புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_lcapமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_voting_barமனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 26, 2021 6:12 am


எல்லா மனிதர்களும் ஆசைகளால் நிரம்பியவர்களே. அவர்களது வாழ்க்கை ஆசைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதனுடைய சங்கல்பம் ஆசையால் ஆக்கப்பட்டிருக்கிறது. அவனது தேவைகளும் ஆசைகளே. இடைவிடாமல் விழிப்போடு இருந்து, சீராக அவற்றை விலக்கிக் கொண்டிருந்தால்தான் அவன் இந்த ஆசைகள் எல்லாவற்றிலிருந்தும் விடுபட முடியும்.
-
மனக்குறை நீக்கும் மகான்கள் - ஸ்ரீ அரவிந்த அன்னை 3
-
ஒவ்வொரு முறையும் உனக்கு படபடப்பு உணர்வோ அல்லது எரிச்சலோ வரும்போதும், ஒவ்வொரு முறையும் நீ கலக்கம் அடையும் போதும் அதற்குப் பின்னால் ஓர் ஆசை அங்கே பதுங்கிக் கொண்டிருக்கிறது என்பது நிச்சயம்.உண்மையான உணர்வின் அடையாளம், இறை உணர்வின் அடையாளம் பூரணமான சமத்துவம், இடையறாத அமைதி, இடைவிடாமல் உள்ள ஒரே சீரான நிலை ஆகியவை ஆகும்.

படபடப்பு, எரிச்சல், வருத்தம், உளச்சோர்வு, கலக்க உணர்வு முதலியவை எல்லாம் பௌதிக உணர்வைச் சேர்ந்தவை. பொய்மையை ஒழிக்க வேண்டுமானால் இவை எல்லாவற்றையும் வெல்ல வேண்டும்.
- அன்னை

அரவிந்தரைத் தொடர்ந்து பகவான் கிருஷ்ணர் நடப்பதைக் கண்டவுடன் மிராவுக்குள் ஆன்மிகப் பரவசம் கிளர்ந்தெழுந்தது. உள்ளம், உள்ளே... உள்ளே... என நகர்ந்து ஒரு சின்னப் புள்ளியாய் ஒடுங்கி அமர்ந்தது. எத்தனை எத்தனை யுகமாய் இடையறாது தவம் செய்தாலும் கிடைத்துவிட முடியாத பேரமைதி, இந்த தரிசனம் கிடைத்த  நொடிகளிலேயே வாய்த்தது.

‘அடடே... அரவிந்தர்தான் மகாப் பிரபு. அவர் வார்த்தைதான் வேதம். அவர் வழியில் செல்வதுதான் பிறவிக் கடலைக் கடக்கும் வழி’ -உதடு துடிக்கச் சொன்னார் மிரா.
1920 நவம்பர் 22ம் தேதி அன்னையை நிரந்தரமாகப் பாண்டிச்சேரியில் விட்டுவிட்டு பிரான்ஸ் திரும்பிய பால் ரிச்சர்ட், உலகில் பல பகுதிகளுக்கு சுற்றுப் பயணம் செய்தார். பாரதத்தின் ஆன்மிக வளம் அவரை வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவின் ஒவ்வொரு துகளிலும் ஆன்மிகம் நிரம்பித் ததும்புவதை அனுபவபூர்வமாக ரிச்சர்ட் உணர்ந்து கொண்டார்.

ஆன்மிகத்தில் அவருக்கு இருந்த அதீத ஈடுபாட்டின் காரணமாக நியூயார்க் நகரில் ‘ஆசிய பயிற்சி கேந்திரம்’ ஒன்றை நிறுவினார். அதன் மூலமாக பல சமூக சேவைகளைச் செய்தார். சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.பாண்டிச்சேரியில் அரவிந்தர் என்கிற அற்புத மகான் வசிக்கிறார் என்றும் அவரது யோகம் உலகம் முழுவதையும் ஆன்மிகத்தின் உச்சத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் ஒவ்வொரு சொற்பொழிவிலும் நெகிழ்ந்து சொன்னார். அவரோடு செலவழித்த தம் வாழ்வின் சில நாட்கள் தன் வாழ்நாளில் பெற்ற வரம் என்று குறிப்பிட்டார்.

அரவிந்தரை விட்டுவிட்டு வந்தது தான் எடுத்த தவறான முடிவு என்றும் தனக்கு அவ்வளவுதான் கொடுப்பினை என்றும் வருத்தப்பட்டார். மிரா உண்மையில் பேறு பெற்றவள் என்பது அவரது நிறைவான முடிவாக அமைந்தது. இதை எல்லாம் அரவிந்தரிடமும் கடிதங்கள் வாயிலாகவும் பகிர்ந்து கொண்டார். புயலைத் தொடர்ந்து மிரா அரவிந்தர் வசித்த வீட்டுக்கே வந்த பிறகு, அரவிந்தர் வசித்த அந்த மாளிகையின் தோற்றமே மாறிப் போனது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 26, 2021 6:13 am

சாதகர்கள் மனத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முயன்ற அளவுக்கு வீட்டின் அறைகளையோ தோட்டத்தையோ சுத்தமாக வைத்துக்கொள்ள முயலவில்லை. மிரா இதை முதலில் மாற்ற முயன்றார். சாதகர்களின் எல்லா அறைகளையும் தத்தா(டோரதி)வுடன் சேர்ந்து சுத்தம் செய்தார். ஆடைகள் அனைத்தையும் நன்றாகத் துவைத்து முறையாக மடித்து அலமாரிகளில் வைக்கப் பழகினார். புத்தகங்கள் அனைத்தும் அது அதற்கான இடங்களில் வரிசையாக அடுக்கப்பட்டன.

தோட்டங்கள் சீர் செய்யப்பட்டு பூச்செடிகள் நடப்பட்டன. ஒரு சில வாரங்களுக்கெல்லாம் அந்த இடமே அடியோடு மாறிவிட்டது. தோட்டத்தில் நடந்தால் வண்ணப் பூக்களின் வாசனை மனதை ஏகாந்தமாக்கியது. ஒவ்வொரு அங்குலத்திலும் சிரித்த தூய்மை உண்மையான ஆன்மிகம் எங்கிருந்து தொடங்குகிறது என்று சொல்லாமல் சொன்னது. எங்கும் அழகு, சுத்தம், நேர்த்தி தாண்டவமாடியது. அது ஒரு வீடு என்கிற தன்மையிலிருந்து மெல்ல நகர்ந்து ஆஸ்ரமத்திற்கான சூழ்நிலை அழகாய் உருவானது. அரவிந்தர் இந்த மாற்றத்தை முற்றிலும் விரும்பினார். ஆசீர்வதித்தார். நாளைய மாற்றம் அவர் கண்முன்னே தெரிந்தது.

தத்தா(டோரதி), மிராவிடம், ‘‘ஏன் மிரா தூய்மைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகிறாய்? இதில் ஏன் இத்தனை பிடிவாதம்?’’ என்று கேட்டார்.
அதற்கு மிரா, ‘‘குப்பையும் கூளமுமாக இருக்கும் இடத்தில் மனிதர்களாகிய நம்மாலே நிம்மதியாக இருக்க முடியாதபோது அந்த இடத்தில் கடவுள் எப்படி வசிக்க முடியும். முதலில் சுற்றுப்புறம் தூய்மையானால்தான் மனத்தூய்மை மலரும்!’’ என்றார், புன்னகையோடு.

அரவிந்தரின் வீட்டுக்கு வந்த பின்னர், வ.வேசு ஐயர், அமிர்தா எனப் பலருடனும் பழகும் வாய்ப்பு மிராவுக்கு ஏற்பட்டது. மிராவின் தீர்க்கமான அறிவு அவர்களையும் ஈர்த்தது.ஒரு நாள் சாதகர்களோடு மிரா தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது சின்னதும் பெரியதுமாக கற்கள் வந்து விழுந்தன. யாராவது பிடிக்காதவர்கள் எறிகிறார்களா?சாதகர்கள் ஆசிரமத்தின் எல்லாப் பக்கமும் சென்று பார்த்தார்கள்.இல்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 26, 2021 6:13 am

வானத்திலிருந்து, வெட்ட வெளியில் இருந்து விழுகின்றன. அனைவருக்குள்ளும் அச்சம் எழுந்தது.அரவிந்தர் மிராவைப் பார்த்தார். அந்தப் பார்வையில் பிறந்த கட்டளையை உணர்ந்து கொண்ட மிரா, உடனே தன் அறைக்குள் சென்றார்.நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தவர், ‘இது யாருடைய வேலை?’ என தம் அற்புத சக்தியால் ஆராய்ந்தார்.ஆசிரமத்தில் வேலை செய்த ஒருவனின் ஏவல் வேலை இது என்பது புரிந்தது.

அவன் ஏன் இந்த தீய காரியத்தில் இறங்கினான்?

மிராவும் தத்தாவும் அரவிந்தர் இருந்த வீட்டிற்கே வந்த பிறகு, அவர்கள் இருவருக்கும் கிடைத்த மரியாதை, ஆசிரமத்தில் வேலை செய்த அந்தப் பணியாளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது.குறிப்பாக தத்தாவை வெகுவாக வெறுத்தான். அவர் சொல்லும் எந்த வேலையையும் செய்யாமல் அவமானப்படுத்தினான்.
இதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஆசிரமவாசிகள் விஷயத்தை அரவிந்தரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்கள். அவனது ஆணவத்தையும் திமிரையும் புரிந்துகொண்ட அரவிந்தர், அவனை ஆசிரமத்திலிருந்து வெளியேற்றினார்.

தனக்கு வேலை போகக் காரணம் மிராவும் தத்தாவும்தான் என முடிவுக்கு வந்தவன் அதே ஊரில் இருந்த ஒரு மந்திரவாதியை அணுகினான்.
‘‘என்ன செலவானாலும் பரவாயில்லை. அந்த ஆசிரமத்தில் அந்த வெளிநாட்டுப் பெண்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது. ஏதாவது செய்!’’ என்று சொல்லி மந்திரவாதியிடம் அடைக்கலமானான்.அதன் பிறகு நடப்பதுதான் இந்தக் கல்மழை.

எப்படி இது நிகழ்கிறது? தீய சக்திக்கு ஆசிரமத்தில் தொடர்பாக இருப்பது யார்? மிரா கூர்மையாக கவனித்தார்.மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுவனை அவர்கள் பயன்படுத்துவதையும் கண்டுபிடித்தார். உடனே அவனை ஆசிரமத்திலிருந்து அப்புறப்படுத்தினார்.
தன் தியான சக்தியால் தீய சக்திக்கு எதிரான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கினார்.

தீய சக்தியால் ஆசிரமத்தில் எதுவும் செய்ய முடியாமல், ஏவியவனின் மீதே அதன் ஆக்ரோஷத்தைக் காட்டியது.அவ்வளவுதான். அந்தப் பணியாள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானான். பயங்கரமான நோய் பீடித்தது.தப்பு செய்தவனுக்குத் தெரியாதா, இந்த தண்டனை ஏன் தனக்குக் கிடைத்ததென்று. உடனே ஆசிரமத்துக்கு ஓடோடி வந்தான். அரவிந்தரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். அவரும் கனிவோடு அவனை மன்னித்தார்.

அரவிந்தர் மன்னித்த பிறகு மிராவும் அவனை கனிவோடு பார்த்தார். அவனுக்காக தனது தியான சக்தியைப் பயன்படுத்தி, அவன் மீது பற்றியிருந்த தீய சக்தியை விலக்கினார். ஒருசில வாரங்களில் அவனது நோய் படிப்படியாக குணமடைந்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு ஆசிரமத்தில் அனைவரும் மிராவின் அற்புத ஆற்றலை உணர்ந்து கொண்டார்கள். மிராவை இன்னும் மிகுந்த மரியாதையோடு நடத்தினார்கள்.இந்தத் தருணத்தில்தான் அரவிந்தர் ஒரு முக்கியமான முடிவை எடுத்தார். அது மிரா தொடர்பானது. அது..?


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 26, 2021 6:13 am

அன்னையின் அற்புதம்

‘‘எனக்கு அம்மா இல்லை. அப்பாவும் அக்காவும்தான் உறவு. அக்காதான் அம்மாவின் இடத்திலிருந்து என்னைப் பார்த்துக்கொண்டாள். அப்பாவிடம் அவ்வளவாக ஒட்டுதல் இல்லை. அம்மா இல்லாததாலோ என்னவோ வாழ்க்கை அதன் போக்கில் போய்க் கொண்டிருந்தது. எனக்கான எல்லா தேவைகளும் ஒரு நீண்ட போராட்டத்திற்குப் பின்னால்தான் கிடைத்தது.

எல்லாம் 2003 ஏப்ரல் மாதம் வரைதான். இதற்குப் பிறகு உண்மையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் பொன்னான நாளானது என்பது சத்தியம். இதற்குக் காரணம் அரவிந்த அன்னை. நான் ஒரு நிறுவனத்தில் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். சம்பளமும் குறைவு. வேலைக்கான நல்ல அங்கீகாரமும் இல்லை. வருத்தத்தில் இருந்த என்னிடம் ஒரு சிறிய அன்னை படத்தை கொடுத்தாள் என் சகோதரி. எது வேண்டுமானாலும் அன்னையிடம் வேண்டிக்கொள். வேண்டியதை இவர் செய்வார் என்றாள்.

அக்கா சொன்னதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். உடனே எனக்கு தார்மீகமாக ஒரு பலம் உண்டானது. என்னுள் அன்னை வந்து அமர்ந்துகொண்டது போன்ற உணர்வு. விருப்பமில்லாமல் செய்து கொண்டிருந்த வேலையை உதறினேன்.ஒருநாள் போரூர் வழியாக பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது ராமச்சந்திரா மருத்துவமனையைப் பார்த்தேன். இது மாதிரி ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை செய்தால் நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன். அவ்வளவுதான்.

அடுத்த மூன்றாவது மாதமே அந்த மருத்துவமனையில் 8500 சம்பளத்தில் வேலை கிடைத்தது. அடுத்த சில ஆண்டுகளில் பதவி உயர்வும் தேடி வந்தது. என் வேலைக்குத்தகுந்த நல்ல சம்பளமும் அங்கீகாரமும் கொடுத்தார்கள். இப்போது வாழ்க்கை நிம்மதியாக நகர்கிறது. ஒவ்வொரு கணத்திலும் ஒவ்வொரு நிகழ்விலும் பெற்றவளைப் போல இருந்து காப்பாற்றுகிறார், அன்னை!’’ என்று நெகிழும் திருமலைச் செல்வி, சென்னையைச் சேர்ந்தவர். ராமச்சந்திரா மருத்துவமனையில் இப்போது இவர் பயோமெடிக்கல் என்ஜினியர்.

தாய் போல் காக்கும் அன்னை!

(பூ மலரும்)
=
நன்றி-குங்குமம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக