புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_m10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10 
30 Posts - 86%
heezulia
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_m10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_m10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_m10"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது"


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 8:49 am

ஒரு காலத்தில் சொந்தமாக நிலம் வைத்து வேளாண்மை செய்வோரைப் பார்த்து பொருளாதார வலிமை கொண்டோராகவும், அவர்களுடைய உதவிக்கு எளிதாக சுற்றியுள்ளோர் ஒன்று சேர்ந்து கொள்வார்கள் என்றும் கருதுவார்கள். "அவனுக்கென்னடா குறைச்சல்.. காடு கழனி, ஆடு மாடு ன்னு குறைவில்லாம இருக்குன்னு" சொல்லி துணிச்சலாக மன நிறைவுடன் பெண்ணை கட்டிக் கொடுப்பார்கள். யாரேனும் அவங்களுக்கு கடன் இருக்குன்னு சொன்னால்.., "அதனாலென்ன வீட்டைச் சுற்றி பத்து தென்னை இருக்கு.. கொல்லையை கூட்டிப் பெருக்கினாலே குடும்பம் நடத்தலாம்" என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்வார்கள்.

அதாவது இதெல்லாம் தற்சார்பை பறைசாற்றுபவை.
பெரும்பாலும் வேளாண் குடும்பங்கள் யாரும் கையில் உள்ள ஆடு மாடுகளுக்கு மீறி கடன் வாங்க மாட்டார்கள். அதையும் மீறி நொடித்துப் போனால் முதலில் புன்செய் நிலங்களைக் கொடுப்பார்கள். அதற்கும் மேலே கைமீறும்போது நன்செய் நிலங்களை கொடுப்பார்கள். ஆனால் இவை அவ்வளவு எளிதாக நடக்காது. எந்த சூழலிலும் வீடு கடனில் போகாது. வீடும், 10 தென்னை மரங்கள் இருந்தால் அதிலிருந்து கிடைப்பவற்றை வைத்தே குடும்பம் நடத்திவிட முடிந்திருக்கிறது.

இதெல்லாம் ஏதோ 200 வருட பழங்கதை என்று நினைக்க வேண்டாம். வெறும் 25 வருடங்களுக்கு முன்வரை இருந்தது. குறைந்தது இரண்டு பத்தாயம், விதைகளை சேமிக்க பல வடிவங்களில் ஐந்தாறு குதிர் என வேளாண் குடி என்றாலே அவர்கள் வீடு மிடுக்காக இருந்தது.

இன்றைக்கெல்லாம் எந்த சேமிப்பும் கிடையாது. எதை வேண்டுமானாலும் அடமானம் வைத்து கடன் வாங்குகிறார்கள். வாங்கிய நோக்கத்தைத் தவிர இதர பயன்பாடுகளுக்கும் சரளமாக செலவு செய்கிறார்கள். அவ்வாறு சிதறிய செலவை நியாயம் என்றும் பேசுகிறார்கள். அதை சரியென்று வாதிட ஒரு கட்சியே இருக்கிறது. ஒருமுறை பெருங்கடனில் சிக்கிக் கொண்டால் அந்த சூழலிலிருந்து மீளவே முடியாது.

நேற்று ஒரு பஞ்சாபி விவசாயியைப் பார்த்து ஊடகவியலாளர் கேட்கிறார்..
"உங்களிடம் ஆறு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் இருக்கிறதாமே..! எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் உங்களிடம் எப்படி இவ்வளவு உணவுப்பொருட்கள் இருக்கின்றன.?" என்று.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கே சுருக்கென்று வலித்தது. அரசியல்வாதிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு..? அவர்கள் எப்படி விவசாயிக்கு உதவ முடியும்.? அப்படி உதவ முடிந்தால் தவறு எங்கே இருக்கிறது.? கண்டிப்பாக அந்த விவசாயி நொந்து போயிருப்பார். தனது வலியை கட்டுப்படுத்திக் கொண்டு பொறுமையாக பதில் சொல்கிறார்..
"எங்கள் விளைச்சலில் ஒன்று முதல் ஒன்றரை வருட தேவைக்கு சேமித்து வைத்து விட்டு எஞ்சியத்தைத் தான் விற்போம். அதிலிருந்து ஆறு மாதங்களுக்கு தேவையானதை எடுத்து வருவதில் என்ன பிரச்சினை..? எங்களால் ஆறு மாதங்கள் அல்ல.. ஒரு வருடத்திற்கு கூட யாருடைய உதவியும் இன்றி போராட முடியும்.!"

இந்த பதில் தான் தற்சார்பின் வலிமை.
இங்கே ஒரு நாள் (வராத)புயலுக்கே அஞ்சி நடுங்கி ஊரைச் சூறையாடியது நம் நிலைமை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 8:49 am

ஒருவேளை இன்றைய சமூகத்தினருக்கு பஞ்சாபி விவசாயியின் சொற்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல.. உலகம் முழுக்க உணவு உற்பத்தி செய்யும் வேளாண் மக்கள் மீது எப்போதும் ஆள்வோருக்கு அச்சம் இருக்கும். அவர்களுடைய தேர்தல் வாக்குக்காக என்று எல்லோரும் தவறாக கணிக்கிறீர்கள்..
அவர்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டால், அதைப்பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தான் உண்டு தன் வேலையுண்டு என்று அவர்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தி செய்து நிம்மதியுடன் வாழ்ந்து கொள்வார்கள். மற்ற பிறர் யாருக்கும் இது சாத்தியமில்லை. முற்றுகை இட்டவன்தான் பட்டினி கிடந்து சாவான்.

ஒரு விவசாயியைப் பார்த்து உன்னிடம் ஏது ஆறு மாதத்திற்கு தேவையான உணவு என்று கேட்பது தேசிய அவமானம். முட்டாள்தனத்தின் உச்சம்.

இன்று ஒரு விவசாயி வீட்டில் கூட பத்தாயம் இல்லை. விதைநெல்லை சேகரிக்கும் குதிர் கூட இல்லை.
"சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது" என்று பெரியவர்கள் திட்டுவார்கள். ஆனால் இன்றோ யார் செய்யும் வேளாண்மையும் வீடு வந்து சேர்வதில்லை. வைக்கோல் கூட வருவதில்லை.

நம்ம ஊரில் பசு மாடு வைத்திருக்கும் பலரைப் பார்த்துள்ளேன். கோனாரை வைத்து கறந்த பாலை டீக்கடையில் கொடுத்துவிட்டு அதே பாத்திரத்தில் பார்சல் டீ வாங்கிட்டு வந்து குடும்பத்துடன் குடிக்கிறார்கள். மாத இறுதியில் இவர்களிடம் மாட்டுக்கு தீவனம் வாங்க பணம் இல்லாமல் கடன் வாங்குகிறார்கள். மூன்றடுக்கு பானை முழுக்க தயிர் நிரப்பி உறியில் கட்டி உணவு உண்ட பலர் வீட்டில் சொட்டுத்தயிர் கூட இருப்பதில்லை.
இதெல்லாம் என்னவிதமான புத்திசாலித்தனம் என்று இன்னமும் புரியவில்லை.😤

நன்றி- வாட்சப்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக