புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Today at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
61 Posts - 45%
heezulia
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
41 Posts - 30%
mohamed nizamudeen
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
9 Posts - 7%
வேல்முருகன் காசி
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
6 Posts - 4%
Raji@123
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
4 Posts - 3%
prajai
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
2 Posts - 1%
Barushree
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
177 Posts - 40%
ayyasamy ram
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
9 Posts - 2%
prajai
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
7 Posts - 2%
Guna.D
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
5 Posts - 1%
Raji@123
பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_m10பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2021 5:39 pm

பிள்ளையாருக்கு கண்ணு திறந்திருக்கே. 145683434_3754305557940730_4544252554120440382_n.jpg?_nc_cat=109&ccb=2&_nc_sid=825194&_nc_ohc=bfj21eAXj18AX8WymD5&_nc_ht=scontent.fmaa2-2

பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகா பெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பம்.....
தஞ்சாவூர்,திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம்,திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தன் பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார். ஸ்வாமிகள். வழி நெடுகிலும் உள்ள கிராம மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் திரளாக வந்து ஸ்வாமிகளை தரிசித்து ஆசிபெற்றுச் சென்றனர். அவர்களுக்கெல்லாம் இன்முகத்தோடு அருளாசி வழங்கினார். பழம்,கல்கண்டு ஆகியவற்றைப் பிரசாதமாக கொடுத்துக்கொண்டே நடந்தார் ஸ்வாமிகள்.
மதுரை மாநகரை நெருங்கும் நேரம். அங்கிருந்த ஒரு கிராமத்து ஜனங்கள் அனைவரும் ஒன்றுகூடி "பூர்ணகும்ப" மரியாதையுடன்ஸ்வாமிகளை வரவேற்றார்கள்.அந்த ஜனங்களின் பக்தியையும் ஆர்வத்தையும் பார்த்த ஸ்வாமிகளுக்கு ஏக சந்தோஷம்.சாலையோரம் இருந்த ஓர் அரசுமரத்து வேரில் வந்து அவராகவே அமர்ந்துகொண்டார். அனைவரும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.
அந்த ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் மிகுந்த பக்தியுடன் ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். பிறகு, "பெரியவங்ககிட்ட ஒண்ணு பிரார்த்திக்கிறோம். நாங்க ஏழை சனங்கல்லாம் ஒண்ணா சேந்து, பக்கத்துல ஒரு புள்ளயார் கோயிலை புதுசா கட்டி முடிச்சிருக்கோம்.சாமி பாதம் அங்க படணும்னு வேண்டிக்கிறோம்....கருண பண்ணணும்!" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்
குதூகலத்தோடு எழுந்த ஆச்சார்யாள், "கோயில் எங்கே இருக்கு?" என வினவினார்.

நன்றி முகநூல்.--கண்ணன் அவர்கள்.

தொடருகிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2021 5:43 pm

----தொடர்ச்சி 2.
பஞ்சாயத்துத் தலைவர், "இதோ கூப்பிடு தூரத்திலதான் சாமி இருக்கு. வந்து அருள் பண்ணணும்!" என்றார்.
ஸ்வாமிகள் மிக வேகமாக பிள்ளையார் கோயிலை நோக்கி நடந்தார். மேளதாள-பூரணகும்ப மரியாதையுடன் ஆச்சார்யாள் கோயிலுக்குள்பிரவேசித்தார். கர்ப்பக்கிருகத்துள் ஆறடி உயர சிலா ரூபமாக விநாயகர் வீற்றிருந்தார். விக்கிரகம் கம்பீரமாக பளிச்சென்று இருந்தது. வைத்த கண் வாங்காமல் சற்று நேரம் விநாயகரையே பார்த்த பெரியவா,பஞ்சாயத்துத் தலைவரிடம்,
"கோயிலுக்கு கும்பாபிஷேகம் ஆயிடுத்தோ?" என்று கேட்டார்.
"இன்னும் ஆகலீங்க சாமி" என்றார் தலைவர்.
"அதான் எல்லாமே பூர்த்தியாகி இருக்கே...ஏன் இன்னும் கும்பாபிஷேகம் நடத்தலே?" என்று கேட்டார் ஸ்வாமிகள்.
பஞ்சாயத்துத் தலைவர் பவ்வியமாக பதில் சொன்னார்.; "எல்லாமே பூர்த்தி ஆயிடுச்சு சாமி. இன்னும் ஒரு மாசத்துக்குள்ளாற மகாத்மா காந்தி இந்த வழியா மதுரைக்கு வாராறாம்.அவுரு வர்றன்னிக்கு, 'அவருக்கு முன்னால வெச்சே கும்பாபிஷேகத்த நடத்த ஏற்பாடு பண்ணித் தர்றோம்'னு மதுரையைச் சேர்ந்த சில பெரிய மனுஷங்க உறுதி கொடுத்திருக்காங்க! அதனாலதான் காந்தீஜீக்காகக் காத்துக்கிட்ருக்கோம்!"
ஆச்சார்யாள் தனக்குள் சிரித்துக்கொண்டார். இரண்டு நிமிஷம் கண்ணிமைக்காமல் விநாயகரையே பார்த்துவிட்டுச் சொன்னார்.
"அதுக்கு அவசியம் இருக்காது போலத் தோண்றதே! கணபதி கண்ணத்திறந்து நன்னா பாத்துண்ருக்காரே..இனிமே கும்பாபிஷேகத்த தாமசப்படுத்தப்படாது. ஒடனேயே நல்ல நாள்பார்த்து பண்ணிடுங்கோ."
உடனே பஞ்சாயத்துத் தலைவர், "இல்லீங்க சாமி! கண் தொறக்கிற சடங்கு விநாயகருக்கு இன்னும் நடக்கலீங்க சாமி! நீங்க இப்படி சொல்றத பாத்தா ஒண்ணும் புரியலீங்களே.." என்று குழம்பினார்
.
ஸ்வாமிகள் மீண்டும் சிரித்துக்கொண்டே, "இது நானா சொல்லலே!கணபதி கண்ணைத் திறந்து நன்னா "ஸ்பஷ்டமா" பார்த்துண்ருக்கார். சீக்கிரமே கும்பாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகள் பண்ணுங்கோ! காந்தி வந்தா நன்னா தரிசனம் பண்ணிட்டுப் போகட்டுமே" என்று கூறினார்
குழுமியிருந்த ஜனங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அமைதியோடு காத்திருந்தனர்.
பஞ்சாயத்துத் தலைவருக்கும் குழப்பம் தீரவில்லை. உடனே ஆளனுப்பி விநாயகர் சிலையை வடிவமைத்த ஸ்தபதியை வரவழைத்தனர்.அவரிடம் ஆச்சார்யாள் சொன்ன விஷயம் தெரிவிக்கப்பட்டது.
சிற்பியும் அடித்துச் சொன்னார்; "இல்லீங்க ஸ்வாமி..இன்னும் விநாயகருக்கு கண் தொறக்கலீங்க. தொறந்தா விக்கிரகத்தச் செதுக்கின நான்தானே தொறக்கணும்..இன்னும் அது ஆவுலீங்க.."
மூன்று தடவை ஆச்சார்யாள் காலில் விழுந்து கை கட்டி நின்றார் சிற்பி.
மீண்டும் ஒருமுறை விக்கிரகத்தையே உற்று நோக்கிய ஸ்வாமிகள் "மகா கணபதிக்கு நன்னா கண் தெறந்தாச்சு! அவர் சந்தோஷமா பாத்துண்டிருக்கார். இனிமேலும் தாமதிக்கிறது நல்லதில்லே. சீக்கிரமா ஒரு நல்ல நாள் பாத்து கும்பாபிஷேகத்த நடத்துங்கோ..க்ஷேமம் உண்டாகும்" என்று சொல்லிவிட்டு வேகவேகமாகப் புறப்பட்டுவிட்டார் ஆச்சார்யாள். பரிவாரம் பின்தொடர்ந்தது. ஆச்சார்யாளை அந்த ஊர் எல்லை வரை சென்றுவழி அனுப்பி வைத்துவிட்டுத்திரும்பினர், அத்தனை பேரும்.

தொடர்கிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 03, 2021 5:44 pm

தொடர்ச்சி ----3
சற்று நேரத்துக்கெல்லாம் அந்த ஊர் கிராமப் பஞ்சாயத்து சபை' கூடியது. ஆச்சார்யாள் கூறிவிட்டுப் போன விஷயம் குறித்து அலசி ஆராயப்பட்டது. விநாயகர் விக்கிரகத்தைச் செதுக்கிய சற்று வயதான ஸ்தபதி அடித்துச் சொன்னார்.
"ஆச்சார்ய ஸ்வாமிங்களுக்கு ஞான திருஷ்டில எல்லா விஷயங்களும் தெரிஞ்சுடும்.இருந்தாலும் எங்கையால் நான்இன்னும் கண்ண தொறக்கலே.சாமி எப்டி சொல்றாங்கனு தெரியலே.நானும்கூட விக்கிரகத்துகிட்ட போயி உன்னிப்பாகவனிச்சுப் பாத்துட்டேன்.அப்டி ஆனதா தெரியலீங்க.... இப்ப என்ன பண்றது?"
அங்கே மௌனம் நிலவியது. ஒருவரும் வாய் திறக்கவில்லை. திடீரென்று பன்னிரண்டு வயது மதிக்கத்தக்க உள்ளூர்ப் பையன்ஒருவன் அந்த இடத்துக்கு ஓடி வந்தான்.கை கட்டி நின்றான்
.
அவனைப் பார்த்த தலைவர், "தம்பி! ஏன் இப்படி ஓடி வர்றே? என்ன விஷயம்?" என்று கேட்டார்.
உடனே அந்தப் பையன் "தலைவரே! கோயில் விநாயகர் சிலைபத்தி எனக்கு ஒருவிஷயம்தெரியும்.., சொல்லலாங்களா?" என்று கேட்டான் பவ்யமாக.
"ஒனக்கு என்ன தெரியும்..சொல்லு தம்பி!" என்று மிக ஆர்வம்காட்டினார் தலைவர். கூட்டமும் அந்தப் பையனையே பார்த்துக் கொண்டிருந்தது.
பையன் பேச ஆரம்பித்தான்; "ஐயா தலைவரே! எனக்கு தெரிஞ்ச உண்மையை சத்தியமா சொல்றேங்க. அந்த சாமியார் சாமி[ஆச்சார்யாள்] 'புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு'னு சொல்லிட்டுப் போனது மெய்தாங்க! எப்படீன்னா ஒரு பத்துநாளுக்கு முந்தி ஒரு நாள் உச்சி வெயில்நேரமுங்க.இதோஒக்காந்துருக்காரே..புள்ளையார் விக்கிரகத்தைச் செஞ்ச தாத்தா.. இவரோட பேரப் பையன்..என் சிநேகிதன். என்ன வேலைபண்ணான் தெரியுமா? இவங்க தாத்தா சிலைகளின் கண்ணதொறக்கறத்துக்கு வெச்சிருக்கிற சின்ன உளியையும்,சுத்தியையும் எடுத்துக்கிட்டு,எங்களையும் கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போனான்.
"இதோ பாருங்கடா! எங்க தாத்தா இப்புடித்தான் சிலைங்க கண்ணைத்தொறப்பாருன்'ன்னு சொல்லிகிட்டே ,'புள்ளையாரே,கண்ணத்தொற..புள்ளையாரே,கண்ணத் தொற!'னு அவனும் சொல்லி, எங்களையும்ஒரக்க சொல்லச் சொல்லி, "டொக்கு..டொக்குனு" உளிய புள்ளயாரின்ரண்டு கண்ணுலயும் வச்சு தட்டினான்.."புள்ளையாருக்கு கண் தொறந்தாச்சு"னு எல்லாப் பசங்களும் குதிச்சு ஆடினோம். இந்த விஷயம் ஊர்ல ஒருத்தவங்களுக்கும் தெரியாது. நாங்களும் வெளியிலே மூச்சு வுடலே! இது தாங்க நடந்துச்சு....எங்களை மன்னிச்சுருங்க."
பிரமிப்போடு அமர்ந்திருந்தது கூட்டம். பஞ்சாயத்துத் தலைவர்கண்களில் நீர் சுரந்தது.ஆச்சார்யாளின் மகிமையைப் பார்த்து அந்த ஊரே வியப்பில் ஆழ்ந்தது. சிற்பியின் பேரனுக்கு எட்டு வயதிருக்கும். பஞ்சாயத்து அந்தச் அழைத்து விசாரித்தது. விநாயகருக்கு, தான் கண்களைத் திறந்துவிட்டதை ஒப்புக் கொண்டான். எல்லோரும் கோயிலுக்கு ஓடிச் சென்று விநாயகரைவிழுந்து வணங்கினர். சிற்பி, ஒரு பூதக் கண்ணாடியின் உதவியோடு கணபதியின் கண்களை நன்கு பரிசீலித்தார்.
மிக அழகாக "நேத்ரோன் மீலனம்" [கண் திறப்பு] செய்யப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்.
ஊரே திரண்டு ஆச்சார்யாள் சென்ற திசையை நோக்கி ஓடியது. அடுத்த கிராமத்தில் சாலை ஓரமிருந்த ஒரு பெரிய ஆலமர நிழலில் பரிவாரங்களுடன் இளைப்பாறிக்கொண்டு இருந்தார் ஸ்வாமிகள்.
அனைவரும் ஓடிப் போய் ஸ்வாமிகள் காலில் விழுந்து எழுந்தனர். அந்தப் பஞ்சாயத்துத் தலைவரும்,சிற்பியும் கேவிக்கேவி அழ ஆரம்பித்துவிட்டனர்.
இவர்களைப் பார்த்த அந்த பரப்பிரம்மம் சிரித்துக்கொண்டே கேட்டது; "புள்ளையாருக்குக் கண் தெறந்தாச்சுங்கறத பிரத்தியட்சமா தெரிஞ்சுண்டுட்டேளோல்லியோ? போங்கோ....போய் சீக்கிரமா கும்பாபிஷேகத்த நடத்தி முடியுங்கோ. அந்த பிராந்தியத்துக்கே க்ஷேமம் உண்டாகும்."

=================




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக