புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
21 Posts - 3%
prajai
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_m10ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்  -- பாரதிசந்திரன் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும் -- பாரதிசந்திரன்


   
   
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Tue Aug 18, 2020 6:49 pm

ஒரு கவிதையும், அதற்கான (சர்ரியலிச) வார்த்தைகளும்
கவிஞர் வீரமணி அவர்களின் ஓர் அருமையான கவிதையை முதலில் நம்மை படிக்கச் சொல்லுகிறார் இக்கட்டுரை ஆசிரியர். அதன்பின் ஒரு கவிதை படிக்கும் போது எத்தகைய தடுமாற்றம் நம்மை ஆட்கொள்கிறது என விளக்குகிறார். இதனை வாசித்தபின் நீங்கள் கவிதையை ரசிக்கும் முறையே மாறிவிடும்.



கண்ணற்றவன்

பார்த்துப் புளித்த பிரபஞ்சம்
யாராரோ மென்று துப்பிய – வார்த்தைகள்
எனதென்று புதிதாய் எழுத எதுவுமில்லை என்பதால்

நான்
வீடற்றவன் ஜன்னல் வழி
கண்ணற்றவன் – கவிதைகளைத் திருடி
முகமற்றவனிடம தந்தேன்…

அவன் வாசிக்காமலேயே
சிலாகிக்கிறான்…

பின் – பூவற்ற
மாலையில்
காற்றைக் கட்டி அணிவிக்கிறான்

சுமக்க முடியாமல் தள்ளாடுகையில்
கையற்றவன்
தாங்கிக் கொள்கிறான்

உடல் அற்ற ஒருவன்
திடீரென்று நெஞ்சைப் பிளந்து
வார்த்தைகளை
திணித்து
மூடுகிறான்

தொண்டைக்குழியில் வார்த்தைகள்
உயிரை அடைத்து நிற்கிறது…

யாரோ என் வீட்டு ஜன்னலை உடைத்து
கதவின் வழியே போயிருக்கிறார்கள்…

வீடு முழுதும் தேடியும்
மூக்குக் கண்ணாடி கிடைக்கவில்லை

பெரும் குடிகாரனின் அதிகாலை வியாதிபோல்
என் விரல்கள் நடுங்குகின்றன…

நான் எழுதத்
தொடங்குகிறேன்
என் கவிதையை
இதுவரை யாரும் கேட்காத வார்த்தைகளுடன்…

– கவிஞர் வீரமணி



கவிதையும் கவிஞரும் எப்பொழுதும் சும்மா இருப்பதில்லை….

வருவதை லபக்கென்று பிடித்தும் அதை லாபகமாய் கடை விரித்தும் விடுகின்றனர் அவர்கள்.

குழந்தை பிறந்தால் கண் காது மூக்கு நிறம் என ஒரு கூட்டம் விமர்சிக்க வரும் தானே?

கவிதை பிறந்தாயிற்று. பொத்தி வைக்க முடியுமா?

பூ மலர்ந்தால் தேனீக்களுக்குச் சொல்லி விடவா வேண்டும்?

ரசிப்போம்; ருசிப்போம்; கொண்டாட்டம்தான் தேனீக்களுக்கு.

கவிதை பிறப்பும் மலர்வும் தனக்கானதா? இல்லை பிறருக்கானதா? என்பதைப் போல் பெரிய தத்துவம் இது…..



தன் நேரங்களைப் பிய்த்துக் கொண்டு போகும் உயிரிகளிடம் இருந்து நேரத்தைக் காக்கப் போராட வேண்டியிருக்கிறது . கிடைத்த நேரங்களில் அந்தப் போராட்டத்தை நினைத்துப் பாதி நேரம் போய்விடுகிறது. அப்படி இப்படி நெளிந்து கவிதை குழிக்குள் தேடினால்…..

நெடுந்தொலைவு செல்ல வேண்டுமா? இல்லை கிளைகள் பிரிந்து பிரிந்து ஓரிடத்தில் நின்று விடுமா ? இல்லை பாறைகள் திடீரென்று விழுந்து வழி மறைக்குமா?

கவிதை படிக்கும் முன் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறதே!

அது சொல்ல முடியாத‌து.

கவிதை படிக்கும்போது, படிப்பவரை, தலைப்பு எங்கோ ஒரு பாதையை நோக்கி இழுத்துச் செல்லும்.

முதல்வரி, இரண்டாம் வரி, எனத் தொடர்கையில் உள்வெளி திறக்கிறது. வானம் வந்து கைகட்டிக் கிடக்கிறது. வார்த்தைகளும் வார்த்தைகளுக்கு இடையில் உள்ள சொல்லப்படாத பொருள்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னிற்கும்.



வார்த்தைகள் கவிஞரின் வார்த்தைகள் அல்ல. படிக்கும்பொழுது வார்த்தைகள் என் பொருள்களாலே நிறைந்து வழிகின்றன…. புரிதல் வார்த்தைகளைத் தன்வசம் இழுத்துச் செல்லுகிறது.

எனக்குள் சொல்லித் தரப்பட்ட வார்த்தைகள் அதன் நளினத்தை விட்டுக் கொடுக்காமலேயேதான், தன்னை அடையாளப்படுத்துகின்றன.

எங்கோ எதிலோ உணரப்பட்டவை என் உணர்தல்களோடே காட்சிப்படுகின்றன.

இப்பொழுது நான், கவிதைக்குள் என் வார்த்தைகள் சொல்லித் தருவதை உணர்வதா? வார்த்தைகளின் கைகோர்ப்பைக் கொண்டு கவிஞன் என்ன கூற நினைத்தான் எனக் கொள்வதா? தடுமாற்றம் தான்.

ஒவ்வொரு கவிதை படிக்கும் பொழுதும், இந்தத் தடுமாற்றம் இயல்பாய் ஏற்பட்டு விடுகிறது. என்னை அறவே தூக்கி எறிந்துவிட்டு எனக்குப் பதில் கவிஞரை உட்காரவைத்து அவர் வாயினால் அவ்வார்த்தைகளின் பொருளைக் கேட்பதானால் ரொம்ப கஷ்டம் தான்.

கவிதையைப் படிப்பதற்கு ஏன் ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட வேண்டும்? நானா? நீயா? எனக் கவிஞனிடம் ஏன் மல்லுக்கு நிற்க வேண்டும்?

அவன் ஏன் நாம் படிக்கும்பொழுது மூக்கை நுழைக்க வேண்டும்? எழுதியவனுக்கு எழுதியதோடு வேலை முடிந்துவிட்டது. பிறகு ஏன் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவருக்கு முன்பும் தலை வணங்கி மீண்டும் பொருள் சொல்லத் தொடங்குகிறான்?… கவிஞன் தவிர்த்த வார்த்தைகளோடு பயணம் தொடர்ந்தது; தொடர்கிறது…



கவிதைக்குள் உள்ள வார்த்தைகள் பிரபஞ்சத்தில் சிலருக்குச் சொந்தமானதாகவும் இருக்கின்றன. அவர்கள் அந்த வார்த்தைகளுக்கு உரியவர்கள் தான் என உலகம் இலகுவாய் சொல்லி விடுகிறது. அம்மாதிரி வார்த்தைகள் வந்தால் நெருடுகிறது . ஒன்று, இதில் எதைப் போய்ப் பார்ப்பது….

சொல்லாமல் போன வார்த்தைகள் பெரும் அலங்காரங்களுடன் வரவில்லை என்றாலும் நெளிந்து நின்றன‌ கொஞ்சம் பிசுபிசுப்புடன்,…

அப்படியும் புரிந்து நகர்ந்தால்….

உலக மொழிகளுக்குத் தக வார்த்தைகள் சில இடங்களில் வளர்ந்து நிற்கின்றன. அந்த வார்த்தைகளின் மூலக்கூறுகள் எவை என்றே தெரியாமல் அதனை உணர்தல் முடியாது.

எப்பப் போறது அந்த இடத்துக்கு? புரியத் தாமதமாகும் வார்த்தைகளோடு வளரக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

கவிதையைப் படித்து முடிப்பதற்குள் எத்தனை முறை சலிப்பு வீட்டிற்குள் தான்… சுயம் இருக்கிறதே…. அப்பப்பா…
கவிதையின் முடிப்பு எப்பொழுதும் இப்படியே தான் முடிய வேண்டுமா எனில், சில பொழுதுகளில் மாறும். அப்பொழுது மட்டுமல்ல; கவிதை எப்பொழுதும் இனிது…

பாரதிசந்திரன்



பாரதிசந்திரன்
9283275782

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 18, 2020 9:25 pm

வருக பாரதிசந்திரன் அவர்களே.

வருட ஆரம்பத்தில் வந்து ------பிறகு இடைவெளி. நலம்தானே?

உங்களை பற்றி யாவரும் அறிய அறிமுகப்பகுதிக்கு உங்களை 

அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஈகரை விதிமுறைகளை படித்து அதன்படி பதிவுகள் செய்யவும்.

உங்கள் வலைப்பூக்கள் முதலியவைகளை உங்களுடைய 

கையெழுத்து பகுதியில் குறிப்பிடவும்.

வேறொரு இணைய தளத்திற்கு எடுத்து செல்லும் வலைப்பூ வரிகளை 

பதிவில் பதிவிடவேண்டாம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Tue Aug 25, 2020 3:20 pm

கையெழுத்துப் பகுதியில் உள்ளதை மாற்ற வழி கூறவும் . தளத்தில் எவ்விதம் பதிவிடுவது என்பது குறித்த செய்தி எப்பகுதியில் உள்ளது வலைப்பூ என்றவுடன் என் படைப்புகளையே பதிவிட்டேன். அது பிற வலைத்தளத்தில் வந்தவை. தவறெனின் எடுக்க வழி சொல்லவும்



பாரதிசந்திரன்
9283275782
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 25, 2020 4:53 pm

bharathichandranssn wrote:கையெழுத்துப் பகுதியில் உள்ளதை மாற்ற வழி கூறவும் . தளத்தில் எவ்விதம் பதிவிடுவது என்பது குறித்த செய்தி எப்பகுதியில் உள்ளது வலைப்பூ என்றவுடன் என் படைப்புகளையே பதிவிட்டேன். அது பிற வலைத்தளத்தில் வந்தவை. தவறெனின் எடுக்க வழி சொல்லவும்
மேற்கோள் செய்த பதிவு: 1329339

உங்களுக்கு தனிமடல் ஒன்றில் விளக்கம் தந்துள்ளேன்.
அதற்கு மேலும் சந்தேகம் இருப்பின் கேட்கவும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bharathichandranssn
bharathichandranssn
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/01/2020

Postbharathichandranssn Wed Aug 26, 2020 1:05 pm

நன்றி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9748
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Sep 16, 2021 7:30 pm

கவிஞர், கவிதை - பற்றிய ஒரு திறனாய்வு பாரதிசந்திரனது!
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக