புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறப்புச் சடங்கில் புழங்கும் பொருட்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை பல்வேறு சடங்குகள் வளமும் நலமும் வேண்டி மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகையச் சடங்குகள் வாழ்வியல் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கு, பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, போன்றவை மங்கலச் சடங்குகள் என்றும் இறப்புச் சடங்கை அமங்கலச் சடங்கு என்றும் பகுத்துள்ளனர். சமுதாயத்தில் இறப்பு என்பது ஒரு துக்க நிகழ்ச்சியாகவும், இறப்பு நடந்த வீட்டார் தீட்டுப்பட்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். இத்தீட்டினைச் சடங்குகளால் மட்டுமே போக்க முடியும் என்ற நம்பிக்கையில் பல்வேறு செயல்பாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. இச்சடங்குகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள் புனிதத் தன்மை வாய்ந்தவையாகவும் தனித்த அர்த்தமுடையவையாகவும் கருதப்படுகின்றன. இக் கட்டுரை மள்ளர் இன மக்களின் இறப்புச் சடங்கில் முக்கிய இடம் பெறும் புழங்கு பெருட்களின் செயல்பாடுகளை களப்பணியின் வழிப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் விளக்க முற்படுகின்றது.
நெல் - பயன்பாடு:
இறந்தவரைக் குளிப்பாட்டி நற்காலியில் அமரவைத்த பின்னர் பிணத்திற்கு முன்பாக இடப்புறம் நிறை மரக்கால் நெல்லும் வலப்புறம் படி நிறைய நெல்லும் வைத்து வழிபடுகின்றனர். ஊர் மக்கள் சிறிய நார்ப் பெட்டியில் நெல்லைக் கொண்டு வந்து பிணத்தின் கால் பகுதியில் குவித்து வைத்து வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டு வருதலைப் ஊர்ப் பச்சை கொண்டு வருதல் என்கின்றனர். (தகவல் - பத்மாவதி - 63 - K. இராமநாதபுரம்) பிற ஊர்களில் இருந்து உறவினர்கள் நெல் கொண்டு வந்து கால் மாட்டில் குவித்து வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டு வருதலைப் பச்சை கொண்டு வருதல் என்கின்றனர்.
பிறந்த வீட்டுக் கோடி கொண்டு வருதல் என்னும் சடங்கின் போது உறவினர்களால் நெல், சியக்காய், சிறிதளவுத் தண்ணீர், கோடித் துணி போன்றவை இறந்தவரின் பிறந்த ஊரிலிருந்து உறவினர்களால் கொண்டுவரப்படுகின்றது. நெல்லை மட்டும் கால் மாட்டில் குவித்து வைத்து வணங்குகின்றனர். (தகவல் - கர்ணன் - 45 - முருகன்பட்டி)
நீர்மாலை எடுத்துவந்த நீரில் பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் வீட்டு வாசலில் பச்சைப் பந்தலின் கீழ் அமரவைத்து சிதேவி வாங்கும் சடங்கு நடத்தப்படுகின்றது. நிறை மரக்கால் நெல்லின் மீது மாட விளக்கை கையில் ஏந்தியபடி இறந்தவரின் மகனும் படி நிறைய நெல்லை ஏந்திய படி மருமகளும் பச்சைப் பந்தலை மூன்று முறைச் சுற்றி வந்து பிணத்தின் முன்பாக வைத்து வணங்குகின்றனர். பின்னர் பசுஞ்சாணியை நெல்லில் தொய்த்து உருண்டை பிடித்து பிணத்தின் கையில் வைத்து "மூதேவி போயி சிதேவி வா" என மூன்று முறைக் கூறியபடியே மருமகளின் முந்தானையில் போடப்படுகின்றது (தகவல் - பழனியம்மாள் - 55 - K. இராமநாதபுரம்) இவ்வாறுசெய்வதால் இறந்தவரின் வளமை முழுவதும் மருமக்களுக்கு வந்து விடுவதாக நம்புகின்றனர். பின்னர் சாணி உருண்டையை பிணம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரில் அப்பி வைக்கின்றனர். கருமாதிச் சடங்கு நடைபெறும் நாள் வரைத் தினந்தோறும் நீர்த் தெளித்து அதனைப் பாதுகாக்கின்றனர். சாணியில் வளரும் நெல்லின் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர்.
சுடுகாட்டில் பிணத்தைப் படுக்கவைத்து மஞ்சள் தொய்த்த பச்சரிசியை "சொக்கஞ்சோறு, வைகுண்டஞ்சோறு, கைலாசஞ்சோறு" என மூன்று முறைக் கூறிய படியே பிணத்தின் வாயில் மூன்று முறைப் போடுகின்றனர். இதனை வாய்க்கரிசி போடுதல் என்கின்றனர். (தகவல் - வேலுச்சாமி - 65 முருகன்பட்டி) இவ்வாறு வாய்க்கரிசி போடுதலை இறந்தவருக்குப் போடும் கடைசி உணவு என்று கூறுகின்றனர்.
இறந்தவருக்குச் செம்புத் தண்ணீர் வைத்து மாரடித்து அழும் போதும் கருமாதியன்று பச்சைப்பந்தலைச் சுற்றி மாரடித்து அழும் போதும் மாரடித்து அழும் பெண்களுக்கு நீரில் ஊற வைத்த பச்சரிசியுடன் உப்பில்லாது அவித்த மொச்சை கலந்து உண்ணக் கொடுக்கின்றனர் "மாரடித்தவர்களுக்கு மடியில பச்ச" என்னும் பழமொழி வழக்கில் உள்ளது.
குழி மொழுகுதல் சடங்கின் பொழுது இறந்தவரைப் புதைத்த குழிமேட்டை நீர்த் தெளித்து மொழுகுகின்றனர். பின்னர் குழிமேட்டின் தலைப் பகுதியில் சிறிது பால் ஊற்றிவிட்டு அவ்விடத்தில் நெல்லைத் தூவிவிட்டும் பிரண்டைச் செடியையும் பதிக்கின்றனர். நெல் முளைக்கும் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர். இச் சடங்கை ஆண்கள் செய்கின்றனர்.
"இறந்தவரைப் புதைத்தல் சடங்கு முறை வேளாண் நாகரிகத்தோடு உருவானதாகும். புதைத்தல் என்பது விதைகளை மண்ணுக்குள் புதைத்தல் என்பதற்கு இணையானதாகும். விதை முளைப்பது போன்று இறந்தவரும் மறுஉயிர் பெறுகிறார்" என்ற (பக்தவச்சல பாரதி - தமிழர் மானிடவியல் ப.211) கருத்து இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும்
செம்பு - பயன்பாடு:
செம்பு என்னும் புழங்கு பொருள் நீர் அருந்தப் பயன்படுத்தும் உலோகப் பாத்திரம் ஆகும். இறந்தவரின் வீட்டிற்கு உறவினர்களால் கொண்டுவரப்படும் பொருட்களுள் செம்பு முக்கிய இடம் பெறுகின்றது.
நீர் மாலை எடுத்து வரும் சடங்கில் பிணத்தைக் குளிப்பாட்டுவதற்காக செம்பு, குடம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீர் நிலைக்குச் செல்கின்றனர். நீர் நிரப்பிய செம்பு, குடம் போன்றவற்றின் கழுத்துப் பகுதியில் கதம்ப மாலை சுற்றப்படுகின்றது. நீரின் மேலாக கதம்பப் பூக்களும், திருநீறும் போடப்படுகின்றது. இதனால் நீர்மாலை நீரும், செம்பும் புனிதமாக மாற்றப்படுவதாகக் கூறுகின்றனர். தெய்வ நிலையை அடைந்துவிட்ட பிணத்தைக் குளிப்பாட்டக் கொண்டு வரப்படும் புனித நீரைக் கொண்டு வரப் பயன்படும் பாத்திரங்களாகச் செம்பும், குடமும் காணப்படுகின்றன.
செம்புத் தண்ணீர் வைத்து அழும் சடங்கை கருமாதி நடைபெறும் நாள் வரைச் செய்கின்றனர். பிணத்தை வைத்திருந்த இடத்தில் மணலைப் பரப்பி அதன்மீது செம்பு நிறைய நீர் வைத்துப் பெண்கள் அழுகின்றனர். செம்பில் வைக்கப்பட்ட நீரை இறந்தவர் மண்டியிட்டு குடிப்பார் என்றும் அதற்கு அடையாளமாக செம்பில் வைக்கப்பட்ட நீர் சிறிது குறைந்தும் பரப்பி வைக்கப்பட்ட மணலில் இறந்தவரின் கை ரேகை பதிந்துவிடும் என நம்பிக்கைத் தெரிவித்தனர்.
இச்சடங்கின் மூலம் தெய்வநிலையடைந்து விட்ட இறந்தவரின் ஆவிக்கு, தாகத்திற்குத் தண்ணீர் கொடுக்கப் பயன்படும் புனிதப் பாத்திரமாகச் செம்பு மதிக்கப்படுகின்றது. செம்பில் மீதமிருக்கும் நீரை சுவரில் அப்பி இருக்கும் சாணியின் மீது தெளிக்கின்றனர். அதிலும் எஞ்சிய நீரை வீட்டின் வெளியே ஊற்றுகின்றனர்.
கடவுளுக்குச் சிறப்புச் செய்வதற்கு செம்பில் நூல் சுற்றி நீர் நிரப்பி, மாவிலை, தேங்காய் வைத்து உள்ளங்கையில் ஏந்திச் செல்வதைக் கும்பம் எடுத்தல் என்கின்றனர். இறப்புச் சடங்கில் செம்பில் கதம்ப மாலை சுற்றி, மலர்கள் தூவி, திருநீறு போட்டு, புனித நீராக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
மண்குடம்:
இறப்புச் சடங்கின் போது சுட்ட களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய மண் கலயத்தைக் குடம் என்கின்றனர். பிணத்தை சுடுகாடு தூக்கிச் செல்லும் வழியில் இடுகாடு உள்ளது. இடுகாட்டில் பாடை சுடுகாடு நோக்கித் திருப்பி இறக்கி வைக்கப்படுகின்றது. இடுகாட்டில் இறந்தவரின் பெண் மக்கள் இடது தோளில் நீர் நிரம்பிய மண் கலயத்தை வைத்து மூன்று முறைப் பாடையை சுற்றச் செய்தும் ஒவ்வொரு முறை சுற்றும் பொழுதும் நாவிதன் அரிவாள் நுனியால் மண்குடத்தைத் துளையிடுகின்றார். இறுதியாக மண் குடத்தை வல பக்கம் கீழே போட்டு உடைத்த பின்னர் கோடித் துணி போட்டுத் திரும்பிப் பாராது அழைத்துச் செல்கின்றனர். இதே போன்று குழிமேட்டில் கொள்ளி வைக்கும் மகனால் கொள்ளிக்குடம் உடைக்கப்படுகின்றது. இவ்வாறு குடம் உடைத்தல் எனபதற்கு இம் மண்ணுலகில் தனக்கும் இறந்தவருக்கும் இடையேயான உறவு குடம் உடைத்தலோடு முடிந்துவிடுவதாகக் கூறுகின்றனர். மண் குடம் என்பது இருப்பவருக்கும் இறந்தவருக்கும் இடையே காணப்பட்ட உறவின குறியீடாக எண்ணப்படுகின்றது. சுட்ட மண்சட்டியைத் திரும்ப ஒட்ட வைக்க முடியாது என்ற வாங்கியத்தோடு தொடர்புபடுத்தபடுகின்றது. பணிக்குடம் உடைந்து குழந்தை பிறப்பது உறவை ஏற்படுத்துவது போலவும் நீர் நிறைந்த குடத்தை உடைப்பது இறப்புச் சடங்கில் உறவு முடிந்து விடுவதாகவும் எண்ணப்படுகின்றது.
கோடித்துணி:
புது வேட்டி, சேலை போன்றவற்றைச் கோடி என்று கூறுகின்றனர். (சி.பரமேஸ்வரி, மள்ளர் வாழ்வும் வழிபாடும் ப.33).
இறப்புச் சடங்கில் மாமன், மச்சன் உறவுடையோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கோடித்துணி, கொண்டு வருகின்றனர். நீர் மாலை கொண்டு பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் பிறந்த இடத்துக் கோடி அணிவிக்கப்படுகின்றது. பிறந்த இடத்துக் கோடியணிந்தே புதை குழியில் புதைக்கின்றனர். சிதேவி வாங்குதல் சடங்கின் போது மருமக்கள் தங்களது தாய் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சேலையை அணிந்து வாங்குகின்றனர். இடுகாட்டில் பெண் மக்கள் குடம் உடைக்கும் போதும் கோடித் துணி போடப் படுகின்றது. கொள்ளிக்குடம் உடைத்த ஆண் மகனுக்கு தாய் மாமனால் வேட்டி, துண்டு கொடுக்கப் படுகின்றன. கணவனை இழந்த பெண்ணுக்கு இறந்தவரின் அண்ணன், தம்பி கோடி கொடுத்த பின்னர் தாலியறுக்கும் சடங்கு நிகழ்த்தப் படுவதால் இதனை அறுப்புக் கோடிப் போடுதல் என்கின்றனர். உருமால் கட்டுதல் சடங்கின் போது ஆண் மக்களுக்கு கோடித்துணிகள் போடப்படுகின்றன. பிணத்தை புதுத் துணிபோட்டு புதைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கோடி கொண்டு வருதல் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகின்றது.
தொகுப்புரை:
இறப்புச் சடங்கில் இம்மக்கள் பயன்படுத்தும் முக்கியப் புழங்கு பொருட்களின் வழியாக இவர்களது வாழ்க்கை முறையை அறிய முடிகின்றது. நெல்லை சடங்குப் பொருளில் பயன்படுத்துவதன் வாயிலாக இவர்களது நெல் சார்ந்த வேளாண் பண்பாடு அறியப்படுகின்றது. செம்பை வைத்து புனித நீர் கொண்டு வந்து பிணத்தை குளிப்பாட்டி புனிதப்படுத்துகின்றனர். நீர் வைத்து அழுவதால் இறந்தவரை (முன்னோரை) வழிபடும் மரபினை உடையவர்கள் என்றும் கூறப்படுகின்றது. குடம் உடைத்தல், கோடி போடுதல் போன்றவை இறந்தவருக்கும் இருப்பவருக்குமான உறவு நிலையை சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதா‘க அமைகின்றது. இறப்புச் சடங்கு நடத்தப் பயன்படுத்தும் பொருட்கள் இறந்தவருடைய ஆன்மா சாந்தியடையவும் இழவு வீட்டாரை தீட்டு நிலையிலிருந்து நீக்கி பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவைத்தல், உறவுகளை வலிமையடையச் செய்தல், உரிமை நிலைநாட்டல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பா. நேருஜி, முனைவர் பட்ட ஆய்வாளர்
நெல் - பயன்பாடு:
இறந்தவரைக் குளிப்பாட்டி நற்காலியில் அமரவைத்த பின்னர் பிணத்திற்கு முன்பாக இடப்புறம் நிறை மரக்கால் நெல்லும் வலப்புறம் படி நிறைய நெல்லும் வைத்து வழிபடுகின்றனர். ஊர் மக்கள் சிறிய நார்ப் பெட்டியில் நெல்லைக் கொண்டு வந்து பிணத்தின் கால் பகுதியில் குவித்து வைத்து வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டு வருதலைப் ஊர்ப் பச்சை கொண்டு வருதல் என்கின்றனர். (தகவல் - பத்மாவதி - 63 - K. இராமநாதபுரம்) பிற ஊர்களில் இருந்து உறவினர்கள் நெல் கொண்டு வந்து கால் மாட்டில் குவித்து வணங்குகின்றனர். இவ்வாறு கொண்டு வருதலைப் பச்சை கொண்டு வருதல் என்கின்றனர்.
பிறந்த வீட்டுக் கோடி கொண்டு வருதல் என்னும் சடங்கின் போது உறவினர்களால் நெல், சியக்காய், சிறிதளவுத் தண்ணீர், கோடித் துணி போன்றவை இறந்தவரின் பிறந்த ஊரிலிருந்து உறவினர்களால் கொண்டுவரப்படுகின்றது. நெல்லை மட்டும் கால் மாட்டில் குவித்து வைத்து வணங்குகின்றனர். (தகவல் - கர்ணன் - 45 - முருகன்பட்டி)
நீர்மாலை எடுத்துவந்த நீரில் பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் வீட்டு வாசலில் பச்சைப் பந்தலின் கீழ் அமரவைத்து சிதேவி வாங்கும் சடங்கு நடத்தப்படுகின்றது. நிறை மரக்கால் நெல்லின் மீது மாட விளக்கை கையில் ஏந்தியபடி இறந்தவரின் மகனும் படி நிறைய நெல்லை ஏந்திய படி மருமகளும் பச்சைப் பந்தலை மூன்று முறைச் சுற்றி வந்து பிணத்தின் முன்பாக வைத்து வணங்குகின்றனர். பின்னர் பசுஞ்சாணியை நெல்லில் தொய்த்து உருண்டை பிடித்து பிணத்தின் கையில் வைத்து "மூதேவி போயி சிதேவி வா" என மூன்று முறைக் கூறியபடியே மருமகளின் முந்தானையில் போடப்படுகின்றது (தகவல் - பழனியம்மாள் - 55 - K. இராமநாதபுரம்) இவ்வாறுசெய்வதால் இறந்தவரின் வளமை முழுவதும் மருமக்களுக்கு வந்து விடுவதாக நம்புகின்றனர். பின்னர் சாணி உருண்டையை பிணம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரில் அப்பி வைக்கின்றனர். கருமாதிச் சடங்கு நடைபெறும் நாள் வரைத் தினந்தோறும் நீர்த் தெளித்து அதனைப் பாதுகாக்கின்றனர். சாணியில் வளரும் நெல்லின் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர்.
சுடுகாட்டில் பிணத்தைப் படுக்கவைத்து மஞ்சள் தொய்த்த பச்சரிசியை "சொக்கஞ்சோறு, வைகுண்டஞ்சோறு, கைலாசஞ்சோறு" என மூன்று முறைக் கூறிய படியே பிணத்தின் வாயில் மூன்று முறைப் போடுகின்றனர். இதனை வாய்க்கரிசி போடுதல் என்கின்றனர். (தகவல் - வேலுச்சாமி - 65 முருகன்பட்டி) இவ்வாறு வாய்க்கரிசி போடுதலை இறந்தவருக்குப் போடும் கடைசி உணவு என்று கூறுகின்றனர்.
இறந்தவருக்குச் செம்புத் தண்ணீர் வைத்து மாரடித்து அழும் போதும் கருமாதியன்று பச்சைப்பந்தலைச் சுற்றி மாரடித்து அழும் போதும் மாரடித்து அழும் பெண்களுக்கு நீரில் ஊற வைத்த பச்சரிசியுடன் உப்பில்லாது அவித்த மொச்சை கலந்து உண்ணக் கொடுக்கின்றனர் "மாரடித்தவர்களுக்கு மடியில பச்ச" என்னும் பழமொழி வழக்கில் உள்ளது.
குழி மொழுகுதல் சடங்கின் பொழுது இறந்தவரைப் புதைத்த குழிமேட்டை நீர்த் தெளித்து மொழுகுகின்றனர். பின்னர் குழிமேட்டின் தலைப் பகுதியில் சிறிது பால் ஊற்றிவிட்டு அவ்விடத்தில் நெல்லைத் தூவிவிட்டும் பிரண்டைச் செடியையும் பதிக்கின்றனர். நெல் முளைக்கும் திறனைப் பொறுத்து குடும்பம் சிறக்கும் அல்லது தீங்கு நேரும் என நம்புகின்றனர். இச் சடங்கை ஆண்கள் செய்கின்றனர்.
"இறந்தவரைப் புதைத்தல் சடங்கு முறை வேளாண் நாகரிகத்தோடு உருவானதாகும். புதைத்தல் என்பது விதைகளை மண்ணுக்குள் புதைத்தல் என்பதற்கு இணையானதாகும். விதை முளைப்பது போன்று இறந்தவரும் மறுஉயிர் பெறுகிறார்" என்ற (பக்தவச்சல பாரதி - தமிழர் மானிடவியல் ப.211) கருத்து இங்கு மனங்கொள்ளத்தக்கதாகும்
செம்பு - பயன்பாடு:
செம்பு என்னும் புழங்கு பொருள் நீர் அருந்தப் பயன்படுத்தும் உலோகப் பாத்திரம் ஆகும். இறந்தவரின் வீட்டிற்கு உறவினர்களால் கொண்டுவரப்படும் பொருட்களுள் செம்பு முக்கிய இடம் பெறுகின்றது.
நீர் மாலை எடுத்து வரும் சடங்கில் பிணத்தைக் குளிப்பாட்டுவதற்காக செம்பு, குடம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீர் நிலைக்குச் செல்கின்றனர். நீர் நிரப்பிய செம்பு, குடம் போன்றவற்றின் கழுத்துப் பகுதியில் கதம்ப மாலை சுற்றப்படுகின்றது. நீரின் மேலாக கதம்பப் பூக்களும், திருநீறும் போடப்படுகின்றது. இதனால் நீர்மாலை நீரும், செம்பும் புனிதமாக மாற்றப்படுவதாகக் கூறுகின்றனர். தெய்வ நிலையை அடைந்துவிட்ட பிணத்தைக் குளிப்பாட்டக் கொண்டு வரப்படும் புனித நீரைக் கொண்டு வரப் பயன்படும் பாத்திரங்களாகச் செம்பும், குடமும் காணப்படுகின்றன.
செம்புத் தண்ணீர் வைத்து அழும் சடங்கை கருமாதி நடைபெறும் நாள் வரைச் செய்கின்றனர். பிணத்தை வைத்திருந்த இடத்தில் மணலைப் பரப்பி அதன்மீது செம்பு நிறைய நீர் வைத்துப் பெண்கள் அழுகின்றனர். செம்பில் வைக்கப்பட்ட நீரை இறந்தவர் மண்டியிட்டு குடிப்பார் என்றும் அதற்கு அடையாளமாக செம்பில் வைக்கப்பட்ட நீர் சிறிது குறைந்தும் பரப்பி வைக்கப்பட்ட மணலில் இறந்தவரின் கை ரேகை பதிந்துவிடும் என நம்பிக்கைத் தெரிவித்தனர்.
இச்சடங்கின் மூலம் தெய்வநிலையடைந்து விட்ட இறந்தவரின் ஆவிக்கு, தாகத்திற்குத் தண்ணீர் கொடுக்கப் பயன்படும் புனிதப் பாத்திரமாகச் செம்பு மதிக்கப்படுகின்றது. செம்பில் மீதமிருக்கும் நீரை சுவரில் அப்பி இருக்கும் சாணியின் மீது தெளிக்கின்றனர். அதிலும் எஞ்சிய நீரை வீட்டின் வெளியே ஊற்றுகின்றனர்.
கடவுளுக்குச் சிறப்புச் செய்வதற்கு செம்பில் நூல் சுற்றி நீர் நிரப்பி, மாவிலை, தேங்காய் வைத்து உள்ளங்கையில் ஏந்திச் செல்வதைக் கும்பம் எடுத்தல் என்கின்றனர். இறப்புச் சடங்கில் செம்பில் கதம்ப மாலை சுற்றி, மலர்கள் தூவி, திருநீறு போட்டு, புனித நீராக்கப்படுவது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாகும்.
மண்குடம்:
இறப்புச் சடங்கின் போது சுட்ட களி மண்ணால் செய்யப்பட்ட சிறிய மண் கலயத்தைக் குடம் என்கின்றனர். பிணத்தை சுடுகாடு தூக்கிச் செல்லும் வழியில் இடுகாடு உள்ளது. இடுகாட்டில் பாடை சுடுகாடு நோக்கித் திருப்பி இறக்கி வைக்கப்படுகின்றது. இடுகாட்டில் இறந்தவரின் பெண் மக்கள் இடது தோளில் நீர் நிரம்பிய மண் கலயத்தை வைத்து மூன்று முறைப் பாடையை சுற்றச் செய்தும் ஒவ்வொரு முறை சுற்றும் பொழுதும் நாவிதன் அரிவாள் நுனியால் மண்குடத்தைத் துளையிடுகின்றார். இறுதியாக மண் குடத்தை வல பக்கம் கீழே போட்டு உடைத்த பின்னர் கோடித் துணி போட்டுத் திரும்பிப் பாராது அழைத்துச் செல்கின்றனர். இதே போன்று குழிமேட்டில் கொள்ளி வைக்கும் மகனால் கொள்ளிக்குடம் உடைக்கப்படுகின்றது. இவ்வாறு குடம் உடைத்தல் எனபதற்கு இம் மண்ணுலகில் தனக்கும் இறந்தவருக்கும் இடையேயான உறவு குடம் உடைத்தலோடு முடிந்துவிடுவதாகக் கூறுகின்றனர். மண் குடம் என்பது இருப்பவருக்கும் இறந்தவருக்கும் இடையே காணப்பட்ட உறவின குறியீடாக எண்ணப்படுகின்றது. சுட்ட மண்சட்டியைத் திரும்ப ஒட்ட வைக்க முடியாது என்ற வாங்கியத்தோடு தொடர்புபடுத்தபடுகின்றது. பணிக்குடம் உடைந்து குழந்தை பிறப்பது உறவை ஏற்படுத்துவது போலவும் நீர் நிறைந்த குடத்தை உடைப்பது இறப்புச் சடங்கில் உறவு முடிந்து விடுவதாகவும் எண்ணப்படுகின்றது.
கோடித்துணி:
புது வேட்டி, சேலை போன்றவற்றைச் கோடி என்று கூறுகின்றனர். (சி.பரமேஸ்வரி, மள்ளர் வாழ்வும் வழிபாடும் ப.33).
இறப்புச் சடங்கில் மாமன், மச்சன் உறவுடையோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் கோடித்துணி, கொண்டு வருகின்றனர். நீர் மாலை கொண்டு பிணத்தைக் குளிப்பாட்டிய பின்னர் பிறந்த இடத்துக் கோடி அணிவிக்கப்படுகின்றது. பிறந்த இடத்துக் கோடியணிந்தே புதை குழியில் புதைக்கின்றனர். சிதேவி வாங்குதல் சடங்கின் போது மருமக்கள் தங்களது தாய் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட சேலையை அணிந்து வாங்குகின்றனர். இடுகாட்டில் பெண் மக்கள் குடம் உடைக்கும் போதும் கோடித் துணி போடப் படுகின்றது. கொள்ளிக்குடம் உடைத்த ஆண் மகனுக்கு தாய் மாமனால் வேட்டி, துண்டு கொடுக்கப் படுகின்றன. கணவனை இழந்த பெண்ணுக்கு இறந்தவரின் அண்ணன், தம்பி கோடி கொடுத்த பின்னர் தாலியறுக்கும் சடங்கு நிகழ்த்தப் படுவதால் இதனை அறுப்புக் கோடிப் போடுதல் என்கின்றனர். உருமால் கட்டுதல் சடங்கின் போது ஆண் மக்களுக்கு கோடித்துணிகள் போடப்படுகின்றன. பிணத்தை புதுத் துணிபோட்டு புதைக்கவேண்டும் என்ற அடிப்படையில் கோடி கொண்டு வருதல் உருவாகி இருக்கலாம் என கருதப்படுகின்றது.
தொகுப்புரை:
இறப்புச் சடங்கில் இம்மக்கள் பயன்படுத்தும் முக்கியப் புழங்கு பொருட்களின் வழியாக இவர்களது வாழ்க்கை முறையை அறிய முடிகின்றது. நெல்லை சடங்குப் பொருளில் பயன்படுத்துவதன் வாயிலாக இவர்களது நெல் சார்ந்த வேளாண் பண்பாடு அறியப்படுகின்றது. செம்பை வைத்து புனித நீர் கொண்டு வந்து பிணத்தை குளிப்பாட்டி புனிதப்படுத்துகின்றனர். நீர் வைத்து அழுவதால் இறந்தவரை (முன்னோரை) வழிபடும் மரபினை உடையவர்கள் என்றும் கூறப்படுகின்றது. குடம் உடைத்தல், கோடி போடுதல் போன்றவை இறந்தவருக்கும் இருப்பவருக்குமான உறவு நிலையை சமுதாயத்திற்கு வெளிப்படுத்துவதா‘க அமைகின்றது. இறப்புச் சடங்கு நடத்தப் பயன்படுத்தும் பொருட்கள் இறந்தவருடைய ஆன்மா சாந்தியடையவும் இழவு வீட்டாரை தீட்டு நிலையிலிருந்து நீக்கி பழைய இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவைத்தல், உறவுகளை வலிமையடையச் செய்தல், உரிமை நிலைநாட்டல் போன்றவற்றை வலியுறுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பா. நேருஜி, முனைவர் பட்ட ஆய்வாளர்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அறிய வேண்டிய ஒரு ஆய்வுக்கட்டுரை... இது சடங்குகளை அடியொற்றி இணைப்பறவைகள் என்றொரு சிறுகதை ஸ்ரீ என்பவர் எழுதியது.. படிட்க்கச் படிக்கச்சுவையாக இருக்கும்..
பதிவுக்கு மிக்க நன்றி சிவா.. [You must be registered and logged in to see this image.]
பதிவுக்கு மிக்க நன்றி சிவா.. [You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- kavineleஇளையநிலா
- பதிவுகள் : 946
இணைந்தது : 14/09/2009
பதிவுக்கு மிக்க நன்றி.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
பனிக்குடம் உடைத்து
உறவானாய்
மண் குடம் உடைத்து
உன் உறவை துறபேனா ?
நிச்சயம் இல்லை என்கிறது மனம்
இதுதான் நிலையாமை தத்துவம் என்கிறது கட்டுரை அருமை சிவா இந்த பதிவு கடந்து வந்த பாதையை கடக்க போகும் பாதையை வலியோடு உணர்த்துகிறது
உறவானாய்
மண் குடம் உடைத்து
உன் உறவை துறபேனா ?
நிச்சயம் இல்லை என்கிறது மனம்
இதுதான் நிலையாமை தத்துவம் என்கிறது கட்டுரை அருமை சிவா இந்த பதிவு கடந்து வந்த பாதையை கடக்க போகும் பாதையை வலியோடு உணர்த்துகிறது
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
saralafromkovai wrote:பனிக்குடம் உடைத்து
உறவானாய்
மண் குடம் உடைத்து
உன் உறவை துறபேனா ?
நிச்சயம் இல்லை என்கிறது மனம்
இதுதான் நிலையாமை தத்துவம் என்கிறது கட்டுரை அருமை சிவா இந்த பதிவு கடந்து வந்த பாதையை கடக்க போகும் பாதையை வலியோடு உணர்த்துகிறது
[You must be registered and logged in to see this image.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
வித்தியாசமான பதிவு சிவா...
இதுவரை நான் அறிய நினைத்து அறியமுடியாது போன விஷயங்கள் இப்படி இங்கே அழகாய் வடித்திருப்பது சிறப்பு... ஓ இத்தனை விஷயங்கள் இருக்கான்னு ஆச்சர்யமாக படித்தேன்பா...
அன்பு நன்றிகள் சிவா பகிர்ந்தமைக்கு...
இதுவரை நான் அறிய நினைத்து அறியமுடியாது போன விஷயங்கள் இப்படி இங்கே அழகாய் வடித்திருப்பது சிறப்பு... ஓ இத்தனை விஷயங்கள் இருக்கான்னு ஆச்சர்யமாக படித்தேன்பா...
அன்பு நன்றிகள் சிவா பகிர்ந்தமைக்கு...
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- கோவை. மு. சரளாஇளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
வணக்கத்துக்குரியவர் வணங்கியதற்கு வாழ்த்துக்கள்
பிணத்தை கண்டு அஞ்சும் நாளைய பிணம் நான் இன்னும் என்னால் சில நிமிடங்களுக்கு மேல் இறந்தவர் முன்னாள் நிற்க முடிவதில்லை அவர்களின் உறவுகளின் அழுகைகை கேட்க முடிவதில்லை நெஞ்சு வெடித்து விடும் ஏனோ புரியவில்லை இன்னும்
பிணத்தை கண்டு அஞ்சும் நாளைய பிணம் நான் இன்னும் என்னால் சில நிமிடங்களுக்கு மேல் இறந்தவர் முன்னாள் நிற்க முடிவதில்லை அவர்களின் உறவுகளின் அழுகைகை கேட்க முடிவதில்லை நெஞ்சு வெடித்து விடும் ஏனோ புரியவில்லை இன்னும்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
saralafromkovai wrote:வணக்கத்துக்குரியவர் வணங்கியதற்கு வாழ்த்துக்கள்
பிணத்தை கண்டு அஞ்சும் நாளைய பிணம் நான் இன்னும் என்னால் சில நிமிடங்களுக்கு மேல் இறந்தவர் முன்னாள் நிற்க முடிவதில்லை அவர்களின் உறவுகளின் அழுகைகை கேட்க முடிவதில்லை நெஞ்சு வெடித்து விடும் ஏனோ புரியவில்லை இன்னும்
நாமாக விரும்பிப் பிறப்பதில்லை, அதுபோல் நாமாக விரும்பி இறப்பதும் இல்லை! நாம் கொண்டுள்ள இந்த உடலிற்குத்தான் அழிவே தவிர ஆத்மாவிற்கு அழிவில்லை! விஞ்ஞானம் இந்த அளவு வளர்ச்சியுற்ற போதிலும் மனிதனின் இறப்பிற்கு அப்பாற்பட்ட விடயம் என்ன என்பது பற்றி அறிய இயலவில்லை!
பிறப்பு முதல் இறப்புவரை பல்வேறு துன்பங்களிலும் சிறு சிறு இன்பங்களிலும் திளைக்கும் மனிதனுக்கு அனைத்து இன்ப துன்பங்களில் இருந்து கிடைக்கும் விடுதலையே மரணம்! இறந்த மனிதனைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்! இந்த உலகிலிருந்து வேறு உலகிற்கு அவரது பயணம் தொடங்கிவிட்டார் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்! அந்த உலகிற்கு இந்த உடல் தேவையில்லையென்பதால் உடலை மட்டும் நாம் அழிக்கின்றோம்! ஆத்மா அழிவின்றி தன் அடுத்த வாழ்விற்கான பயணத்தை மேற்கொண்டு விட்டது என்பதை மனதில் தெளிவாக நம்புங்கள்! அடுத்த முறை மரணமும் உங்களுக்கு மகிழ்ச்சியாகத் தெரியும்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- gunashanவி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
அடேங்கப்பா...அசத்திட்டீங்க சிவா.......ரொமப அழகா சொல்லியிருக்கீங்க.....ஆன்மீக வழியில் செல்பவர்கள் இந்த உண்மையை சுலபமாக் புரிந்து கொள்வார்கள்.....சாதாரண மக்களுக்கு வேதாந்தமாய் தோன்றும்.......
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|