ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

”புகைப்படம்” திரைவிமர்சனம்

2 posters

Go down

”புகைப்படம்” திரைவிமர்சனம் Empty ”புகைப்படம்” திரைவிமர்சனம்

Post by rikniz Thu Jan 14, 2010 5:58 pm

பள்ளி நண்பர்களான கிருஷ்ணாவும் நந்தாவும் ஒரே பிரிவில் சேர்ந்து படிக்கவேண்டும் என்று நினைத்து, கல்லூரியில் நுழைகிறார்கள். அழகான மாணவிகள் படிக்கும் பிரிவுதான் அவர்களுடைய சாய்ஸ்.
அவர்கள் முதலில் சேர்ந்த பிரிவில் அழகான மாணவிகள் இல்லை என்பதால் வேறு பிரிவுக்கு மாற்றிக் கேட்டு அழகான மாணவிகள் படிக்கும் பிரிவிலேயே சேர்கிறார்கள். சேர்ந்த முதல் நாளே, அங்கு கே.கே. என்னும் மாணவியின் நட்பு அவர்களுக்கு கிடைக்கிறது. வகுப்பிற்குப் போனால், முரட்டுத்தனமான மாணவனாக அறிமுகம் ஆகும் குரு, கொஞ்ச நேரத்திலேயே இவர்களுடன் இணைந்து விடுகிறான். பாலா என்னும் மாணவன், கல்லூரியின் சீனியர் மாணவி கௌரி என இவர்களின் நண்பர் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகமாகிறது.

முதல் வருடம் முடிகிற நேரத்தில் எச்.ஓ.டி.யின் மகள் ஷைனி அந்த கல்லூரியில் சேர்கிறாள். அவளும் இந்த நண்பர்கள் பட்டாளத்துடன் இணைகிறாள். அவள் மேல் கிருஷ்ணாவுக்கு காதல் பிறக்கிறது. அவளிடமும் நண்பர்களிடமும் அவன் தன் காதலை மறைக்கிறான். விடுமுறையை சந்தோஷமாக கழிக்க முடிவெடுக்கும் நண்பர்கள் அனைவரும் பாலாவின் சொந்த ஊருக்கு போகிறார்கள். சில நாட்களை சந்தோஷமாகக் கழிக்கிறார்கள். அப்போது, ஷைனியின் அப்பா, அவளை உடனடியாக கிறிஸ்துமஸ் கொண்டாட, ஊருக்கு புறப்பட்டு வருமாறு அழைக்கிறார். அவள் மட்டும் தனியாக ஊருக்கு புறப்பட முடியாது என்பதால், கிருஷ்ணா அவளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறான். வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவள் அவனைக் காதலிப்பதாகச் சொல்கிறாள். இந்த காதல் விஷயம் அவள் அப்பாவுக்கு தெரிந்துவிட, சும்மா இருப்பாரா அவர்? தாம் தூம் என்று டென்ஷனாகக் குதிக்கிறார்.

தங்கள் காதலை வளர்க்கும் காதலர்கள் காதலை நண்பர்களிடம் மறைந்து விடுகின்றனர். இதனால் கடைசிவரைக்கும் நண்பர்கள் யாருக்குமே இவர்கள் காதல் தெரியாமல் போகிறது. கல்லூரி முடியும் கடைசி நாளில் காதலர்கள் தன் நண்பர்களிடம் தங்கள் காதலைப் பற்றிச் சொல்ல, எல்லோரும் சந்தோஷமாகின்றனர். ஷைனியை கிருஷ்ணாவின் நண்பன் பாலாவும் ஒருதலையாக இவ்வளவு நாளும் காதலித்து வந்ததால் அதைக் கேட்ட அவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் வேதனைப்படும் நண்பர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள். காதலர்கள் இணைந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

கல்லூரி என்றால் ஜாலியாக இருக்கும் இடம் என்பது சினிமாவுக்குரிய இலக்கணம் என்பதாலோ என்னவோ, வழக்கமாக இருக்கக்கூடிய கலாட்டா, ராகிங் காட்சிகள் எல்லாமே இந்தப் படத்திலும் இருக்கிறது. எல்லோரிடமும் ஜாலியாகப் பழகும் கேரக்டர் கிருஷ்ணாவுக்கு. முதல் பகுதியில் ஏராளமான காட்சியாக ஜாலியாக அதே நேரத்தில் அழுத்தம் இல்லாமல் வந்து போகின்றன. எந்நேரமும் கடுகடுப்பாக இருக்கும் எச்.ஓ.டி.யின் செய்கைகள் சில நேரங்களில் சிரிப்பை வரவழைக்கின்றன. கிருஷ்ணாவும் நந்தாவும் அடிக்கும் லூட்டிகள் சில நேரங்களில் மட்டுமே சிரிப்பை வரவழைக்கின்றன. பாலாவுக்கு ஷைனிமீது காதல் ஆழமாக ஏற்படுவதற்காகவும், ஷைனிக்கு கிருஷ்ணா மேல் காதல் வருவதற்கும் அழுத்தமான காரணங்களை சொல்லும் இயக்குநர், கிருஷ்ணாவுக்கு அவள் மேல் காதல் வருவதற்கு என எந்த காரணத்தையும் சொல்லவில்லை. அது சரி... காதல் வர காரணம் வேணுமா என்ன...?

முற்பகுதியில் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்பதையே அடிக்கடி காட்டிக் கொண்டிருப்பதால் ‘டிவி சிரியலை படத்துக்கு இடையில நுழைச்சிட்டாங்களோ...’ என்று சில நேரம் எண்ணத் தோன்றுகிறது. பாலாவின் ஊருக்கு நண்பர்கள் அனைவரும் சென்று தங்கும் காட்சிகள் சில நிமிட நேரங்களே வந்து சென்றாலும் அந்த கிராமத்து உபசரிப்பு, கிராமத்து வாழ்க்கை எல்லாமே அழகாக இருக்கின்றன. சென்டிமென்டையும் ஆங்காங்கே திணித்திருக்கிறார் இயக்குநர்.. பாடல்கள் எல்லாமே கேட்கிற மாதிரி இருந்தாலும், ‘ஒரு குடைக்குள்..., வெண்ணிலா’ பாடல்கள் மனதிற்குள் நிற்கின்றன. விஜய் ஆம்ஸ்ட்ராங் தெருக்களையும், மலைகளையும் அழகாக காட்டியிருக்கிறார். சில காட்சிகளில் ‘இந்த இடத்தில ஒரு பின்னணி இசை போட்டிருக்கலாமேப்பா...’ என்று நினைக்கத் தோன்றுகிறது.

திரைக்கதையில் இன்னும் வேகம் காட்டியிருந்தால் படம் இன்னும் வேகமாக நகர்ந்திருக்கும். ஆங்காங்கே டல் அடித்தாலும் அழுத்தமான க்ளைமேக்சுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குநர்



”புகைப்படம்” திரைவிமர்சனம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

”புகைப்படம்” திரைவிமர்சனம் Empty Re: ”புகைப்படம்” திரைவிமர்சனம்

Post by சபீர் Thu Jan 14, 2010 6:00 pm

அருமையான தகவல் தந்த எங்கள் அருமை நண்பன் ரிக்நிஸ்
கு வாழ்த்துக்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum