ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?

Go down

மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Empty மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?

Post by ayyasamy ram Sun Dec 27, 2020 12:22 pm

மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? 2a
-

அது திரேதாயுகம். முப்பத்து முக்கோடி தேவர்களும்
அமராவதி எனும் தேவலோக நகரத்தின் வாயிலில்
இந்திரனின் வருகைக்காக காத்திருந்தனர்.

காண்போர் கண்கள் கூசும் அளவுக்கு ஒளி மிகுந்த
யானை அசைந்து நடந்து வந்து கொண்டிருந்தது.
இந்திரன் அதன் மீது அமர, தேவலோகமே தனக்குக்
கீழ் என தும்பிக்கையை வளைத்துக் காண்பித்தது.
இந்திரன் அதன் மஸ்தகத்தைத் தட்டிக் கொடுக்க,
கர்வம் அதன் சிரசின் உச்சியைத் தொட்டது.

அப்போது துர்வாசர் வைகுந்தத்திலிருந்து பிரசாதமாக
பூமாலையை பெற்றுக் கொண்டு அமராவதியின்
எல்லையை அடைந்தார். இந்திரன் இனிதே வரவேற்றான்.

தேவர்கள் இந்திரனை நோக்கி தலை தாழ்த்தி
வணங்கினார்கள். துர்வாசரை நோக்கி இருகரங்களையும்
தூக்கித் தொழுதார்கள். துர்வாசர் கண்கள் மூடி கரம்
குவித்தார்.

ஆனால், அந்த யானை ஆர்ப்பாட்டமாய் தும்பிக்கையை
தூக்கி ஆசியளித்தது. தேவர்கள் திகைத்தார்கள். துர்வாசர்
திடுக்கிட்டு தகுதிக்கு மீறி ஆரவாரிக்கிறதே எனக் கோபம்
கொண்டார். பிறகு தான் கொண்டுவந்திருந்த பூமாலையை
இந்திரனிடம் நீட்டினார்.

இந்திரன் கீழே இறங்காது கால் அகட்டி அந்த மாலையை
பெற்றுக் கொண்டான். மென்மையான மாலை மலை
போல் கனத்தது. ஒரு கணம் தடுமாறியவன் கர்வம் பொங்க
திமிறிக் கொண்டிருந்த யானையின் தலையில் வைத்தான்.
அது அதிர்ந்தது.

துதிக்கையை வளைத்து பூமாலைப் பற்றியது.
தூக்கிப் பார்த்தது. முடியாது போகவே முழுவலிமையோடு
இழுத்தது.

அது எம்பெருமானின் பிரசாதம் என்று தேவர்கள்
அலறினார்கள். அடங்காத அந்தக் களிறு வானத்தில் தூக்கிச்
சுழற்றியது. சட்டென்று தரையில் அறைந்து, காலால் அழுத்தி
மிதித்தது. உடனே பெருங்குரலெடுத்து அந்த யானை அலறி
கால் மடங்கிச் சரிந்து வீழ்ந்தது. ஈரேழ் உலகமும் இருள்
சூழ்ந்தது.

தூக்கியெறியப்பட்ட இந்திரன் நாராயணின் பாதம் பற்றினான்.
தேவர்களின் நிலையை அறிந்த அசுரர்கள் இதுதான் சமயம்
என்று போர் தொடுத்தார்கள். தேவர்கள் அசுரர்களின்
தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் தவித்தனர்.

‘வாருங்கள் பாற்கடலை கடையலாம். கிடைக்கும் அமுதத்தை
பங்கிட்டுக் கொள்ளலாம்’என்ற எம்பெருமானின் அறிவுரையை
அசுர சேனாதிபதிகளிடம் தேவர்கள் ஆசையாகப் பேசினர்.
அசுரர்கள் அமிர்தமா என வாய் பிளந்தனர்.

பேரலைகளால் கொந்தளித்துக் கிடந்த பெருங்கடலின்
மையமாக நிமிர்ந்திருந்த மேருவின் உச்சியில் சூரியனின்
பொன்கிரணங்கள் பட்டு பாற்கடல் தங்கமாக தகதகத்திருந்தது.

வாசுகி எனும் மாபெரும் பாம்பை மேருவைச் சுற்றி வலிமையாக
இறுக்கினார்கள். எம்பெருமானான மகாவிஷ்ணு பாற்கடல்
பரந்தாமன் எவராலும் பிளக்க முடியாத, வஜ்ஜிரம் போன்ற
ஓடுகளையுடைய கூர்மம் எனும் ஆமை வடிவில் அவதரித்து
மேருவின் கீழ் அமர்ந்தார். மேரு நிலை பெற்றது.

மேரு எனும் மந்திர மலையை தேவர்களும் அசுரர்களும்
ஆளுக்கொரு பக்கம் வாசுகிப் பாம்பைப் பற்றி இடதும், வலதுமாக
சுழற்ற அகிலமே அதிர்ந்தது. காட்டாற்றின் வேகத்தில் தோன்றும்
நீர்ச் சுழலாக பெருவட்டச் சக்கரத்தின் மையத்திலிருந்து
அற்புதமான விஷயங்கள் பொத்துக் கொண்டு கிளர்ந்தெழுந்தன.

திவ்ய வடிவோடு திருமகள், வெண் குதிரையான உச்சைச்சிரவஸ்,
அதிவேகத்தோடும், ஐராவதம் என வந்ததைப் பார்த்து
பரவசமாயினர்.

அதன் பிறகு ஆலகாளம் என்ற கடும் விஷத்தை வாசுகி கக்கியது.
அதன் கடும் நெடியில் தேவர்களும், அசுரர்களும் கலங்கித்
தவித்தனர். கயிலை நாயகனின் திருவடி பற்றினர்.

ஈசன் கலங்காது அதைத் தன் கண்டத்தின் மேலேற்றி அடைத்து
திருநீலகண்டனாக காட்சி தந்தான். இறுதியில் பேரொளி
பெருமையத்தின் நடுவே நிறைந்து தளும்பிய அமிர்தகுடம்
மேலெழுந்தது.

ஆராவமுதனான நாராயணன் அமிர்தத்தை அள்ளி எடுத்து
வந்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது? Empty Re: மகாலட்சுமி அவதாரம் எப்படி ஏற்பட்டது?

Post by ayyasamy ram Sun Dec 27, 2020 12:25 pm

பாற்கடல் பரந்தாமனின் திருமார்பில் நிரந்தரமாக தான்
உறைய வேண்டும் எனும் பேரவா கொண்டாள் மஹாலட்சுமி.
த்ரைலோகி தலத்தை அடைந்தாள். அங்கு உறையும்
கல்யாணசுந்தரேஸ்வரரை வேண்டி அத்தலத்தில் அமர்ந்தாள்.

ஈசனை எவ்வாறு பூஜிப்பது என்று தவித்தாள்.
மனசீகமான பூஜையைத் தாண்டி ஏதேனும் புஷ்பங்களால்
அர்ச்சித்தால் என்ன என்று நினைத்தாள். புஷ்பங்கள் அர்ச்சனை
முடிப்பதற்குள் வாடிப்போகுமே என்று கவலையுற்றாள்.
அந்தப் பிரதேசத்தில் பட்ட மரம் ஒன்றிருந்தது. அதன் கீழ் சென்று
அமைதியாக அமர்ந்தாள்.

சட்டென்று அவளுக்குள் மின்னலாக யோசனைக் கீற்று
வெளிப்பட்டது. தன் உயிர் திரட்சியாக விளங்கும்
பிராணனைக் கொண்டு ஈசனை வழிபட்டாள். அந்தப் பிராணன்
இடகலை, பிங்கலை, சுழிமுனை என்று மூன்றாகப் பிரிந்து
ஈசனை அடைந்தது. அதேசமயம் அவள் அமர்ந்த அந்த மரம்
துளிர்க்கத் துவங்கியது.
பச்சைமாமலைபோல் மேனியனின் நிறம் அதில் படர்ந்தது.

திருமகளிடமிருந்து வெளிப்பட்ட பேராற்றல் மிகுந்த பிராண
சக்தியானது, மூவிதழாகப் பிரிந்தது. சிறு சிறு இலை வடிவம்
கொண்டது. தனித்தனியாக இருந்தாலும் ஒரு சிறு காம்பின்
மூலம் இணைந்தது. விருட்சத்தில் இலைகள் அதிகமாயின.
அடுத்தடுத்து அடர்ந்த கானகமாக பெருகின.

இடையறாத அதிர்வுகளாலும், பக்தியின் வெம்மையாலும்
அந்த மூவிலைகளின் வாசமும், ஈசனின் சாந்நித்தியமும்
அவ்விடத்தை நிறைத்தன.

விஸ்வம் எனும் பிரபஞ்சத்தையே அசைக்கும் ஈசனுக்கு
உரியதாக அந்த இலைகள் இருந்ததால் வில்வம் எனும் பெயர்
பெற்றது. ஈசனுக்குச் செய்யும் பூஜையில் ரத்னம்போல தனித்
தன்மை பெற்றது. மஹாலட்சுமியின் சொரூபமாக அந்த
மூவிலைகளும் விளங்கின.

தொடர்ந்து தவம் புரிந்து வில்வ தளங்களால் அன்னை
அர்ச்சித்தாள். வைகுந்த வாசன் த்ரைலோகி எனும் அந்தத்
தலத்தில் சயனக்கோலத்தில், பாற்கடலில் எவ்வாறு பள்ளி
கொண்டிருக்கிறானோ அவ்வாறே இங்கும் ஒயிலாகக் கிடந்தார்.

பெருங்கருணைகொண்டு, திருமகளை தன்னிலிருந்து
எப்போதும் பிரியாத வண்ணம் தம் திருமார்பில் சேர்த்துக்
கொண்டார்.

ரிஷபாரூட சர்வேசனாக விளங்கும் சுந்தரேஸ்வரரை
தரிசிப்பதற்காக பாற்கடல் பரந்தாமன் பூவுலகு
வந்திறங்கினார். ரிஷபாரூடராக தரிசித்தார். இவ்வாறு
திருமகள் எம்பெருமானோடு இணைந்த வைபவமும்,
வில்வம் எனும் புனித இலைகள் உருவெடுத்ததே
இத்தலத்தில்தான். வில்வமரம் பூரண லக்ஷ்மி கடாட்சம் மிகுந்த
மரமாகும்.

திருமகள் தவம் செய்தமையால் புரம் என்றும் அழைக்கலாம்.
இத்தலமே தற்போது திரிலோகி என அழைக்கப்படுகின்றது.
இத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகில் உள்ளது.

இதுவே மஹாலட்சுமி உத்பவித்ததாக கூறப்படும் புராணக்
கதை.
-
-------------------------
நன்றி- குங்குமம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum