புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
69 Posts - 40%
heezulia
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
52 Posts - 30%
Dr.S.Soundarapandian
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
3 Posts - 2%
manikavi
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
320 Posts - 50%
heezulia
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
199 Posts - 31%
Dr.S.Soundarapandian
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
22 Posts - 3%
prajai
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தானம்! Poll_c10தானம்! Poll_m10தானம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jan 16, 2010 3:21 am

தானம்! Smalarnews_27558535338

முன்னொரு காலத்தில் திருதராஷ்டிரர் என்ற மன்னன் அஸ்தினாபுரத்தை ஆண்டு வந்தார். இவருடைய மூத்த மகன் துரியோதனன்.


கர்ணன் இரக்க சிந்தனையும், தர்ம சிந்தனையும் உடையவன். இவனிடம் உதவிக்கு யார் சென்றாலும் இல்லை எனக் கூறாது, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி வந்தான். இவன் அரண்மனையின் எதிரில் அதிகாலை முதல் கூடும் ஏழை மக்களுக்கு நிலம், ஆடு, மாடு, பணம் என்று வாரி வழங்கி வந்தான். தங்களுக்குத் தேவையானவற்றைப் பெற்றுக் கொண்டு, மக்கள் கர்ணனை வாழ்த்திச் செல்வர். இவ்வாறு வாழ்த்திச் செல்வதைக் கேட்டுக் கேட்டு துரியோதனன், கர்ணன்பால் பொறாமை கொண்டான்.


"கர்ணன், ஒரு சின்ன நாட்டிற்கு அதிபதி. நானோ அவனை விட பெரிய நாட்டிற்கு சொந்தக்காரன். அவன் கொடுப்பதைவிட நான் அதிகமாக கொடுக்க முடியும்; எனக்கும் அவனைவிட புகழ் கிட்டும்' என்று எண்ணத் தொடங்கினான். தன்னிடம் உள்ள பொருட்களை மக்களுக்கு வாரி வாரி வழங்கினான் துரியோதனன். மக்கள் அவனையும் வாயாரப் புகழ்ந்தனர். ஆயினும் கர்ணனைப் போன்று மக்கள் தன்னைப் புகழவில்லையே என்ற ஆதங்கம் அவனுக்கு இருந்தது. துரியோதனின் மனத்தில் உள்ள ஆதங்கத்தை அறிந்த இந்திரன், அவனுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று நினைத்தான்.


இந்திரன் ஒரு ஏழை பிராமணனாக வடிவெடுத்து, துரியோதனனின் அரசவைக்கு வந்தான். ""ஏ, பிராமணனே! உனக்கு என்னிடமிருந்து என்ன வேண்டும். எது வேண்டுமானாலும் கேள். அது சிறியதோ, பெரியதோ, எதுவானாலும் தயங்காமல் அளிப்பேன்,'' என்று இறுமாப்புடன் கூறினான்.


துரியோதனனின் ஆடம்பரமான பேச்சைக் கேட்டு தனக்குள் சிரித்துக் கொண்ட அந்த பிராமணன், ""இளவரசே! எனக்கு அதிகம் எதுவும் தேவையில்லை! நான் விரைவில் தொடங்க இருக்கும் யாகத்திற்கு விறகு தேவைப்படுகிறது. அதற்கு வேண்டிய விறகுகளை அளித்தால் போதுமானது,'' என்று பதில் அளித்தான்.


""ஏ, ஏழை பிராமணனே! உன் அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது! ஒரு பெரிய இளவரசனிடம் போயும் போயும் விறகுகளைக் கேட்டாயே! உன் விருப்பப்படியே உனக்கு தேவையான விறகுகளை எடுத்துக் கொள். உன் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போலும்,'' என்றான்.


பிராமணன் மனம் மகிழ்ந்து துரியோதனனை மிகவும் பாராட்டி பேசினான். ""கருணை உள்ளம் கொண்ட இளவரசே! என்னுடைய யாகம் இன்னும் பத்து தினங்களுக்குப் பிறகு தொடங்கப்படும். அது சமயம் நான் வந்து விறகுகளைப் பெற்றுக் கொள்கிறேன். இந்த விறகுகளை சேமித்து வைத்துக் கொள்ளவும், மழையிலிருந்து காப்பாற்றவும் தகுந்த இடமில்லை,'' என்றான் பிராமணன். துரியோதனனும் அவன் வேண்டுகோளை ஏற்றான்.
இந்திரன், வருணனை அழைத்து துரியோதனன் நாட்டில் பத்து தினங்கள் மழை பெய்ய ஏற்பாடு செய்யுமாறு கோரினான். தொடர்ந்து பத்து தினங்கள் மழை பெய்யுமாறு செய்துவிட்டார். நாட்டில் ஏரி, குளம், நிலம் எங்கும் நீர் நிரம்பி வழிந்தது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பூமி எங்கும் தண்ணீர் பரந்து கிடந்தது. எல்லாமே மழை நீரில் நனைந்து விட்டன. ஒரு சிறு துரும்பு கூட நனையாது இருக்கவில்லை.


பத்து தினங்களுக்குப் பிறகு மழை நின்றது. சூரியன் பழையபடி நாட்டில் பிரகாசிக்கத் தொடங்கி மக்களுக்கு ஆறுதல் அளித்தான். இந்திரன் மீண்டும் ஏழை பிராமணனாக வடிவெடுத்து அதிகாலையில துரியோதனின் அரண்மனைக்கு வந்தான்.


""இளவரசே! இன்று என் யாகம் தொடங்குகிறது. எனக்கு வாக்களித்தவாறு விறகுகளைத் தர வேண்டுகிறேன்,'' என்று கேட்டான். இதைக் கேட்டதும் துரியோதனனுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. அந்த பிராமணனுக்கு விறகுகளைத் தரக் கூடாது என்பது அவன் நோக்கமல்ல. தக்க சமயத்திற்கு விறகுகளைக் கொடுத்து யாகம் நடத்த, காய்ந்த விறகுகள் கைவசமில்லையே என்று வருந்தினான்.


""பிராமணரே! மன்னித்துக் கொள்ளுங்கள். பத்து தினங்களாக பெய்த மழையின் காரணமாக எல்லா விறகுகளும் ஈரமாகி விட்டன. யாகம் செய்ய காய்ந்த விறகுகள் தற்சமயம் இல்லை. ஆகவே, உன்னுடைய யாகத்தை சில தினங்களுக்குத் தள்ளி வைத்துக் கொள். ஈர விறகுகள் காய்ந்ததும், உனக்கு தேவையான எல்லா விறகுகளையும் நான் அளிக்கிறேன்,'' என்றான்.


""இளவரசே! உயரிய மனிதர்கள் தங்கள் வார்த்தைகளைக் காப்பாற்ற வேண்டாமா? நான் கேட்ட அன்று விறகுகளை அளிப்பதாக உறுதி கூறிவிட்டு, இப்போது யாகத்தை தள்ளி வைத்துக் கொள் என்று கூறினால் எப் படி! யாகங்களைப் புண்ணிய தினம் பார்த்து செய்ய வேண்டும்; இன்று யாகம் செய்ய ஏற்ற நாள். ஆகவே, நீ உன்னுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்,'' என்றான்.


பிராமணனின் பேச்சைக் கேட்டு, துரியோதனனின் மனம் புண்பட்டது. தான் விறகுகளை அன்று அளிக்காதது தவறுதான் என்று உணர்ந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் பேசினான். ஆயினும், பிராமணன் தன் கோரிக்கையை மீண்டும் மீண்டும் தெரிவிக்கவே கோபமடைந்தான்.


""உனக்கு பைத்தியம் தான் பிடித்துவிட்டது. இந்த சூழ்நிலையில் நான் எவ்வாறு என் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியும். உனக்கு புத்தி இல்லை. நீர் இங்கிருந்து போகலாம்,'' என்று கோபத்துடன் கூறிவிட்டான்.


""இளவரசே! நான் பைத்தியம்தான். ஒரு ஆசாரம் நிறைந்த பிராமணன் யாகம் புரிவதற்கு, அதுவும் உன்னிடம் தானம் கேட்டு வந்தது பைத்தியக்காரத்தனம்தான். உன்னிடம் வராது, கர்ணனிடம் சென்றிருதால் அவர் ஒருநாளும் தன் வாக்கை காப்பாற்றத் தவற மாட்டார். இப்போதுதான் என்ன! அவர் அரண்மனைக்குச் சென்று எனக்கு வேண்டிய விறகுகளைப் பெற்று யாகத்தை நடத்திக் கொள்கிறேன்,'' என்று பிராமணன் கூறினான். அவரது சொற்கள் துரியோதனனின் சுய கவுரவத்தைப் பாதித்தாலும், "கர்ணன் மட்டும், இன்றைய சூழ்நிலையில் இல்லை என்று தானே கூற முடியும். கர்ணனும் இந்த பிராமணனின் கோபத்துற்கு ஆளாகத்தான் வேண்டும்' என்று மனதைத் தேற்றிக் கொண்டான்.


பிராமணன், கர்ணன் அரண்மனைக்குச் சென்றான். கர்ணன் அவனை அன்புடன் வரவேற்று, தன்னால் அவனுக்கு ஆக வேண்டியது என்னவென்று விசாரித்தான். பிராமணன் கர்ணனை வாழ்த்திவிட்டு, அன்று நடைபெற இருக்கும் யாகத்திற்குத் தேவையான விறகுகளைத் தந்து உதவுமாறு வேண்டினான்.


யாகத்தைத் தள்ளிப் போடுவது முறையல்ல; நல்ல நாளில் யாகம் நடந்தாக வேண்டும் என்ற சிந்தனையுடன், கர்ணன் தலையைத் தூக்கி மேலே பார்த்தான். கூரையைத் தாங்கி நின்ற விட்டங்களும், சட்டங்களும் அவன் பார்வையில் பட்டன. இந்த மர விட்டங்களும், மர சட்டங்களும் காய்ந்த நிலையில் உள்ளதால், இவைகளைக் கொண்டு யாகத்தை நடத்திவிட முடியும் என்று எண்ணி, பணியாளர்களை அழைத்து அரண்மனையின் ஒரு பாகத்தை இடித்து, காய்ந்த மரத்துண்டுகளை சேகரிக்குமாறு கட்டளையிட்டான். விரைவில் தேவையான மரத்துண்டுகள் சேகரிக்கப்பட்டு, வண்டியில் ஏற்றப்பட்டது. வண்டியுடன் விறகுகளை எடுத்துச் செல்லுமாறு பிராமணனிடம், கர்ணன் கேட்டுக் கொண்டான். கர்ணனை மனமாரப் பாராட்டி விட்டு, பிராமணன் விறகு வண்டியுடன் புறப்பட்டுச் சென்றான்.


துரியோதனனின் அரண்மனை வழியாக வண்டி சென்றபோது, பிராமணன், கர்ணனை வானளாவ புகழ்ந்து சென்றார், அது துரி யோதனின் காதில் விழுந்தது. கர்ணன் எவ்வாறு காய்ந்த விறகுகளை அளித்தான் என்று தெரிந்து கொள்ள விரும்பினான். தனது சுய கவுரவத்தையும் மறந்து பிராமணனிடம் சென்று, கர்ணன் எவ்வாறு காய்ந்த விறகுகளை அளித்தான் என்று வினவினான். தனது அரண்மனையின் சில பாகங்களை உடைத்து, அதிலிருந்த மரங்களை தனக்கு அளித்ததாக கூறி மரங்களைக் காண்பித்தான்.


கர்ணனின் உண்மையான தர்ம குணத்தை துரியோதனன் உணர்ந்து கொண்டான். கர்ணன் மீது பொறாமைபட்டது தவறு; உண்மையில் ஈகை பணக்காரத்தன்மையில் இல்லை... மனத்தில் தான் உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட துரியோதனன், கர்ணன்பால் அதிக அன்பு செலுத்தினான். நட்புக்கு ஓர் இலக்கணமாக துரியோதனனும், கர்ணனும் விளங்கினர்.



தானம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக