளையாட்டிலும் தங்கப்பதக்கத்தை முத்தமிட்டவர். டெல்லியில் 2019-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் அதிக புள்ளிகள் குவித்து உலக சாதனை படைத்தவர்.
இவர்கள் மட்டும் 8 பேர் கொண்ட இறுதி சுற்றுக்குள் கால்பதித்து விட்டால் அதன் பிறகு பதக்கத்தை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகி விடும். காலை 10.15 மணிக்கு தகுதி சுற்றும், பகல் 12 மணிக்கு இறுதி சுற்றும் நடக்கிறது
Last edited by சிவா on Tue Aug 10, 2021 11:07 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![டோக்கியோ ஒலிம்பிக் 2020 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 1 of 9 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டோக்கியோ போட்டியே எனது கடைசி ஒலிம்பிக்: மேரிகோம்
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது
» டோக்கியோ ஒலிம்பிக்- இந்திய நீச்சல் வீராங்கனை மானா பட்டேல் தகுதி
» டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று தமிழக வீராங்கனை பவானிதேவி அசத்தல்..!
Page 1 of 9
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|