புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
36 Posts - 51%
heezulia
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
29 Posts - 41%
mini
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 1%
balki1949
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
393 Posts - 59%
heezulia
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
20 Posts - 3%
prajai
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
5 Posts - 1%
mini
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_m10ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 21, 2021 1:17 pm

ஸ்ரீராமகிருணரின் அமுதமொழிகள் Saying-6

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Mar 21, 2021 1:29 pm

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சிந்தனைத் துளிகள்:

கர்மமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி எந்த வழியிலும் இறைவனை அடைய முடியும்.


இறைவன் ஒரு கற்பவிருட்சம். நாம் அதன் நிழலில் எப்பொழுதும் இருக்க வேண்டும்.


கடவுள் எல்லா மனிதர்கள் இடத்திலும் உள்ளார். ஆனால் எல்லா மனிதர்களும் கடவுள் இல்லை.


நீங்கள் பைத்தியமாய் இருங்கள். உலக சுகங்களுக்காக அல்ல, இறைவனின் அன்பு வேண்டி பைத்தியமாய் இருங்கள்.


கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்காது.


கடுகளவு தற்பெருமை இருந்தாலும் கடவுளை உணர முடியாது.


நான் வாழும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.


அனைத்து மதங்களும் ஒன்றே என உணரவேண்டும்.


இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனை தொழ வேண்டும்.


உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு வாழ்வளிப்பவர் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.


மக்களுள் பெரும்பாலானோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் சுய நலத்தை அடிப்படையாகக் கொண்டவை.


மனத்தூய்மையால் மட்டுமே பிரபஞ்ச உண்மையினை உணர முடியும்.


அறியாமையின் காரணமாகத்தான் அகம்பாவம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அந்த அகம்பாவம் மனிதனை அழிக்கின்றது.


உண்மையாய் எளிமையாய் இறைவனிடம் வேண்டினாலே போதும். இறைவனுக்கு கேட்கும்.


இரவில் தெரியும் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே மனிதா உனக்குக் கடவுள் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே.


சிலருடைய உள்ளம் கல்சுவர் போல உறுதியாக இருக்கும், அதில் ஆணி அடித்தால் அது வளைந்து போகும். அதுபோல எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு ஆன்மீக விஷயம் எதுவும் உள்ளே போகாது.

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை:

ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசங்கள் மிகவும் எளிமையாக இருக்கும். சில சமயம் உபதேசங்களைப் புரிந்து கொள்ளும் விதமாக சின்னச் சின்னக் கதைகளையும் அவர் கூறுவதுண்டு. இப்படி ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் நிறைய இருக்கின்றன. இந்தக் கதைகள் அனைத்தும் எல்லோரும் புரிந்து கொள்ளும்படி எளிமையானவை. ஆனால் அந்தக் கதைகளில் உள்ள கருத்துக்கள் அனைத்தும் சிறப்பானது. இறைவன் மீது நம் நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்க, பகவான் ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதை இது:


ஒரு கிராமத்தில் ஏழைப்பெண் ஒருத்திக்கு சொந்தமாக ஒரு பசுமாடு இருந்தது. அவள் அந்தப் பசுமாட்டிலிருந்து பாலைக் கறந்து, ஊர் மக்களுக்கு விற்று, அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தினாள். கிராமத்தின் எல்லையில் உள்ள ஆற்றின் மறுகரையில் ஒரு கோயில் அர்ச்சகர் வாழ்ந்து வந்தார். தினமும் அபிஷேகத்திற்கு ஆற்றின் அக்கரையில் உள்ள பெண்ணிடம் அவர் பால் வாங்குவார். சில நாட்களாக குறித்த நேரத்தில் அந்தப் பெண்மணியால் பால் கொண்டு வர இயலவில்லை. இதனால் கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு நாள் அவளைக் கூப்பிட்டு, உன்னுடைய கால தாமத்தால் என்னால் உரிய நேரத்தில் பூஜையை முடிக்க முடியவில்லை’’ என்று கோபமாக கடிந்துகொண்டார்.

“மன்னிக்கவேண்டும் சுவாமி, நான் வீட்டிலிருந்து முன்னதாகவே கிளம்பிவிடுகிறேன். ஆனால். ஆற்றைக் கடந்து வர வேண்டும் என்பதால், கரையில் படகுக்காக வெகுநேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது” என்றாள்.

“அவனவன் பிறவிப் பெருங்கடலையே ‘கடவுள்’ பெயரைச் சொல்லிக்கொண்டே கடந்து விடுகிறான். நீ என்னடாவென்றால், சிறிய ஆற்றைக் கடப்பதற்கெல்லாம் படகுக்காக நம்பிக்கொண்டிருக்கிறாயே! இனிமேல் சரியான நேரத்துக்கு வரவில்லை என்றால், எனக்கு நீ பால் கொண்டுவர வேண்டாம்” என்று கேலியாக சொன்னார். ஆனால், அதை, அந்த பெண்ணால் புரிந்துக்கொள்ள முடியவில்லை ‘இந்த ஊரிலேயே அதிகமாக பால் வாங்குபவர் இவர் ஒருவர்தான். இவரும் இப்படிச் சொல்லிவிட்டாரே... என்ன செய்வது?’ என வருத்தத்துடன் கிளம்பிச் சென்றாள். அதன் பிறகு, அவள் குறித்த நேரத்துக்குள் வந்து விட்டாள். அந்த அர்ச்சகருக்குஆச்சர்யமாக இருந்தது. ஒரு நாள் “இப்போதெல்லாம் சரியான நேரத்துக்குள் வந்துவிடுகிறாயே... எப்படியம்மா?” என்று கேட்டார். “அது ஒன்றும் பெரிய மந்திரம் இல்லை, சுவாமி. நீங்கள் சொன்னது போலத்தான் செய்கிறேன்.”


“என்னது... நான் சொன்னபடியா! ஆற்றின் தண்ணீர் மேல் நடந்தா வந்தாய்..!” என்றார் கேலியுடன்.


“ஆமாம் சுவாமி! அப்படித்தான் நடந்து வந்தேன்” என்றாள் அந்தப் பெண் உறுதியான குரலில்.

‘இது எப்படிச் சாத்தியம்?’ அர்ச்சகரின் மனதுக்குள் சந்தேகம் இருந்தாலும், அதை அவர் வெளிகாட்டிக் கொள்ளவில்லை. “எங்கே... என் கண்முன்னே நடந்து காட்டுவாயா?” என்று கேட்டார்.


“நீ முன்னே செல், நான் உன்னைப் பின்தொடர்கிறேன்” என்றார் அர்ச்சகர். உடனே அந்தப் பெண்மணி, கை இரண்டையும் கூப்பியபடி, கடவுளின் பெயரைக் கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்தாள். கண்முன்னே நடந்ததை நம்ப முடியாமல் பார்த்த அர்ச்சகருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி... அதை வெளிக்காட்ட முடியாமல், நீண்ட தயக்கத்துக்குப் பிறகு அவளைப் பின்தொடர்ந்தார்.

‘ஆற்றின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று தெரியலையே’ என்று பயத்துடன் நினைத்தபடியே கடவுளின் பெயரைக் கூறியபடி, இறங்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு ஓர் எண்ணம்.... ‘தண்ணீரில் நடக்க முடியுமோ முடியாதோ... ஒருவேளை நீரில் விழவேண்டி இருந்தால், குறைந்த பட்சம் ஆடையாவது நனையாமல் இருக்கட்டுமே...’ என நினத்தவர் தன்னுடைய ஆடையைக் கைகளால் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால், கால் தண்ணீருக்கு உள்ளே சென்றது. அர்ச்சகர் திடுக்கிட்டார். வேறு வழி தெரியாமல் திரும்பி, கரையேறினார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண் திரும்பி அவர் இருக்கும் கரைக்கே வந்தாள்.


“என்னை மன்னித்துவிடம்மா! என்னால் உன்னைப் போல் நீரில் நடக்க முடியவில்லை. உண்மையாகவே நீ நீர் மேல் நடந்து சென்றது எப்படி சாத்தியமானது என்பதை எனக்குச் சொல்லேன்...” என்று கேட்டார்.


அந்தப் பெண் பணிவுடன், “சுவாமி…. உங்கள் உதடுகள் கடவுள் பெயரைச் உச்சரித்தாலும், உங்கள் கைகள் இரண்டும் உங்கள் உடைகள் நனையக் கூடாது என்பதற்காக தூக்கிப் பிடித்துக்கொண்டே இருந்தன. அதன் பிறகு நீங்கள் நீரில் இறங்கினீர்கள். கடவுள் மேல் உண்மையாகவே உங்களுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், அப்படிச் செய்திருக்க மாட்டீர்கள்” என்ற அந்தப் பெண் சற்றுத் தயங்கி சொன்னாள்...


“மேலும், ஆற்றின் ஆழத்தைப் பரீட்சித்து பார்ப்பது, அந்த ஆண்டவனையே ஆழம் பார்ப்பது போன்றது அல்லவா?” என்றாள்.

அந்தப் பெண் இதைச் சாதாரணமாகச் சொன்னாலும், அதை அந்த இறைவனே நேரில் வந்து சொன்னதுபோல இருந்தது அர்ச்சகருக்கு அவர் வெட்கித் தலைகுனிந்தார்.


பிரார்த்தனை என்பது அந்தப் பெண்ணின் மனநிலையைப் போலத்தான் இருக்கவேண்டும். அந்த அர்ச்சகரைப்போல இருக்கக் கூடாது என்பதுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் பரமஹம்சர் நமக்கு கூறும் அறிவுரை.

“எல்லாம் நாராயணன்தான்; எங்கும் நாராயணன்தான் இருக்கிறார். நல்லவர்களிடமும் அவர் இருக்கிறார்; கெட்டவர்களிடமும் அவர் இருக்கிறார். இருந்தாலும் தீயவர்களிடமிருந்து நாம் சற்று விலகியே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நமக்குத் துன்பம்தான் வரும்” என்று கூறியவர், அதை விளக்க கதை ஒன்றைச் சொல்ல ஆரம்பித்தார்.


ஒரு குருவினிடத்தில் சீடன் ஒருவன் இருந்தான். அந்தச் சீடரிடம் குரு “அனைத்தும் நாராயணன் செயல் தான், அதனை மறந்து விடாதே” என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பார். குருவின் வாக்கையே திருவாக்காக எடுத்துக் கொண்ட சீடன், அதனையே பின்பற்ற ஆரம்பித்தான். மண்புழுவிலிருந்து மனிதன் வரை அனைத்தையும் நாராயணனாகவே பார்க்க ஆரம்பித்தான்.


ஒரு முறை புதிய ஊர் ஒன்றுக்குச் சென்று கொண்டிருந்த அந்தச் சீடன் எதிரே யானை ஒன்று ஆவேசமாக வந்து கொண்டிருந்தது. அங்குள்ள மக்கள் “யானைக்கு மதம் பிடித்து விட்டது” ஓடிப்போய் உன் உயிரைக் காப்பாற்றிக் கொள்” என்று கூறினர். ஆனால் அந்தச் சீடனோ, “யானையிலும் நாராயணன்தான் இருக்கிறார். அவர் என்னைக் காப்பாற்றுவார் என்று கூறிக் கொண்டு நடந்து சென்றான். எதிரில் வந்த யானை பிளிறிக் கொண்டு ஓடி வந்து கொண்டிருந்தது. அதனைத் துரத்திக்கொண்டு வந்த அதன் பாகன், சீடனை விலகிச் செல்லுமாறு பலமுறை கூக்குரலிட்டான். ஆனால் சீடனோ, ‘நாராயணன் என்னைக் கைவிட மாட்டான்’ என்று கூறி ஒதுங்காமல் நேர் எதிராக அப்படியே நின்று கொண்டிருந்தான். எதிரில் வந்து கொண்டிருந்த யானை, தன் துதிக்கையால் சீடனைத் தூக்கியது. தூர வீசி எறிந்தது. பலத்த காயங்களோடு சீடன் உயிர் பிழைத்தான். உடல் நலமான பின் தன் குருவிடம் சென்று, “எல்லாம் நாராயணன்தான், கடவுள் கைவிட மாட்டான் என்று கூறினீர்களே, எனக்கு ஏன் இப்படி ஆயிற்று? யானையில் இருந்த நாராயணன் ஏன் என்னைக் காப்பாற்றாமல் தண்டித்தார்?” என்று அழுகையுடனும் ஆத்திரத்துடனும் கேட்டான்.

அதற்கு குருநாதர், “யானையில் நாராயணன் இருந்தது உண்மைதான். ஆனால் அதற்கு முன் பாகன் வடிவத்தில் நாராயணன் உன்னை ஒதுங்கச் சொல்லி எச்சரித்தாரே, ஏன் நீஒதுங்கவில்லை? அதனால் தான் இப்படி ஆனது” என்றார். சீடன் பதில் பேச முடியாமல் நகர்ந்தான்.


“ஆகவே தீயவர்களிடம் விலகி இருத்தலே நல்லது” என்று சொல்லிக் கதையை குருதேவர் முடித்தார்.


ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் மகா சமாதி:

தானறிந்த உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைத்தது மட்டுமல்லாமல், எப்படி பக்தி கொள்வது என்றும், அவற்றைத் தானும் பின்பற்றி அதன்படி வாழ்ந்துக்காட்டிய ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், கடைசி நாட்களில் அவரை தொண்டைப் புற்றுநோய் தாக்கியது. இருந்தாலும் தன்னைத் தேடி வருபவர்களுக்கும், தன் உபதேசங்களைக் கேட்க வருபவர்களுக்கும் தன்னுடைய பேச்சுதான் ஆறுதலாக இருக்கும் என்றார். தன்னைத் தேடி வரும் மக்களைத் திருப்பிப் போகச் சொல்ல அவருக்கு விருப்பமில்லை. தன் தொண்டை புண்ணாக இருந்த நிலையிலும், திரவ நிலையிலான உணவைக் கூட உட்கொள்ள முடியாத நிலையிலும் அவர் உபதேசத்தை நிறுத்தாமல் தொடர்ந்தார். பின்பு அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், மற்றும் சேவை செய்தனர். ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார். இவர் எந்த சமய வழிமுறையையும் உயர்த்திச் சொல்லாமல், மற்றவர்களின் ஆன்மிகக் கருத்துக்களை பற்றி குறை சொல்லாமல், அனைத்து சமயப் பிரிவினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில், அனைத்து சமயக் கருத்துக்களையும் ஒருங்கிணைக்கும் சமய சமரச வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் இந்த உலகை விட்டு மறைந்து விட்டாலும் அவரின் உபதேசங்களும், அவர் சொன்ன கதைகளும் இன்றும் சிந்திக்கக் கூடியதாக இருக்கின்றன. இன்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள், ஆத்மார்த்தமாக வணங்கும் மகானாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக