ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்

2 posters

Go down

33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Empty 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்

Post by ayyasamy ram Sun Jan 31, 2021 8:14 am

33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் 627417
-
தஞ்சாவூர் மாவட்டத்தில் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா எடுத்து நேற்று மாலை (29-ம் தேதி) அனுப்பி வைத்தனர்.

தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக டி.விஜயா (58) என்பவர் 1988-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார்.

பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பணியாற்றினார். மேலும், கிராமத்தில் உள்ள பெண்களிடம், உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில் தொடங்கி, எதிர்காலத்தைக் கட்டமைக்க சிறு சேமிப்பை ஊக்கப்படுத்தி பெண்களிடம் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டுவந்து, தபால் அலுவலகத்தில் அவர்களுக்கு வங்கிக் கணக்கைத் தொடங்கி அதனை வழிநடத்தினார்.

மேலும், பெண்கள் சொந்தக் காலில் நின்று உழைத்து வருமானத்தைப் பெருக்கும் விதமாக மகளிர் சுய உதவிக் குழுக்களைத் தொடங்கி அதில் பெண்களுக்குப் பல்வேறு பயிற்சிகளையும் வழங்க வழிவகை செய்தார்.

சத்துணவுப் பணியில் ஈடுபட்டாலும், கிராம மக்களிடம் அன்பாகப் பழகி, அவர்களில் ஒருவராகி கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் நடைபெற்று வரும் சுக, துக்க நிகழ்வுகளில் தவறாமல் பங்கேற்று வருகிறார். பணி ஏற்ற நாள் முதல் 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி, பல நேரம் வேறு கிராமத்துக்குப் பணி மாறுதல், பதவி உயர்வு வந்தபோதும், நான் இந்த ஊரிலேயே பணியாற்றுகிறேன் எனக் கூறி பணியாற்றி நேற்று பணி ஓய்வு பெற்றவருக்கு கிராம மக்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதற்காகப் பள்ளி வளாகத்தில் கிராம மக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பணி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் கிராம மக்கள் சார்பில் கோலாட்டம், மங்கள வாத்தியம் முழங்கவும், சீர்வரிசை எடுத்து வந்தனர். தொடர்ந்து கிராம மக்கள் சார்பில் அன்பளிப்புகள், பொன்னாடைகள் போர்த்தி சத்துணவு அமைப்பாளரைக் கவுரவித்தனர். பின்னர் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

பணியாற்றிய இடத்தில் எந்தவித சர்ச்சைக்கும் ஆளாகாமல் இருந்ததோடு, கிராம மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்திய சத்துணவு அமைப்பாளரின் பணி ஓய்வு பாராட்டு விழாவை ஒரு கிராமமே இணைந்து ஏற்பாடு செய்து வழி அனுப்பி வைத்த நிகழ்ச்சி, அந்த கிராமத்தில் அனைவருக்கும் ஒரு நெகிழ்வான தருணமாக அமைந்தது.

வாழ்த்துரையில் பேசிய பலரும், "உங்களுக்கு அரசு பணி நிறைவு வழங்கினாலும், கிராம மக்களாகிய நாங்கள் உங்கள் பணி நிறைவை வழங்காமல், எங்களோடு உங்களது காலம் இருக்கும் வரை, எங்களுக்காகத் தொடர்ந்து பல விழிப்புணர்வையும், சிறுசேமிப்பு உள்ளிட்ட அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க உறுதுணையாகவும் இருக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.

ஏற்புரையை வழங்கிய சத்துணவு அமைப்பாளர் விஜயா பேசுகையில், ”நான் இந்த ஊருக்கு வரும்போது போதிய பேருந்து வசதி, வாகன வசதி இல்லாத நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் முந்திரிக் காடுகளுக்கு மத்தியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் இறங்கி வந்து ஒருவித அச்சத்தோடு பணியாற்றினேன். ஆனால், இந்த ஊர் மக்கள் காட்டிய அன்பால், எனக்குப் பல்வேறு கட்டங்களில் பணிமாறுதல், பதவி உயர்வு வந்தும் அதனை ஏற்காமல் இந்த ஊரிலேயே பணியாற்றினேன்.

குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கு முன் நான் அந்த உணவைச் சாப்பிட்ட பின்னர்தான் குழந்தைகளுக்கு வழங்கினேன். அப்போதுதான் தரமான உணவா இருக்கும் என்பது எனது நம்பிக்கை. அதைக் கடைசி வரை கடைப்பிடித்தேன். திருமணம் செய்து கொண்டால், பின்னால் இந்த கிராம மக்களை விட்டுப் பிரிய நேரிடும் என்பதால், நான் திருமணமே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.

அந்த அளவுக்கு இந்த கிராம மக்களை என்னை ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களில் ஒருவராக பார்த்துக் கொண்டனர். இந்தப் பணி நிறைவு பாராட்டு விழா நான் எதிர்பாராதது. இதற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறனோ” எனக் கூறி விழாவில் ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
----
வி.சுந்தர்ராஜ்
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் Empty Re: 33 ஆண்டுகளாக ஒரே கிராமத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்

Post by T.N.Balasubramanian Sun Jan 31, 2021 2:24 pm

சேவை மனப்பான்மை, உதவும் குணம் இருந்தால் நிச்சயமாக விரும்பப்படுவார்
என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு விஜயா அவர்கள். வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» 79 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழும் டாக்டர் பட்டம் பெற்ற பேராசிரியை – சுவாரஸ்ய தகவல்
» ஓய்வு பெற்ற மறுநாளே தேர்தல் ஆணையராக நியமனம்.. -அரசியலுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் !
»  ஓய்வு பெற்ற எஸ்.ஐ., மகன் ஐ.ஏ.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., பதவிக்கான பட்டியலில் தேர்வாகியுள்ளார்
» ஓய்வு பெற்ற தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு...!
» ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பர்னாலா மீண்டும் அரசியல் பிரவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum