புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
82 Posts - 44%
ayyasamy ram
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
62 Posts - 34%
i6appar
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
11 Posts - 6%
Anthony raj
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
7 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
4 Posts - 2%
Guna.D
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
3 Posts - 2%
கண்ணன்
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
1 Post - 1%
மொஹமட்
கடவுளோடு தூங்கினேன்! I_vote_lcapகடவுளோடு தூங்கினேன்! I_voting_barகடவுளோடு தூங்கினேன்! I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளோடு தூங்கினேன்!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 6:56 pm

அகத்தைத் தேடி 41: கடவுளோடு தூங்கினேன்!


ஒருமுறை அல்ல நான்குமுறை சமாதியிலிருந்து உயிருடன் வெளிப்பட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடமாடியவர் குழந்தையானந்த சுவாமிகள். தமது முந்தைய சமாதிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார். அது மட்டுமல்ல சமாதியில் இருந்தபடியே சூட்சும உடலுடன் தம்மைப் பற்றிய நூலுக்கு முன்னுரையும் வழங்கியிருக்கிறார்.

கைபட்டாலே பொடியாக நொறுங்கும் பழைய பிரதி ஒன்றில் குழந்தையானந்த சுவாமிகளின் சரித்திரம் அச்சிடப்பட்டுள்ளது. அதில் காணப்படும் முன்னுரை ‘மத்யஸ்தர் மாதுஸ்ரீ சாரதாம்பாள் அம்மையார் மூலமாக யோகபீடத்தில் அருளியது’ என்ற குறிப்பு உள்ளது. நூல் வெளியான சில ஆண்டுகளுக்கு முன்னரே மதுரையில் சமாதியான குழந்தையானந்தா, தற்போது முன்னுரை வழங்கியிருப்பது ஆன்மிக உலகில் ஆச்சரியமில்லை. இவ்வாறு சரீரத்தைத் துறந்த பிறகும் மத்யஸதர் மூலம் எழுதுவது யோகசித்திகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


மதுரை ராமசாமி ஐயருக்கும் தென்காசி திரிபுரசுந்தரிக்கும் பிறந்த குழந்தையானந்த சுவாமிகளின் இயற்பெயர் ராஜகோபாலன். செல்வச் செழிப்பான குடும்பம். அதீத தெய்விக நம்பிக்கை. அன்னதானம், ஏழை எளிய மக்களுக்கு வாரிவழங்கும் சுபாவம் கொண்ட தம்பதிக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

ஆலயத்தில் வளர்ந்த குழந்தை
ஒருநாள் மீனாட்சி அம்மையின் சந்நிதியில் நின்று, எங்களுக்கு ஒரு குழந்தை பிறந்தால் போதும், அந்தக் குழந்தையை உன்னிடமே கொண்டுவந்து விட்டுவிடுகிறோம் என்று வேண்டிக்கொண்டனர். அவ்வாறே குழந்தை பிறந்தது. குழந்தையை கோயிலில் கொண்டுவந்து விட்டனர். குழந்தை ஒன்பது வயதுவரை கோயிலில் வளர்ந்தது. ஆலயத்தில் விளையாடியபடி பக்தர்கள் தரும் பிரசாதத்தைச் சாப்பிட்டு, அங்கேயே உறங்கியது. பின்னாளில் குழந்தையானந்த சுவாமி ‘நான் கடவுளோடு தூங்கியவன்' என்று சிரித்துக்கொண்டே கூறுவது வழக்கம்.

சித்தர்கள் மூலம் யோக மந்திரங்கள், பட்சியோகம், நந்தி வித்தை முதலான சித்திகளைச் சிறுவயதிலேயே கற்றான் சிறுவன் ராஜகோபாலன். இச்சிறுவனை வடநாட்டிலிருந்து கணபதி பாபா என்ற மகான் தனது சீடராக ஏற்று சந்நியாசமும் அளித்தார்.

பின்னர் கணபதி பாபாவுடன் காசிக்குச் சென்று அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து சமாதி ஆகி பின்னர் அந்தச் சமாதியிலிருந்து வெளிப்பட்டு த்ரைலிங்க சுவாமிகள் என்ற பெயருடன் 150 ஆண்டுகள் வாழ்ந்ததாகத் தெரிகிறது.

குழந்தை ஆனார்
ஆஜானுபாகுவாக இருந்த சுவாமிகளுக்கு குழந்தை ஒன்று மாலைபோட விரும்பியதால் தன் உருவத்தைக் குறுக்கி குழந்தை எளிதில் மாலை போடும்படியாக ஒன்றே முக்கால் அடி உயரம் உள்ளவரானார். அது முதற்கொண்டு குழந்தையானந்த சுவாமிகள் என்று அழைக்கப்படலானார்.

திருவண்ணாமலையில் குழந்தையானந்த சுவாமிகள் இரண்டாவது சமாதி அடைந்தார். பின்னர் அந்தச் சமாதியிலிருந்து குறுகிய குழந்தை வடிவிலேயே வெளிப்பட்டு மக்களிடையே உலவ ஆரம்பித்தார். பின்னர் அங்கிருந்து காஞ்சிபுரம் சென்று அங்கு பல ஆண்டுகள் இருந்தார். மக்களின் நோய் தீர்ப்பதும், ஆன்மிகக் கருத்துக்களை தம்மை அண்டியவருக்கு உபதேசிப்பதுமாக இருந்தார்.

தென்காசியில் தன் பக்தரான கதிர்வேலன் வீட்டில் மூன்றாவது சமாதியை அடைந்தார். பின்னர் அங்கிருந்து மதுரைக்கு வந்து 1932-ம் ஆண்டு நான்காவது சமாதி கொண்டார்.

தொடர்கிறது
நன்றி தமிழ் ஹிந்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 6:57 pm

குள்ளமான உருவம், எப்போதும் வாயில் சாளவாய் ஒழுகும். பருத்த தொந்தி. கால்களைப் பரப்பியபடி இருகைகளையும் முன்புறம் ஊன்றிக் கொண்டுதான் உட்காருவார். யாரையாவது பார்க்க விரும்பவில்லை என்றால் குப்புறப் படுத்துக்கொண்டு விடுவார். பேச்சிலும் மழலை இருக்கும்.
கடவுளோடு தூங்கினேன்! 614965
கஞ்சியே உணவு. காப்பி விரும்பிச் சாப்பிடுவார். இப்போதும் அவர் பக்தர்கள் அவர் படத்துக்கு முன்னால் காப்பியை நிவேதனம் செய்து பருகும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

சலவைத் தொழிலாளிக்கு உபதேசம்
சுவாமிகள் சாப்பிட்டானதும் அவர் உத்தரவுப்படி பக்தி சிரத்தையோடு பெரிய ஞானக் குதம்பை அழுகுணிச்சித்தர், குதம்பைச் சித்தர் பாடல்களை சின்னப்பயல் என்கிற சலவைத் தொழிலாளி படிப்பது வழக்கம். கஞ்சி கொடுத்தால் என் பிள்ளைக்கு முதலில் கொடு என்று சலவைத் தொழிலாளி சாப்பிட்ட பின்னரே அவர் சாப்பிடுவார்.

பக்த சிரோன்மணிகள், பண்டிதர்கள், வேதவிற்பன்னர்கள் என்று பலரும் தமக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.
சின்னப்பயலுக்கு மஹாவாக்ய உபதேசம் செய்தார் சுவாமிகள். மஹாவாக்ய உபதேசம் என்பது கிடைத்ததற்கு அரிதானது. குருவிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பயின்று பக்குவம் பெற்றவர்களுக்கு மட்டுமே மகான்களால் உபதேசிக்கப்படுவது.

எப்போதும் மழலைப் பேச்சு பேசும் குழந்தையானந்த சுவாமிகள், அம்மந்திரத்தை அட்சர சுத்தமாக கணீரென்று உச்சரித்து சின்னப்பயலுக்கு உபதேசம் செய்தார். அவருடன் இருந்த செல்லப்பா சுவாமிக்கும், பரசுராம் அய்யருக்கும் வேறு சில ஓம்கார மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, இதை வீண்செலவு செய்துவிடாதீர்கள். ஆத்ம சாட்சாத்காரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

நாளைக்குச் சொல்கிறேன்
அரிய வகை மூலிகைகளையும் அவை காணப்படும் இடங்களையும் நன்கறிந்தவர் சுவாமிகள். ஒரு முறை சுருளிமலையில் தான் பார்த்த கொடியின் விசித்திர அமைப்பை சுவாமிகளிடம் விவரித்தார் செல்லப்பா என்கிற சித்த வைத்திய சுவாமிகள்.

‘ஓ அதுவா? அதைக் கிள்ளினால் வருகிற பாலை உண்டாயா?’
‘ஐயோ ஒரே கசப்பாக இருந்ததால் துப்பிவிட்டேன்’.
‘அடடா சாப்பிட்டிருந்தால் 200 வயது வாழலாமே’ என்றார் சுவாமிகள் சிரித்தபடி.
அதை எனக்கு மறுபடி காட்ட முடியுமா என்று கேட்டார் சித்த மருத்துவர்.
நாளைக்குச் சொல்கிறேன் என்று நாள்களைக் கடத்திவிட்டு, பிறகு சித்த மருத்துவர் மனதில் அந்த சிந்தனையே இல்லாமல் பண்ணிவிட்டார்.

பத்தாவது ஓட்டை

ஒரு முறை மதுரையில் ஒரு லாட சன்னியாசி, சுவாமிகளைப் பார்த்துக் கேட்டார்.

ஏன் இப்படி சமாதிகளில் மறைந்த பிறகும், மறுபடி தோன்றுகிறீர்கள்?
‘நான் என்னடா? உன்னைப்போல் ஒன்பது ஓட்டைகளில் அடங்கியவனா? பத்தாவது ஓட்டை செய்துகொண்டு தப்பித்து விடுவேன்' என்றார் சுவாமிகள்.
பிறப்பும் இறப்புமாய் தோன்றி மறையும் மானுடப் பெருங் கூட்டத்தில் எங்கே பிறந்து எந்தப் பெயரில் சுவாமிகள் இப்போது உலவுகிறாரோ யார் அறிவார்?



தஞ்சாவூர்க்கவிராயர்
நன்றி தமிழ் ஹிந்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Sat Dec 26, 2020 7:05 pm

கடவுளோடு தூங்கினேன்! 1571444738 ஐயா. முதல்முறையாகப் படிக்கிறேன்.



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 26, 2020 8:50 pm

-ஸ்ரீ குழந்தையானந்தர் என்ற பெயரில் மதுரையில் உலாவி
வந்து ஏராளமானோருக்கு அருள் பாலித்த பெரும் மகானின்
வரலாறு மெய்சிலிர்க்க வைக்கும் ஒன்று.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை அடுத்த
சமயநல்லூரிலே அவதரித்த மஹான் ஸ்ரீ குழந்தையானந்தர்.
அங்கு ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்ற அம்பிகையைப்
போற்றி வணங்கும் பக்த குடும்பம் வாழ்ந்து வந்தது.

குழந்தைப் பேறு இல்லாத தன் நிலையை எண்ணி வருந்திய
அந்த தம்பதியினர் குழந்தை வரம் வேண்டி அம்பிகையை
உருக்கமாக வேண்டியதோடு குழந்தை பிறந்தால் அதை
அம்பிகைக்கே அர்ப்பணித்து விடுவதாகப் பிரார்த்தனையும்
செய்து கொண்டனர்.

ஒரு நாள் தம்பதிகள் அம்மனுக்கு அபிஷேகம் செய்ய
, பழம்,புஷ்பம் உள்ளிட்ட தேவையான அனைத்தையும்
நைவேத்திய பிரசாதத்துடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு
எடுத்துச் சென்றனர்.

அபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஐயர்
உள்ளே சென்றார். மேலக்கோபுர வாசலில் சர்க்கரைப்
பொங்கல், வடை போன்ற நிவேதனப் பொருள்களுடன்
பின்னால் தொடர்ந்து கொண்டிருந்த திரிபுரசுந்தரியிடம்
இரு பிச்சைக்கார சிறுவர்கள் வந்து,
“ரொம்பப் பசியாய் இருக்குதம்மா” என்று கூறினர்.

“கொஞ்சம் பொறுங்கள். அம்மனுக்கு நைவேத்யம் செய்து
விட்டு தருகிறேன்” என்றார் திரிபுரசுந்தரி.

“அவ்வளவு நேரம் பசி பொறுக்க முடியாதம்மா” என்ற
அவர்களின் உருக்கமான வேண்டுகோளைக் கேட்ட அவர்
நிவேதனப் பொருள்களை வயிறார பிச்சைக்காரச்
சிறுவர்களுக்குக் கொடுத்தார். பசி தீர்ந்த மகிழ்ச்சியில்
அவரை அவர்கள் வாழ்த்தினர்.

நடந்ததைக் கேட்ட ஐயருக்குக் கடுங்கோபம் வந்தது.
நிவேதனப் பொருள்களை அம்மனுக்கு நைவேத்யம்
செய்யாமல்; மனைவி செய்த காரியத்தை அவரால் மன்னிக்க
முடியவில்லை. கோபத்துடன் வீடு திரும்பி விட்டார்.

அம்பாளை மனமுருகப் பிரார்த்தித்த திரிபுரசுந்தரி,
“எப்படியோ, பிரசாதப் பொருள்களை என் வீட்டிற்கே
நீ தான் அனுப்ப வேண்டும்” என்று மீனாட்சியம்மனை
வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.

உள்ளே பயந்து நடுநடுங்கிக் கொண்டு திரிபுரசுந்தரி
தவிக்க கோபம் ஆறாத ஐயர் திண்ணையில்
உட்கார்ந்திருந்தார்.

அப்போது, ஒரு சிறுவன் வந்து அவரிடம்,
” ஐயா, அம்பாள் பிரசாதம் இதோ” என்று புஷ்பம்,
பழம்,சர்க்கரைப் பொங்கல், வடை ஆகியவற்றைத் தந்தான்.

ஒன்றும் புரியாத ஐயர் விழிக்கவே, உள்ளேயிருந்து ஓடி வந்த
அவர் மனைவி, “ஒன்றும் பேசாமல் அதை வாங்கிக்
கொள்ளுங்கள். அந்தப் பையன் எங்கிருந்து வருகிறான்”
என்பதைத் தொடர்ந்து சென்று பாருங்கள்” என்றாள்.

ஒன்றும் புரியாத நிலையில் பையனைத் தொடர்ந்து
சென்ற ஐயர் அந்தப் பையன் பிச்சைக்காரர்களுக்கு
பிரசாதப் பொருள்க்ளைத் தந்த அதே இடத்தில் திடீரென்று
மறைந்து விட்டான்.

எவ்வளவு தேடியும் அவனைக் காண முடியவில்லை.
ஊர் திரும்பி வந்த ஐயர் நடந்ததைச் சொல்ல திரிபுரசுந்தரி
அது அம்பிகையின் திருவிளையாடலே என்று உறுதி படக்
கூறினாள்.

சரியாக பத்து மாதம் கழித்து தம்பதிகளுக்கு இரட்டைக்
குழந்தைகள் பிறந்தன.

ராமன் லட்சுமணன் என்று அவர்களுக்குப் பெயரிடப்பட்டது.
இருவரின் ராமன் மட்டும் தாய்ப்பாலை அருந்தவே இல்லை.

இது எதனால் என்று குழம்பி இருந்த் திரிபுரசுந்தரி
அம்மாளுக்கு கனவில் அம்மன் தோன்றி, ‘பிரார்த்தித்தபடி
குழந்தையைக் கொடு’ என்று கேட்டாள்

இருவரில் எந்தக் குழந்தையைக் கொடுப்பது?
தம்பதிகள் குழந்தைகளுடன் மீனாட்சியம்மன் ஆலயம்
சென்றனர்.

அங்கு பட்டருக்கு அருள் வந்து எந்தக் குழந்தைக்கு காலில்
சங்கும் சக்கரமும் உள்ளதோ எதன் நாவில் நாராயண நாமம்
இருக்கிறதோ அந்தக் குழந்தையை விடு என்று உத்தரவு
பிறந்தது.

அதுவரை கவனிக்காத சங்கு சக்கர அடையாளங்களைக்
குழந்தை ராமனின் காலில் அனைவரும் கண்டனர்.

அங்கு குழந்தை ராமன் அம்மா என்று கூறியவாறே
மீனாட்சியம்ம்னை நோக்கித் தவழ்ந்து சென்றது.

பிரிய மனமின்றி ராமனை கோவிலில் விட்டு விட்டு தம்பதியினர்
வீடு திரும்பினர்.
-
---------------------------எஸ்.நாகராஜன்
நன்றி- தமிழன் வேதா
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Dec 26, 2020 9:25 pm

நன்றி ராம்
அறியாத அரிய தகவல் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக