ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

2 posters

Go down

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு Empty உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram Thu Jan 14, 2021 6:16 am

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு 222882
-
மாசடைந்த உவர்நிலத்திலிருந்து உப்புத்தன்மையை
உறிஞ்சி எடுத்து, அந்த நிலத்தை விவசாயத்துக்கு
உகந்ததாக மாற்றும் அபூர்வத் தாவரத்தைத் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம் இனம் கண்டுள்ளது.

வறட்சி, பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால்
மாற்று வழிகளிலும் விவசாயத்தை முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில், நச்சுக் கழிவுகளால் நிலத்தில் ஏற்படும்
உப்புத்தன்மையை இயற்கை முறையில் அகற்றி,
மண்ணை வளமாக்கக்கூடிய தாவரத்தைத் தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.

அபூர்வத் தாவரம்

வழவழப்பான தடித்த இலைகள், ஊதா நிறப் பூக்களைக்
கொண்டு தரையோடு ஒட்டி வளரும் ‘ஓர்பூடு’ எனும்
தாவரத்தைச் சில வீடுகளில் அலங்காரத்துக்கு வளர்ப்பதைப்
பார்த்திருக்கலாம்.

இது அழகுத் தாவரம் மட்டுமல்ல, வேறு பல
குணாதிசயங்களையும் கொண்டுள்ளது. கால்நடைகளுக்குத்
தீவனமாக, புற்றுநோய் எதிர்ப்புத் திறன் கொண்ட மருத்துவ
மூலப்பொருளாக, குறிப்பாக மண்ணிலுள்ள சோடியம் உப்பை
உறிஞ்சி எடுக்கும் திறன் கொண்ட அபூர்வத் தாவரம் இது.

இயற்கையாக வளரும் இந்தத் தாவரத்தின் மூலம், உப்பு
படிந்து மலடாகிக் கிடக்கும் நிலத்தை, பைசா செலவில்லாமல்
வளம்மிக்க விளைநிலமாக மாற்ற முடியும் என்பது
ஆச்சரியமளிக்கக்கூடியது. சுமார் இரண்டு வருட ஆய்வுக்குப்
பிறகு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல்
அறிவியல் துறையினர் இந்தத் தாவரத்தின் தனித்தன்மையை
ஆய்வுபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

உப்பால் வளரும்

இது குறித்து, ஆய்வை மேற்கொண்ட கோவை வேளாண்
பல்கலைக்கழக சுற்றுச்சூழல் அறிவியல் துறை உதவி
பேராசிரியர் ஆர்.ஜெயஸ்ரீ பகிர்ந்துகொண்டது:

‘கடற்கரை ஓரங்களிலும், உவர்நிலங்களிலும் ஓர்பூடு என்ற
தாவரம் அதிகமாக வளர்கிறது. இது அந்தச் சூழலில் செழித்து
வளர்வதால், தனக்குத் தேவையான சத்துகளை உவர்
நிலத்திலிருந்தே பெறுகிறது என்பதை இனம் கண்டோம்.
இதன் தாவரவியல் பெயர் செசுவியம் போர்டுலகாஸ்ட்ரம்
(sesuvium portulacastrum).

விரிவான ஆய்வு மேற்கொண்டதில், மண்ணில் உள்ள சோடியம்
உப்பைத் தனது வளர்ச்சிக்கு இந்தச் செடி அதிகளவில் எடுத்துக்
கொள்வது தெரியவந்தது.

இதை ஆய்வுரீதியாக உறுதிசெய்துள்ளோம். பல வகை
மாசுகளால் பாழடைந்து கிடக்கும் உப்பு படிந்த நிலத்தை,
இந்தத் தாவரம் மெல்லமெல்ல மீட்டெடுத்து நன்னிலமாக
மாற்றுகிறது என்பதால், எதிர்காலத்தில் இதன் தேவை பல ம
டங்கு அதிகமாக இருக்கும்.

70 சதவீத உப்பை உறிஞ்சும்

உப்பு நிறைந்த மண்ணின் மின்கடத்தும் திறன் அதிகமாக
இருக்கும். எனவே, சோடியம் உப்புகளால் அதிகம் மாசுபட்ட
மண்ணை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம்.

இந்த மண்ணின் மின்கடத்தும் திறன் 7 முதல் 14 இ.சி.
புள்ளிகள் (Electrical conductivity) வரை இருந்தது. அதில் மூன்று
நிலைகளில் ஓர்பூடு தாவரத்தை வளர்த்தோம்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் மண்ணின் மின்கடத்தும்
திறன் குறைந்தது. அதாவது உப்புத்தன்மை குறைந்துவந்தது.
அதேசமயம் உப்புச் சத்தை எடுத்துக்கொண்டு ஓர்பூடு தாவரம்
நன்கு வளர்ந்தது. அதிக அளவில் சோடியத்தை எடுத்துக்
கொண்டதால், அதன் தண்டுகள் சிவப்பாகவும், இலைகள்
தடித்தும் வளரத் தொடங்கின.

அடுத்த கட்டமாகத் தொட்டிகளிலும், விளைநிலங்களிலும்
இச்செடியை வளர்த்து ஆய்வு செய்தோம். அதிலும் இதே
முடிவுகள் கிடைத்தன. இந்தச் செடி மண்ணிலிருந்து சுமார்
70 சதவீத உப்புத்தன்மையை உறிஞ்சி எடுக்கிறது.

ஒரு மண் உப்புத்தன்மையுடன் இருந்தால், அங்கு எந்தத்
தாவரமும் வளராது. ஆனால் இந்தத் தாவரமோ அங்கு
வளர்வதுடன், மண்ணை வளமாக்கி விவசாயம் மேற்
கொள்ளவும் வழிவகுக்கிறது.

மேலும் அழகுச்செடியாகவும், கால்நடைகளுக்குத்
தீவனமாகவும், புற்றுநோய் எதிர்ப்பு மருந்து மூலப்
பொருளாகவும், உணவுப் பொருளாகவும் இந்தத் தாவரம்
பயன்படுகிறது. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில்
இறால் மீனுடன் சேர்த்துச் சமைப்பதற்கு இந்தச் செடியைப்
பயன்படுத்துகிறார்கள்.

அவர்கள் இதை வங்கராசி கீரை என அழைக்கிறார்கள்.
இந்தச் செடி குறித்த அடுத்தகட்ட ஆய்வுகள் தொடர்ந்து
நடைபெற்றுவருகின்றன. இந்த ஆய்வுக்குத் துணைவேந்தர்
கு.ராமசாமி, துறைத்தலைவர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர்
ஊக்கமளித்துவருகின்றனர் என்றார்.
-
ஆர்.கிருபாகரன்
நன்றி-
கோவை வேளாண் பல்கலைக்கழக சுற்றுச்சூழல்
அறிவியல் துறை
இந்து தமிழ் நிசை-16 Jun 2017

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு Empty Re: உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு

Post by Dr.S.Soundarapandian Fri Jan 15, 2021 11:06 pm

' ஓர்பூடு தாவரம்
நன்கு வளர்ந்தது.' - 'ஓர்பூடு' என்பது தாவரப் பெயர் அல்ல! அது ஒரு பூண்டு வகையைச் சேர்ந்தது என்பதைத்தான் அப்படி எழுதியுள்ளார்கள்! பூடு = பூண்டு.


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்
» வெள்ளத்தில் அழுகாமல் வளரும் நெல் ரகம் : வேளாண் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
» ஜூலை 15-ந்தேதி தமிழ்நாட்டில் 3.3 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படும் - மருத்துவ பல்கலைக்கழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
» பசு கோமியத்தில் தங்கம்: ஆய்வில் கண்டுபிடிப்பு
» "குழந்தைகளும் கனவு காண்கின்றன' : ஆய்வில் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum