புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by சிவா Today at 9:10 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உணவே மருந்து
Page 1 of 1 •
பிறவிப் பிணியை ஒழிக்க விரும்பிய புலவர் ஒருவர் வீட்டுச் சரக்குகளின் பெயர்களைக் கொண்டு ஓர் அழகிய பாடலைப் பாடியுள்ளார். பாடல் வருமாறு
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே.
திருவேரகம் என்னும் சுவாமி மலை (குமரி மாவட்டத்துத் தக்கலை என்னும் ஊர் அருகிலுள்ள குமாரர் கோயில் என்பாருமுளர்) யில் வீற்றிருக்கும் வள்ளித் திருமணத்திற்காக வளையல் செட்டியாராக வந்த முருகப் பெருமானே*
கொடிய காயம் (உடல்) விரதங்களிருப்பதால் வற்றி எலும்பானால் (சுக்கானால்) கொடிய விதியினால் (வெந்தயம்) என்ன செய்ய இயலும்? இவ்வுடலாகிய சரக்கினை இவ்வுலகில் சுமக்க மாட்டேன். செம்மையான மனதைக் (சீர்+அகம்) கொடுத்தீரானால் பெரிய உடலினை (பெரும்+காயம்) இனி எடுக்க மாட்டேன் என்கிறார்.
இப்பாடலின் சிலேடை நயம் போற்றுதற்குரியது. இப்பாடலில் காணப் பெறும் மருந்துப் பொருட்களாவன, வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம். இச்சரக்குகளின் பயன்கள் இனிவரும் மலர்களில் மணம் பரப்பும்.
உணவையே மருந்தாக உட்கொண்டனர் முன்னோர். உணவு மிகினும், குறையினும் நோய் செய்யும் என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
இழி(வு)அறிந்(து) உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
-என்பது திருக்குறள். அளவு அறிந்து உண்பவனை மனிதன் என்கிறார். உண்பான் என மரியாதையாக அழைக்கிறார். குழிபேர் இரையான் என மிகுதியாக உண்பவனை அழைக்கிறார். இரை ஆடு மாடுகளுக்குப் போடுவது. அதிகமாக உண்பவனை விலங்குகளோடு சேர்த்து இரையான் என இழிவுபடுத்துகிறார்.
இதனால் தான் ஒரு பொழுது உண்பவனை யோகி என்றும், இருபொழுது உண்பவனை போகி என்றும், மூன்று வேளை உண்பவனை ரோகி (நோய் பீடீத்தவன்) என்றும் கூறுவர். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது திருமூலர் திருவாக்கு. நல்ல உடலில் தான் நன்கு ஆன்மா ஒளிவிடும். உணவு உயிர்ச் சத்துக்களைக் கொண்டதாக அமைய வேண்டும். மாதவச் சிவனான முனிவரிடம் சமையல் செய்பவன், இன்று என்ன கறி சமைக்கலாம்? ஐயா என்றான். அவரோ ஒரு வெண்பாவாவில்,
சற்றே துவையலரை தம்பிஓர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை-குற்றமிலை
காயமிட்டடுக் கீரை கடை_கம் மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.
என்றார். சிவஞான முனிவர் சமையலுக்கு எடுத்துக் கொண்ட கறி வகைகளாவன, துவையல். பச்சடி, வற்றல், காயமிட்ட கீரை, மிளகுக் காய்கறி.
துவையல் என்பது அம்மியில் வைத்து அரைக்கப்படுவது. வறுகடலைத் துவையல் சத்துமிக்கது. இஞ்சித் துவையல் பித்தம் போக்கும். பிரண்டைச் செடியையும் வறுத்து இஞ்சியுடன் சேர்த்துத் துவையல் செய்வர். காணத் துவையல் (கொள்ளு) சத்துமிக்கது. வறுத்து அரைப்பர்.
அடுத்தது பச்சடி. வெண்டைக்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அத்துடன் மிளகாய், வெங்காயம் அரைத்துச் சேர்த்துச் செய்வது வெண்டைக்காய்ப் பச்சடி. மாங்காயைத் துண்டுகளாக்கிச் செய்தால் மாங்காய்ப் பச்சடி. சித்திரை மாதம் வேப்பம்பூ தாராளமாக கிடைக்கும். அதைப் பச்சடியில் சேர்த்து உண்பதால் கல்லீரல் நோய்கள் அகலும். மலமிளக்கியாகவும், குடலைத் தூய்மை செய்வதாகவும் அமையும். இப்படியே தக்காளிப் பச்சடி, வெங்காயப் பச்சடி எனப் பலவகைகள் உண்டு.
நாள்தோறும் நம் முன்னோர் தயிர்ப்பச்சடி உண்டு வந்தனர். அதில் சேர்க்கப்படும் பொருள் உயிர்ச்சத்து - சி - நிறைந்த நெல்லிக்காய்த் துண்டுகள். நெல்லிக்காய்த்துண்டுகள். நெல்லிக்காய் நீண்ட நாள் வாழ வைப்பது. இதனால் தான் வள்ளல் அதியமான் புலவர் ஒளவையார் நீண்ட நாள் வாழ வேண்டுமெனத் தான் அரிதில் பெற்ற கருநெல்லிக்கனியை அவ்வையாருக்குக் கொடுத்தான்.
நெல்லிக்காய் தாராளமாக கிடைக்கும் மாதங்களில் அவற்றை ஆட்டுரலில் இட்டு அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை இட்டுக் காயவைத்து கயிற்றில் கோத்துக் கொடிகளில் தொங்க விட்டிருப்பர். தினமும் ஓர் அடையை எடுத்துத் தயிரில் போட்டுப் பிசைந்து பச்சடி செய்வர். அன்றாடம் தேவையான சி உயிர்ச் சத்து வில்லைகளை விழுங்குவதை விட இதை உண்பது மேல் அல்லவா?
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத
சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்
ஏரகத்துச் செட்டியாரே.
திருவேரகம் என்னும் சுவாமி மலை (குமரி மாவட்டத்துத் தக்கலை என்னும் ஊர் அருகிலுள்ள குமாரர் கோயில் என்பாருமுளர்) யில் வீற்றிருக்கும் வள்ளித் திருமணத்திற்காக வளையல் செட்டியாராக வந்த முருகப் பெருமானே*
கொடிய காயம் (உடல்) விரதங்களிருப்பதால் வற்றி எலும்பானால் (சுக்கானால்) கொடிய விதியினால் (வெந்தயம்) என்ன செய்ய இயலும்? இவ்வுடலாகிய சரக்கினை இவ்வுலகில் சுமக்க மாட்டேன். செம்மையான மனதைக் (சீர்+அகம்) கொடுத்தீரானால் பெரிய உடலினை (பெரும்+காயம்) இனி எடுக்க மாட்டேன் என்கிறார்.
இப்பாடலின் சிலேடை நயம் போற்றுதற்குரியது. இப்பாடலில் காணப் பெறும் மருந்துப் பொருட்களாவன, வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம். இச்சரக்குகளின் பயன்கள் இனிவரும் மலர்களில் மணம் பரப்பும்.
உணவையே மருந்தாக உட்கொண்டனர் முன்னோர். உணவு மிகினும், குறையினும் நோய் செய்யும் என்கிறார் அய்யன் திருவள்ளுவர்.
இழி(வு)அறிந்(து) உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபே ரிரையான்கண் நோய்.
-என்பது திருக்குறள். அளவு அறிந்து உண்பவனை மனிதன் என்கிறார். உண்பான் என மரியாதையாக அழைக்கிறார். குழிபேர் இரையான் என மிகுதியாக உண்பவனை அழைக்கிறார். இரை ஆடு மாடுகளுக்குப் போடுவது. அதிகமாக உண்பவனை விலங்குகளோடு சேர்த்து இரையான் என இழிவுபடுத்துகிறார்.
இதனால் தான் ஒரு பொழுது உண்பவனை யோகி என்றும், இருபொழுது உண்பவனை போகி என்றும், மூன்று வேளை உண்பவனை ரோகி (நோய் பீடீத்தவன்) என்றும் கூறுவர். உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பது திருமூலர் திருவாக்கு. நல்ல உடலில் தான் நன்கு ஆன்மா ஒளிவிடும். உணவு உயிர்ச் சத்துக்களைக் கொண்டதாக அமைய வேண்டும். மாதவச் சிவனான முனிவரிடம் சமையல் செய்பவன், இன்று என்ன கறி சமைக்கலாம்? ஐயா என்றான். அவரோ ஒரு வெண்பாவாவில்,
சற்றே துவையலரை தம்பிஓர் பச்சடிவை
வற்றலே தேனும் வறுத்துவை-குற்றமிலை
காயமிட்டடுக் கீரை கடை_கம் மென வேமிளகுக்
காயரைத்து வைப்பாய் கறி.
என்றார். சிவஞான முனிவர் சமையலுக்கு எடுத்துக் கொண்ட கறி வகைகளாவன, துவையல். பச்சடி, வற்றல், காயமிட்ட கீரை, மிளகுக் காய்கறி.
துவையல் என்பது அம்மியில் வைத்து அரைக்கப்படுவது. வறுகடலைத் துவையல் சத்துமிக்கது. இஞ்சித் துவையல் பித்தம் போக்கும். பிரண்டைச் செடியையும் வறுத்து இஞ்சியுடன் சேர்த்துத் துவையல் செய்வர். காணத் துவையல் (கொள்ளு) சத்துமிக்கது. வறுத்து அரைப்பர்.
அடுத்தது பச்சடி. வெண்டைக்காயைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அத்துடன் மிளகாய், வெங்காயம் அரைத்துச் சேர்த்துச் செய்வது வெண்டைக்காய்ப் பச்சடி. மாங்காயைத் துண்டுகளாக்கிச் செய்தால் மாங்காய்ப் பச்சடி. சித்திரை மாதம் வேப்பம்பூ தாராளமாக கிடைக்கும். அதைப் பச்சடியில் சேர்த்து உண்பதால் கல்லீரல் நோய்கள் அகலும். மலமிளக்கியாகவும், குடலைத் தூய்மை செய்வதாகவும் அமையும். இப்படியே தக்காளிப் பச்சடி, வெங்காயப் பச்சடி எனப் பலவகைகள் உண்டு.
நாள்தோறும் நம் முன்னோர் தயிர்ப்பச்சடி உண்டு வந்தனர். அதில் சேர்க்கப்படும் பொருள் உயிர்ச்சத்து - சி - நிறைந்த நெல்லிக்காய்த் துண்டுகள். நெல்லிக்காய்த்துண்டுகள். நெல்லிக்காய் நீண்ட நாள் வாழ வைப்பது. இதனால் தான் வள்ளல் அதியமான் புலவர் ஒளவையார் நீண்ட நாள் வாழ வேண்டுமெனத் தான் அரிதில் பெற்ற கருநெல்லிக்கனியை அவ்வையாருக்குக் கொடுத்தான்.
நெல்லிக்காய் தாராளமாக கிடைக்கும் மாதங்களில் அவற்றை ஆட்டுரலில் இட்டு அரைத்து வடைபோல் தட்டி நடுவில் துளை இட்டுக் காயவைத்து கயிற்றில் கோத்துக் கொடிகளில் தொங்க விட்டிருப்பர். தினமும் ஓர் அடையை எடுத்துத் தயிரில் போட்டுப் பிசைந்து பச்சடி செய்வர். அன்றாடம் தேவையான சி உயிர்ச் சத்து வில்லைகளை விழுங்குவதை விட இதை உண்பது மேல் அல்லவா?
அடுத்தது வற்றல். பொதுவாக அரிசியை அரைத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஊற்றி தீ எரிகையில் கூழாகக் காய்ச்சி அதில் மிளகாய், சீரகம், வெங்காயத் துண்டுகள் போட்டுப் பதமாக இறக்கி துணிகளை வெயில் விழும் மேடையில் விரித்து வட்ட வட்டமாகக்கையினால் எடுத்து ஊற்றி வெயிலில் காய வைத்து, காய்ந்த பின் எடுத்து எண்ணெயில் பொரித்து உண்பர். இதைக் கூழ் வற்றல் என்பர். இதைப் போலவே, கத்தரி, மிளகாய் (தயிரில் ஊற வைத்து), மணித் தக்காளி, சுண்டைக்காய் முதலியவற்றையும் தாராளமாகக் கிடைக்கும்,
காலங்களில் வெயிலில் காய வைத்து வற்றலாக இடுவர். இதில் மணித்தக்காளி வற்றல் வாய்ப்புண் வயிற்றுப்புண் போக்கும். சுண்டைக்காய் வற்றலில் இரும்புச் சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு, சோகை தடுப்புக்குப் பயன்படும். ஏதாவது ஒருவகை வற்றலைச் சேர்ப்பது நல்லது.
அடுத்தது கீரை. இதில் உயிர்ச்சத்து பி12 உள்ளது. இரத்த விருத்திக்கு இன்றியமையாதது. கீரையில் பலவகைகள் உண்டு. அகத்திக் கீரை. அதை அவசியம் வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். இதை சோறு வடித்த கங்சி நீரில் ஊற வைத்துப் பயன்படுத்தினால் சத்துமிகுதி. கூறுத்து வெல்லம் சிறிது இட்டு வதக்கி உண்பதும் உண்டு. முருங்கைக் கீரைக்கு வாயுவைக் கண்டிக்கும் தன்மை உண்டு. இதையும் வறுத்து உண்ணலாம். மணித் தக்காளிக் கீரையை அவித்து உண்பதால் வாய்ப்புண் குணமாகும்.
ஆனால் நம் முனிவரோ, காயமிட்டுக் கீரை கடை என்கிறார். இது நாள்தோறும் நாம் சேர்க்க வேண்டிய அரைக்கீரை. இதைப்பற்றிச் சுவையான செய்தி உண்டு. கம்பர் ஒளவையாரிடம் விடுகதை போட்டார். ஓரு காலடி நாலிலைப் பந்தலடி அடி என அவ்வையாரை அழைத்தார். அவ்வையார் பதிலுக்கு ஆரையடா சொன்னாய் அது என்றார். அரைக் கீரை பற்றிய இலக்கியச் செய்தி இது. அடா எனப் பதிலில் உரைத்தது நயம்.
அரைக் கீரையில் சிறிது சுண்ணம் சேர்த்து அவித்துப் பெருங்காயப் பொடி சேர்த்துக் கடைந்து உண்பதால் பி உயிர்ச்சத்து நாள்தோறும் கிடைத்து வரும். அடுத்தது, மிளகுக் காய்கறி. மிளகாய் தமிழ் நாட்டுக்கு வருமுன் தமிழ் நாட்டினர் மிளகையே பயன்படுத்தினர். மிளகுபோல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான மிளகாய் காரமாக இருந்ததால் மிளகுக் காய் என்றனர். அது மருவி மிளகாய் ஆகி விட்டது. இவற்றுள் மிளகை கேரளத்தில் நல்ல மிளகு என்பர். மிளகு திரிகடுகத்தில் (சுக்கு, மிளகு, திப்பிலி) ஒன்று. பகைவன் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றால் பத்து மிளகைக் கொண்டு போ என்பது ஒரு பழமொழி. ஊணவிலுள்ள நச்சுப் பொருட்களை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. தமிழ் நாட்டிலே வாழ்ந்த ஆங்கிலேயர் மிளகு தண்ணீர் (இரசம்) குடித்து அதன் பெருமையை உணர்ந்து தம் அகராதியிலே அச்சொல்லை அப்படியே மிளகு தண்ணி என எழுதியுள்ளனர்.
நாம் முன்பே கூறியவாறு சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடி செய்து தண்ணீரில் இட்டுக் காய்ச்சி ஆக்குவது தான் மிளகுக்காய்கறி. வட மொழியில் ரசம் என்பர். தமிழர் மிளகுச் சாறு என்பர். நாள்தோறும் ஒரு துவையல், ஒரு பச்சடி, ஒரு வகை வற்றல், கீரை, மிளகு சாறு சேர்த்து வந்தால் நோய் விட்டுப் போகும்.
காலங்களில் வெயிலில் காய வைத்து வற்றலாக இடுவர். இதில் மணித்தக்காளி வற்றல் வாய்ப்புண் வயிற்றுப்புண் போக்கும். சுண்டைக்காய் வற்றலில் இரும்புச் சத்து உள்ளது. நோய் எதிர்ப்பு, சோகை தடுப்புக்குப் பயன்படும். ஏதாவது ஒருவகை வற்றலைச் சேர்ப்பது நல்லது.
அடுத்தது கீரை. இதில் உயிர்ச்சத்து பி12 உள்ளது. இரத்த விருத்திக்கு இன்றியமையாதது. கீரையில் பலவகைகள் உண்டு. அகத்திக் கீரை. அதை அவசியம் வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். இதை சோறு வடித்த கங்சி நீரில் ஊற வைத்துப் பயன்படுத்தினால் சத்துமிகுதி. கூறுத்து வெல்லம் சிறிது இட்டு வதக்கி உண்பதும் உண்டு. முருங்கைக் கீரைக்கு வாயுவைக் கண்டிக்கும் தன்மை உண்டு. இதையும் வறுத்து உண்ணலாம். மணித் தக்காளிக் கீரையை அவித்து உண்பதால் வாய்ப்புண் குணமாகும்.
ஆனால் நம் முனிவரோ, காயமிட்டுக் கீரை கடை என்கிறார். இது நாள்தோறும் நாம் சேர்க்க வேண்டிய அரைக்கீரை. இதைப்பற்றிச் சுவையான செய்தி உண்டு. கம்பர் ஒளவையாரிடம் விடுகதை போட்டார். ஓரு காலடி நாலிலைப் பந்தலடி அடி என அவ்வையாரை அழைத்தார். அவ்வையார் பதிலுக்கு ஆரையடா சொன்னாய் அது என்றார். அரைக் கீரை பற்றிய இலக்கியச் செய்தி இது. அடா எனப் பதிலில் உரைத்தது நயம்.
அரைக் கீரையில் சிறிது சுண்ணம் சேர்த்து அவித்துப் பெருங்காயப் பொடி சேர்த்துக் கடைந்து உண்பதால் பி உயிர்ச்சத்து நாள்தோறும் கிடைத்து வரும். அடுத்தது, மிளகுக் காய்கறி. மிளகாய் தமிழ் நாட்டுக்கு வருமுன் தமிழ் நாட்டினர் மிளகையே பயன்படுத்தினர். மிளகுபோல் வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான மிளகாய் காரமாக இருந்ததால் மிளகுக் காய் என்றனர். அது மருவி மிளகாய் ஆகி விட்டது. இவற்றுள் மிளகை கேரளத்தில் நல்ல மிளகு என்பர். மிளகு திரிகடுகத்தில் (சுக்கு, மிளகு, திப்பிலி) ஒன்று. பகைவன் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றால் பத்து மிளகைக் கொண்டு போ என்பது ஒரு பழமொழி. ஊணவிலுள்ள நச்சுப் பொருட்களை முறிக்கும் தன்மை மிளகுக்கு உண்டு. தமிழ் நாட்டிலே வாழ்ந்த ஆங்கிலேயர் மிளகு தண்ணீர் (இரசம்) குடித்து அதன் பெருமையை உணர்ந்து தம் அகராதியிலே அச்சொல்லை அப்படியே மிளகு தண்ணி என எழுதியுள்ளனர்.
நாம் முன்பே கூறியவாறு சீரகம், மிளகு ஆகியவற்றைப் பொடி செய்து தண்ணீரில் இட்டுக் காய்ச்சி ஆக்குவது தான் மிளகுக்காய்கறி. வட மொழியில் ரசம் என்பர். தமிழர் மிளகுச் சாறு என்பர். நாள்தோறும் ஒரு துவையல், ஒரு பச்சடி, ஒரு வகை வற்றல், கீரை, மிளகு சாறு சேர்த்து வந்தால் நோய் விட்டுப் போகும்.
- பெரியராஜாபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 14/07/2009
மிகவும் அருமையான பயனுள்ள குறிப்புகள்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
சபீர் wrote:மிக அருமையான பகிர்வு அண்ணா மிக்க நன்றி
ஐ சப்போர்ட் யூ கண்ணு.......
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பயனுள்ள நல்ல கட்டுரை அண்ணா பகிர்தமைக்கு மிக்க நன்றி....
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
தமிழ் தமிழ் ல பேசுங்க.......குணா...gunashan wrote:சபீர் wrote:மிக அருமையான பகிர்வு அண்ணா மிக்க நன்றி
ஐ சப்போர்ட் யூ கண்ணு.......
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|