புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10 
3 Posts - 7%
heezulia
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_m10தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 7:14 pm


சென்னை:
சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது:

வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த
24 மணிநேரத்தில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்,
இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு
உள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, நாகப்பட்டனம்,
தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்
கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏனைய மாவட்டங்களில்
மிதமான மழை பெய்யக்கூடும்.

வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக,
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழைக்கு
வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக கேளம்பாக்கத்தில்
21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் நகர் மற்றும் புற நகர் பகுதிகளில் மேகமூட்டத்துடன்
காட்டப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று
காற்று வீசும் என்பதால், அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம்
கேளம்பாக்கத்தில் 21 செ.மீ., சென்னை அண்ணா பல்கலை,
தாம்பரத்தில் தலா 16 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 7:26 pm

சென்னை :
சென்னையில் நேற்று, 10 மணி நேரத்திற்கும் மேலாக விடாது
கன மழை கொட்டித் தீர்த்தது. இதுபோல, பல மாவட்டங்களிலும்
தொடர்ந்து மழை பெய்தது. இன்றும் மழை தொடரும் என,
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
டிச.,25 முதல், மீண்டும் பருவமழை துவங்கி, டெல்டா மாவட்டங்கள்,
தென் மாவட்டங்களில் பரவலாக பெய்துள்ளது.

நேற்று, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என,
வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் ஆர்வலர்கள் அறிவித்திருந்தனர்.ஆனால், இதற்கு மாறாக, சென்னை மற்றும்
சுற்றுப்புற மாவட்டங்களில், எதிர்பாராத அளவுக்கு திடீர் மழை
கொட்டித் தீர்த்தது.

நேற்று முன்தினம் இரவில் துவங்கிய மழை, நள்ளிரவையும்
தாண்டி கொட்டியது. இந்த மழை, நேற்று மாலை வரை வெளுத்து வாங்கியது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,
ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை
பெய்தது.
சென்னையில் எழும்பூர், அண்ணாசாலை, தி.நகர், ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர், அண்ணாநகர், அடையாறு, மயிலாப்பூர், போரூர், கிண்டி என, பரவலாக இடைவிடாமல் கன மழை கொட்டியது.தாம்பரம், பல்லாவரம், தரமணி, சோழிங்கநல்லுார், திருத்தணி, செங்கல்பட்டு, பூந்தமல்லி என, சென்னையின் சுற்று வட்டாரங்களிலும் மழை கொட்டியது.
-
போக்குவரத்து பாதிப்பு
-
விடாது மழை கொட்டியதால், பெரும்பாலான இடங்களில், காலை முதல் நேற்றிரவு வரை, வெள்ளம் தேங்கி நின்றது. பல இடங்களில் குடியிருப்புகளை மீண்டும் வெள்ளம் சூழ்ந்தது.

முன் எச்சரிக்கையின்றி, திடீரென விடாது கொட்டிய மழையால்,
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திடீர் மழையால்,
சாலையில் தேங்கிய மழை வெள்ளத்தை சமாளிக்க முடியாமல்,
மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி பணியாளர்கள் தவிப்புக்கு
ஆளாகினர். வெள்ளநீரை அகற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.

சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் அனைத்து இடங்களிலும், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

பல இடங்களில் ஏரிக்கரையை ஒட்டிய குடியிருப்புகள், கூவம், அடையாறு ஆற்றங்கரை குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்தது.

ஏரிகள் திறப்பு

மழைநீர் வரத்து காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளில் இருந்து, தண்ணீர் திறந்து விடப்பட்டது. வளிமண்டல சுழற்சி மற்றும் திடீரென மழை மேகங்கள் ஓரிடத்தில் கூடியதால், இந்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பகல் வரையிலும், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில், மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்றும் தொடரும்

இன்று முதல் மூன்று நாட்களுக்கான வானிலை குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்த பேட்டி: இன்று நண்பகல் வரை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, கடலுார், நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், கனமழையும்,

மற்ற கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும்.இன்று பகல் முதல், நாளை காலை வரையில், நீலகிரி, கடலுார், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.

அனேக இடங்களில், நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யும். ஒரு சில இடங்களில், நாளை மறுநாள் மிதமான மழை பெய்யும்.

வரும், 9ம் தேதி, தென் மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கன மழையும்; மற்ற இடங்களில் மிதமான மழை பெய்யும்.இவ்வாறு, அவர் கூறினார்.

கொட்டிய மழை எவ்வளவு?

காலை மழை அளவு:

நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:30 மணி வரையில், சென்னை நுங்கம்பாக்கம், மதுராந்தகம், ஹிந்துஸ்தான் பல்கலை பகுதியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது. தரமணி, கேளம்பாக்கம், அண்ணா பல்கலை, திண்டிவனம், சென்னை விமான நிலையத்தில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது.

தாம்பரம், 4, மாமல்லபுரம், மணிமுத்தாறு, எண்ணுார், திருக்கழுக்குன்றம், சோழவரம், செங்குன்றம், செய்யூர், அம்பத்துார், 3 செ.மீ., மழை பெய்துள்ளது.


மாலை மழை அளவு:
நேற்று காலை, 8:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மீனம்பாக்கம், பூந்தமல்லியில், 12 செ.மீ., மழை பெய்துள்ளது. தரமணி, 10; திருவள்ளூர் ஆர்.கே.பேட்டை, நுங்கம்பாக்கம், 9; திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, 7; பூந்தமல்லி, 6; அண்ணா பல்கலை, தாம்பரம், 5; சோழவரம், செங்குன்றம், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 7:27 pm

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Tamil_News_large_2684179
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு XWK3pe5WQsnrhflfuqtL+IMG_E2086

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக