புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
44 Posts - 61%
heezulia
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
2 Posts - 3%
viyasan
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
236 Posts - 43%
heezulia
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
21 Posts - 4%
prajai
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_m10இவங்க வேற மாதிரி அம்மா! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவங்க வேற மாதிரி அம்மா!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2021 1:54 pm

இவங்க வேற மாதிரி அம்மா! Tamil_News_1_7_2021_19565981627
-
இடுப்புவலி தாங்காமல் அந்த மாட்டுத் தொழுவத்தில் வந்து விழுந்தாள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அந்த இருபது வயது பெண்.“அம்மா” என்று அடிவயிற்றில் இருந்து குரலெடுத்து கதறிய அவளது கதறலை செவிமடுக்க, அக்கம் பக்கத்தில் ஆளரவமே இல்லை.மாட்டுத் தொழுவத்தில் இயேசுநாதர் மட்டும் பிறக்கவில்லை. அவளது மகளும் அங்கேதான் பிறந்தாள்.

குழந்தையை கையில் எடுத்துப் பார்த்தாள். தொப்புள் கொடி தாயையும், சேயையும் இணைத்திருந்தது.வீட்டில் பிரசவம் நடந்திருந்தால் விபரம் தெரிந்தவர்கள் யாராவது பத்திரமாக அகற்றியிருப்பார்கள். உலகம் அறியா அந்த சின்னப் பெண்ணுக்கு என்ன தெரியும்? அருகிலிருந்த கூரான கருங்கல்லை எடுத்து…

இந்த ‘கதை’யை வாசிக்கும்போதே நாடி, நரம்பெல்லாம் பதறுகிறது இல்லையா? கதையல்ல, நிஜம்.மகாராஷ்டிராவின் வார்தா மாவட்டத்தில் இருக்கும் குக்கிராமமான பிம்ப்ரியில், நவம்பர் 14, 1948 அன்று சிந்துதாய் சப்கல் பிறந்தார்.

குழந்தைகள் தினமன்று பிறந்திருந்தாலும், அவர் பெற்றோருக்கு தேவையற்ற குழந்தை.ஒரு குதிரை லாயத்தில் சொற்ப கூலிக்கு பணியாற்றிக் கொண்டிருந்த அப்பா அபிமான்ஜிக்கு அக்குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் வாழ்க்கை நெருக்கடி அப்படியில்லையே. எல்லோரும் அக்குழந்தையை ‘சிந்தி’ என்றுதான் அழைத்தார்கள்.

‘சிந்தி’ என்றால் மராத்தி மொழியில் ‘கிழிந்த துணி’ என்று அர்த்தம். பெற்றோருக்கு கூடுதல் சுமையாக வந்து பிறந்ததால், அந்த செல்லப் பெயர்.

‘அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு?’ என்பது அம்மாவின் வாதம். ஆனால் அப்பா அபிமான்ஜிக்கோ தன் மகள் படித்து பெரிய ஆள் ஆவாள் என்று நம்பிக்கை. பலகை வாங்கித்தரக்கூட வக்கில்லை என்றாலும் பள்ளிக்கு அனுப்பினார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார் சிந்து.அவருக்கு பத்து வயதாக இருக்கும்போது குடும்பத்தினரின், உறவினர்களின் வற்புறுத்தலால் திருமணம் நடந்தது.

கணவர் ஹரி சப்கலுக்கு வயது அப்போது முப்பது.“ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் இரண்டே இரண்டு முக்கியமான நிகழ்வுகள்தான் இருக்கிறது என்று எனக்கு கற்பிக்கப்பட்டது. முதல் நிகழ்வு திருமணம். அடுத்தது மரணம். எனக்கு முதல் நிகழ்வு நடந்து நவர்கான் காட்டுக்குள் இருந்த வார்தா என்கிற ஊருக்கு வாழப்போனேன்” என்று அந்நாட்களை நினைவுகூர்கிறார்

சிந்து.குடித்துவிட்டு வந்து அடிப்பதுதான் ஹரி, சிந்துவோடு நடத்திய பத்து வருட தாம்பத்யம். மூன்று மகன்கள். நான்காவதாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது வீட்டை விட்டு, இரக்கமேயின்றி நடு இரவில் அடித்து
துரத்தினார்.

ஒரு பண்ணையாரோடு சிந்துவுக்கு தொடர்பிருந்தது, அவரது குழந்தையைதான் வயிற்றில் சுமக்கிறார் என்று அபாண்டமாக குற்றம் சாட்டினார் ஹரி. அதன் பின்னர்தான் கட்டுரையின் தொடக்கத்தில் வரும் சம்பவம் நடந்தது.குழந்தை பெற்ற பச்சை உடம்புக்காரியாக இருந்த நிலையிலும், கைக்குழந்தையோடு சில கிலோ மீட்டர்களுக்கு வெறும் காலோடு நடந்து அம்மா வீடு போய் சேர்ந்தார் சிந்து. “கணவனோடு வருவதாக இருந்தால் வீட்டுக்குள் கால் வை. இல்லா விட்டால் எங்கேயாவது போய் ஒழி” என்று பிறந்தவீடு தன் பொறுப்பை நிராகரித்தது.

புகுந்த வீட்டுக்கும் போக சாத்தியமே இல்லை என்கிற நிலையில் தற்கொலை உணர்வுக்கு ஆளானார். தண்டவாளத்தில் தலை வைக்க போனபோது புதியதாய் பிறந்திருந்த மழலையின் சிரிப்பு அவர் மனதை மாற்றியது. பிச்சையெடுத்தாவது பிழைக்கலாம் என்கிற எண்ணத்துக்கு வந்தார்.

ரயில்வே பிளாட்ஃபாரங்களில் குழந்தையை தரையில் கிடத்தி உணவுக்காக கையேந்தினார். கால் வயிறு, அரை வயிறு நிரம்பியது.அப்போதுதான் கவனித்தார். தான் மட்டுமே அனாதை அல்ல. ரயில்வே நிலையம் முழுக்கவே அனாதைகளாலும், பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளாலும் நிறைந்திருந்தது. ‘பசிக்கிறது’ என்று உச்சரிக்கக்கூட கற்றுக்கொள்ளாத வயது வந்த குழந்தைகளும் கூட அவரோடு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது.

“உயிர்வாழ உணவுக்காக தெருவில் பிச்சை எடுக்கும்போதுதான் உணர்ந்தேன். எங்கேயும் போக வழியில்லாத எண்ணிலடங்காதோர் இருக்கிறார்கள். நான் முடிவெடுத்தேன். பிச்சை எடுத்தாவது அனைவரையும் காப்பேன் என்று”1973ல் யாருமற்றவர்களை வயது வித்தியாசமின்றி, பால் வேறுபாடின்றி தத்தெடுக்க ஆரம்பித்தார் சிந்து.

குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு கல்வி, திருமணம் என்று வாழ்க்கையில் நிலைநிறுத்த அத்தனை உதவிகளையும் (யாசகம் பெற்றுதான்) செய்ய ஆரம்பித்தார். வயதானோருக்கு உணவு, மருத்துவ வசதிகள் போன்ற ஏற்பாடுகளை செய்தார்.

இந்த வகையில் இன்றுவரை 1,500க்கும் மேற்பட்டோரை தன் குழந்தைகளாக உருவாக்கி உலக சாதனை படைத்திருக்கிறார் சிந்து. அனைவருமே இவரை ‘மா’ (அம்மா) என்றுதான் அழைக்கிறார்கள். இவரிடம் வளரும் ஒரு குழந்தையைகூட யாருக்கும் இதுவரை தத்து கொடுத்ததில்லை.

ஆனால், தன் சொந்த மகள் மம்தாவை மட்டும் தத்து கொடுத்துவிட்டார். ஏனெனில் குழந்தைகளிடம் காட்டும் பாசத்தில் வேறுபாடு வந்துவிடுமோ என்கிற அச்சத்தில். மகள் மம்தா சப்கல்லும் தாய்வழியிலேயே இப்போது ஆதரவற்றவர்களுக்கு இல்லம் அமைத்து, ‘மா’வுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்.

‘மா’வின் குடும்பம் எவ்வளவு பெரியது தெரியுமா?இருநூறுக்கும் மேற்பட்ட மருமகன்கள், ஏறத்தாழ நாற்பது மருமகள்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள். ‘மா’விடம் வளர்ந்தவர்களில் இன்றும் டாக்டர்களும், வழக்கறிஞர்களும், என்ஜினியர்களும் கூட உண்டு.

“இவர்களை வளர்க்க நான் பிச்சைதான் எடுத்தேன். ஆனால் தெருவோரங்களிலும், ரயில்வே பிளாட்ஃபாரங்களிலும் அல்ல. எனக்கு நன்றாக பேசவரும். ஒவ்வொரு ஊராக போய் பேசினேன். பசி என்னை பேசவைத்தது.

எங்களுக்கு பிச்சை கொடுங்கள். நாங்கள் வாழவேண்டும். எங்கள் குழந்தைகள் வளரவேண்டும் என்று மனமுருக கேட்டேன்” என்று வருமானத்துக்கு தான் தேர்ந்தெடுத்த வழியை சொல்கிறார்.

இப்போது இவரது பெயரில் ஆறு ஆதரவற்றோர் இல்லங்கள் நடைபெறுகிறது. அரிய சேவைக்காக ஐநூறுக்கும் மேற்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். இவரது வாழ்க்கை ‘மீ சிந்துதாய் சப்கல்’ என்கிற பெயரில் மராத்தியில் படமாகி, தேசிய விருதும் வென்றிருக்கிறது.
-
நன்றி-தினகரன்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக