புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
31 Posts - 51%
heezulia
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
14 Posts - 23%
Dr.S.Soundarapandian
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
6 Posts - 10%
T.N.Balasubramanian
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
4 Posts - 7%
ஆனந்திபழனியப்பன்
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
1 Post - 2%
Rutu
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
1 Post - 2%
prajai
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
1 Post - 2%
rajuselvam
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
1 Post - 2%
mruthun
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
1 Post - 2%
kavithasankar
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
219 Posts - 43%
heezulia
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
202 Posts - 39%
Dr.S.Soundarapandian
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
24 Posts - 5%
i6appar
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
16 Posts - 3%
mohamed nizamudeen
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
14 Posts - 3%
Anthony raj
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
13 Posts - 3%
T.N.Balasubramanian
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
13 Posts - 3%
prajai
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
5 Posts - 1%
Guna.D
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
புதுவாழ்வு பிறந்தது  Poll_c10புதுவாழ்வு பிறந்தது  Poll_m10புதுவாழ்வு பிறந்தது  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுவாழ்வு பிறந்தது


   
   

Page 1 of 2 1, 2  Next

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Tue Nov 17, 2020 5:18 pm

புதுவாழ்வு பிறந்தது

கிராமங்களின்  அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும்.  நான், நகரத்திலிருந்து சொந்த  கிராமத்திற்கு ப் போக வாய்ப்பு  ஏற்படும்  போதெல்லாம்  அதை அனுபவிப்பது உண்டு .  ஆனால் கிராமத்தின் அறியாமையை  மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .
கதை ஆக்கம் : கந்தன்சாமி

Code:
கதை புதுப்பிக்கப்பட்டு இன்று( 28/11/2020) தொடர்கிறது


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2020 5:59 pm

நீங்கள் எழுதியுள்ள கதையை படித்தேன்.
படிப்பின் மீது அவனுக்கு இருந்த விருப்பம் தெரிந்தது . மறுநாள் முதல் அவனைப் பள்ளிக்கூடம் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
நீங்கள் சொன்ன ஒரு சொல்லுக்கே அவன் பள்ளி சென்றுவிட்டானா ? அவர் வீட்டில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ?
இந்த முக்கியமான பகுதியை இன்னும் விரிவு படுத்தி இருக்கலாமோ !
எந்தன் தனிப்பட்ட  கருத்து உங்களை கட்டுப்படுத்தாது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Wed Nov 25, 2020 1:32 pm

தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா, நான் கதையை விரிவுபடுத்த விரும்புகிறேன், முன்பு பதிவிட்ட கதையிலேயே எடிட் செய்ய முடியுமா? அல்லது புதியதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா ?  வழிகாட்டி உதவினால்
மிகவும் நன்றி ஐயா !
                                அன்புடன்,
                              கந்தன்சாமி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 25, 2020 6:08 pm

சிறிய திருத்தங்கள் என்றால் கஷ்டப்படாமல் நிர்வாக குழுவினர் மாற்றமுடியும்.
கதையையே மாற்றுவது கடினமான ஒன்றே.
கதையின் பழைய பதிவிலேயே புதிய பதிவாக பதிவிடவும்.
அது (திருத்தப்பட்ட )பதிவான பின்பு,பழைய பதிவை நீக்கிவிடுகிறேன்.
சரியா?



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Wed Nov 25, 2020 7:54 pm

மிகவும் நன்றி ஐயா !

அன்புடன்,
கந்தசாமி :வணக்கம்:


kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sat Nov 28, 2020 3:53 pm

(ஆசிரியரால் புதுப்பிக்கப்பட்ட கதை )
புதுவாழ்வு பிறந்தது

கிராமங்களின்  அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும்.  நான், நகரத்திலிருந்து சொந்த  கிராமத்திற்குப் போக வாய்ப்பு  ஏற்படும்  போதெல்லாம்  அதை அனுபவிப்பது உண்டு .  ஆனால் கிராமத்தின் அறியாமையை  மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .

         அன்று கிராமத்தில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து வாரப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன்.  என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது .  அடர்த்தியான மரங்களின்  வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது.  அந்த விடியற்காலையில்  எண்ணெய் எடுக்கும்  மரச்செக்கின்  சத்தம் , மாடுகளின் சலங்கை ஒலியுடன்  மாடுகளை அதட்டும் செக்கின் சொந்தக்காரர்  குரலுடன் சேர்ந்து வந்தது .


          புத்தகத்தை மூடிவிட்டு செக்கு இருக்கும் பக்கம் சென்றேன்.  மாடுகள் முழுவட்டமாய்  இசைத்தட்டு போல் சுற்றி வந்து கொண்டிருந்தன.


          அந்த செக்கின் சொந்தக்காரரின் பெயர் வெள்ளை .  ஆனால் அவர் நிறம்   அட்டைக்கருப்பு.  படிப்பறிவு இல்லாதவர் ,  செக்கை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் குடும்பம் .  சில நாட்கள் விடியற்காலையில்  ஆரம்பிக்கும் செக்கின் ஒலி சில சமயங்களில்  மாலை வந்து இருட்டிய பிறகுதான் முடிவுக்கு வரும்.  சில சமயம் ஒன்றும் வேலையில்லாமல்  ஓலைக் கீற்றால் மூடப்பட்டிருக்கும்   வேலை இல்லை என்றால் அன்று அவர்கள் வீட்டில் அடுப்பு  எரியாது.

         மாலை வேளைகளில் தவறாமல்  அவர்கள் வீட்டில் சண்டை  நடக்கும் .  ஏழைகளின் வீட்டில் தரித்தரமும் சண்டையும் மட்டுமே எப்பொழுதும் குடியிருக்கும்?

        ஒவ்வொரு முறை  நான்  ஊருக்கு வரும் போதும்  சண்டை இல்லாத  நல்ல நாள் ஒன்று   உண்டா?  என நன் நினைப்பதுண்டு ஆனால் ஏமாற்றம்   அடைவதுதான் மிச்சம்.

         ஒருமுறை மாடுகள் பிடிக்கச்சென்று  பணத்தை  எண்ணத் தெரியாமல்  ஏமாந்த அனுபவம் வெள்ளைக்கு  ஏற்பட்டது உண்டு .  இவருக்கு படிக்கத்தெரியாது என்பதனாலேயே  ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம்.  ஏமாந்த  எரிச்சலில்  வீட்டிற்கு  வந்து கஷ்டபடுவார்.


    பிள்ளைகளுக்கு  படிக்க ஆசை, இவருக்கோ  வீட்டில் இருந்து கொண்டு இவருடன் செக்கு உலக்கை  மாற்ற  ஒத்தாசையாக இருப்பதற்கு ஆட்கள் தேவை என்ற மனப்பான்மை தன் பிள்ளைகளையும் ஒரு நாள்  தகராறு செய்து  பள்ளிக்கூடம் அனுப்பாமலே நிறுத்திவிட்டார்.

    வேர்கடலை, எள்  வாங்கும் இடத்தில் வித்தியாசமான விலைகளைச் சொல்லி இவரை ஏமாற்றும்  வணிகர்கள்.  சமயத்தில்  என்னிடம் தினசரிகளைப் பார்த்து விலையைச்சொல்லச் சொல்வார் .  விலைகளில்  வித்தியாசம்  இருந்தால்  ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணத்தில்  எல்லோர் மீதும்  எரிந்து விழுவார்  அல்லது மாடுகள்  அடி வாங்கும் அலறி ஓடும் .

     சாப்பாட்டிற்கே தினசரி  கூலியில் இருந்துதான் பணம்  தருவார் .   பசி நேரத்திற்கு  சரியான சாப்பாடு  இல்லை என்றால்  மனைவியிடம் தகராறு செய்வார்.


     எரிச்சல், இயலாமை  அவரை தகராறுக்கு  அழைத்துச்சென்றுவிடும் .


     ஒருநாள்  அவர் பையன் செக்கு மாடுகளை விரட்டிக்கொண்டு இருந்தான் .  அவனை  கூப்பிட்டு   விசாரித்தேன் .  படிப்பின் மீது  அவனுக்கு இருந்த  ஆர்வமும் மிகுந்த விருப்பமும் தெரிந்தது .  அவர்களது பெற்றோரை அணுகி  கல்வி கற்பதனால் கிடைக்கும் பலன்களை எடுத்துக்கூறி,  பிள்ளைகளை குறிப்பிட்ட வயதில் தான் படிக்க முடியும் “பருவத்தே பயிர் செய் “,  ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? போன்ற மூதோர் மொழிகளைக் கூறி  அவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி அவன் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் படி வலியுறுத்தி கூறினேன்.

                அவனது தந்தை யோசித்து பிறகு அவரது முடிவை தெரிவிப்பதாக கூறினார்.

இப்படியே பல நாட்கள்  அவர்களை சந்தித்து அவர்கள் மனதை  மாற்றி அவரது  பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப  நான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றேன்.

நான்   மறுநாள் முதல்  அவனைப் பள்ளிக்கூடம்  செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.


     இன்னொரு முறை  ஊருக்கு வந்தபோது பார்த்தேன் .  வெள்ளையின்  பையன்கள்  பள்ளிக்கு செல்கிறார்கள்.  வெள்ளை தானும் முதியோர் பள்ளிக்கு ஒரு மாதமாய்ச் சென்று வருவதாய் சந்தோஷமாகச் சொன்னார் .  இப்போதெல்லாம்  தகறாரு ஏதும் இல்லாமல்  குடும்பம்  மகிழ்ச்சியாக  நடப்பதைச் சொன்னார். கல்வி மூலமாக வாழ பல வழிகள்  உள்ளதை தெரிந்து கொண்டேன்.  நவீன உலகத்தைத்தெரிந்துகொண்டேன்.  எந்திர செக்கு  ஒன்று வாங்கிக்கொண்டால் என் பையனை  மேலே படிக்கச் வைக்கலாம் என்று
மகிழ்ச்சி பொங்க வெள்ளை என்னிடம் கூறினார். என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

         படிக்காதவர்களை படிக்கச்செய்ய படித்தவர்கள்  தானே முன்னிற்க  வேண்டும் .  நான் என் கடமையைத்தானே செய்தேன்.

    மீண்டும்  கிராமத்தில் நான் வீட்டுத்திணையில்  உட்கார்ந்து பத்திரிகைகள்  படித்துக்கொண்டிருந்தேன்.  என் காலருகே  பல குஞ்சுகளுடன் கோழி  மேய்ந்து கொண்டிருந்தது.  அடர்த்தியான மரங்களின்  வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது.  அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும்  மரசெக்கின் சத்தம்  மாடுகளின்  சலங்கை  ஒலியுடனும் மாடுகளை அதட்டும் வெள்ளையின் குரலுடனும் வெள்ளையின் மகன்கள்  வீட்டுத்திண்ணையில் பாடபுத்தகத்தைபிடிக்கும் சப்தத்துடன்  சேர்ந்து  இனிமையாக வந்தது.

கதை ஆக்கம் : கந்தன்சாமி

kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sat Nov 28, 2020 3:59 pm

ஐயா, நான் என் கதையை விரிவு படுத்தி புதிதாக பதிவு செய்து இருக்கிறேன் , ஏற்கெனவே பதிவு செய்த கதையை நீக்கிவிடலாம் என்று
தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா !
மிகவும் நன்றி ஐயா ! :வணக்கம்:

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2020 6:20 pm

kandan samy wrote:ஐயா, நான் என் கதையை விரிவு படுத்தி புதிதாக பதிவு செய்து இருக்கிறேன் , ஏற்கெனவே பதிவு செய்த கதையை நீக்கிவிடலாம் என்று
தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா !
மிகவும் நன்றி ஐயா ! :வணக்கம்:
இப்போது படிப்பதற்கு நன்றாக இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?
நான் உணருகிறேன்.
கூறியபடி பழைய பதிவு நீக்கலாம் என்றால் நீங்கள் கதையை  புது பதிவாக போட்டு உள்ளீர். பழைய பதிவின் பின்னூட்டங்கள், நீங்கள் கதை மாற்றி அமைக்கவேண்டிய அவசியமெல்லாம் தெரியாதே அய்யா.
வேறொரு வழி பண்ணுவோம்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Sat Nov 28, 2020 7:35 pm

கதை சிறப்பாக அமைய காரணமான தங்களுக்குத் தான் நான் மிகவும் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளேன் ஐயா.
நீங்கள் ஆசிரியரால் புதிப்பிக்கப்பட்ட கதை என்று
போட்டிருக்கிறீர்களே ஐயா,அதுவே
எனக்கு போதுமானது ஐயா.
பழைய பதிவை நீக்க முடிந்தால்
நீக்குங்கள் இல்லை என்றால் 
தாங்கள் சிரமப்பட வேண்டாம்
ஐயா !
                                       அன்புடன்,
                                       கந்தன்சாமி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 28, 2020 9:33 pm

உங்கள் பழைய பதிவு எங்கே ? தேடிப் பாருங்கள். புன்னகை புன்னகை கந்தன்சாமி அவர்களே.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக