புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_vote_lcapபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_voting_barபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_vote_rcap 
30 Posts - 88%
heezulia
பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_vote_lcapபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_voting_barபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_vote_rcap 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_vote_lcapபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_voting_barபி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... I_vote_rcap 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 7:52 am


பி.ஜி.எஸ்.மணியன்
-இந்து தமிழ் திசை (28 -02-2020)
--------------------------



பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... 541791
எழுபதுகளின் தொடக்கத்தில் தமிழ்த் திரை இசையில் 
சத்தமே இல்லாமல் ஒரு மாறுதல் நிகழ ஆரம்பித்தது.

அறுபதுகளின் இறுதிவரை கனமான குரல் வளம் கொண்ட 
பாடகர்களை முன்னிலைப்படுத்தி இயங்கி வந்த திரையிசை, 
எழுபதுகளில் புதிய தலைமுறை நடிகர்களான கமல், ரஜினி 
போன்றவர்களின் வருகையால் மென்மையான குரல்வளம் 
நிறைந்த பாடகர்களின் வசம் வந்தது.

இளைய தலைமுறையின் துள்ளல், துடிப்பு, உற்சாகத்தைப் 
பிரதிபலிக்க ஒரு எஸ்.பி.பி. கிடைத்தார். அமைதியான 
நதியோட்டமாக மனத்தை வருட ஒரு ஜேசுதாஸ் கண்டெடுக்கப்
பட்டார். இந்த இருவரின் ஆளுமை திரையிசையை வசப்படுத்திக்
கொண்ட நேரத்தில், மலையாளத் தேசத்திலிருந்து மற்றுமொரு 
மயக்கும் குரலால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப்போட வந்தவர்தான் 
பளியத்து ஜெயச்சந்திரக்குட்டன் என்ற பி. ஜெயச்சந்திரன்.

1944-ம் வருடம் மார்ச் மாதம் மூன்றாம் தேதி எர்ணாகுளத்தில் 
உள்ள ரவிபுரம் பகுதியில் பத்ராலயம் என்ற சிற்றூரில் ரவிவர்மா 
கொச்சனியன் தம்புரான் - பளியத்து சுபத்ரா குஞ்சம்மாள்
 தம்பதிக்கு இவர் மூன்றாம் மகனாகப் பிறந்தார்.

குடும்பம் இரிஞ்ஞாலக்குடாவுக்குக் குடிபெயர்ந்ததால் மாணவப் 
பருவம் இரிஞ்ஞாலக்குடாவிலேயே கழிந்தது. 1958-இல் மாநில 
இளைஞர் திருவிழாவில் பதினான்கு வயது ஜெயச்சந்திரன் 
சிறந்த இளம் மிருதங்கக் கலைஞராகச் சிறப்பிக்கப் பட்டார். 

அதே மேடையில் சிறந்த இளம் கர்நாடக இசைக் கலைஞர் விருது 
பெற்றவர் பதினெட்டு வயது வாலிபரான கே.ஜே.ஜேசுதாஸ்.

முதல் பாடல்

பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடிய ஜெயச்சந்திரனுக்குக் 
கிடைத்த பாராட்டுகளும் பரிசுகளும் அவருடைய இசை ஆர்வத்தை 
அதிகரிக்கச் செய்தன. முதல் வாய்ப்பு இருபத்து மூன்றாம் வயதில் 
‘உத்யோகஸ்தா’ என்ற மலையாளப் படத்தில் எம்.எஸ்.பாபுராஜ் 
இசையில் ‘அநுராக கானம் போலே’ என்ற பாடல். இவருடைய 
திறமையை மேலும் புடம்போட்டுத் தங்கமாக ஒளிரவைத்த 
பெருமை இசையமைப்பாளர் தேவராஜனையே சேரும்.



அந்த ஏழு நாட்கள்

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... 15828649112958

வசீகரக்குரலால் சேட்டன்களைக் கட்டிப்போட்ட ஜெயச்சந்திரனுக்கு 
மெல்லிசை மன்னர் இசை அமைத்த ‘பணி தீராத வீடு’ படத்தில் 
பாடிய ‘சுப்ரபாதம்’ பாடல், கேரள மாநில அரசின் சிறந்த பாடகருக்கான 
விருதைப் பெற்றுத் தந்தது. 

1973-இல் சத்யா மூவிஸின் ‘மணிப்பயல்’ படத்தில் ‘தங்கச்சிமிழ் போல் 
இதழே’ பாடலின் மூலம் ஜெயச்சந்திரனின் குரலைத் தமிழ் ரசிகர்களுக்கு
 அறிமுகப்படுத்தினார் எம்.எஸ். விஸ்வநாதன்.

“அந்த இணையற்ற கலைஞர் என் கிட்டே இருந்த திறமையை 
அழகா வெளியே கொண்டு வந்தார். சொல்லப்போனால் எனக்கு முதல் 
முதலாகக் கிடைச்ச அவார்டே ‘பணி தீராத வீடு’ படத்துலே அவர் இசையில் 
பாடிய ‘சுப்ரபாதம்’ பாட்டுக்குத்தான்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிடுவார் 
ஜெயச்சந்திரன். 

1976-ல் வெளிவந்த பாலசந்தரின் ‘மூன்று முடிச்சு’ படத்தில் ஜெயச்சந்திரன் 
வாணி ஜெயராமுடன் பாடிய ‘ஆடி வெள்ளி தேடி வந்த’, ‘வசந்த கால நதிகளிலே’ 
ஆகிய பாடல்கள் பெரிய வெற்றியைப் பெற்றன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 7:56 am

பி.ஜெயச்சந்திரன் 75-வது பிறந்ததினம்: தாலாட்டுதே கானம்... 15828649442958

-



மாஞ்சோலைக் கிளிதானோ..

புதுமை இயக்குநர் தரின் ‘அலைகள்’ படத்தில் ஜெயச்சந்திரன் 
மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய கவியரசரின்
 ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ பாடலில் ஜெயச்சந்திரனின் 
குரலில் தென்படும் வசீகரம் மனத்தை வருடி சாந்தப்படுத்தும்.

1975-ல் ‘பெண்படா’ என்ற மலையாளப்படம். ஏ.ஆர்.ரஹ்மானின் 
தந்தை ஆர்.கே. சேகர் இசையமைப்பாளர். இந்தப் படத்தில்
 ‘வெள்ளித் தேன்கிண்ணம் போல்’ என்ற பாடலை ஜெயச்சந்திரன் 
பாடினார். இளையராஜாவின் இசையில் முதல்முதலாக
 ‘காற்றினிலே வரும் கீதம்’ படத்தில் பாடிய ‘சித்திரச் செவ்வானம் 
சிரிக்கக் கண்டேன்’ பாடலும், ‘கிழக்கே போகும் ரயி’லின் 
‘மாஞ்சோலைக் கிளிதானோ’ பாடலும் பெரு வெற்றிபெற்று 
முன்னணிப் பாடகர் வரிசையில் ஜெயச்சந்திரனைச் சேர்த்தன.

‘ஒருதலை ராகம்’ படத்தில் ‘கடவுள் வாழும் கோவிலிலே,
’ ‘இரயில் பயணங்களில்’ படத்தில் ‘வசந்த காலங்கள்’ ஆகிய 
பாடல்கள் டி.ராஜேந்தரின் இசையில் ஜெயச்சந்திரன் தொடுத்த 
வெற்றிக்கோலங்கள். கே. பாக்யராஜின் சிறந்த திரைக்கதை 
அமைப்புக்கான படங்களில் முதலிடத்தில் இருக்கும்
 ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் ‘கவிதை அரங்கேறும் நேரம்’ பாடலை 
எஸ். ஜானகியுடன் இணைந்து வெகு அற்புதமாகப் பாடி அசத்தி 
இருப்பார் ஜெயச்சந்திரன்.

‘ராஜ’ கீதங்கள்

‘கடல் மீன்கள்’ படத்தில் ‘தாலாட்டுதே வானம்’ என்று 
எஸ். ஜானகியுடன் சேர்ந்து இசையலைகளை மனத்தில் பாயவைத்தார் 
ஜெயச்சந்திரன்.

பாடல்களுக்காவே பெரிய வெற்றிபெற்ற ‘வைதேகி காத்திருந்தாள்’ 
படத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த மூன்று பாடல்களையுமே 
ஜெயச்சந்திரனைத்தான் பாடவைத்தார் இளையராஜா. 

‘ராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ , ‘இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே’, 
‘காத்திருந்து காத்திருந்து’ மூன்றுமே வெற்றிக்கனியை ஜெயச்சந்திரனின் 
மடியில் போட்ட முத்தான பாடல்கள்.


கிழக்கே போகும் ரயில்

‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்தில் ‘பூவை எடுத்து’,
 ‘கொடியிலே மல்லியப்பூ’ (கடலோரக் கவிதைகள்) ஆகியவை 
ஜெயச்சந்திரனின் குரல் தனித்தன்மையோடு வெளிப்பட்ட பாடல்கள். 

ரஜினிகாந்த்தின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றான ‘ஆறிலிருந்து 
அறுபதுவரை’ படத்தில் ‘வாழ்க்கையே வேஷம்’ பாடலில் சொந்த
பந்தங்களால் ஒதுக்கப்பட்ட ஒரு மனிதனின் மனநிலையைத் தனது 
குரலால் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன்.

இதே போல் ‘ரிஷி மூலம்’ படத்தில் குற்ற உணர்வு நீங்கி பாரம் அகன்ற 
மனிதனின் உணர்வை ‘நெஞ்சில் உள்ள காயம் ஒன்று’ பாடலில் 
வெளிப்படுத்தி இருப்பார் ஜெயச்சந்திரன். எம்.ஜி.ஆரின் கடைசிப் 
படமான ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ படத்தில் மெல்லிசை 
மன்னரின் இசையில் வாணிஜெயராமுடன் பாடிய 
‘அமுதத் தமிழில் எழுதும் கவிதை’ என்ற துவிஜாவந்தி ராகப் பாடல் 
இனிய தேனமுது. என்றாலும் இளையாராஜாவின் இசையில் இவர் 
பாடிய அனைத்தும் ‘ராஜ’கீதங்கள் எனலாம்.

புதிய தலைமுறைக்கும்..

துல்லியமான உச்சரிப்பு, பொருளுணர்ந்து பாவநயத்தோடு குரலால் 
மெருகூட்டுவது ஆகியவற்றில் தனித்தன்மையோடு பிரகாசித்தார் 
ஜெயச்சந்திரன். பி. சுசீலாவுடன் பாடிய ‘மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்’ 
(‘நானே ராஜா நானே மந்திரி’) பாடலுக்கு மயங்காதவர் யாருமே இல்லை. 
மனோஜ் கியான் இசையில் ‘இணைந்த கைகள்’ படத்தில்
 ‘அந்திநேரத் தென்றல் காற்’றை எஸ்.பி.பி.யுடன் சேர்ந்து வரவழைத்தார்.

விக்ரமனின் ‘பூவே உனக்காக’ படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையில் 
சுஜாதாவுடன் பாடிய ‘சொல்லாமலே யார் பார்த்தது’ பாடலில் ஜெய் சேட்டனின் 
குரல் வசீகரம் சொல்லாமலே புரியும்.

‘மன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ 
பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் 
ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் சம்பந்தப்பட்ட மறக்க முடியாத நிகழ்வும் இவர் 
வாழ்வில் உண்டு. தனது பதினான்காவது வயதில் முதல்முதலாக எந்த 
ஜேசுதாஸ் சிறந்த இசைக் கலைஞராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மேடையில் 
சிறந்த மிருதங்க இசைக் கலைஞராக ஜெயச்சந்திரன் கௌரவிக்கப்பட்டாரோ 
அதே ஜேசுதாஸின் பெயரால் ஆண்டுதோறும் இசைத்துறையில் சாதனை புரிந்த 
கலைஞர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்வரலயா கைரளி யேசுதாஸ் விரு’தை 
முதல்முதலாக - இரண்டாயிரமாண்டில் - ஜேசுதாஸின் கையாலேயே பெற்றுக்
கொண்டார் ஜெயச்சந்திரன். சாதனைகள் தொடரட்டும் ஜெயேட்டா !
-
---------------------
படங்கள் உதவி: ஞானம்
-விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 7:57 am

”தங்கச்சிமிழ் போல் இதழோ……… (மணிப்பயல்), 
“மந்தார மலரே மந்தார மலரே……..” (நான் அவனில்லை), 
“ராஜா வாடா சிங்கக்குட்டி ராணி வாடி தங்கக்கட்டி……..” 
(திசை மாறிய பறவைகள்)
, ”பாலாபிஷேகம் செய்யவோ……..”(முத்தான முத்தல்லவோ), 
என்னோடு என்னன்னவோ ரகசியம்……… (தூண்டில் மீன்), 
“காலத்தை வெல்லும் இந்த காதல்……” (தாய் வீட்டு சீதனம்), 
“சின்னப்பூவே மெல்லப்பேசு உந்தன் காதல் சொல்லிப்பாடு…” 
(சின்னப்பூவே மெல்லப்பேசு), 

“சித்திரச்செவ்வானம் சிரிக்கக் கண்டேன்……..” (
காற்றினிலே வரும் கீதம்), 

”மாஞ்சோலைக்கிளிதானோ……….” (கிழக்கே போகும் ரயில்),

”வசந்தகால நதிகளிலே……….”(மூன்று முடிச்சு), 
“கண்ணனின் சன்னதியில்…………” (ஒரு கொடியில் இரு மலர்கள்), 
போன்ற பல பிரபலமான பாடல்களைப் பாடியவர் 

குறிப்பாக மலையாள வாடையே அறவேயின்றி சுத்தமான 
தமிழில் பாடி புகழ் பெற்றவர் பி.ஜெயச்சந்திரன்.

இவரது தாய் மொழி மலையாளம். மலையாளத்துடன் தமிழ், 
கன்னடம், தெலுங்கு ஆகிய பல மொழிகளில் தொடர்ந்து பாடிக்
கொண்டிருந்தாலும், கொஞ்சம் கூட பந்தாவே இல்லாதவர் 
பி.ஜெயச்சந்திரன். இவர் பி.சுசீலாவின் தீவிர ரசிகர். 

பி.சுசீலாவின் நினைக்கத் தெரிந்த மனமே……, 
சொன்னது நீதானா……. பாடல்கள் இவரது உயிர். அது போல் 
எம்.எஸ்.விஸ்வநாதனைப் போல் ஒரு சங்கீத வித்வான் இனி 
பிறக்கப்போவதில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுபவர்.


நன்றி- இணையம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Mar 04, 2021 7:58 am



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக