புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
1 Post - 1%
viyasan
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
13 Posts - 2%
prajai
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
துன்ப காலங்களில் கடவுள் Poll_c10துன்ப காலங்களில் கடவுள் Poll_m10துன்ப காலங்களில் கடவுள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துன்ப காலங்களில் கடவுள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri May 14, 2021 1:53 pm

துன்ப காலங்களில் கடவுள் Main-qimg-1a186dd5f49754dba9b81f612508bf52
-
ஒரு மனிதன் ஒரு நெடும்பயணம் மேற்கொண்டிருந்தான்.
அது அவன் வாழ்க்கைப் பயணம்.
-
நீண்ட தூரம் சென்றபின் தான் கவனித்தான். அவனுடைய
கால் தடங்கள் அருகே இன்னொரு ஜோடி கால் தடங்கள்.
அவனுக்கு ஆச்சரியம்.
-
சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் தெரியவில்லை. சத்தமாகக்
கேட்டான்.
-
"என்னுடன் வருவது யார்?"
-
"நான் கடவுள்" என்று அசரீரியாகப் பதில் வந்தது.
-
அவனுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி.
-
'கடவுள் என்னுடன் பயணம் செய்து வருகிறார்'. பயணம் தொடர்ந்தது.
அவன் அந்தக் கால் தடங்களைக் கவனிப்பதை நாளாவட்டத்தில்
மறந்தான்.
-
சுகமாகப் போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில் பிரச்சினைகள்
தலையெடுக்க ஆரம்பித்தன.
-
சிறிய பிரச்சினைகள் பெரிதாயின. துன்பமும் துக்கமும் அதிகமாயின.
-
ஒரு கட்டத்தில் அவன் சமாளிக்க முடியாமல் தவித்த போது தான்
அந்தக் கால் தடங்கள் நினைவு மறுபடி வந்தது.
-
'கூட கடவுள் இருக்கும் போதே இவ்வளவு துன்பமா' என்று தனக்குள்
கேட்டுக் கொண்டவன் கால் தடங்களைக் கவனித்தான்.
-
அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
அந்தப் பாதையில் ஒரே ஒரு ஜோடி கால் தடங்கள் மட்டுமே தெரிந்தன.
-
அவன் சுற்றி பின்னோக்கிப் பார்த்தான். அவன் கஷ்டகாலம்
ஆரம்பித்த கணத்திலிருந்து ஒரே ஒரு ஜோடிக் கால் தடம் மட்டுமே
தெரிந்தது. அவனுக்கு அழுகையாய் வந்தது.
-
கண்ணுக்குத் தெரியாத அந்தக் கடவுளை அழுகையினூடே கேட்டான்.
-
"கடவுளே என் இன்ப காலத்தில் உடன் வந்து கொண்டிருந்தீர்கள்,
துன்ப காலத்தில் என்னைக் கைவிட்டுக் காணாமல் போய் விட்டீர்களே
இது நியாயமா?"
-
கடவுளிடமிருந்து பதில் வந்தது. "மகனே, நான் உன்னைக் கைவிடவில்லை.
உன் துன்ப காலத்தில் நீ பார்த்த காலடிச்சுவடுகள் உன்னுடையவை அல்ல.
என்னுடையவை.
-
இந்தக் கடின யாத்திரையில் நடக்க முடியாத உன்னைத் தூக்கிக் கொண்டு
நான் தான் நிறைய தூரம் வந்துள்ளேன்.
-
அதனால் தான் நீ உன்னுடைய காலடி சுவடுகளைக் காண முடியவில்லை...."
-
அந்த மனிதன் கண்களில் நன்றியுடன் வழிந்த கண்ணீர் நிற்க நிறைய
நேரம் ஆயிற்று.


T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri May 14, 2021 8:51 pm

எட்டு ஆண்டுகளுக்கு முன் ,பொங்கல் வெளியீடாக
ஈகரையில் நான் எழுதிய கவிதை ,-ராம் .
--------------------------------------------------------------------------------------------------
ஜனவரி 12,2013
எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.
துன்ப காலங்களில் கடவுள் Images?q=tbn:ANd9GcSVe5ukDqyhk06IvnFTZrSkheKZuicwGe5krQ&usqp=CAU

ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.

மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.
நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!

துன்ப காலங்களில் கடவுள் Images?q=tbn:ANd9GcQtbWQrXosr1t6rzTcKUVtyou1WEyPdOgepvw&usqp=CAU
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

துன்ப காலங்களில் கடவுள் Images?q=tbn:ANd9GcT5sRWuMvI3SrZY2nWIxVwzvPi83DvCQlrfUQ&usqp=CAU

கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
==================================================================================================
மீள் பதிவிட சந்தர்பம் கொடுத்த ராம் அவர்களுக்கு நன்றி.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக