Latest topics
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!by ayyasamy ram Today at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாவல் பெயர்...??
Page 1 of 1
நாவல் பெயர்...??
இந்த நாவலின் பெயர் தெரியவில்லை.. நான் படித்தது
Ve-22, Ve-23 பகுதிகள் மட்டும் இருக்கிறது....
எழுதியவர் J.Gomathi
(பகுதி 22...)
ப்ரியா, கார்த்திக்கின் வாழ்க்கை எந்த
மாற்றமுமின்றி சந்தோஷமாக சென்று
கொண்டிருந்தது...
சிங்கப்பூரில்... ராம் எதிர்பார்த்து சென்ற
Project கிடைத்து விட ராம்,மது மற்றுமொரு
வாரம் அங்கேயே தங்கி இருக்கும் சூழ்நிலை
உருவானது...
மது, லஷ்மியை அழைத்து விபரத்தை
கூறினாள்... லஷ்மியும் அங்கிருந்து நல்லபடியாக
வேலையை முடித்துக் கொண்டு வருமாறு கூறி
மதுவை சமாதானம் செய்தார்...
மது கிருஷ்ணனின் மது கோபத்தில்
இருந்ததால் கிருஷ்ணனுக்கு அழைக்கவில்லை
தனது மாமியார் கணவனிடம் எப்படியும்
விஷயத்தை சொல்லி விடுவார் என்ற
நம்பிக்கையில் மது அவளது வேலையில்
கவனத்தை செலுத்தினாள்
லஷ்மி, கிருஷ்ணன் மது வரவை பற்றி எதுவும்
பேசாததால் அவனுக்கும் விஷயம் தெரிந்து இருக்கும், மது அழைத்து கூறியிருப்பாள் என
நினைத்து அதைப்பற்றி மகனிடம் சொல்லாது விட்டுவிட்டார்...
கிருஷ்ணனின் கெட்ட நேரமோ? அல்லது தீபிகாவின் நல்ல நேரமோ மது ஊர திரும்பாதது
கிருஷ்ணனுக்கு முன் தீபிகாவிற்கு
தெரிந்துவிட்டது...
தீபிகா ப்ரீத்தியை அழைத்து இந்த
விஷயத்தைப் பற்றி கூறி தனது அடுத்த திட்டத்தை செயல்படுத்தினாள்...
விதி ப்ரீத்தியின் மூலம் மது வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது
கிருஷ்ணன், மது வரும் நாளைக் கணக்கிட்டு
நாளை மது வந்து விடுவாள் என்று மனதிற்குள்
ஒரு வித சந்தோஷத்துடன் இருந்தான்...
இருவரும் நேரில் சந்தித்த பின் மது தன்னை
எப்படியும் சமாதானம் செய்து விடுவாள்,
பிரச்சனை தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையில்
இருந்தான்... ஆனால்... இனிதான்
இருவருக்கும் இடையில் பிரச்சினையே
ஆரம்பமாகப் போகிறது என்பதை அப்போது
அவன் உணர்ந்திருக்கவில்லை
அன்று மாலை கிருஷ்ணன் வீட்டிற்கு
பரபரப்புடன் கிளம்பிக் கொண்டிருந்தான்...
மதுவை பார்க்கப் போகும் சந்தோஷம் அவனது முகத்தில் வெளிப்பட்டது
ப்ரீத்தி, கிருஷ்ணனை பார்க்க அவனது
கேபினுக்கு வந்தாள்
ஹாய் கிருஷ்...என்ன இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிட்ட,
ஆமாம் ப்ரீத்தி இன்னைக்கு நைட்டு மது வர்றா அதான்
நீ... என்ன சொல்ற கிருஷ்... மது இன்னைக்கு
நைட்டு வறாளா? ஆனால் அவ இன்னும் ஒரு
வாரம் கழிச்சு தான் வாரதா ஆபீஸ்ல
பேசிக்கிட்டாங்க!
கிருஷ், இல்ல ப்ராத்தி... அவ இன்னைக்கு வர்றதா தான் என் கிட்ட சொலலிட்டு போனா...
ப்ரீத்தி, என்ன கிருஸ்? நான் என்ன பொய்யா
சொல்றேன்... அங்க ப்ராஜெக்ட் விசயமா
இன்னும் ஒரு வாரம் வேலை இருக்காம்
அதனால இப்போ அவங்க வரல, ந₹ வேணும்னா
மது கிட்ட கேட்டு பாரு...
கிருஷ், இல்ல பிரீத்தி அப்படி ஏதாவது இருந்தா
மது கணடிப்பா எனக்கு போன் பண்ணி
சொலலிருப்பா ப்ரீத்தி, உனக்கு யாராவது தப்பா Information
குடுத்துருப்பாங்க...
ப்ரீத்தி, சரி கிருஷ்... நான் கேள்விப்பட்டத உன்
கிட்ட சொன்னேன்... நான் கிளம்புறேன்...
கிருஷ்ணன், ப்ரீத்தி சென்றதும் மதுவின் ஞாபகத்தால் இதழ்களில் புன்னகை விரிய
வீட்டிற்கு கிளம்பி சென்றான்...
கிருஷ்ணன் செல்வதை பார்த்துக்கொண்டிருந்த
பிரீத்தி, போ... கிருஷ் நீ நினைக்கிற மாதிரி
உன் பொண்டாட்டி ஒன்னும் இன்னிக்கு வரப் போறதில்லை நான் சொன்னது தான் நடக்கப்போகுது... அவள பாக்கறதுக்கா நீ
இவ்வளவு சந்தோஷமா போற போ... அவ உன் மூஞ்சில நல்லா கரியை பூச போறா... திரும்பி நீ
என்கிட்ட தான் வருவ உன்னை நான் வர வைப்பேன் என்று மனதிற்குள் குரூரமாக
நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு
சென்றாள்...
தீபிகா, ப்ரீத்தியின் மனதினை... தன்
வார்த்தைகளாலும் பாசாங்கு பேச்சாலும்
அவளை தன்னை போன்ற வஞ்சக எண்ணம்
கொண்டவளாக மாற்றியிருந்தாள் கொஞ்சம்
கொஞ்சமாக அவளது
மனதில் விஷத்தை ஏற்றி மதுவை வெறுக்க வைத்தாள்...
கிருஷ்ணன் வீட்டிற்குள் நுழையும் பொழுது அவளது அன்னை ஹாலில் அமாந்து டிவி பாத்துக் கொண்டிருந்தார்
வா கிருஷ்ணா இன்னைக்கு என்ன ஆபீஸ்ல இருந்து சாக்கிரமே வந்துட்ட வெளில எங்கயாவது போறியா.?
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மா சும்மாதான் எனக் கூறிவிட்டு குழுப்பத்துடன் தனது அறை நோக்கி சென்று விட்டான்...
மது, நாள் முழுவதும் தன்னை வேளையில் ஈடுபடுத்திக் கொண்டாலும் இரவு நேர
தனிமையில் கிருஷ்ணனை நினைக்காமல் இருக்க முடியவில்லை தாங்கள் காதலித்த
தருணங்களில் கிருஷ்ணன் அதிகமாக கோபப்பட்டது கிடையாது, ஒரு சில சமயங்களில்
கோபம் வந்தாலும் அதன ஆயுள் சில நிமிடங்களுக்கு மேல் நடித்தது கிடையாது, ஆனால்... இப்போது பல நாட்களாகியும் கோபத்துடனேயே இறுக்கமாக இருப்பது மதுவிற்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்தியது...
முதன்முதலாக கிருஷ்ணன் தன்னை புரிந்து கொள்ளவில்லையோ என்ற எணணம் மதுவின் மனதில் முளை விட ஆரம்பித்தது...
அறைக்கு வந்த கிருஷ்ணன் மனதில் குழப்பம் ஏற்பட்டது... மது இன்று வருவதாக இருந்தால் தன் அன்னை இப்படி சாதாரணமாக அமர்ந்து
இருக்கமாட்டார்! மதுவிற்கு பிடித்த
அத்தனையையும் சமைத்துக்கொண்டு
மும்முரமாக சமையல்வேலையில்
ஈடுபட்டிருப்பார். .. அதுமட்டுமின்றி வந்ததும் மதுவை கூப்பிட போகவில்லையா என்று ஆரம்பித்து இருப்பார், ஆனால்... இப்போது
மதுவைப் பற்றி எதுவும் பேசவில்லை ஒருவேளை... ப்ரீத்தி சொன்னதுபோல் மது இன்றைக்கு வரவில்லையோ...! என்ற சந்தேகம்
எழுந்தது... !
பகுதி 23
கிருஷ்ணன் அன்று இரவு முழுவதும் உறங்காமல்
விழித்திருந்தான்...
மறுநாள் காலை அலுவலகத்திற்கு சென்றதும் ப்ரீத்தி
எனன கிருஷ் மது வந்துட்டாளா எனக் கேட்க
கிருஷ்ணனுக்கு ப்ரீத்தி இவ்வாறு கேட்கவும் ஏற்கனவே
மதுவின் மேல் அதத கோபத்தில் இருந்தவன் ப்ரீத்தியை
முறைத்து விட்டு சென்றான்
ப்ரீத்தி கிருஷ்ணன் முறைத்ததில் கோபம் அடைந்தாலும்,
இப்பொழுது தான் கோபப்பட்டால் காரியம் நடக்காது
என்பதை உணாந்து தனது கோபத்தை அடக்கிக்
கொண்டாள்...
தனது கேபினுக்குள வந்த கிருஷ்ணன் கோபத்தை
அடக்கும் வழியறியாது இருக்கையில் அமர்ந்து கைகளை
இறுக மூடி தனது கோபத்தை கட்டுப்படுத்த
முயன்றான்...
சிறிது நேரம் கழித்து ப்ருத்தி மாண்டும் கிருஷ்ணனின்
அறைக்கு வந்தாள்...
சாயி கிருஷ்! நீ... ஏதோ டென்ஷனில் இருந்த போல அது
தெரியாம நான் வேற ன்னை கோப படுத்திட்டேன்...
ஏற்கனவே தான் தேவை இல்லாமல் ப்ரீத்தியை முறைத்து
விட்டோம் என்ற குறுகுறுப்பில் இருந்தவனுக்கு ப்ரீத்தி
சாரி கேட்டதும் தன்மீதே கோபம் வந்தது மதுவின் மேல
உளள கோபத்தை ப்ரீத்தி மாது காட்டி விட்டோம் என்ற
குற்ற உணர்வில் நான்தான் ப்ரீத்தி உன்கிட்ட சாமி சொல்லணும்... வேற
ஏதோ டென்ஷனில் இருந்தேன்... அதான் சாரி...
ப்ரீத்தி!
பரவால்ல கிருஷ்... எதுக்கு இப்போ சாரி எல்லாம், சரி
இப்போ சொல்லு என்ன ஆச்சு! ஏன் கண்ணெல்லாம்
சிவந்து இருக்கு! நைட்டெல்லாம் தூங்கினியா
இல்லையா? ஒரு மாதிரியா இருக்க...
ப்ரீத்தி இவ்வாறு கேட்டதும் அக்கறை படவேண்டியவ
அக்கறை இல்லாமல் சுத்திக்கிட்டு இருக்கா...ஆனா நான்
இவ மேல கோபத்தை காட்டியும். ..அதை பெரிசா
எடுத்துக்காம என்ன பத்தி இவ அக்கறைப்படுறா எனத்
தனக்குள்ளே நொந்தவாறு ப்ரீத்தியை நோக்கினான்...
மதுவுடன் வேறு ஒரு பெண்ணை ஒப்பிடுவது தவறு
என்பதை கிருஸ்ணன் அப்போது அறிந்திருக்கவில்லை
தெரிந்திருந்தால் பின்னால் வரப்போகும்
விளைவுகளையும் தடுத்திருக்கலாம் விதி வழிய
தன்றோ? யாருக்கு என்ன வைத்திருக்கிறது...! என்பதை
நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ...
என்ன கிருஷ்? நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எதுவும்
பேசாம இருக்க என்ன ஆச்சு?
ஒன்னுமில்ல ப்ரீத்தி சும்மாதான்... எனக்கு கொஞ்சம்
தலைவலியா இருக்கு நாம ஈவினிங் இதை பத்தி பேசலாமா?
ப்ரீத்தி, முடியலன்னா ஹாஸ்பிடல் வேணா போயிட்டு
வரலாமா கிருஷ்? இல்ல ப்ரீத்தி, ஜஸ்ட் தலைவலிதான் சரியாயிடும்...
ஓகே கிருஷ் உம்ப பாத்துக்கோ, நான ஈவினிங் வரேன்...!
ப்ரீத்தி சென்றதும் கிருஷ்ணனின் மனதில் பல
எண்ணங்கள் ஓடின மது ஊர் திரும்பாததை பற்றி
தன்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாதது கிருஷ்ணனின்
கோபத்தை அதிகப்படுத்தியது. .. இப்பொழுதெல்லாம் மது
தன்னை அலட்சியப்படுத்துவது போன்ற ஒரு எண்ணம்
கிருஷ்ணனின் மனதில் தோன்றியது...
அன்று மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பி
ப்ரீத்தியை அழைத்துக்கொண்டு பக்கத்தில் உளள
பூங்காவிற்கு சென்றான்...
ப்ரீத்தி, என்ன கிருஷ்வந்து இவ்வளவு நேரமாச்சு
அமைதியாவே இருக்க... என்ன பிரச்சினை ஊக்கு?
மனசு விட்டு சொன்னாதானே தெரியும்...!
கிருஷ், எனக்கும் யார்கிட்டயாவது மனசுவிட்டு பேசணும்
போல தான் இருக்கு ப்ரீத்தி. .. இப்போல்லாம்
எங்களுக்குள்ள இடைவெளி அதிகமாகிட்ட மாதிரி
தோணுது... மதுவோட இந்த மெளனம் மூச்சு முட்ற
மாதிரி இருக்கு ப்ரீத்தி... ஒரு சில சமயத்துல நாமளே
போன் பண்ணி பேசிட்டா என்னன்னு தோணுது? ஆனால்
சில சமயம் அவ என்ன அலட்சிய படுத்துற மாதிரி
தோணுது ?என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல
ப்ரீத்தி...!
ப்ரீத்தி,” ஆஹா விட்டா இவன் மது கூட பேசி ராசி
ஆயிடுவான் போலயே விடக்கூடாது என மனதிற்குள்
நினைத்தவள்”
எனனதான் கிருஷ் உங்களுக்குள்ள பிரச்சனை? சரி
எனக்கு ஒரு சந்தேகம் அவ உன்னை
அலட்சியப்படுத்தினானு சொல்ற... ! அப்புறம் அவ கிட்ட
பேசணும்னு சொல்ற! இப்போ என்ன தான் பண்ண போற...?
கிருஷ், தெரியல ப்ரீத்தி...
ப்ரீத்தி, சரி கிருஷ்... நான் ஒன்னு மட்டும்
கேட்கிறேன்...” மது இப்போ வராததை பத்தி உன் கிட்ட
போன் பண்ணி எதுவும் பேசலையா?”
கிருஷ், இல்ல ப்ரீத்தி...
பரத்தி, நான் அப்பவே நினைச்சேன் கிருஷ்... மதுவை
பத்தி நான் எதுவும் சொல்லல... ஆனால்... நம்ம எம்டி
ராம் இருக்காரே அவரு சொல்லி தான் மது உனக்கு போன்
பண்ணலையோ? என்னவோ...!
கிருஷ், நீ என்ன ப்ரீத்தி சொல்ற... இதுல ராம் சார்
சொல்றதுக்கு என்ன இருக்கு?
ப்ரீத்தி, நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத
கிருஷ்... நம்ம எம்டியும் மதுவும் ரொம்ப க்ளோஸ்... மது
என்ன சொன்னாலும் ராம் சார் கேட்பார்... ஆனால் நம்ம மது அப்படி எல்லாம் இல்ல...
கிருஷ், என்னன்னு தெலிவா குழப்பாமல் சொல்லு ப்ரீத்தி... என கோபமாக கேட்க...
ப்ரீத்தி, என்கிட்ட எதுக்கு கிருஷ் கோபப்படுற...
ஆபீஸ்ல பேசிக்கிறத நான் சொல்றேன் அவ்ளோதான்...
அது மட்டும் இல்ல,” மது உன்கிட்ட எப்பவுமே எல்லா
விஷயத்தையும் சொல்றது இல்லை”
கிருஷ், அப்படி மது என்கிட்ட என்ன விஷயம்
சொல்லலைனனு நீ... சொல்ற... என் மது அப்படி எலலாம்
இல்ல, எல்லா விஷயத்தையும் என் கிட்ட சொல்லிடுவா...
ப்ரீத்தி, சிரித்துக்கொண்டே சும்மா சொல்லாத கிருஷ்...
இப்படித்தான் மது ஊரீல இருந்து வரப்போறான்னு
அவசரமா ஓடுன, நான் அப்பவே சொன்னேன் மது இப்போ
வரலைன்னு, ஆனால்... நீ கேட்கல இப்பவும் அதே மாதிரி தான...
கிருஷ்ணன் வெளிப்படையாக ப்ரீத்தியிடம் கோபத்தை காட்டி
ஓஓஓ அப்படி என்ன மது என்கிட்ட இருந்து மறைச்சா?
அது என்னனனு நீதான் சொல்லேன் பார்க்கலாம்?
ப்ரீத்தி, இங்க பாரு கிருஷ் நான் உன் கிட்ட சண்டை போட
வரல, எனக்கு அதற்கான அவசியமும் இல்லை... உங்க
ரெண்டு பேரையும் சேத்து வைக்கணும்னு நினைச்சவ
நான்... “ஆனால் நான் ஒரு உண்மையை சொலலும் போது
நீ அதை மறுத்து பேசினா எனக்குனு இல்ல எல்லாருக்குமே கோபம் வரும்” நீ இவ்வளவு கேட்டதுக்கு
அப்புறம் நான் சொல்லாம இருந்தா நான் ஏதோ பொய் சொல்றேன்னு நீ... நினைப்ப, அதனால நான் சொல்றேன்...” உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே ராம்
சார் மதுவை பொண்ணு கேட்டு அவங்க வட்டுக்கு போய்
இருக்காங்க, இது மதுவுக்கும் தெரியும்... அதற்கப்புறம்
அது ஏதோ காரணத்தினால் அந்த கல்யாண பேச்சு விட்டுப்போச்சு” அதற்கப்புறம் தான் உங்க கல்யாணம் நடந்தது இதப்பத்தி மது உன்கிட்ட ஏதாவது சொல்லி இருக்காளா?
இவ்வளவு நேரம் ப்ரீத்தி கூறியதை ஒருவித அலட்சியத்துடன் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணன்
கடைசியாக ராம் மதுவை பெண் கேட்ட விஷயத்தைப் பற்றி
கூறவும் அதிரச்சியுடன் சிலை என நின்றுவிட்டான்...
அந்த அதிர்ச்சி, மது தன்னிடம் இதை மறைத்து விட்டாள் என்பதினால் வந்த அதிர்ச்சி... தங்கள் இருவருக்கிடையிலும் எந்த ரகசியமும் இல்லை என
நினைத்துக் கொண்டிருக்க... யாரோ ஒருத்தி அதை பொய்யென கூறி இதோ இப்பொழுது அதை நிரூபித்தும் விட்டாள் என கலங்கி நின்றான்...
ப்ரீத்தி, என்ன கிருஷ் நான் சொல்றது சரிதானே?
கிருஷ்ணன் எதுவும் பேசாமல் அமைதியாக நிற்க
ப்ரீத்தி, நான் சொல்றது சரின்னு நீ இப்படி அமைதியா
நிற்கிறதிலேயே தெரியுது
சரி கிரிஷ் எனக்கு ரொம்ப நேரம் ஆயிடுச்சு நான் கிளம்புறேன் பாய்
கிருஷ்ணனுக்கு ப்ரீத்தி சென்றது கூட உறைக்கவில்லை
எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருந்தானோ அவனுக்கே
தெரியாது... மழை வந்து அவனை நனைத்த போது சுய
உணவர்டைந்து வீட்டிற்க்கு கிளம்பினான்... தீபிகாவும், ப்ரீத்தியும் திட்டமிட்டது போல் கிருஷ்ணனின் மனதை குழப்பி விட்டனர்...
இனி கிருஷ்ணன் மன முதிர்ச்சியுடன் சிந்தித்து இதற்கு
முற்றுப்புள்ளி வைப்பானோ... அல்லது “காதல் எவ்வளவு
பெரிய அறிவாளியும் சிறுபிள்ளை ஆக்குவது போல்”
கிருஷ்ணனும் சிறுபிள்ளையாக சிந்திப்பானோ ...!
தொடரும்...
By
J.Gomathy
இதுவரைக்கும் Scribdல் படித்தேன்
Document title Ve -22. Ve - 23 என்று இருக்கிறது... அதற்குமேல் இந்த கதை கிடைக்கவில்லை...
ரைட்டர் பெயரில் பலபேர் இருப்பதால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை...
யாராவது இந்த கதையை படித்திருந்தால் கதையின் பெயரை சொல்லவும்.....
நன்றி
Jairockerszx- புதியவர்
- பதிவுகள் : 5
இணைந்தது : 02/07/2020
Re: நாவல் பெயர்...??
ஏன் இந்த அவசரம்?
அங்கேயே நாவலாசிரியரின் பெயரும்,நாவலின் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறதே!
அங்கேயே நாவலாசிரியரின் பெயரும்,நாவலின் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறதே!
Guest- Guest
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மொழி மாற்று நாவல் பெயர் தெரிந்தால் குறிப்பிடவும்
» நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» சுஜா சந்திரன் நாவல் முரண் கவிதை நீயடி(டா) நாவல் வேண்டும்
» நூலின் பெயர்:அவ்வுலகம்.நாவல் ஆசிரியர்:டாக்டர் வெ.இறையன்பு.மதிப்புரை:முனைவர் ச.சந்திரா
» இணையத்தில் இரவி கட்டுரையாளர்:முனைவர் ச.சந்திரா
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» சுஜா சந்திரன் நாவல் முரண் கவிதை நீயடி(டா) நாவல் வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|