Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!
2 posters
Page 1 of 1
60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!
தொலை துார பயணங்களில், பாட்டு கேட்பதற்கு பயன்பட்ட, 'ஹெட் செட்' எனப்படும், 'ஹேண்ட்ஸ் ப்ரீ' மொபைல் போனின் அங்கமாகி விட்டதால், எல்லார் காதிலும், எல்லா நேரமும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில்,
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும்,
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல்
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில்
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே,
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள்,
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்;
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை,
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.
முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ,
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம்
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு
முறை, ஓய்வு அவசியம்.
இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது,
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும்
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம்,
எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும்
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை,
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால்,
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும்,
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள்
வரலாம்.
கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்
வைரஸ் தொற்று காலத்தில், 'ஆன்லைன்' வகுப்பு களில்,
ஹெட் செட்டை மாட்டி, அதிகபட்ச சத்தத்துடன் வகுப்புகளை
கவனித்த குழந்தைகள், இப்போது எல்லா நேரத்திலும்,
காதுகளில் மாட்டிக் கொள்ள பழகிவிட்டனர்.
வீட்டில், நம்மை சுற்றியுள்ளவர்களை தொந்தரவு செய்யாமல்
கேட்பதற்கு இது பயன்படலாம். தொடர்ந்து, இது போல அதிக
சத்தமாக காதிற்குள் வைத்து கேட்டால், உள் காதில் உள்ள
மென்மையான நரம்புகள் பாதித்து, கேட்கும் திறனை இழக்க
நேரிடும்.கேட்கும் திறன் இழப்பு ஒரே நாளில் நடந்து விடாது.
பிரச்னை இருப்பதே முதலில் தெரியாது. அதிக சத்தத்தில்
கேட்டு கேட்டு, குறிப்பிட்ட சத்தம் இருந்தால் மட்டுமே,
கேட்பதை புரிந்து கொள்ள முடியும் என்றாகி, படிப்படியாக
கேட்கும் திறன் குறைந்து, பிரச்னை இருப்பதை உணர்வதற்குள்,
முழுமையாக கேட்கும் திறனை இழந்து விடுவோம்;
இதற்கு குறைந்தபட்சம், 10 ஆண்டுகள் ஆகலாம்.
பெற்றோர் செய்ய வேண்டியது...
பிறர் பேசுவதை தெளிவாக கேட்க வேண்டியதன் அவசியத்தை,
குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.நினைத்ததை
சாதிக்க, இயல்பாக மற்றவர்களுடன் பழக, அடிப்படையான
தேவை, ஆரோக்கியமான கேட்கும் திறன் தான் என்பது
புரிந்தால், அவர்களாகவே எளிதாக தவிர்த்து விடுவர்.
முழு சத்தத்துடன் கேட்க அனுமதிக்கக் கூடாது. எவ்வளவு
குறைந்த ஒலியில் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறதோ,
அந்த அளவு குறைந்த சத்தம் இருக்க வேண்டும்.ஒரு மணி நேரம்
கேட்க வேண்டிய அவசியம் இருந்தால், 10 நிமிடங்களுக்கு ஒரு
முறை, ஓய்வு அவசியம்.
இப்படி, 60 சதவீத சத்தத்தில், 60 நிமிடங்கள் கேட்கும் போது,
600 வினாடிகள் ஆய்வு அவசியம். இதனால், 60 சதவீதம் காது
கோளாறு களை வராமலேயே தவிர்க்க முடியும்.மீதி இருப்பதும்
துவக்கத்திலேயே கண்டறிந்தால், முறையான சிகிச்சை மூலம்,
எளிதாக குணப்படுத்தலாம்.
செவித்திறன் கருவிலேயே முழுமையாக வளர்ச்சி பெற்று விடும்
என்பதால், கர்ப்ப காலத்தில் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக
இருக்க வேண்டும். கேட்கும் திறன் முழுமையாக உள்ளதா என்பதை,
குழந்தை பிறந்த, 24 மணி நேரத்தில், எளிமையான
பரிசோதனையில் தெரிந்து கொள்ள முடியும்.
பிறந்த குழந்தை, 12 - 14 மாதங்களில் சில வார்த்தைகளை சொல்ல
ஆரம்பிக்கும். அப்படி இல்லை என்ற சந்தேகம் இருந்தால்,
உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். காது கேளாமை
பிரச்னை முதியவர்களுக்கு இருந்தால், 'டிமென்சியா' எனப்படும்,
மறதி நோய், மன அழுத்தம், நினைவிழப்பது போன்ற பிரச்னைகள்
வரலாம்.
கண் பரிசோதனை செய்வதைப் போல, ஆண்டுதோறும் காதுகளை
பரிசோதிப்பதும் அவசியம்.
----------------------------
டாக்டர் தீபிகா விஜய்,
காது, மூக்கு, தொண்டை நிபுணர்,
நன்றி-வாராந்திர பகுதி, நலம் - தினமலர்
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: 60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!
என்ன சொன்னாலும் கேட்காத மக்கள். இணையத்தில் முறைகேடுகள்,மோசடி,தரவுக் கொள்ளை,மனை வாங்குதல் மோசடி,பணமோசடி … நடந்தும் தவிர்க்க வழி சொல்லியும் யாராவது கேட்டதுண்டா?
முடியாத நிலையில்..சில …
Settings > Music > Volume limit
earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.
மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.
தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள்.
முடியாத நிலையில்..சில …
Settings > Music > Volume limit
earbuds பாவிக்காது தேவையற்ற சத்தங்களை தடுக்கும் headphones பாவிப்பது.காது வெளி/மத்தி/உள் எனப் பிரிக்கப்பட்டுள்ளதது..earbuds மூலம் கேட்கப்படும் ஒலி நேரடியாக cochlea என்ற உள் காதை அடைந்து, அங்கிருக்கும் ஹெயர்செல் (hair cells. ) ஐ பாதிப்படயச் செய்கிறது.earbuds பாவிப்பவர்கள் ஒலியின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும்.கேட்கும் ஒலி அருகில் உள்ளவருக்கு கேட்டால் சத்தம் கூடுதலாக இருப்பதாக கொள்ளலாம்.அருகில் நடப்பது எதையும் கேட்காத நிலையில் விபத்துகள் ஏற்படலாம்.
மனிதனின் கேட்கும் ஒலி அளவு 20 Hz 20,00Hz ஆக இருந்தாலும் 80 db க்கு குறைவாக ஒலியை வைப்பது ஏற்கக்கூடியதாகும்.
தொழில்நுட்பம் வளரும் போது வசதிகளையும் ஆபத்துகளையும் சேர்த்தே தருகிறது.அதிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பாக இருங்கள்.
Guest- Guest
Re: 60 சதவீத ஒலியில், 600 வினாடிகள் பிரேக்!
நல்லதோர் பதிவு & மறுமொழி.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Similar topics
» "பிரேக்' இல்லா சைக்கிள் பயணம் "பிரேக்' போட்ட அதிகாரிகள்
» “கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா’ என்று பாடியவர்….
» துளை - காணொளி .(2.50.வினாடிகள்)
» இறபதற்கு சில வினாடிகள் முன்
» 3 வினாடிகள் செயல்படாத செயற்கைக்கோள்கள். நடப்பது என்ன?
» “கேட்கும் ஒலியில் எல்லாம் நந்தலாலா’ என்று பாடியவர்….
» துளை - காணொளி .(2.50.வினாடிகள்)
» இறபதற்கு சில வினாடிகள் முன்
» 3 வினாடிகள் செயல்படாத செயற்கைக்கோள்கள். நடப்பது என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|