புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
1 Post - 1%
prajai
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
3 Posts - 2%
மொஹமட்
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
1 Post - 1%
prajai
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_lcapவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_voting_barவேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 7:57 am

“சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்
சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து”

என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்புற இணைத்துக் காணும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கின்றது. முருகனின் ஆயுதமாக மட்டும் வேல் கருதப்பட்டிருக்குமாயின் அதற்கென தனி வழிபாட்டு மரபுகள் ஏற்பட்டிருக்க முடியாது. அதற்கு மேலும், அதாவது முருகனே வேலாகா, வேலே முருகனாக எண்ணி வழிபடும் மரபு தோன்றிய போது தான் அதற்கென தனி வழிபாட்டு முறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. சங்க காலம் தொட்டு வளர்ந்து வந்துள்ள இவ்வழிபாட்டு முறைகளை ஆராய்கின்றபோது சங்ககாலம் தொட்டு இன்று வரை மக்கள் வேலின் பால் தெய்வநம்பிக்கை கொண்டு வழிபட்டு வந்துள்ளமையை உணரமுடிகின்றது.

“வெறியயர்தல்”

சங்க காலத்தில் ‘வேல்’ வழிபாட்டுச் சடங்குகள் ‘வெறியயர்தல்’ என்ற பெயரில் நிகழ்ந்துள்ளன. அழகும் இளமையும் கொண்ட மகளிர் நலம் குன்றின காலத்து, அவர்களின் பெற்றோர் வேலனை வெறியாட அழைத்துள்ளனர். இவ்வாறு அவன் வெறியாட அழைக்கப்படும் போது வேலன் கையில் வேல் கொண்டு வருகின்றான். வழிகள் சில சந்திக்கும் இடத்தில் வெய்மணலைப் பரப்பி, செந்நெல் வெண்பொறிகளைத் தூவி, பந்தர் அமைத்து, பூபல பெய்து, பசுந்தழை, காந்தள், பூக்குலைகளைச் சுற்றிக்கட்டி, வேலை மையமாக வேலன் நடுகின்றான். பிறகு முருகன் பெயரை வாழ்த்தி, முருகன் தம்மேல் எழுந்ததாகக் கொண்டு, வேல் எடுத்து ஆடுகின்றான். இவ்வாறு அவன் ஆடுகையில் மணிகள், இயம்பங்கள் ஒலிக்கின்றன. மகளிர் குறிஞ்சி பாட, தூபம் எங்கும் புகைகிறது.

“பொய்யா மரபினூர் முதுவேலன்
கழங்கு மெய்ப்படுத்துக் கன்னந்தூக்கி
முருகென மொழியுமாயின்”

என்ற பாடலின் படி வேலன் கழங்கு இட்டு. கணக்கு பார்த்து நடந்தது, நடப்பது, நடக்கப் போவது உரைப்பதும் உண்டு. “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்” என இவனின் சிறப்பைத் தொல்பாக்கியம் (பொருள் : 60) குறிப்பிடும். இவ்வாறு வெறியாடும் திறம் குறுந்தொகை, நற்றிணை அகநாநூறு போன்ற சங்க இலக்கிய நூல்களிலும் உள்ளன.

சிவபெருமான் சூரர்களை அழிக்க, முருகனுக்குத் தந்தது வேல். அது எப்படைக்கும் நாயகம் ஆவது என்று கந்தபுராணம் பேசுவது வேலின் தனித்த சிறப்பை முன் வைப்பதாக உள்ளது. மேலும் இற்றைக்காலத்தில் சிக்கல் போன்ற பல திருத்தலங்களில் வேல் வழங்கும் விழா சிறப்புற நடைபெறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வேல் குறித்த பக்திப் பனுவல்கள்

வேல், புராணப் பின்னணி, சங்க இலக்கிய வழிபாட்டுப் பின்னணி பெற்றிருப்பினும், அருணகிரியார் காலத்தில் தான் தனி பெரும் நிலையை அது அடைக்கின்றது. வேல் வகுப்பு, வேல் வாங்கு வகுப்பு, வேல் விருத்தம் போன்றன அருணகிரியாரால் ‘வேலை’ முன்னிறுத்தி பாடப்பட்ட பனுவல்கள் ஆகும். இவை காலப் போக்கில், வேலை தனிப்பெருந் தெய்வமாக வணங்கும் நிலைக்கு உயர்த்துகின்றன.

“கண்டு குலையும் பொழுதில் அஞ்சலென
மென்சரண
கஞ்சமுத அங்கருணை வேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர்
தம்புதல்வி
கணவன் அடல் கொண்ட வேலே”

இப்பாடல் வரிகள் வேல் உணர்வுக்குச் சான்றாகின்றன. மேலும் மெய்ஞ்ஞான நிலைக்கு, அயனுமாலும் முறையிட அசுரல் கோடி துகளெழ விடு மெய்ஞ் ஞான அயிலோனே (திருப்புகழ், 317) என வேலை அருணகிரி நாதர் உணர்த்திப் பாடுகின்றார்.

எனவே வேல் இவ்வாறு பல புலவர்களாலும், முருகனுக்கு ஈடான புகழைப் பெருமளவிற்குச் சிறப்பு பெற்றுள்ளது என்ற தெளியமுடிகின்றது.

“வெல்லுகின்ற தன்மை உடையது ஆதலின் வேல் என்ற பெயர் உண்டாயிற்று அந்தவேல் ஞான சக்தியின் வடிவத்தைப் பெற்றது”

“முருகனுக்கு ஆறுமுகம் இருப்பது போல வேலுக்கும் ஆறுபடைகள் உண்டு. முருகப் பெருமான் திருவுருவத்தையும், அவன்பால் சார்ந்திருக்கும் வேலையும் தரிசிக்கும் போது கவனித்தால், அது அவன் அடியையும் கரத்தையும் தொட்டுக் கொண்டு முடியுமளவும் செல்வதைக் காணலாம்.”

“இலங்கையில் (கதிர்காமம்) சில கோயில்கள் மலேசியாவில் பத்துமலைக் கோயில், கோலாலம்பூர் சந்தசாமி கோயில் ஆகியவற்றில் வேலே நிறுவப்பெற்று வழிபடப் பெறுதல் முருகனும் வேலும் ஒன்றே என்ற சிந்தனையையும், முருகனுக்குக் கொடுக்கும் மதிப்பையே வேலுக்கும் கொடுத்தார்கள் என்ற உண்மையையும் புலப்படுத்துகின்றன.”

என்ற அறிஞர்ளின் கருத்துக்களின் படி வேல் தனியொரு தெய்வமாக விளங்கி இக்காலத்தில் சிறப்புப் பெற்றுள்ளது என்பதை உணரலாம்.

மேலைச்சிவபுரி வேல் வழிபாடு

சங்ககால வெறியாட்டு நடைமுறை, அதன் பின் எழுந்த வேல் தனித்த தெய்வமாக ஆக்கப் பெற்ற நடைமுறை இரண்டும் இன்னமும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. “பழநியில் நடைபெறும் தைப்பூசத்திற்குச் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தே நெருக்குப்பை, கண்டனூர், காரைக்குடி, தேவக்கோட்டை முதலிய இடங்களிலிருந்து, பாதயாத்திரை மேற்கொண்ட செய்தியை காப்புகளுடன் சென்ற செய்தியை கி. பி. 1788 ல் தோன்றிய செப்பேட்டுப் பட்டயங்கள் நன்கு துளக்குகின்றன” என்ற கருத்து மேற்சொன்னதற்குச் சான்றாகும்.

இவ்வாறு தைப்பூசத்திற்குச் செல்லும் வேல்களுள் ஒன்றாகச் சிவபுரி வேலும் விளங்குகின்றது.

மேலைச் சிவபுரி வேல் வரலாற்றுப் பின்னணி

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் தாலுகா, பொன்னமராவதி 3, கி. மீ. தொலைவில் இருப்பது மேலைச்சிவபுரி ஆகும். இது சைவம் தமிழ் இரண்டையும் வளர்க்கும் சன்மார்க்க சபை, கணேசர் செந்தமிழ்க் கல்லூரி இரண்டையும் கொண்டு தமிழுலகில் தனியிடம் பெற்றுத் திகழ்கிறது. அதனுடன் சுப்பையா கோவில் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் சக்தி வேலாயுத சுவாமி என்ற வேல் வழிபடு கடவுளாக உள்ளது. இக்கோயில் எழுப்பப்படக் காரணம் சிறப்பிற்குரியதாகும்.

காவடி கட்ட சில வரையறைகள்

காவடி அழகுற தண்டு இணைக்கப்பட்ட வெல்வெட் துணிகளால், மயிலிறகால் அழகு செய்யப்பட்ட சக்கரை வைத்துக் கட்டப் பெறுகின்றது. இச்சக்கரையே பிறகு பழ னியில் அபிஷேகப் பொருளாகின்றது. இதற் கென கோவில் வீட்டில் 11 ரூபா தந்து பதிவு பெற வேண்டும். தூய விரதம் பெரிய கார்த்திகையிலிருந்து காக்கப்பட வேண்டும். துக்க வீடு, புலால் வீடு, முதலியன தவி ர்க்கப்படுகின்றன. பச்சை நிற வேட்டிகள், மணி மாலைகள் அணியப்படுகின்றன. ஆண் கள் மட்டுமே காவடிக்கு உரியவர்கள், பெண் கள் வீட்டு விலக்கு நேரங்களில் விரதக் காரர்களுக்கு சமைப்பதில்லை. கண்ணில் எதிர்படுவதுமில்லை. காவடி செல்லும் போதும் திரும்பி வரும் போதும் நடையி லேயே வரவேண்டும். குளித்த பின்பே காவடியைத் தொட உரிமை உண்டு. நடுவில் இயற்கை உபாதைகள் தவிர்க்கப்பட வேண்டும். இல்லையாயின் மீண்டும் குளிக்க வேண்டும்.

வேல் சாமியாடி தேசிகர்

இவர்கள் வில்லுப்பட்டியிலிருந்து ஒரு காலத்தில் பூஜைக்காக அழைத்து வரப்பெற்றிருக்கின்றனர். ஏறக்குறைய புதிய தலைமுறைகளாக பூஜை புரிவதுடன் இவர்களே தற்போது வேலையும் சுமந்து நடை பயணம் மேற்கொள்கின்றனர். தகவாளியின் நினைவுக்கு எட்டிய வரை, சுப்பையா 30 வருடம், செம்பு லிங்கம் 30 வருடம், ராமையா 3 வருடம், மாணிக்கம் (தற்போது) 25 வருடம் வேல் கொண்டு செல்லும் பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மேற்சொன்ன விரதம் பொருந்தும், மேலும் செட்டியார் இனத்தாரிடமிருந்து இவர்கள் எவ்வாறு வேல் கொண்டு செல்லும் பணியைப் பெற்றனர் என்பது நுணுகி ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். இவர்களுக்கென சில கைமாறுகள் செய்யப் பெறுகின்றன. இருப்பினும் நடை யாத்திரையின் போது மக்கள் வழங்கும் தட்சிணை இவர்களுக்கானதாகக் கொள்ளப்படுகின்றது.

வேல் வழிபாட்டில் சில வரை முறைகள்

வேல் நடை யாத்திரை சென்றிருக்கும் போது மங்கல விழாக்கள் நிகழ்த்தப்படுவதில்லை. இறப்பு நிகழ்ந்தால் கொட்டு கொட்டப்படுவதில்லை. வேலின் மேற்புறம் வெள்ளி, தங்க முருகனின் கழுத்தளவு அங்கி சார்த்தப்பெற்று வருகின்றது. இது வேலையே முருகனாக வழிபடும் வழிபாட்டின் பாற்பட்டதாகும்.

மேலும் குழந்தை பிறந்தால் கரும்புகழிகள் கொண்டு தொட்டிச் சீலை வழி தொட்டி கட்டப்படுதல் உண்டு. கொப்பனாபட்டி ஊரார் சிலர் குழந்தை பிறந்ததும் மொட்டை அடித்துப் பேர் வைக்க இங்கு வருகின்றனர்.

எண்ணெய் தீபம் ஏற்ற, மற்ற செலவுகளுக்கென பங்காளிகள் முறைப்படி ஆண்டாண்டு பணம் தருகின்றனர். என்றாலும் வரும் வருமானம் குறித்த கணக்கு வழக்குகள் கேட்டுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறாக பழனி ஆண்டவரை, மேலைச்சிவபுரி சார்ந்த மக்கள் வேல் வடிவில் கண்டு வணங்குகின்றனர். வேலே முருகனாக வழிபடும் இம்முறை சங்ககாலந் தொட்டு இன்றுவரை நடைபெற்று வந்திருப்பது எண்ண எண்ண இனிப்பாகும். மேலும் வெளியாடல் முறை போன்ற வழிபாட்டு முறையும் இங்கு சுட்டப்பட்டுள்ளது. முருக வழிபாடு இன்றும் பரவலாக, வழக்கில் இருந்து வருவது சிறப்பிற்குரிய ஒன்றாகும்.

முனைவர் மு. பழனியப்பன்.




வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 15, 2021 8:06 am

வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் 103459460 வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் 3838410834
-
வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும் 0b3cfb10


சிவா and VENKUSADAS இந்த பதிவை விரும்பியுள்ளனர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக