ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Go down

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு Empty வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Post by ayyasamy ram Mon Dec 14, 2020 5:57 am

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு 202012140336219678_Farmers-fast-today-Police-concentrate-on-Delhi-border_SECVPF
-
புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச
ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை
பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள்
அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இந்த சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தி
டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட
மாநில விவசாயிகள் நேற்று 18-வது நாளாக போராட்டத்தை
தொடர்ந்தனர்.

சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில்
திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால்
தலைநகர் திணறி வருகிறது.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள்
தோல்வியடைந்த நிலையில், வேளாண் சட்டங் கள் தொடர்பாக
மத்திய அரசு வழங்கிய யோசனை களையும் விவசாயிகள் ஏற்கனவே
நிராகரித்து விட்டனர்.

அத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள்,
டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு
வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை
எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை,
ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில்
ஒன்றாகும்.

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து
மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் கள் போன்ற வாகனங்களில்
டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

எனவே டெல்லிக்கு வரும் சாலைகளில் நேற்று அதிக அளவில் போலீசார்
குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய
நெடுஞ்சாலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் முன்னேறுவதை
தடுக்க கூடுதல் கான்கிரீட் கட்டைகளும் அடுக்கப்பட்டன.
அதே நேரம் சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதையும்
உறுதி செய்தனர்.

விவசாயிகள் போராட்டத்தால் ஏற்கனவே பல சாலைகள்
அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், டெல்லிவாசிகளுக்கு தினந்தோறும்
போக்குவரத்து ஒழுங்கு முறைகளை போலீசார் அறிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து போலீசாரின் டுவிட்டர் பக்கத்தில் தினமும்
தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு Empty Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Post by ayyasamy ram Mon Dec 14, 2020 5:59 am

இது ஒருபுறம் இருக்க டெல்லி-நொய்டா இணைப்புச்சாலையின்
சில்லா எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த பாரதிய கிசான் யூனியன்
(பானு) அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங்
மற்றும் நரேந்திர சிங் தோமருடன் நேற்று முன்தினம் பேச்சு
வார்த்தை நடத்தினர்.
பின்னர் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர்.

இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில்,
‘எங்களின் கோரிக்கைகளை ராஜ்நாத்ஜி கேட்டுக்கொண்டதுடன்,
அவற்றை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார்.

அவரது பதிலால் திருப்தியடைந்துள்ள நாங்கள், சாலையில் இருந்து
வெளியேற முடிவு செய்திருக்கிறோம். எனினும் இதன் மூலம் எங்கள்
போராட்டம் முற்றுப்பெற்றதாக அர்த்தம் இல்லை’ என்று
தெரிவித்தார்.

இவ்வாறு சில்லா எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறியதால்
அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து சீரடைந்தது.

அதே நேரம் சிங்கு, திக்ரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நடந்து வரும்
போராட்டம் பெரும் வீரியமாக தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள்,
தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை)
உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான
குர்னம் சிங் சதுனி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,
‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய
அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே
காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம்
இருப்பார்கள்.

அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா
போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும்
போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த
ஒருசில பிரிவினர் தங்கள் போராட்டத்தை முடித்துள்ளனர்.
அவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் போராட்டத்தை நாசப்படுத்த
அரசு சதி செய்கிறது’ என்றும் தெரிவித்தார்.

மற்றொரு தலைவரான சிவகுமார் கக்கா, 3 சட்டங்களையும்
திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும்
இருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய
அமைப்புகள் அனைத்தும் இணைந்தே இருப்பதாகவும் கூறினார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு Empty Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Post by ayyasamy ram Mon Dec 14, 2020 6:01 am

மேலும், வருகிற 19-ந் தேதி முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த
காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு பதிலாக, ஒருநாள்
உண்ணாவிரதமாக நாளை (இன்று) நடத்துவதாகவும் விவசாயிகள்
தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மனைவி,
சகோதரிகள், தாய், மகள்கள் என நூற்றுக்கணக்கான பெண்களும்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.

பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்கள்
மூலம் டெல்லிக்கு வந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன்
போராட்டக்களத்தில் இணைந்துள்ளனர்.

இதில் சிலர் தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் தங்கியிருப்பதுடன்,
ஒரு சிலர் ஓரிரு நாட்கள் போராட்டத்தில் கலந்து விட்டு ஊர்
திரும்புகின்றனர். பின்னர் அங்கு குடும்பப்பணிகளையும், தங்கள்
வீட்டு ஆண்கள் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளையும்
கவனித்து விட்டு மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பி வருகின்றனர்.

இது குறித்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும்
லூதியானாவை சேர்ந்த மந்தீப் கவுர் (வயது 53) என்ற பெண் கூறுகையில்,
‘விவசாயம் என்பது பாலினம் சார்ந்த தொழில் அல்ல. ஆண்களோ,
பெண்களோ யார் பயிரிட்டாலும் எங்கள் வயல்கள் விளைச்சலை
கொடுக்கும்.

ஏராளமான ஆண் விவசாயிகள் இங்கு போராடுகிறார்கள்.
பின்னர் நாங்கள் எப்படி வீட்டில் இருக்க முடியும்?’ என்று தெரிவித்தார்.

அவருடன் வந்திருந்த சுக்விந்தர் கவுர் (68) என்ற விதவை மூதாட்டி கூறும்
போது, ‘எனது சகோதரரும், மருமகனும் பிற விவசாயிகளும் இங்கு
இருக்கும்போது, என்னால் வீட்டில் இரவில் நிம்மதியாக தூங்க
முடியவில்லை. இங்கு வந்தபிறகுதான் சரியாக தூங்க முடிந்தது’
என்று தெரிவித்தனர்.

75 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற மூதாட்டியோ, எங்களின்
உரிமைகளை பெறாமல் திரும்பமாட்டோம் எனவும், இதற்காக இந்த
இடத்தில் உயிர் போனாலும் கவலையில்லை எனவும் கூறினார்.

போராட்டக்களத்தில் தங்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை
என தெரிவித்த இந்த பெண்கள், கழிவறை வசதிகள் சற்று தொலைவில்
இருப்பதுதான் சிறிய குறை என கூறினர்.

இந்த பெண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்துக்
கொடுத்துள்ள கூடாரத்தில் இரவு தூங்குகின்றனர்.

இதற்கிடையே ராஜஸ்தானில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக
சென்ற விவசாயிகளை ராஜஸ்தான்-அரியானா எல்லையான ரிவாரி
பகுதியில் அரியானா மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர்.

சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளின் வாகனங்களை
முன்னேற விடாமல் தடுத்தனர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு Empty Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Post by ayyasamy ram Mon Dec 14, 2020 6:02 am


எனவே விவசாயிகள் ரிவாரி எல்லை அருகே ஜெய்சிங்பூர் கேதா
என்ற பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு மாநில
போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் பாதுகாப்பு
பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இவ்வாறு விவசாயிகள் போராட்டம் வீரியமாக நடந்து வரும் நிலையில்,
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, வேளாண் மந்திரி
நரேந்திர சிங் தோமர் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் வர்த்தக
இணை மந்திரி சோம் பர்காசும் உடன் சென்றார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து எந்த தகவலும்
வெளியிடப்படவில்லை. எனினும் விவசாயிகள் போராட்டத்தை
முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விவசாயிகளுடன்
நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்ததாக டெல்லி
வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி.
ராஜினாமா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு
ஆதரவாக, பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. (சிறைத்துறை) லக்மிந்தர்சிங் ஜாக்கர்,
தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர்
தெரிவித்தார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு Empty Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Post by ayyasamy ram Mon Dec 14, 2020 6:04 am

அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உண்ணாவிரதம்
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு 202012140540378127_Will-Fast-In-Solidarity-With-Protesting-Farmers-Arvind_SECVPF
-
புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று
இணையவழியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-

போராட்டம் நடத்தும் விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும்
மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். தனது ஆணவத்தை கைவிட்டு,
3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதாவை
கொண்டுவர வேண்டும்.

விவசாயிகளின் அழைப்புக்கு இணங்க திங்கட்கிழமை (இன்று) ஒருநாள்
மட்டும் நான் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்.
ஆம் ஆத்மி தொண்டர்களும், பொதுமக்களும் அதில் பங்கேற்க
வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு Empty Re: வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பட்டா கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் 29ம் தேதி உண்ணாவிரதம்
» மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை'
» வேளாண் சட்டங்களை இரவுக்குள் திருப்ப பெறாவிட்டால் ரயில்களை முடக்குவோம் என விவசாயிகள் எச்சரிக்கை
» டெல்லி போராட்டம்: சிங்கு எல்லையில் வாலிபால் விளையாடி மகிழ்ந்த விவசாயிகள்
» வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தவில்லையென்றால் நாங்கள் செய்வோம் - உச்ச நீதிமன்றம் அதிரடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum