புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
7 Posts - 5%
viyasan
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_m10ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 7 Dec 2021 - 7:45

ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்தது சாதனையே! Tamil_News_large_2907316
கடந்த நவம்பர் 24-ல் வெளியான தேசிய குடும்ப, சுகாதார ஆய்வு 5-ல், இந்தியாவில் முதல் முறையாக, ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியிருக்கிறது. இப்போது 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் உள்ளனர். 2005- - 06-ல் நடத்தப்பட்ட 3-வது ஆய்வில் 1,000 ஆண்களுக்கு 1,000 பெண்களும், 2015- - 16-ல் நடத்தப்பட்ட 4-வது ஆய்வில் 1,000ஆண்களுக்கு 991 பெண்களும் இருந்தனர்.



சமூக நீதி



ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு சிறந்த ஆட்சித் தலைமை, வெளிப்படையான, சுதந்திரமான, ஊழலற்ற நிர்வாகம், ஜனநாயகம், திட்டமிடல், சிறப்பான உள்கட்டமைப்பு, மனிதவளத்தை மேம்படுத்துதல், சமூக நீதி என்று பல்வேறு அம்சங்கள் தேவை. இத்தனையும் இருந்தாலும் ஒரு நாட்டின் வளர்ச்சியில், மக்கள் தொகையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை சற்றேனும் அதிகமாக இல்லாவிட்டால், அந்நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும். இதை நன்கு உணர்ந்தவர் பிரதமர் மோடி. அதனால் தான், 2001-ல் குஜராத் முதல்வரானதில் இருந்து பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பல முயற்சிகளை மேற்கொண்டார். பிரதமரானவுடன் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் பலனாக, பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குடும்பம், நிறுவனங்களின் உயர் பதவிகள், அமைச்சர்கள் பதவி வரை அனைத்திலும், பெண்களுக்கான பங்களிப்பை உறுதி செய்ய, இந்த ஏழு ஆண்டுகளில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.செல்வமகள் சேமிப்பு திட்டம், உயர்கல்வி நிறுவனங்களில் சேர மாணவியருக்கு பயிற்சி அளிக்க சிறப்பு திட்டம், 'பேட்டி பச்சாவ் -- பேட்டி படாவ்' என்ற, பெண் குழந்தைகளை காப்போம்; -பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் என்ற திட்டம். பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் மகிளா சக்தி கேந்திரா திட்டம், உழைக்கும் பெண்களுக்கான விடுதி திட்டம் என்று பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு, சுய மேம்பாடு, சுய கவுரவத்திற்கான பல திட்டங்கள், முயற்சிகளை பட்டியலிட்டபடி சொல்லலாம். அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டம் வாயிலாக, பெண்களின் சேமிப்பு அதிகரித்து, அவர்களின் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டுள்ளது. முத்ரா வங்கி திட்டத்தின் வாயிலாகவும், பல லட்சம் பெண்கள் தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.
தேசிய குடும்ப, சுகாதார ஆய்வு 5-ன் முடிவுகள், மிகுந்த நம்பிக்கை அளிக்கின்றன. அதன்படி, 88.6 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் பிறந்துள்ளன. 2015 - -16-ல் இது 78.9 சதவீதமாக இருந்தது. பிரசவத்தின் போது தாயும், சேயும் உயிரிழப்பது குறைந்துள்ளது; பெண்களின் பிரசவமும் சுகமாகியுள்ளது.தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம், பீஹார், கோவா, ஹிமாச்சல பிரதேசம், லட்சத்தீவு, தெலுங்கானா, மேற்குவங்கம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், புதுச்சேரி, வடகிழக்கு மாநிலங்கள் என்று பெரும்பாலான மாநிலங்களில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

குஜராத், மஹாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில், பெண்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.'மகளுடன் செல்பி' என்ற இயக்கத்தை, பிரதமர் மோடி அறிவித்தார். இதிலென்ன புதுமை, இதனால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது என்று பலரும் நினைத்தனர். ஆனால், இது மக்களிடம் பெரும் தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது.



ஏமாற்றம்

கூலி தொழிலாளர்கள் முதல் பெரு முதலாளிகள் வரை அனைத்து தரப்பினரும், தங்கள் மகளுடன் செல்பி எடுத்து முகநுால், 'டுவிட்டர், இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். அப்போது பெண் குழந்தைகள் இல்லாதவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். அவர்களில் நானும் ஒருத்தி. கட்சியில் என் சகாக்களும், நண்பர்களும், மகளுடன் செல்பி எடுத்து பகிர்ந்தனர். இரு ஆண் குழந்தைகளுக்கு தாயான நான், பெண் குழந்தை இல்லையே என்று வருத்தம் அடைந்தேன். இப்படி கோடிக்கணக்கான இந்தியர்கள், மன வருத்தம் அடைந்திருப்பர். இதுதான் இந்த, 'மகளுடன் செல்பி' இயக்கத்தின் வெற்றி. பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகள் வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தியது. சமீப ஆண்டுகளில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற திட்டம் இதுவாகவே இருக்கும். பெண்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடையாக இருப்பது, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவது தான்.'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம்' என்ற திட்டம் வாயிலாக, இந்நிலை மாற்றப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் பள்ளி களில் சேருவது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.



பல்வேறு திட்டங்கள்

இது போன்ற திட்டங்களால் 10, 12-ம் வகுப்பு களில் தேர்ச்சி பெறும் பெண்களின் எண்ணிக்கையும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் பெண்களின் எண்ணிக்கையும், கடந்த சில ஆண்டுகளாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.பெண்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் மோடி, தன் அமைச்சரவையில் 11 பெண்களுக்கு வாய்ப்புஅளித்துள்ளார். சுதந்திர இந்தியாவில் அதிகமான பெண்கள், மத்திய அமைச்சரவையில் இருப்பது இதுவே முதல் முறை.

பெண்களை அதிகமாக மத்திய அமைச்சர்களாக பார்ப்பது, கோடிக்கணக்கான இந்திய பெண்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது.எல்லை பாதுகாப்பு படை, தேசிய பாதுகாப்பு அகாடமி போன்ற ஆயுத படைகளில் பெண்களுக்கு மோடி அரசு வாய்ப்பு அளித்துள்ளது. இந்த ஏழு ஆண்டுகளில் பெண்கள் போர் விமானிகள் ஆகியுள்ளனர். குடியரசு தின அணிவகுப்பில் பெண் அதிகாரிகள் பெருமைப்படுத்தப்படுகின்றனர்.ஒரு பெண் கல்வி பெற்று, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோராக மாறி சுய கவுரவத்துடன் வாழ்வது, ஒரு குடும்பத்தையும், அதன் வாயிலாக சமுதாயத்தையும், நாட்டையும் மேம்படுத்தும்.
அதனால் தான், பிரசவம், குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு, பள்ளியில் சேர்த்தல், உயர் கல்வி பெறுதல், வேலைவாய்ப்புகளை வழங்குதல், தொழில் முனைவோராக மாற்றுதல் என்று பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மோடி அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு நாம் எதிர்பார்த்ததை விட வெற்றி கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வரும் காலங்களில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். ஆண்களுக்கு இணையாக அல்ல, அவர்களுக்கும் உதவும் வகையில் அவர்களை விட ஒருபடி மேலே பெண்கள் முன்னேற்றம் அடைவர் என்பதில் சந்தேகம் இல்லை.
வானதி சீனிவாசன் , தமிழக எம்.எல்.ஏ., மற்றும் பா.ஜ., மகளிர் அணி தேசிய தலைவர்

தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக