புதிய பதிவுகள்
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_vote_lcapபாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_voting_barபாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_vote_rcap 
7 Posts - 64%
வேல்முருகன் காசி
பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_vote_lcapபாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_voting_barபாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_vote_rcap 
2 Posts - 18%
heezulia
பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_vote_lcapபாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_voting_barபாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை I_vote_rcap 
2 Posts - 18%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2021 9:05 pm

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை 516612
தஞ்சை மண்ணுக்கு ஏராளமான பெருமைகள் உண்டு.
அந்த பெருமைக்குரிய அடையாளங்களில் ஒன்றுதான்
தஞ்சை வாசன் என்கிற பெயரும்.

தஞ்சை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமத்திலும்
இலக்கிய விழாக்கள் தோரணம் கட்டிய 90-களில்
தஞ்சை சீனிவாசன் என்கிற பெயரில் இந்த கவிஞன்
ராஜாளிப் பறவையைப் போல தனது கவிதைச்
சிறகால் வான் அளந்தான்.

சுறுசுறுவென்று சுழலும் தரைச்சக்கரமாய் தஞ்சை
பூமியெங்கும் சுற்றிச் சுற்றி வந்து கவிதை வார்த்த
இந்தக் கவிஞன்… இயல்பிலேயே நகைச்சுவை
உணர்வும் புதுக்கவிதையின் உச்சம் தொட்டு
சிலிர்க்கும் மொழியழகும் கொண்டவர்.

அந்நாட்களில் அவர் அஞ்சல் துறையில் பணிபுரிந்து
கொண்டிருந்தார். நண்பர்களுக்கெல்லாம் சாயங்கால
நேர சடையப்ப வள்ளலாவார்.

அவர் வாங்கித் தந்த தேநீரின் இனிப்பு இன்னமும்
நெஞ்சில் இருக்கிறது. தஞ்சை தமிழ்த்தாய் பேரவை,
தஞ்சை பிரகாஷின் இலக்கியச் சங்கமம், சும்மா
இலக்கியப் பேரவை போன்றவற்றில் தன்னை
இணைத்துக்கொண்டு இலக்கியம் விதைத்தவர்.

தஞ்சையில் பேச்சாளர் இரா.செழியன், கவிஞர்கள்
சுகன், வெற்றிப்பேரொளி, கவிஜீவன், புத்தகன்,
விஜயகுமார், ரவிராஜ், சாலியமங்கலம் சபாபதி,
பாபநாசம் மணிமுடி, இளங்கோ, தி
யாக ஜோதி ராமலிங்கம், ஏழைதாசன்
(இன்று பேராசிரியர் மாதவன்) இவர்களோடு தோளோடு
தோள் நின்று தமிழில் பாசப் பாசனம் செய்தார் கவிஞர்
வாசன்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தஞ்சையில் இருந்து
புறப்பட்டு திருவாரூருக்கு கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின்
வீட்டுக்கு வந்துவிடுவார். நண்பர்கள் ஜமா கூடிவிடுவோம்.
எழுத்தாளர் ராஜகுரு, எஸ்.ராஜகுமாரன், பையூர்
பாநலவேந்தன், மருதவாணன், கனகராஜன், காட்டூர்
கவிதாசன், பாட்டரசர் பாலைக்கண்ணன், மானா பாஸ்கரன்,
திருவாரூர் குணா, நீதிதாசன் என்று ஆரூர் தமிழ்நாடனின்
வீட்டில் இலக்கிய தடபுடல்தான்.

விடிய விடிய தமிழ் நெய்திருப்போம். மகிழ்ந்திருப்போம்.
இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து திருவாரூரில்
தங்கிவிட்டு பிரியவே மனமின்றி தஞ்சைக்குப் பேருந்து
ஏறுவார். அவருடன் நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் பல
மேடைகளில் கவிதை வாசித்திருக்கிறோம்.

அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ்
மாநாட்டில் அந்நாளைய முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து
கவிதைக்கான இரண்டாவது பரிசினைப் பெற்றிருந்தார்
வாசன்.

கர்வமோ, பொறாமையோ இல்லாத அன்பின் நிழலாக
வாழ்ந்தவர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84145
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 13, 2021 9:06 pm

பாடலாசிரியர் அமரர் தஞ்சை வாசன் - ஞாபகங்களில் கூடுகட்டும் பாட்டுப் பறவை
songwriter-amarar-tanjay-vasan-a-bird-of-remembrance

90-களின் பிற்பகுதியில் சென்னை வந்த கவிஞர் வாசன்…
கோடம்பாக்கத்தின் கதவுகளை தனது தங்கத் தமிழால்
தட்ட ஆரம்பித்தார். மெல்லத் திறந்தது அவருக்கான
கதவு. ஆம். ‘ஆஹா’ படத்தில்

'முதன்முதலில் பார்த்தேன்,

காதல் வந்ததே...

எனை மறந்து எந்தன் நிழல் போகுதே...

என்னில் இன்று நானே இல்லை,

காதல் போல ஏதும் இல்லை...'


என்ற பாடல்தான் வாசனுக்கு முகவரி தந்த முதல் பாடல்.
இப்போது, 40-ஐ தாண்டிய அனைத்து தமிழர்களின் நேயர்
விருப்பமாக இருக்கும் பாடல் அது. தனது எளிமையான
அழகியல் வரிகளால் 150 பாடல்களுக்கும் மேல் எழுதி
புகழின் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தார் வாசன்.

'பூந்தோட்டம்' என்ற படத்தில்…

'சுட்டும் விழிச் சுடர் பார்த்து

மனம் கெட்டதைச் சொல்லட்டுமா...

கொட்டும் பனித் துளி கூட

என்னைச் சுட்டதைச் சொல்லட்டுமா...

கம்பனிடம் கடன் கேட்டுக்

கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா...’ என்றெழுதி
ரசிகர்களைக்
கவர்ந்தார் வாசன்.

அப்போது 'ஆனந்த மழை' என்கிற பெயரில் ஒரு படம்
வெளிவந்தது. இது 'தோழி பிரேமா' என்ற தெலுங்கில்
இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படம்.

இத்திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் நெய்தவர்
வாசன்தான். 'ஆனந்த மழை' படத்தில் வாசன் வைத்த
பாட்டுப் பந்தியின் சுவை புதிதாக இருந்தது.

அப்படத்தில் அவர் எழுதியிருந்த

'உறவொன்று என்னை உரசியதே

உதடுகள் மௌனம் உளறியதே

முதல் மழையின் ஒரு துளி தீண்டி,

உயிர் தரை நனைகிறதே...'

என்ற வரிகளை மொண்டு வந்த அந்தப் பாடல் தமிழ்
ரசிகர்களின் இதயத்தை நனைத்தது.

வேகவேகமாய் வளர்ந்து வந்த… கவிஞர் வாசன் தமிழ்
திரையிசை ரசிகர்களின் நெஞ்சில் சோகம் படரச் செய்து…
கண்ணீர் சிந்த வைத்து உடல்நலக் குறைவால் 1998-ம்
ஆண்டு டிசம்பர் 11 அன்று மரணமடைந்தார்.

வண்ணம் கொண்ட தனது மொழிக் குடையால் தமிழுக்கு
நிழல் விரித்த இந்தக் கவிஞன் காலமானது மின்சாரக்
கவிஞன் பாரதியின் பிறந்த நாள் அன்று என்பது இந்த
சோகத்திலும் உற்றறிய வேண்டிய ஒரு தகவலாகும்.
-
----------------------------------------
- மானா பாஸ்கரன், எழுத்தாளர்.
புத்தனின் டூத் பேஸ்ட்டில் உப்பு இல்லை,
அன்ரூல்டு நோட்டு உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
நன்றி- இந்து தமிழ் திசை
\

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக