புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
46 Posts - 71%
heezulia
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
5 Posts - 8%
dhilipdsp
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
3 Posts - 5%
D. sivatharan
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%
Guna.D
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
41 Posts - 72%
dhilipdsp
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
3 Posts - 5%
heezulia
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
2 Posts - 4%
Guna.D
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_m10பி. பி. ஸ்ரீனிவாஸ் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பி. பி. ஸ்ரீனிவாஸ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 14, 2021 12:44 pm

பி. பி. ஸ்ரீனிவாஸ் PB_Sreenivas
-
பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். தன்னுடைய வசீகரப் பாடல் வரிகளில் இனிமையைக் கூட்டி, ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, உருது, ஆங்கிலம் என 12 மொழிகளில் சுமார் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். அந்தக் காலத்தில் தன்னுடைய இனிமையான குரலால், காலத்தால் அழியாத எண்ணற்றப் பாடல்களைப் பாடி, தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அற்புதக் கலைஞர் ஆவார். தமிழில் அவர் பாடிய ‘காலங்களில் அவள் வசந்தம்’, ‘மயக்கமா கலக்கமா’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ போன்ற பாடல்கள் மறக்க முடியாதவையாகும். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வந்த பி.பி. ஸ்ரீனிவாஸின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 22, 1930

இடம்: காக்கிநாட, ஆந்திரப்பிரதேசம் மாநிலம், இந்தியா

பணி: திரைப்படப் பின்னணி பாடகர்  

இறப்பு: ஏப்ரல் 14, 2013

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 1930  ஆம் ஆண்டு செப்டம்பர் 10  ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்திலுள்ள “காக்கிநாடா” என்ற இடத்தில் பனிந்திர சுவாமி என்பவருக்கு, கிரியாம்மாவிற்கும் மகனாக ஒரு பிராமணக் குடும்பதில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய தாய் ஒரு இசை ஆர்வலராக இருந்தமையால், அதன் தாக்கம் அப்படியே இவரையும் இசையில் ஈடுபடவைத்தது. ஆனால் இவருடைய பெற்றோர்கள் இவரை ஒரு அரசு பணியாளராக்க விரும்பி, இவரை பி. காம் படிக்க வைத்தனர். பின்னர் இளங்கலையில் பட்டம் பெற்ற அவரை ஒரு வழக்கறிஞராக்க வேண்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சேர்த்தனர். ஆனால், இசையில் அவருக்கு இருந்த ஆர்வமும் ஈடுபாடும் அவரை இசைத் துறைக்கே கொண்டுவந்து சேர்த்தது.

திரைப்படப் பின்னணிப் பாடகராக அவரின் பயணம்

சட்டக்கல்விப் பயில்வதை விடுத்து, இசைத்துறையினைத் தேர்வுசெய்த அவர், முறையாக சங்கீதம் பயின்று 1951 ஆம் ஆண்டு சினிமா துறையில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். ஜெமினி தயாரித்து 1951 ஆம் ஆண்டு வெளிவந்த “மிஸ்டர் பாரத்” என்ற இந்தித் திரைப்படத்தில் “கனஹிபரது” என்ற பாடலை முதன் முதலில் பாடினார். பிறகு, தமிழில் ‘ஜாதகம்’ என்ற திரைப்படத்தில் “சிந்தனை செய் செல்வமே” என்ற பாடலின் மூலம் அறிமுகமான அவர், பாசமலரில் “யார் யார் யார் இவர் யாரோ”, பாவ மன்னிப்பில் “காலங்களில் அவள் வசந்தம்”, எதிர்நீச்சலில் “தாமரைக் கன்னங்கள், தேன்மலர் கிண்ணங்கள்”, மோட்டார் சுந்தரம் பிள்ளையில் “காத்திருந்த கண்களே”, அடுத்த வீட்டுப் பெண்ணில் “கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே” மேலும் “மயக்கமா?கலக்கமா? மனதிலே குழப்பமா?”, “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை”, “ரோஜா மலரே ராஜ குமாரி”, போன்ற மனதை உருக்கும் பாடல்களைப் பாடி, அழியா புகழ்பெற்றார். சுசிலா, ஜானகி, பானுமதி, எல். ஆர். ஈஸ்வரி, லதா மங்கேஷ்கர் போன்றவர்களுடன் இணைந்து பாடியுள்ள அவர், தொடர்ந்து சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, நாகேஷ் போன்ற தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களுக்குப் பின்னணிக் குரல் பாடியுள்ளார். கர்நாடக இசை மட்டுமல்லாமல், இந்துஸ்தானி இசையிலும் வட இந்தியப் பாடகருக்கு நிகராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் எனப் பல மொழிகளில் பாடி, சிறந்த பின்னணிப் பாடகராக முத்திரைப் பதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், “கஸல்” பாடல்களை அழகாகப் பாடுவதில் பெயர்பெற்று விளங்கினார்.

காலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்:

‘காலங்களில் அவள் வசந்தம்’ (பாவமன்னிப்பு), ‘காத்திருந்த கண்களே’ (மோட்டார் சுந்தரம் பிள்ளை), ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ (ராமு), ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா’ (வீரபாண்டிய கட்டபொம்மன்), ‘கண்ணாலே பேசி பேசி கொள்ளாதே’ (அடுத்த வீட்டுப் பெண்), ‘என்னருகே நீ இருந்தால்’ (திருடாதே), ‘விஸ்வனாதன் வேலை வேண்டும்’, ‘உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா’, மற்றும் ‘அனுபவம் புதுமை’ (காதலிக்க நேரமில்லை), ‘கண்ணிரண்டு மெல்ல மெல்ல’ (ஆனவன் கட்டளை), ‘மயக்கமா கலக்கமா’ (சுமைதாங்கி), ‘நேற்றுவரை நீ யாரோ’ (வாழ்க்கை படகு), ‘பார்த்தேன் சிரித்தேன்’ (வீர அபிமன்யூ), ‘நெஞ்சம் மறப்பதில்லை’ (நெஞ்சம் மறப்பதில்லை), ‘பால் வண்ணம் பருவம் கண்டேன்’ (பாசம்), ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ (நெஞ்சில் ஒரு ஆலயம்), ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ (போலீஸ்காரன் மகள்), ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ (வீரத்திருமகன்), ‘பொன் ஒன்று கண்டேன்’ (படித்தால் மட்டும் போதுமா), ‘ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்’ (ஊட்டி வரை உறவு), ‘வளர்ந்த கலை மறந்துவிட்டால்’ (காத்திருந்த கண்கள்), ‘அவள் பறந்து போனாலே’ (பார் மகளே பார்), ‘தாமரைக் கன்னங்கள்’ தேன்மலர் கிண்ணங்கள் (எதிர்நீச்சல்), ‘ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்’ (சாரதா) போன்ற பாடல்கள் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்க இடம்பிடித்துள்ளன.

விருதுககளும் மரியாதைகளும்

சினிமாவில் இவருடைய கலை சேவையைப் பாராட்டி, தமிழக அரசு ‘கலைமாமணி விருது’ வழங்கி கௌரவித்தது.
கர்நாடக அரசின் மதிப்புமிக்க ‘கன்னட ராஜ்யோத்சவா விருது’ வழங்கப்பட்டது.
‘டாக்டர் ராஜ்குமார் சௌஹர்தா’ விருது.
கேரளா அரசின் விருது
இறப்பு

தன்னுடைய வித்தியாசமான குரலால் இசை ரசிகர்களை தன்வசப்படுத்திய பி. பி. ஸ்ரீனிவாஸ் அவர்கள், 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் தன்னுடைய 82 வது வயதில் சென்னையில் காலமானார். அவருடைய உயிர் இவ்வுலகை விட்டு மறைந்தாலும், அவர் பாடிய பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
நன்றி-
இட்ஸ் தமிழ்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Apr 14, 2021 1:21 pm

பாகேஸ்ரீ - சீனிவாசின் குரலுக்கு மிகப் பொருத்தமான இராகம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக