Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
4 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
First topic message reminder :
உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று;
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.
இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.
9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று;
கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை உலகைக் கடந்துவிட்டது, தற்போது பொதுமுடக்கங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் நம்பிக்கொண்டிருந்தால், அது மிகப்பெரிய தவறு என்கிறது இந்தச் செய்தி.
இயல்பு வாழ்க்கை திரும்புவதாக நாம் கருதினாலும், விரைவில் நாட்டில் கரோனா மூன்றாம் அலை தாக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் அவ்வப்போது எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். அதுதான் உண்மைபோலும். ஆம், பொதுமுடக்கம் மற்றும் இயல்பு நிலை திரும்பியதாக மக்களின் மனநிலை ஆகியவை காரணமாக உலகம் முழுவதும், கரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் மீண்டும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் இயல்பு நிலை திரும்பும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகியுள்ளது.
9 வாரங்களாக கரோனா பெருந்தொற்று காரணமாக பலியாவோர் எண்ணிக்கை சரிந்து வந்த நிலையில், அந்த நிலை கடந்த வாரம் மாறியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் மட்டும் 55,000 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இது அதற்கு முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் 3 சதவீதம் அதிகமாகும்.புதிதாக கரோனா பாதிப்பும் சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 30 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. குறிப்பாக, பிரேசில், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரிட்டன் நாடுகளில்தான் இந்த அதிகரிப்பு பதிவாகியிருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படி, கரோனா பரவலின் சரிவுநிலை திரும்புவதற்குக் காரணிகளாக, தடுப்பூசி செலுத்துவதில் மெத்தனம், முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு, அதிகம் பரவும் திறன் கொண்ட டெல்டா வகை உருமாறிய கரோனா, போன்றவை இருக்கின்றன. டெல்டா வகை உருமாறிய கரோனா தற்போது 111 நாடுகளில் பரவி வருவதாகவும் வரும் மாதங்களில் இது உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.உலகம் முழுவதும் கரோன பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அர்ஜென்டினாவில் கரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியிருக்கிறது. ரஷியாவில் இந்த வாரம், பலி எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெல்ஜியத்தில் டெல்டா வகை கரோனா வைரஸ் இளைஞர்களை பாதிப்பதும் கடந்த வாரத்தில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காகியுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் இல்லாத வகையில் பிரிட்டனில் ஒரு நாள் புதிய கரோனா பாதிப்பு 40 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. மியான்மரியில் உள்ள மயானங்கள் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் இயங்கி வருகின்றன.கடந்த மாதம் ஒரு நாளைக்கு 8 ஆயிரம் புதிய கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்த இந்தோனேசியாவில் புதன்கிழமை 54,000 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஜகார்த்தா அருகே இடுகாடுகளில் குழிகளைத் தோண்டும் பணியில் ஊழியர்கள் தேவை அதிகரித்ததால், பொதுமக்களும் அப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு மக்கள் இப்பணியைச் செய்யாவிட்டால், உடல்களைப் புதைக்க பல நாள்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும் என்கிறார்கள் அங்குள்ள மக்கள்.
அமெரிக்காவிலோ, கடந்த இரண்டு வாரங்களில் கரோனா பாதிப்பு உறுதியாகும் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிவிரும் டோக்கியோவில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து, மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருவதால், அங்கு அவசரநிலையே அறிவிக்கப்பட்டுவிட்டது.கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக சிட்னியில் பொதுமுடக்கத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சியோலில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமுள்ள பல நாடுகளில் அதிகரித்திருக்கும் கரோனா பரவல் பற்றிய இந்தப் பட்டியல் மேலும் நீண்டுகொண்டேதான் இருக்கிறது. உலகம் முழுவதும் அச்சமூட்டும் வகையில் எண்ணிக்கை அமைந்திருந்தாலும், இந்த ஆண்டின் துவக்கத்தில் ஏற்பட்டதைப் போன்ற அபாய எண்ணிக்கையை இன்னும் எட்டவில்லை என்றும் கூறுகிறார்கள்.கடந்த ஏப்ரல் மாத ஒரு நாள் பாதிப்போடு ஒப்பிடுகையில் பாதியளவாக, உலகம் முழுவதும் ஒரு நாள் பாதிப்பு 4,50,000 ஆகவே உள்ளது. பல நாடுகளும், கரோனா பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அறிவிக்க வேண்டிய கட்டாய நிலையில் இருந்தாலும், இது கரோனா வைரஸ் பரவலுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்து விடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
தடுப்பூசி போட்டவர்களுக்கும் கோவிட் பாதிப்பு: கண்காணிக்க புதிய தளம்
தடுப்பூசி போட்டவர்களுக்கும் கோவிட் தொற்று பாதிப்பு ஏற்படுவது நாடு முழுவதும் கணிசமாக இருப்பதால் அவற்றை கண்காணிக்க அடுத்த வாரம் தனி பொதுத்தளம் ஒன்றை மத்திய அரசு தொடங்க உள்ளது.
2 டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்கும், ஏற்கனவே கோவிட் தொற்று ஏற்பட்டு நோய் எதிர்ப்பாற்றல் பெற்றவர்களிடையேயும் கோவிட் வைரஸ் பாதிப்பு பதிவாகிறது. கேரளாவில் இந்த எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு சுமார் 40 ஆயிரம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட போதும் கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆங்காங்கே இதுபோன்ற வைரஸ் பாதிப்பு காணப்படுவதால் இதற்கென தனி இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
இது பற்றி மத்திய சுகாதார அமைச்சக வட்டாரம் கூறியதாவது: பொதுமக்கள் பார்க்கும்படி அந்த தளம் அமையும். தடுப்பூசி போட்டுக்கொண்ட எத்தனை பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது, அவர்களில் யாரேனும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளானார்களா, யாரேனும் இறந்துள்ளார்களா போன்ற தகவல்கள் அதில் வெளியிடப்படும். அவர்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி, ஆர்.டி-பி.சி.ஆர் அறிக்கை போன்ற தகவல்களும் இத்தளத்திற்காக சேகரிக்கப்படும். தடுப்பூசி போட்ட பின்னர் நாடு முழுவதும் இதுவரை கோவிட் பாதிப்புக்கு ஆளோனார்கள் பற்றி முழு வீச்சில் ஆய்வு நடைபெறுகிறது.
அத்தகைய தொற்று மாதிரிகள் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டு மரபணு வரிசைமுறை செய்யப்படுகிறது. இதனால் வைரஸின் அளவு, வகை, நடத்தையை கண்காணிக்க முடியும். அத்தகைய வரிசைமுறையில் இதுவரை புதிய வகைகள் அல்லது மாற்றங்கள் உறுதி செய்யப்படவில்லை. அடுத்த இரண்டு வாரங்களில் உறுதியான தகவல்கள் தெரியவரும். தடுப்பூசி போட்டவர்களுக்கு மிகவும் லேசான அறிகுறியே தென்படுகிறது. வெகுசிலருக்கே மருத்துவ உதவி தேவைப்படுகிறது. எனவே தான் இத்தகைய தகவல்களை பொதுத் தளத்தில் வழங்க உள்ளோம். அது தடுப்பூசிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்தும். இவ்வாறு கூறியுள்ளனர்.
Last edited by சிவா on Sat Aug 14, 2021 2:31 am; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
கொரோனா அச்சுறுத்தல்; ஆக.,15ல் கிராம சபை கூட்டத்திற்கு தடை
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜன.,26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.,15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்.,2) ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை முன்வைப்பார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. வரும் ஆக.,15ல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் உள்ளிட்ட சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‛கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம். இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழங்குமாறும்' அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போதும், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதற்கு, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். திமுக.,வினர் மூலம் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் ஸ்டாலினும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சுதந்திர தினமான வரும் ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் (ஜன.,26), உழைப்பாளர் தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆக.,15), மகாத்மா காந்தி பிறந்தநாள் (அக்.,2) ஆகிய தேதிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மக்கள் தங்கள் பகுதி கோரிக்கையை முன்வைப்பார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஓராண்டாக கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. வரும் ஆக.,15ல் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் உள்ளிட்ட சிலர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குனர் பிரவீன் நாயர், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‛கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் 15ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த வேண்டாம். இதுதொடர்பாக, கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வழங்குமாறும்' அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின் போதும், கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இதற்கு, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். திமுக.,வினர் மூலம் கிராம சபை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த கிராம சபை கூட்டங்களிலும் ஸ்டாலினும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
எதிர்காலத்தில் குழந்தைகளைத் தாக்கும் வைரஸ்களில் ஒன்றாக மாறும் கோவிட்-19
வளர்ந்துவரும் மற்றும் வளர்ச்சி கண்ட நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுவிட்டதால் அவர்கள் தங்களது அன்றாட பணிக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால் தற்போது ஓர் புதிய விவாதம் மருத்துவ விஞ்ஞானிகள் மத்தியில் உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஆகியோருக்கு இதனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுமா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகளால் எழுப்பப்படுகிறது.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசியின் வீரியம் மற்றும் கொரோனா தாக்கம் ஆகியவை எதிர்காலத்தில் உடல் உபாதைகளை உண்டாக்கும் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கூறுகையில் எதிர்காலத்தில் கொரோனா சீசனில் புளூ எனப்படும் சாதாரண ஜலதோஷம்போல குழந்தைகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தடுப்பு மருந்து செலுத்தப்படாத குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அவ்வப்போது ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் சுவாச சம்பந்தப்பட்ட வைரஸ்கள் நோயாளியின் வயதைப் பொறுத்து பாதிப்பை காட்டுகிறது என்று தெரிவித்த விஞ்ஞானிகள் 1889-ஆம் ஆண்டுமுதல் 1890-ஆம் ஆண்டுவரை 'ரஷ்யன் புளூ' என்கிற நோய் 10 லட்சம் பேரை பலி கொண்டது.
குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த சுவாசக் குழாயைத் தாக்கும் வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. வயது வாரியாக சுவாசப் பாதையை தாக்கும் வைரஸ்கள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்தது.
இதற்காக ஒரு கணித மாடல் உருவாக்கப்பட்டது நோய் தாக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு முதல் ஆண்டு, பத்தாவது ஆண்டு, 20-வது ஆண்டு உடலில் இந்த வைரஸ் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராயப்பட்டது.
இதற்காக ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நோயாளிகள் உடல் பரிசோதனைக்கு உள்ளானது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனா பாதித்த சிறுவர்களுக்கு 20 ஆண்டுகளாக அவர்கள் இளைஞர்களானபோதும் அந்த வைரஸ் உடலிலேயே தங்கி விடக் கூடும். மேலும் நாள்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வல்லது என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனால் மரணம் ஏற்படுமா என்று உறுதியாக கூற முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
வளர்ந்துவரும் மற்றும் வளர்ச்சி கண்ட நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுவிட்டதால் அவர்கள் தங்களது அன்றாட பணிக்கு திரும்பிவிட்டனர்.
ஆனால் தற்போது ஓர் புதிய விவாதம் மருத்துவ விஞ்ஞானிகள் மத்தியில் உருவாகி உள்ளது. கொரோனா பாதிப்பு மீண்டவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஆகியோருக்கு இதனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு பின்விளைவுகள் ஏதாவது ஏற்படுமா என்ற கேள்வி உலக விஞ்ஞானிகளால் எழுப்பப்படுகிறது.
குறிப்பாக பெண்கள், குழந்தைகள் ஆகியோருக்கு தடுப்பூசியின் வீரியம் மற்றும் கொரோனா தாக்கம் ஆகியவை எதிர்காலத்தில் உடல் உபாதைகளை உண்டாக்கும் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் கூறுகையில் எதிர்காலத்தில் கொரோனா சீசனில் புளூ எனப்படும் சாதாரண ஜலதோஷம்போல குழந்தைகளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தடுப்பு மருந்து செலுத்தப்படாத குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அவ்வப்போது ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.வரலாற்றை சற்று திரும்பிப் பார்த்தால் சுவாச சம்பந்தப்பட்ட வைரஸ்கள் நோயாளியின் வயதைப் பொறுத்து பாதிப்பை காட்டுகிறது என்று தெரிவித்த விஞ்ஞானிகள் 1889-ஆம் ஆண்டுமுதல் 1890-ஆம் ஆண்டுவரை 'ரஷ்யன் புளூ' என்கிற நோய் 10 லட்சம் பேரை பலி கொண்டது.
குறிப்பாக 70 வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த சுவாசக் குழாயைத் தாக்கும் வைரஸ் தாக்கியது குறிப்பிடத்தக்கது. வயது வாரியாக சுவாசப் பாதையை தாக்கும் வைரஸ்கள் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்று இந்த விஞ்ஞானிகள் குழு ஆராய்ந்தது.
இதற்காக ஒரு கணித மாடல் உருவாக்கப்பட்டது நோய் தாக்கப்பட்டு குணம் அடைந்தவர்களுக்கு முதல் ஆண்டு, பத்தாவது ஆண்டு, 20-வது ஆண்டு உடலில் இந்த வைரஸ் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆராயப்பட்டது.
இதற்காக ஜெர்மனி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நோயாளிகள் உடல் பரிசோதனைக்கு உள்ளானது. இந்த ஆய்வின் முடிவில் கொரோனா பாதித்த சிறுவர்களுக்கு 20 ஆண்டுகளாக அவர்கள் இளைஞர்களானபோதும் அந்த வைரஸ் உடலிலேயே தங்கி விடக் கூடும். மேலும் நாள்பட்ட பாதிப்பை ஏற்படுத்த வல்லது என கூறப்பட்டுள்ளது. ஆனால் இதனால் மரணம் ஏற்படுமா என்று உறுதியாக கூற முடியவில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
வைரஸ் பற்றி மீண்டும் விசாரணை: உலக சுகாதார நிறுவனம் கோரிக்கையை நிராகரித்தது சீனா
பெய்ஜிங்: கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. அது இயற்கையாக பரவியதா அல்லது மனித பிழையால் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியான வைரஸா என்ற சந்தேகம் கிளம்பியது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் தந்தன. நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதார குழுவினருக்கு சீன அரசின் அனுமதி கிடைத்தது. இரண்டு மாதங்களாக வூகான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை பற்றி சீன குழுவினருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில், வூஹான் பரிசோதனை கூடம் மூலம் வைரஸ் பரவியதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறினர். வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த ஒரு உறுதியான நிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றது அறிக்கை. வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏதாவது ஒரு இடைப்பட்ட விலங்கு மூலமாக பரவியதற்கான வாய்ப்புகளே அதிகம் என கூறியது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வியாழனன்று, நோயின் தோற்றம் பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்க, ஆரம்பகால கோவிட் நோயாளிகளின் தரவுகளை பகிருமாறு சீனாவை வலியுறுத்தியது. அதனை சீனா இன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
“ஆரம்பக்கட்ட விசாரணையே போதுமானது. அறிவியல்பூர்வ விசாரணைக்கு பதில் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொண்டு தகவல்கள் கேட்கின்றனர். அரசியல் விசாரணையை எதிர்கின்றோம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனாவின் கூட்டு அறிக்கையின் முடிவுகளை சர்வதேச சமூகம் மற்றும் அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி மேற்கொள்ளப்படும் விசாரணை புதியதாக இல்லாமல், அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அமைய வேண்டும்” என கூறியுள்ளனர்.
பெய்ஜிங்: கோவிட் வைரஸின் தோற்றம் குறித்த விசாரணையை புதுப்பிக்கும் படி உலக சுகாதார நிறுவனம் வைத்த கோரிக்கையை சீனா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. விசாரணை அறிவியல் பூர்வமானதாக இல்லாமல் அரசியல் நோக்கம் கொண்டதாக இருப்பதாக தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப் பட்டது. அது இயற்கையாக பரவியதா அல்லது மனித பிழையால் வூஹான் ஆய்வகத்திலிருந்து வெளியான வைரஸா என்ற சந்தேகம் கிளம்பியது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்து உண்மையை கண்டறிய வேண்டும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் தந்தன. நீண்ட காத்திருப்புக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் உலக சுகாதார குழுவினருக்கு சீன அரசின் அனுமதி கிடைத்தது. இரண்டு மாதங்களாக வூகான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை பற்றி சீன குழுவினருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட முதல் கட்ட அறிக்கையில், வூஹான் பரிசோதனை கூடம் மூலம் வைரஸ் பரவியதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கூறினர். வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பது குறித்த ஒரு உறுதியான நிலையை கண்டுபிடிக்க முடியவில்லை என்றது அறிக்கை. வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு ஏதாவது ஒரு இடைப்பட்ட விலங்கு மூலமாக பரவியதற்கான வாய்ப்புகளே அதிகம் என கூறியது.
இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் வியாழனன்று, நோயின் தோற்றம் பற்றிய விசாரணையை மீண்டும் தொடங்க, ஆரம்பகால கோவிட் நோயாளிகளின் தரவுகளை பகிருமாறு சீனாவை வலியுறுத்தியது. அதனை சீனா இன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
“ஆரம்பக்கட்ட விசாரணையே போதுமானது. அறிவியல்பூர்வ விசாரணைக்கு பதில் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொண்டு தகவல்கள் கேட்கின்றனர். அரசியல் விசாரணையை எதிர்கின்றோம். உலக சுகாதார நிறுவனம் மற்றும் சீனாவின் கூட்டு அறிக்கையின் முடிவுகளை சர்வதேச சமூகம் மற்றும் அறிவியல் சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. இனி மேற்கொள்ளப்படும் விசாரணை புதியதாக இல்லாமல், அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் அமைய வேண்டும்” என கூறியுள்ளனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
இருவேறு தடுப்பூசி தவறானது; 'சீரம்' நிறுவன தலைவர் கருத்து
மும்பை-'கொரோனாவை தடுக்க, ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது தவறானது' என, 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா கூறியுள்ளார்.
கொரோனாவிற்கு எதிராக, உள்நாட்டு தயாரிப்பான 'கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு' தடுப்பூசிகள் நம் நாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரே தடுப்பூசியை இரண்டாவது டோஸாக செலுத்துவது நடைமுறையில் உள்ளது.உத்தர பிரதேசத்தில் எதிர்பாராத வகையில் இருவேறு தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோர் உடலில், கொரோனா எதிர்ப்பு சக்தி அதிகம் உருவானது, சமீபத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து, இருவேறு தடுப்பூசிகள் செலுத்தும் பரிசோதனையை 300 பேரிடம் மேற்கொள்ள, வேலுார் கிறிஸ்துவ மருத்துவக் கல்லுாரிக்கு, இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு ஜெனரல் சமீபத்தில் அனுமதி அளித்தார்.இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் 'சீரம் இன்ஸ்டிடியூட்' நிறுவன தலைவர் சைரஸ் பூனாவாலா கூறியதாவது: இரு தடுப்பூசிகளை ஒருவருக்கு செலுத்துவது தவறு என்பதுடன், இதற்கான எவ்வித அவசியமும் இல்லை என்பதே சரியானது.
இதுபோல் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் பாதிக்கப்பட்டால், சீரம் நிறுவனத்தின் மீது மற்றொரு தடுப்பூசி நிறுவனத்தினர் குற்றம் சுமத்துவர். அதே முடிவை நாங்களும் எடுக்க நேரிடும்.ஒருவருக்கு இருவேறு தடுப்பூசிகளை செலுத்துவது பலன் அளிக்கும் என, சோதனை முறையில் உறுதி செய்யப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
இந்தியாவில் 145 நாட்களில் இல்லாத அளவாக கரோனா தினசரி தொற்று குறைந்தது
-
இந்தியாவில் 145 நாட்களில் இல்லாத அளவாக தினசரி
கரோனா தொற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்
கரோனாவில் 32,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட
அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
''கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் புதிதாக
32 ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த
பாதிப்பு 3 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரத்து 513 ஆக
அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை
3 லட்சத்து 81 ஆயிரத்து 947 ஆகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு
மார்ச் மாதத்துக்குப் பின் கரோனா தொற்று இந்த அளவுக்கு
முதல் முறையாகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில்
1.18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
கரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 14 லட்சத்து
11 ஆயிரத்து 924 பேர் குணமடைந்தனர், குணமடைந்தோர்
சதவீதம் 97.48 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச்
மாதத்துக்குப் பின் அதிகபட்சமாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 417 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 31 ஆயிரத்து 642 ஆக
அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் 179 பேரும், கேரளாவில் 109 பேரும்
உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் இதுவரை 49 கோடியே 48 லட்சத்து 5 ஆயிரத்து 652 பேருக்கு
மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. ஞாயிறு மட்டும் 11 லட்சத்து
81 ஆயிரத்து 212 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை நாட்டில்
ஏறக்குறைய 54.58 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 XYUkYwB](https://i.imgur.com/XYUkYwB.jpg)
இந்தியாவில் இப்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு ஊசிகளும் போடப்பட்டு வரும் நிலையில் குஜராத்தைச் சேர்ந்த ஸைடஸ் நிறுவனம் மத்திய அரசுடன் இணைந்து தயாரித்துள்ள ஸைகோவிட் என்ற தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசி 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடலாம் என்பது இதன் சிறப்பு. மொத்தம் 3 டோஸ்களைக் கொண்டது இந்த தடுப்பூசி.
ஆண்டுக்கு 10 கோடி முதல் 12 கோடி வரையிலான எண்ணிக்கையில் இதை தயாரிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
டிச., 1ம் தேதிக்குள் மேலும் 2 லட்சம் மரணங்கள்; எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
-
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Tamil_News_large_2833857](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2833857.jpg)
-
கோப்பென்ஹகென்:
கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை
உலக நாடுகள் பலவற்றில் பரவிவரும் நிலையில் இதுகுறித்து
அவ்வப்போது உலக சுகாதார அமைப்பு தலைவர்
டெட்ராஸ் அதனோம் கெப்ரயேசஸ் எச்சரிக்கை வெளியிட்டு
வருகிறார்.
இதனைத் தொடர்ந்து தற்போது ஐரோப்பிய கண்டத்தில் வரும்
டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் மேலும் 2 லட்சத்து 36 ஆயிரம் குடிமக்கள்
வைரஸ் தாக்கத்தால் மரணமடைய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய கண்டத்தில் பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில்
டெல்டா வைரஸ் தாக்கம் அதிவேகமாகப் பரவி வருவதை அடுத்து
அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பால்கன்ஸ், கக்காசஸ், மத்திய
ஆசியா ஆகிய பகுதிகளில் டெல்டா ரகத்தின் தாக்கம் அதிகரித்து
வருவதால் மரண எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து உள்ளது
குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் மேற்கண்ட பகுதிகளில் மரண எண்ணிக்கை 11 சதவீதம்
அதிகரித்ததை அடுத்து டிசம்பர் துவக்கத்தில் 2 லட்சத்து 36 ஆயிரம்பேர்
மரணம் அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் இதுவரை 13 லட்சம்பேர் வைரஸ் தாக்கத்திற்கு
மரணமடைந்துள்ளனர்.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 53 உறுப்பினர் நாடுகளில் 33 நாடுகளில்
கடந்த இரண்டு வாரங்களில் மரண எண்ணிக்கை 10 சதவீதம்
அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் மரண
எண்ணிக்கை அதிகரிக்கிறது.
தடுப்புமருந்து பற்றாக்குறை காரணமாகவே மரணங்களின்
எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் கோடைகால
சுற்றுலாவுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஐரோப்பிய கண்டத்தில்
பல நாடுகளில் வெகுவாக தளர்த்தப்பட்டு உள்ள காரணத்தால் பலர்
மரணமடைகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளில் சராசரியாக
6 சதவீத மக்களுக்கு தடுப்புமருந்து இரண்டு செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவல் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளி
ஆசிரியர்களும் மாணவர்களும்தான். பெருவாரியான நாடுகளில்
பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் மூடப்பட்ட சிறிய
அறையில் வகுப்புகள் நடத்தத்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.
இதன் தாக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு உலகம் திரும்பியது என நினைக்கும்போது, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவில் பிஎஃப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.
இதனால் அங்குள்ள்ள மக்கள் தொகையில், 40% க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிஎஃப்-7 ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்தியா வரும் வெளி நநாட்டு பயணிகளுக்கு கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 288 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், நாட்டில் கொரொனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.
இத்தொற்றால் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரொனாவுக்கு 2,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவியது.
இதன் தாக்கம் முடிந்து இயல்பு நிலைக்கு உலகம் திரும்பியது என நினைக்கும்போது, கடந்த ஆண்டு இறுதியில், சீனாவில் பிஎஃப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவியது.
இதனால் அங்குள்ள்ள மக்கள் தொகையில், 40% க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிஎஃப்-7 ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு 150 க்கும் மேற்பட்டவர்களுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இந்தியா வரும் வெளி நநாட்டு பயணிகளுக்கு கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 288 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால், நாட்டில் கொரொனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக அதிகரித்துள்ளது.
இத்தொற்றால் மேலும் 4 பேர் பலியாகியுள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரொனாவுக்கு 2,503 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள் - Page 5 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கொரோனா - செய்திகள், வழிகாட்டிகள், எச்சரிக்கைகள்
67.51 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.51 கோடியாக அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும் 675,171,861 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 6,762,232 பேர் மரணமடைந்துள்ளனர் என்றும், உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 647,556,642 பேர் மீண்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உலகம் முழுவதும் 20,852,987 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 104,196,861 என அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 1,132,935 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 101,322,779 என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 44,682,784 என அதிகரித்துள்ளது. இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 530,740 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 44,150,289 என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 39,524,311 என அதிகரித்துள்ளது. பிரான்ஸில் நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 164,233 என்பதும் குணமானோர் எண்ணிக்கை 39,264,603 என்பதும் குறிப்பிடத்தக்கது.
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொரோனா பாதிப்பு - தொடர் செய்திகள்
» கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்
» கொரோனா பாதிப்பு - இன்றைய செய்திகள்
» கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்
» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
» கொரோனா - இன்றைய (மே-22) செய்திகள்
» கொரோனா பாதிப்பு - இன்றைய செய்திகள்
» கொரோனா வைரஸ் - இன்றைய செய்திகள்
» கொரோனா பாதிப்பு - முக்கிய செய்திகள்
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|