ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுசேதா கிருபளானி 10

2 posters

Go down

சுசேதா கிருபளானி 10 Empty சுசேதா கிருபளானி 10

Post by ayyasamy ram Fri Apr 30, 2021 6:08 am

சுசேதா கிருபளானி 10 200397
-

சுதந்திரப் போராட்ட வீராங்கனையும் இந்தியாவின் முதல்
பெண் முதலமைச்சருமான சுசேதா கிருபளானி
(Sucheta Kriplani) பிறந்த தினம் (ஜூன் 25).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஹரியானா மாநிலம் (அன்றைய பஞ்சாப்) அம்பாலாவில் வ
ங்காளக் குடும்பத்தில் பிறந்தவர் (1908). பள்ளிப் படிப்புக்குப்
பின்னர், இந்திரபிரஸ்தா கல்லூரியிலும் பின்னர் செயின்ட்
ஸ்டீஃபன் கல்லூரியிலும் பயின்றார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச்
சேர்ந்தார்.

* மகாத்மா காந்தியின் கொள்கை களால் கவரப்பட்ட இவர்,
அவரைத் தன் வழிகாட்டியாக ஏற்றார். 1936-ல் பிரபல சமூக
சீர்திருத்தவாதியும், சோசலிசத் தலைவரும் விடுதலைப்
போராட்ட வீரருமான ஆசார்ய கிருபளானியைத் திருமணம்
செய்துகொண்டார். இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

* ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் பங்கேற்ற
முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தானும்
சிறை சென்றால் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்த
முடியாது என்பதால், அகில இந்திய மகிளா காங்கிரசை
ஆரம்பித்தார்.

போலீசாரிடமிருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்து கொண்டே
போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்தி வந்தார்.

* இதற்காக ரகசிய தன்னார்வப் படையை உருவாக்கினார்.
பெண்களுக்கு சிலம்பாட்டம், முதலுதவிப் பயிற்சி,
ஆபத்துகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான
ஆயுதப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் அளித்தார்.
சிறைசென்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு
ஆதரவும், உதவியும் வழங்கும் பொறுப்பையும் ஏற்றார்.

* காந்திஜியின் ஆலோசனைப்படி 1946-ல் கஸ்தூரிபாய் காந்தி
தேசிய நினைவு அறக்கட்டளையின் அமைப்புச் செயலாளராக
நியமிக்கப்பட்டார்.

இதன் பல்வேறு பணிகளுக்காக அதன் செயலாளரான
தக்கர் பாபாவுடன் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
1947-ல் சுதந்திர தினத்தன்று அரசியலமைப்பு அவையின் அமர்வில்
வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.

* நாடு விடுதலை அடைந்த சமயத்தில் நடைபெற்ற பிரிவினைக்
கலவரங்களின்போது காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி
யாத்திரையில் அவருடன் பங்கேற்றார். வன்முறைகளால்
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தாயாக இருந்து உதவினார்.

* அரசியல் அமைப்பு மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்
பட் டார். ஐக்கிய நாடுகளின் சபைக்கான இந்தியப் பிரதிநிதியாகவும்
செயல்பட்டார். 1952-ல் ஆசார்ய கிருபளானி காங்கிரஸ் தலை மைப்
பொறுப்பிலிருந்து விலகி கிருஷக் மஸ்தூர் பிரஜா கட்சியைத்
தொடங்கினார்.

* அப்போது நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய-சீன யுத்தத்துக்குப்
பிறகு அகதிகளாக வந்த திபெத்தியர்களின் மறுவாழ்வுக்கான
முனைப்புகளில் தீவிரமாகப் பங்கேற்றார்.

1960 முதல் 1963 வரை உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும்
தொழிலாளர், சமூக அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்
திறம்பட செயல்பட்டார்.
1963-ல் உத்தரப்பிரதேச முதலமைச்சராகப் பதவி ஏற்றார்.

* இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற
பெருமை பெற்றார். பல்வேறு பிரச்சினைகளை தனது நிர்வாகத் திறன்
மூலம் அபாரமாகக் கையாண்டார். குறிப்பாக 62 நாட்கள் நடைபெற்ற
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை சுமூகமாகத்
தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

* ஏழைகள், பெண்கள், விவசாயிகளின் முன்னேற்றத்தை எப்போதும்
முன்னுரிமையாகக் கொண்டு செயல்பட்டவர். இந்திய அரசியல்
வரலாற்றின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமைகளுள் ஒருவராகப்
போற்றப்படும் சுசேதா கிருபளானி, 1974-ம் ஆண்டு 66-வது வயதில்
மறைந்தார்.

ராஜலட்சுமி சிவலிங்கம்
-இந்து தமிழ் திசை
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

சுசேதா கிருபளானி 10 Empty Re: சுசேதா கிருபளானி 10

Post by Dr.S.Soundarapandian Sat May 01, 2021 1:40 pm

சும்மா வந்ததல்ல சுதந்திரம்!

வெள்ளையருக்கு வால் பிடித்த கும்பல் ஒன்றும் அந்நேரம் இருந்தது என்பதையும் நாம் மறக்கக் கூடாது!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum