புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_c10ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_m10ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_c10 
5 Posts - 63%
heezulia
ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_c10ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_m10ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_c10ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_m10ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கும்பாபிஷேக தரிசனம் எவ்வளவு புண்ணியம் அளிக்கும் தெரியுமா?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 01, 2021 5:27 pm


இறைவனுக்கு கோயில் கட்டி வழிபடுவது வழக்கம்.
புதிதாக ஓர் ஆலயம் எழுப்பப்படும்போது, விக்கிரகங்களை
ஆலயத்தினுள் பிரதிஷ்டை செய்வதோடு மட்டும் ஆலயம்
முழுமை பெற்றுவிடுமா என்றால், நிச்சயமாக இல்லை.

அது எப்போது முழுமை பெறும்? ஆலயத்தில்,
'கும்பாபிஷேகம்' நடந்த பின்னர்தான் அது வழிபாட்டுக்கு
உரிய ஸ்தலமாக முழுமை பெறுகிறது.

கும்பம் என்றால் 'நிறைத்தல்' என்று பொருள். நம் ஆலயங்களில்
வீற்றிருக்கும் விக்கிரகங்களுக்கு, அபிஷேகங்கள் மூலம்
இறைசக்தியை நிறைத்தலே கும்பாபிஷேகம். இதனை சைவர்கள்
'மகா கும்பாபிஷேகம்' என்றும் வைணவர்கள்
'மகா சம்ப்ரோக்ஷணம்' என்றும் அழைக்கிறார்கள்.

மேலும் சக்தி வாய்ந்த மந்திரங்கள் மூலம் யாகங்கள் செய்யப்பட்ட
தீர்த்தங்களால் இறைவன் மீதும், கோபுரக் கலசங்கள் மீதும்
புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

கும்பாபிஷேகம் மூலமாகவே விக்கிரகங்கள் தெய்வசக்தியைப்
பெறுகின்றன.

பெரும்பாலும், கும்பாபிஷேகமானது 12 வருடங்களுக்கு ஒருமுறை
செய்யப்படுகிறது. இதன் காரணம், நாம் கும்பாபிஷேகம் செய்யும்
போது சாத்தப்பட்ட அஷ்டபந்தனமானது (மருந்து) 12 வருடங்கள்
வரைதான் சக்தியோடு இருக்கும்.

மேலும் கோயில்களில் ஏதேனும் புனரமைப்பு செய்தாலும்
கும்பாபிஷேகம் செய்யப்படும். மேலும் கும்பாபிஷேகம் பற்றி
வேதவிற்பன்னர் சுந்தரேஷசர்மாவிடம் கேட்ட போது, அவர் கூறிய
தகவல்களின் தொகுப்பு இது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 01, 2021 5:28 pm




கும்பாபிஷேகத்தின் வகைகள்:

ஆவர்த்தம் –
புதிதாக கட்டப்படும் ஆலயங்களில் செய்யப்படுவது.
இது மும்மூர்த்திகளுக்காகச் செய்யப்படுகிறது.

அனாவர்த்தம் –
வெகுநாட்கள் யாராலும் முறையாக பராமரிக்கப்
படாமல், பூஜை, புனஷ்காரங்கள் நடைபெறாமல் இருக்கும்
ஆலயங்களைப் புனரமைப்பு செய்து பின்னர் செய்யப்படுவது.
மேலும் ஆறு, கடல் இவற்றால் சிதிலமடைந்த கோயிலைப் புதிதாக
நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்யும் முறை.

புனராவர்த்தம் –
கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியன பாதிப்படைந்திருந்தால்,
அவற்றைப் புதுப்பித்து அஷ்டபந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து
கும்பாபிஷேகம் செய்யும் முறை.

அந்தரிதம் –
ஆலயத்தினுள்ளே தகாத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்து
விட்டால் செய்யப்படும் பரிகாரம்.

கும்பாபிஷேகத்தில்

கும்பம் - கடவுளின் உடலையும்,

கும்பத்தின் மீது சுற்றப்பட்ட நூல் - 72,000 நாடி, நரம்புகளையும்,

கும்பத்தில் ஊற்றப்படும் நீர் - ரத்தத்தையும்,

அதனுள் போடப்படும் தங்கம் - ஜீவனையும்,

மேல் வைக்கப்படும் தேங்காய் - தலையையும்,

பரப்பட்ட தானியங்கள்: ஆசனத்தையும் குறிக்கின்றது.

இது மட்டும் இல்லாமல் யாக மேடையில் சந்தனம், மலர்கள்
மற்றும் வஸ்திரம் ஆகியவையும் அமைக்கப்படுகின்றன.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 01, 2021 5:29 pm



கும்பாபிஷேகத்தில் விக்கிரகப் பிரதிஷ்டையில் மேற்
கொள்ள வேண்டிய பூஜைகள் :

அனுக்ஞை –
ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்தெடுத்து இறைவனின்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

சங்கல்பம் –
இறைவனிடம் நமது தேவைகளைக் கோரிக்கையாக வைத்தல்.

பாத்திர பூஜை –
பூஜை பாத்திரங்களுக்குரிய தேவதைகளுக்குப் பூஜை செய்தல்.

கணபதி பூஜை –
கணபதியை வழிபடுதல் .

வருண பூஜை –
வருண பகவானையும், சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

பஞ்ச கவ்யம் –
பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசு நீர், பசு சாணம்
ஆகியவற்றை வைத்துச் செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபடுதல்.

பிரவேச பலி – திக்பாலர்களை வணங்குதல்.

மிருத்சங்கிரஹணம் –
ஆலயம் நிர்மாணம் செய்ய பூமாதேவியை கஷ்டப்படுத்தியதன்
காரணமாக பூமா தேவியை மகிழ்விக்கச் செய்யப்படும் பரிகாரம்.
மண் எடுத்து வழிபடுவது.

அங்குரார்ப்பணம் –
எடுத்த மண்ணில் விதைகளைப் பயிரிட்டு முளைப்பாரி வளரச்
செய்தல். இதில் 12 சூர்யர்களான வைகர்த்தன், விவஸ்வதன்,
மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகபிரகாசன், லோகசாட்சி,
திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி, திவாகரன்
போன்றவர்களை வழிபடுதல். மேலும் சந்திரனையும் வழிபடுதல்.

ரக்ஷாபந்தனம் – ஆசாரியனுக்கும் மற்ற உதவி ஆசாரியர்களுக்கும்
கையில் காப்புக் கட்டுதல்.

கும்ப அலங்காரம் – கும்பங்களை இறைவன் உடலாக நினைத்து
அலங்காரம் செய்தல்.

கலா கர்ஷ்ணம் – விக்கிரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்துக்கு
மந்திரப் பூர்வமாக அழைத்தல்.

யாகசாலை பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து
வருதல்.

சூர்ய, சோம பூஜை – யாகசாலையில் உள்ள சூரிய சந்திரனை
வழிபடுதல்.

மண்டப பூஜை – யாகசாலையை பூஜை செய்தல்.

பிம்ப சுத்தி – விக்கிரகங்களை மந்திரத்தின் மூலமாக சுத்தம் செய்தல்.

நாடி சந்தானம் –
இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை ஒரு இணைப்பு மூலமாக
விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.

விசேஷ சந்தி – 36 தத்துவத் தேவதைகளுக்குப் பூஜை செய்வது.
உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கும் சாந்தி
செய்வது.

பூத சுத்தி – பூத (மனித) உடலை தெய்வத்தின் உடலாக மந்திரப்
பூர்வமாக மாற்றி அமைத்தல்.

ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல
விக்கிரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்.

அஷ்டபந்தனம் – (மருந்து சாத்துதல்) எட்டு பொருள்களால் ஆன
இம்மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல்.

பூர்ணாஹுதி – யாகத்தைப் பூர்த்தி செய்தல்.

கும்பாபிஷேகம் – யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப்
பூஜிக்கப்பட்ட கும்ப நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல்.

மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்கிரகத்துக்கு
முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.

மண்டலாபிஷேகம் – இறைவனை 48 நாட்கள் விஷேச அபிஷேக
பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்தல்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jul 01, 2021 5:29 pm


யாக குண்டத்தின் வகைகள்:

ஏக குண்டம் – ஒரு குண்டம் அமைப்பது

பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைப்பது

நவாக்னி – ஒன்பது குண்டம் அமைப்பது

உத்தம பக்ஷம் – 33 குண்டம் அமைப்பது

யாக குண்டங்கள் தெய்வங்களைப் பொறுத்து மாறுபடுகின்றன.
அவை

விநாயகர் - பஞ்சகோணம்

முருகர் - ஷட்கோணம்

சிவன் - விருத்தம்

அம்மன் - யோணி

பரிவாரம் - சதுரம்

கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால்,
முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். தவிர்க்க
முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள
இயலாதவர்கள், 48 நாட்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்து
கொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன்
அடையலாம்.

ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜென்மங்களில்
நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது.

இரா.செந்தில் கரிகாலன்
நன்றி-விகடன்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக