ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Go down

சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Empty சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Post by ayyasamy ram Sun May 02, 2021 7:54 am

சிறப்புமிக்க சிகாகோ பேச்சு E_1362392644
-
அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் 1893 செப்டம்பர் 11 ஆம் நாள் நடைபெற்ற “சர்வ சமயப் பேரவை’யில் விவேகானந்தர் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு, அவரது விவேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே!
இதயம் கனிந்த உங்கள் வரவேற்புக்கு பதிலளிப்பதற்கு, இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்.
என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதை வெளியிடுவதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த சந்நியாசிகள் பரம்பரையின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அனைத்து மதங்களின் தாய் மதமாகிய இந்துமதத்தின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் எனக்கு முன்பு சொற்பொழிவாளர்கள் பேசினார்கள். அவர்களில் சிலர், கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, “மற்ற மதங்களை வெறுக்காத பண்பைப் பல நாடுகளுக்கும் எடுத்துச் சென்ற பெருமை தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து வந்திருக்கும் இவர்களையே சேரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள், அவர்களுக்கும் என் நன்றி.
பிற மதக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரண்டு பண்புகளை உலகத்திற்கு வழங்கிய ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
“எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும்’ என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, “எல்லா மதங்களும் உண்மை’ என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
உலகிலுள்ள எல்லா நாடுகளாலும் எல்லா மதங்களாலும் கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தங்கள் நாட்டைவிட்டு துரத்தப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
ரோமானிய மக்களின் கொடுமையால், இஸ்ரேல் மக்களின் திருக்கோயில் சிதைந்து சீரழிந்தது. அப்போது எஞ்சியிருந்த இஸ்ரேல் மக்கள், அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அவ்விதம் எங்களிடம் தஞ்சமடைந்த இஸ்ரேல் மக்களை, மனதார ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன்.
பெருமை மிக்க ஜொராஷ்டிரிய மதத்தைச் சேர்ந்தவர்களில் எஞ்சியிருந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்து, இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சிறப்புமிக்க சிகாகோ பேச்சு Empty Re: சிறப்புமிக்க சிகாகோ பேச்சு

Post by ayyasamy ram Sun May 02, 2021 7:55 am

என் சகோதரர்களே! கோடிக்கணக்கான இந்திய மக்கள் நாள் தோறும், இன்றும் தொடர்ந்து ஒரு துதிப்பாடலைச் சொல்லி வருகிறார்கள். நான் என் சிறுவயதிலிருந்து சொல்லி வரும் அந்தத் துதிப்பாடலின் சில வரிகளை, இங்கு உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்:
“பல்வேறு ஆறுகள், பல்வேறு இடங்களில் தோன்றினாலும் முடிவில் அவை ஒரே கடலில் சென்று கலக்கின்றன. அதுபோல், பலவிதமான மனப்பான்மை கொண்டவர்கள் பின்பற்றும் வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோற்றம் அளித்தாலும் இறைவா, முடிவில் அவை உன்னிடமே அழைத்துச் செல்கின்றன.’
இந்தப் பேரவை, இது வரையில் நடந்த மாநாடுகளில் மிகவும் சிறந்தது. இந்த மாநாடு கீதையில் சொல்லப்பட்டிருக்கும் பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்திருக்கிறது:
“யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான் வழிநடத்துகிறேன். மனிதர்கள் எப்போதும் என்னுடைய வழியையே பின்பற்றுகிறார்கள்.’
மத வேறுபாடுகளாலும், மதக்கொள்கைகளில் அளவுக்கு மீறிய பிடிவாதத்தாலும் ஏற்பட்ட மதவெறி, இந்த அழகான இறுக்கிப் பிடித்திருக்கிறது. அவை இந்தப் பூமியை வன்முறையால் நிரப்பியிருக்கிறது.
இது போன்ற வன்முறைகள் உலகத்தை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்தது. அது நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டது. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாமல் இருந்திருந்தால் மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயர்ந்த நிலை அடைந்திருக்கும்.
இத்தகைய கொடிய செயல்களுக்கு இப்போது அழிவு காலம் வந்துவிட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிடுவதற்கு மணியோசை முழங்கியது. அந்த மணியோசை எல்லா மதவெறிகளுக்கும் வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும் மக்களிடம் நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுவாமி கமலாத்மானந்தர்
-குமுதம் பக்தி 1-3-2013
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum