ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிப்பிக்குள ஒரு முத்து

Go down

சிப்பிக்குள ஒரு முத்து Empty சிப்பிக்குள ஒரு முத்து

Post by ayyasamy ram Tue Dec 01, 2020 10:03 am



தீவிர பக்தி, முழுமையான ஈடுபாடு, ஆத்மார்த்தமான நட்பு,
இவை செயல்பாடுகளில் சிறப்பு சேர்க்கும். அதுமட்டுமல்ல,
வெற்றிக்கும் வழி வகுக்கும்.

இதைத்தான் கவிஞரின் அற்புதமான பாடல்வரிகள் குறிப்பிடும்.
‘நெஞ்சில் ஒரு களங்கமில்லை, சொல்லில் ஒரு பொய்யுமில்லை,
வஞ்சமில்லா வாழ்க்கையிலே தோல்வியுமில்லை’ என்று.

ஆத்மார்த்தமான அன்பில் குறை இருந்தாலும் அது நிறைவாகவே
தோன்றும், ஏனெனில் புறத்தோற்றம் சிப்பியாக இருந்தாலும்
உள்ளுக்குள் இருப்பது முத்து. இதை மனதில் கொள்ள வேண்டும்.

இதற்கு ராமாயணத்தில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவத்தை
கூறலாம்.

ராமர், சீதை, லட்சுமணன் பின்தொடர அயோத்தியை விட்டு
வெறியேறி கங்கைக் கரைப்பகுதியில் உள்ள வனத்திற்கு வருகிறார்.
அங்கு இருக்கும் முனிவர்கள் அவரை உபசரித்து ஒரு
பர்ணசாலையில் தங்க வைக்கின்றனர். ராமரோ கங்கையை கடந்து
செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு அங்கு தங்கிச்செல்வதாக
முனிவர்களிடம் கூறுகிறார்.

ராமர் வந்திருக்கும் செய்தியை அறிந்த கங்கைக்கரையில்
இருக்கும் சிருங்கிபேரம் பகுதியின் தலைவனான குகன், ராமரை
தரிசிக்க விரும்புகிறான். ஆயிரம் படகுகளுக்குத் தலைவனான
குகன் ராமரைக் காண தன் படைகளுடன் கிளம்புகிறான்.

அவன் கங்கைக்கரையில் நீண்ட காலமாகப் படகோட்டி வாழ்பவன்.
சிறந்த வில்லாளி. வேட்டை நாய்களை உடையவன், பெருத்த கருத்த
சரீரம். கனத்த மீசை, பெரும் சேனைக்குத் தலைவன்,

எப்போதும் இறைச்சியும், மீனும் தின்று தின்று வாய் புலால்
நாற்றம் அடிக்கும். அப்படிப்பட்ட கொடிய தோற்றம் உடைய அந்த
படகோட்டி குகன், தன் கைகளிலே தேன் நிறைந்த குடுவைகளையும்,
சமைத்த சுவையுள்ள மீன்களையும் எடுத்துக்கொண்டு ராமரை
தரிசிக்க வந்தான்.

உடன் சுற்றத்தாரை வெளியே நிறுத்திவிட்டு, தனது இடைவாளை
கழற்றி வைத்துவிட்டு பவ்யமாக பயபக்தியுடன் ராமர் இருந்த
பர்ண சாலைக்கு முன்வாயிலில் வந்து நின்று உள்ளே பார்த்து
குரல் கொடுத்தான்.

“இறைவா... என் தெய்வமே... தங்களைக் காண நன்றியுள்ள நாய்
வந்திருக்கிறேன். தரிசனம் தர வேண்டும்” என்று சொல்லி முடிக்க
வாயிலுக்கு வந்த லட்சுமணன், “நீ யார்... எதற்கு வந்தாய்... என்று
கேட்க, “அரசே நாயினும் கீழானவன் நான்.. கங்கையில் ஓடம்
விட்டு பிழைப்பவன். என் பெயர் குகன்,

தாங்கள் தொழும் ராமபிரானின் பாதங்களை தரிசிக்க வந்தேன்
என்று சொல்ல... “அப்படியா.. இங்கே இரு... இதோ வருகிறேன்”
என்று சொலலிவிட்டு உள்ளே சென்ற லட்சுமணன், ராமரிடம்
“தோற்றத்தில் கடுமையாக இருந்தாலும் துாய உள்ளத்தவன்,
தாயினும் அன்பு கொண்டவன், பண்பில் உயர்ந்த குகன்,
கங்கையில் ஓடம் விடும் வேடன். தங்களைக் காண தன்
சுற்றத்தாருடன் வந்திருக்கிறான்.” என்று கூற, ராமர் மகிழ்ந்து,

“சிறந்த வில்லாளி... படகு ஓட்டுவதில் கை தேர்ந்தவன்.
நமது நாட்டின் எல்லைப்பகுதியை எதிரிகள் தொட்டுவிடாமல்
இருக்க அவனது தந்தை காலத்தில் இருந்தே கங்கை
கரைப்பகுதியில் அரணாக நின்று பாதுகாப்பவர்கள்

சிறு வயதில் கங்கை நதியில் எதிரிப்படைகளை எதிர்த்து போரிட்ட
சமயம் பார்த்தது. நல்ல நண்பன் அழைத்து வா காண வேண்டும்”
என்று கூறினார்.

லட்சுமணன் குகனை அழைத்து வர, குகன் ராமரை கண்டு
மெய்சிலிர்த்து நின்றான். அவனது சிவந்த கண்களில் அன்பு
தெரிந்தது. அருள் கொஞ்சும் ராமரின் முகம் பார்த்து மனம்
மகிழ்ந்த குகன், அவருடைய திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

பின் எழுந்து வாயை பொத்தி பணிவுடன் நின்றான். பணிவுடன்
நின்ற குகனைப் பார்த்த ராமர்,
“குகனே... உன் வரவால் மனம் மகிழ்ந்தோம்”. நலமா... எங்கே
உன் சுற்றத்தார் அவர்களையும் வரச்சொல் என்றார்.
உடனே குகன் “தேவரீர் தாங்கள் நீண்ட துாரம் பயணப்பட்டு
வந்திருக்கிறீர்கள். தங்களுக்காக இனிய கொம்புத் தேனும்,
சமைத்த சுவையுள்ள மீனும் கொண்டு வந்திருக்கிறோம்.
எங்கள் அன்பு காணிக்கையை ஏற்றுக்கொண்டு தங்கள் பசியாற
வேண்டும்” என்று குகன் கூறிய அந்தக் கணத்தில் ராமருக்கு
காளத்தி நாதருக்கு வேடன் கண்ணப்பன் பன்றி மாமிசத்தை
அன்புடன் கொடுத்து புசிக்கச்சொன்னது சிவனின் கண்களில்
ரத்தம் வடிவதைப்பார்த்து தன் கண்களை தோண்டி சிவனுக்கு
வைத்த அந்த ஆத்மார்த்த அன்பு, குகனிடம் தெரிந்தது.

மீண்டும் குகன், ராமரிடம் “இனிமையான கொம்புத்தேனும்,
சுவையுள்ள சமைத்த மீனும், உங்களுக்காக கொண்டு
வந்திருக்கிறேன்.” தேவரீர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று
கூற ராமர் அருகில் இருந்த வயது முதிர்ந்த முனிவரிடம்
“தோற்றத்திற்கும், பேச்சுக்கும் உள்ள மாற்றத்தை பார்க்கும்
முனிவரே தீவிர அன்பு” என்று கூறிவிட்டு குகனிடம்

“என்பால் கொண்ட உன் அன்பு என்னை மகிழ்விக்கிறது.
ஆத்மார்த்தமாக என் பசியாற நீ கொண்டு வந்திருக்கும் இந்த
தேனும், மீனும் அமிர்தத்திற்கு இணையானது.
அன்புடன் நீ அளித்த இந்த உணவை நான் விரும்பி ஏற்கிறேன்.
உள்ளன்புடன் நீ பசியாறக் கூறியதில் என் பசியே அடங்கி,
வயிறு நிறைந்தது போலாகிவிட்டது.

நீ கொண்டு வந்த பொருளை பற்றி சிந்திக்காமல், அவற்றை
துாய உணவாகவே ஏற்கிறோம்” என்று கூறினார்.
பிறகு குகனிடம், “நாங்கள் இங்கு தங்கி நாளை கங்கையை
கடக்க நினைத்துள்ளோம். அதனால் நீ சுற்றத்தாருடன் உன்
படைகளை அழைத்து கொண்டு உன் வீட்டிற்கு போய் விட்டு,
நாளை விடியலில் மரக்கலத்துடன் வா... எங்களை அக்கரை
சேர்க்க” என்று கூறினார்.

“இந்த கானகத்தில் தங்களை தனியே விட்டு செல்ல, என்
மனம் இடம் தராது. ஐயனே.. என் பரிவாரங்களுடன் இன்று
இரவு தங்கள் பர்ணசாலை சுற்றி காவல் இருப்போம்.

நாளை தங்களை கங்கையின் அடுத்த கரை சேர்ப்பித்த
பின்பே நான் மீண்டும் என் இல்லம் செல்வேன்” என்று
கூறினான்.

இந்த சம்பவத்தில் குகனின் ஆத்மார்த்த அன்பு முழு ஈடுபாடு
வெளிப்படுகிறது. அது தான் ராமரை ஈர்த்தது.
நால்வருடன் சேர்த்து நீ ஐந்தாவது சகோதரன் என்று அன்புடன்
அணைத்துக்கொண்டார் ராமர். அது தான் குகனுக்குக் கிடைத்த
வெற்றி.
----------------------
– ஹெச். வசந்தகுமார்
திண்ணை-வாரமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum