ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
heezulia
மகளிர் பக்கம் மாதவிலக்கு... Poll_c10மகளிர் பக்கம் மாதவிலக்கு... Poll_m10மகளிர் பக்கம் மாதவிலக்கு... Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் பக்கம் மாதவிலக்கு...

3 posters

Go down

மகளிர் பக்கம் மாதவிலக்கு... Empty மகளிர் பக்கம் மாதவிலக்கு...

Post by தாமு Sat Jan 16, 2010 5:13 am

மகளிர் பக்கம் மாதவிலக்கு... Menses ஒரு பெண்ணின் பெருமை அந்தப் பெண் தாய்மையடைவதில்தான் இருக்கிறது. இந்த தாய்மைக்கு அடித்தளம் பூப்பெய்தலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மாதவிடாய் சுழற்சியும்தான். தற்போது நவீன உணவு மாறுபாட்டால் 9 முதல் 12 வயதிற்குள் சிறுமிகள் பூப்பெய்துகிறார்கள். இந்த பூப்பெய்தல் என்பது கருப்பையில் உருவாகும் கருமுட்டைகள் முதிர்ந்து போதிய வளர்ச்சியடைந்து அதனால் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியுற்று அதன் உட்புறச் சவ்வின் கசிவே உதிரமாக வெளியேறுகிறது. இது மாதம் ஒருமுறை அதாவது 27-30 நாட்களுக்கு ஒருமுறை என சுழற்சியாக நடைபெறும். 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கும்.

பொதுவாக 14 வயது முதல் 45 வயது வரை மாதவிலக்கு சுழற்சி நடைபெறுகிறது. பழங்காலத்தில் பெண்கள் அடிக்கடி குழந்தை பெற்றுக்கொள்வதால் மாதவிலக்கு சுழற்சியிலிருந்து விடுபட்டனர். அதுபோல் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது மாதவிடாய் சுழற்சி ஒருசிலருக்கு தடைபடும்.

இந்த மாதவிலக்குக் காலங்களில் பெண்களை தனியாக தங்க விடுவார்கள். எந்த வேலையும் செய்ய விடாமல் முழு ஓய்வு கொடுப்பார்கள். சிலர் இதை மூடப் பழக்கம் எனலாம். ஆனால் அந்த பழக்கத்திலும் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.

தற்போது நவீன உலகத்தில் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வு என்பது இல்லை. பெரும்பாலான பெண்கள் மாதவிலக்கு சுழற்சியை ஒரு சாபமாக நினைக்கின்றனர். பசி, தூக்கம் போல் இதுவும் ஒரு வித இயற்கை நிகழ்வுதான் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, தலைவலி போன்றவற்றால் அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதனால் மாதவிலக்கை தள்ளிப் போடவும், சில சமயங்களில் வெகு விரைவில் வரவும் மருந்து மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறானது. இயல்பாக மாதம் ஒருமுறை என்ற சுழற்சியை மாற்றினால் பின் வரும் காலங்களில் பல உபாதைகளை சந்திக்கவேண்டி வரும்.

பெண்களின் மாதவிலக்கானது வாத, பித்த, கப அடிப்படையில் உடலின் தன்மையைப் பொறுத்து மாறுபடும்.

வாத உடம்புக் காரர்களுக்கு மாதவிலக்கின் இடைவெளி ஒழுங்கற்றிருக்கும். ஓரளவுக்கு உதிரம் குறைவாக, உறைந்த நிலையில் சிறு கட்டிகளாகக் கூட வெளியேறும். இந்த காலகட்டத்தில் அடிவயிறு இறுக்கமாக இருப்பதுபோல் தோன்றும். வயிற்றுவலியும் கூடவே மலச்சிக்கலும் ஏற்படும். சில நேரங்களில் வயிற்றுப் போக்கு கூட ஏற்படலாம். எரிச்சல், கோபம், தூக்கமின்மை போன்றவை ஏற்படும்.

இந்த வாதஉடம்புக் காரர்கள் அதிக வேலை, உடற்பயிற்சி அல்லது உடல் எடையைக் குறைக்க நினைத்தால் சில சமயங்களில் மாதவிலக்கு தள்ளிப்போக வாய்ப்புண்டு.

பித்த உடம்பைக் கொண்ட மகளிருக்கு மாதவிலக்கு இடைவெளி குறையும். மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். 5 நாட்களுக்கு மேல்கூட உதிரப்போக்கு இருக்கும். வயிற்றுப்போக்கு, முகத்தில் பருக்கள் தோன்றும். உடம்பு தடித்து காணப்படும். ஒருபக்க தலைவலி தோன்றலாம்.

கப உடம்பு மகளிருக்கு இயல்பான உதிரப்போக்கு இருக்கும். ஆனால் இவர்களுக்கு பல உபாதைகள் அதாவது மார்பகங்களில் வீக்கம், முதுகு, இடுப்பு, கை, கால்களில் வலி போன்றவை ஏற்படும். அஜீரணக் கோளாறு ஏற்படும். இத்தகைய உபாதைகளுக்கு உணவு மூலமும், ஓய்வின் மூலமும் நடைமுறையிலேயே தீர்வு காணலாம்.

கடைபிடிக்க வேண்டியவை

· முதலில் மனதில் தோன்றும் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.

· மாதவிடாய் தோன்றும் நாட்களை கவனத்தில் கொண்டு அந்த காலங்களில் வெளியூர் பயணம், மற்ற கடின வேலைகளை தவிர்க்க வேண்டும்.

· மாதவிடாய் காலத்தில் மென்மையான எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.

· அதிக நார்ச்சத்துள்ள பழங்களை சாப்பிட வேண்டும். பழங்கள் மலச்சிக்கலைப் போக்குவதுடன் உடலுக்கு வலுவைத் தரும்.

· அதிக உதிரப்போக்குள்ள காலத்தில் தலைக்கு தண்ணீர் ஊற்றி குளிப்பதை தவிர்க்க வேண்டும். பருத்தியினால் ஆன உடைகளை அணியவேண்டும்.

· ஓய்வு மிகவும் அவசியம். உதிரப்போக்கு காரணமாக சிலருக்கு களைப்பு ஏற்படும். ஓய்வும், உறக்கமும் நல்லது. தலைவலி, எரிச்சல், இருந்தால் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்ளுங்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளோ, மாத்திரைகளையோ உபயோகிக்கக் கூடாது.

· டீ, காபி, குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். குளிரூட்டப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது.

· காய்ச்சி ஆறவைத்த நீரை அருந்துவது நல்லது.

· வாசனை திரவியங்களை உபயோகப் படுத்த வேண்டாம்.

மாதவிலக்கின் போது வயிற்று வலியிருந்தால்

பத்து கிராம் சீரகத்துடன் 50 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி அது பாதியாக வந்தவுடன் வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து காலை, மாலை அருந்தி வந்தால் வயிற்று வலி நீங்கும். இந்தக் காலங்களில் உணவில் அதிக அளவு பெருங்காயம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை புத்துணர்வு பெறச் செய்யும்.

மாதவிலக்கின் போது ஓழுங்கற்ற உதிரப்போக்கு இருந்தால் இரண்டு ஸ்பூன் கருப்பு எள்ளைக் கழுவி எடுத்துக்கொண்டு அதில் ஒரு டீஸ்பூன் பனைவெல்லம் கலந்து தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி அந்த தண்ணீரை ஆறவைத்து குடித்து வந்தால் உதிரப்போக்கு சீராக இருக்கும்.

மாதவிலக்கின்போது கடுமையான உபாதைகள் தோன்றினால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மகளிர் பக்கம் மாதவிலக்கு... Empty Re: மகளிர் பக்கம் மாதவிலக்கு...

Post by சபீர் Sat Jan 16, 2010 9:12 am

மகளிர் பக்கம் மாதவிலக்கு... 677196 மகளிர் பக்கம் மாதவிலக்கு... 942
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மகளிர் பக்கம் மாதவிலக்கு... Empty Re: மகளிர் பக்கம் மாதவிலக்கு...

Post by rikniz Sat Jan 16, 2010 10:15 am

நன்றி மகிழ்ச்சி


மகளிர் பக்கம் மாதவிலக்கு... Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

மகளிர் பக்கம் மாதவிலக்கு... Empty Re: மகளிர் பக்கம் மாதவிலக்கு...

Post by தாமு Sat Jan 16, 2010 2:06 pm

தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

மகளிர் பக்கம் மாதவிலக்கு... Empty Re: மகளிர் பக்கம் மாதவிலக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum