புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_lcapவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_voting_barவாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 09, 2021 12:03 pm

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் 201702231021379028_goal-of-life-to-live_SECVPF
இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும்
உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்!
எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள்
வாழ்க்கையை இருவகையாக வாழலாம். இப்படித்தான் வாழவேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்வது, எப்படியும் வாழலாம் என்ற மனம் போனபடி வாழ்வது. பண்பாளர், நன்னெறியாளர் தேர்ந்தெடுப்பது முதல் வகை வாழ்க்கையையே.

‘பெற்றோரைக் கொடுப்பது விதி

வாழ்க்கையை அமைப்பது மதி’

வாழ்க்கையை வகுத்துக்கொள்ளத் தெரியாமல் எப்படியோ வாழ்ந்து, நிலைதடுமாறி, எண்ணியது கிடைக்காமல், மனம் வெறுத்து, தளர்ந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைய தலைமுறையை கண்டு மனது பதறுகிறது, கலங்குகிறது.

மனதில் உறுதி, வாக்கினில் இனிமை, நல்ல நினைவு இருந்தால் நினைத்தது கிடைக்காமல் போய்விடுமா என்ன?. சிலர் கூறுவர், இது நடக்க வேண்டும் என்று நினைத்தேன், நடந்து விட்டது என்பர். அவரிடம் உள்ள மந்திர சக்தியா அதை நடத்தியது? இல்லவே இல்லை. அவர் எதை அடைய வேண்டும் என்று நினைத்தாரோ, அதை எண்ணத்தை மிகத்தீவிரமாக மனதில் புதைத்து ஆழ்மனதில் மூலம் அந்த செயல் நடைபெற வேண்டும், அதில் தான் வெற்றி பெற வேண்டும் என்று விடாது எண்ணியதின் விளைவு தான் மந்திரச்செயல் போல் நடக்கிறது.

நம் வள்ளுவர் பெருந்தகையும்.

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்’

என்று கூறுகிறார். எண்ணத்தில் திண்மை இருந்தால் நினைத்தது கட்டாயம் நடக்கும். நல்லதை நினையுங்கள், உறுதியாக எண்ணுங்கள், வெற்றி உங்கள் கையில்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 09, 2021 12:03 pm

வாழ்க்கையை குறிக்கோளுடன் வாழுங்கள் 5EEC171C-F903-423B-BF70-AE946FB6817E_L_styvpf
வயது முதிர்ந்த நிலையில் நாவுக்கரசர் இறைவனை கயிலையில் காண விரும்பி பயணம் மேற்கொண்டார். நடை தளர்ந்தது, உள்ளம் தளரவில்லை. உடலுறுப்புகள் தேய்ந்தன, ஊக்கம் தேயவில்லை. படுத்த நிலையில் ஊர்ந்து செல்லும் நாவுக்கரசரைக் காணப்பொறுக்காத இறைவனே அந்தணனாக வடிவெடுத்து முயற்சியை கைவிடுமாறு வேண்டியும்,

‘ஆளும் நாயகன் கயிலை இருக்கைக் கண்டல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்’

என்று மறுத்தார்.

அந்த உறுதிக்கு இறைவனே பணிந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியை அவருக்கு அருளினார்.

மார்க்கண்டேயர் கதையும் அனைவருக்கும் தெரியும்.

‘தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன்
மெய்வருத்த கூலி தரும்’

என்ற குறளுக்கு எடுத்துக்காட்டு மார்க்கண்டேயர்.

வள்ளுவரை காண வந்த ஒருவர் ஐயா விதி என்னை வஞ்சித்து விட்டதே! நான் இனி எப்படி வாழ்வேன்? என்று புலம்பினார்.

வள்ளுவரும்

ஊழிற் பெருவலி யாவுள?

என்று விதியை ஏற்றுக்கொண்ட அவர், அத்தோடு நிறுத்தி விடவில்லை. உடனே விடாமுயற்சி இருந்தால் விதியையும் மதியால் வென்று விடலாம் என்று பதிலளிக்கிறார். ஊக்கம் இருந்தால் ஆக்கம் எங்கே எங்கே என்று வழிகேட்டு நம்மைத் தேடி ஓடிவரும்.

இளைய தலைமுறையினரே!

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்

என்பதை மனதில் ஏற்றிக்கொண்டு வாழ்ந்தால் அந்த தற்கொலையல்லவா தற்கொலை செய்துகொள்ளும்!

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. நமது வாழ்க்கை நம்மை சுற்றி வாழ்கின்ற பல உயிரினங்களுடன் தான் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. நாமும் வாழ வேண்டும், பிற உயிர்களையும் வாழ விட வேண்டும்.

குருவி, கழுகு, புலி, காண்டாமிருகம் போன்ற பல உயிரினங்கள் அருகி வரும் உயிரினமாக அஞ்சப்படுகிறது. இதற்கு யார் காரணம்? நமது வாழ்வியல் முறைகளும், பேராசையும் தானே?. மனிதர்கள் வாங்கி வைக்காத மண்ணின் விசிறிகளாக பாதசாரிகளின் பணிமனை கூடங்களாக மானிட ஆண்மைக்கு மண் கொடுத்த சீதனங்களாக இருந்த மரங்கள் இன்று பல்வேறு காரணங்களுக்காக அழிக்கப்பட்டு வருகின்றன.

எண்ணிப்பாருங்கள், இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும் உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்! எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.

நம் வாழ்க்கையோடு ஒன்றி வாழும் பிற உயிரினங்களிடமும் அன்பு கொண்டு அவற்றையும் வாழ விடுங்கள்.

மாலைமலர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 09, 2021 5:40 pm

" வெற்றி உங்கள் கையில்."-

'நம்ம கையில் என்ன இருக்கிறது?' என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இந் நேரத்தில் , ‘வெற்றி உங்கள் கையில்’ என்று சொன்னீர்களே - வாழ்க!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 6:35 pm

இளைய தலைமுறையே, ஊக்கமும் உறுதியும்
உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களாக வாழுங்கள்!
எண்ணியதை எண்ணியவாறு அடையுங்கள்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக