Latest topics
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!by ayyasamy ram Today at 14:25
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 12:59
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 10:48
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 8:52
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 8:50
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 8:49
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:47
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:46
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 8:46
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 8:44
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42
» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!
Page 1 of 1
தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!
![தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்! Tamil_News_large_2657036](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2657036.jpg)
-
சென்னையின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டத்தில்
அமைக்கப்பட்டு உள்ள தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்,
இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில்
உள்ள தேர்வாய் கண்டிகை - கண்ணன்கோட்டை ஆகிய இரண்டு
ஏரிகளை இணைத்து, 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய நீர்த்தேக்கம்
அமைக்கப்பட்டு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமாக,
இது அமைந்துள்ளது. வறட்சி காலங்களில், சென்னையில் குடிநீர்
தட்டுப்பாட்டை சமாளிப்பதற்கு, இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது.
நீர்த்தேக்கம் அமைக்க, மொத்தம், 1,485 ஏக்கர் நிலங்கள்
பயன்படுத்தப்பட்டு உள்ளன. இதில், 800 ஏக்கர் விவசாய நிலங்கள்,
55 ஏக்கர் வனத்துறை நிலங்கள் அடக்கம்.
நிலம் எடுப்புக்கு, இழப்பீடு வழங்க மட்டும், 280 கோடி ரூபாய்
செலவழிக்கப்பட்டு உள்ளது. இந்த நீர்த்தேக்கத்தில், 0.50 டி.எம்.சி., நீரை
சேமித்து, சென்னையின், 15 நாள் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி
செய்ய முடியும்.
Re: தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!
![தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்! Gallerye_012116284_2657036](https://img.dinamalar.com/data/gallery/gallerye_012116284_2657036.jpg)
-
இரண்டு முறை நிரப்புதல் வாயிலாக, ஓராண்டில், ௧ டி.எம்.சி., நீரை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்தில் இருந்து நாள்தோறும், 66 மில்லியன் லிட்டர் நீரை, பூண்டிக்கு அனுப்ப, சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, நீர்த்தேக்க சுற்றுப்பகுதிகளில் உள்ள, 700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, பாசன வசதி கிடைக்கும். இதற்காக, ஐந்து மதகுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்பகுதிகளின் சாகுபடி மட்டுமின்றி, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும், இந்த நீர்த்தேக்கம் வழிவகை செய்யும்.ஆந்திராவின் கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீரை, நீர்த்தேக்கத்திற்கு எடுத்து வர, 8.6 கி.மீ.,க்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தேவைக்காக, 72 ஆண்டுகளுக்கு பின் அமைக்கப்படும் நீர்த்தேக்கம் என்ற பெருமையை, இது பெற்றுள்ளது. சென்னை, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில், இன்று நடக்கும் விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நீர்த்தேக்கத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கவுள்ளார்.
இதற்கான நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலர் சண்முகம், பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
புதிய வடிவமைப்பில் நீரளவை மானி!
செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரியில் உள்ளது போன்றே, புதிய வடிவமைப்புடன், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில், நீரளவை தளம் அமைக்கப்பட்டு உள்ளது. நீர்த்தேக்கத்தில் உள்ள நீர் இருப்பை கண்டறிய, நீர் அளவீட்டு மானி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீரளவை தளத்தின் கீழ் பகுதியில், ஷட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு, பம்பிங் செய்யப்படும் நீர், குழாய் வாயிலாக, பூண்டி ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கான பணிகளை, குடிநீர் வாரியம் செய்து வருகிறது. விரைவில், இப்பணிகள் முடியும் வாய்ப்புள்ளது.
நீரளவை தளத்தின் மேல் பகுதியில் இருந்து, நீர்த்தேக்கத்தின் முழு அழகையும் கண்டு ரசிக்கும் வகையில், 'வியூ பாயின்ட்' போல,
இது அமைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்கத்திற்கு அருகே, 1,000 சதுர அடியில் ஆய்வு மாளிகை கட்டப்பட்டு உள்ளது. இங்கு, நீர்த்தேக்கத்தை பராமரிக்கும் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் தங்க அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சிப்காட் வளம் செழிக்கும்!
நீர்த்தேக்கத்தின் கரைக்கு அருகே, தேர்வாய் கண்டிகை சிப்காட் மற்றும் சிட்கோ ஆகியவை உள்ளன. இங்கு, சர்வதேச டயர் தொழிற்சாலை, எண்ணெய் உற்பத்தி ஆலை, கட்டுமானத்திற்கான நவீன கற்களை உற்பத்தி செய்யும் ஆலை உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பல்வேறு நிறுவனங்கள் விரைவில் இயங்குவதற்கான பணி நடந்து வருகிறது. இதனால், சிப்காட் மற்றும் சிட்கோவிற்கு, வரும் காலங்களில் நீர் தேவை அதிகரிக்கும். புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டு உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், இந்நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் கிடைக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
நீர்த்தேக்கத்தை சுற்றி, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால், மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்படுத்தப்பட்டு, மழை பொழிவிற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியை ஒட்டி நீர்த்தேக்கம் உள்ளதால், வரும் காலங்களில், பறவைகள் சரணாலயமாகவும், புதிய சுற்றுலா தளமாக உருவாகவும் வாய்ப்புள்ளது. நீர்த்தேக்கத்தில் மீன்வளத்தை பெருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகைய காரணங்களால், திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
Re: தாகம் தீர்க்க தயாரானது தேர்வாய் கண்டிகை புதிய நீர்த்தேக்கம்!
இன்று கொண்டாட்டம்!
தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க அர்ப்பணிப்பு விழா, கலைவாணர் அரங்கில் நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்கும்படி, நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு, அரசு அழைப்பு அனுப்பியுள்ளது.
இதனால், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத் திற்கு, உயர் அதிகாரிகள் இன்று செல்ல போவதில்லை. அதே நேரத்தில், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில், கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிலம் கொடுத்த விவசாயிகள், ஒத்துழைப்பு கொடுத்த உள்ளூர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா ஏற்பாடில், இனிப்புகள் வழங்கப்படவுள்ளன.
இதற்காக, நீர்த்தேக்கத்தில் உள்ள முகாம் அலுவலகத்திற்கு வெளியே,
சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு காசு கூட உயரவில்லை!
தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்க திட்டத்திற்கு, ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய, 2013 செப்டம்பரில், கண்காணிப்பு பொறியாளராக மகேஸ்வரன் இருந்தார். இவரை தொடர்ந்து, பக்தவச்சலம், மணி, முத்தையா ஆகிய கண்காணிப்பு பொறியாளர்கள் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டனர்.
இதுமட்டுமின்றி, திட்ட செயற்பொறியாளர்கள் பலரும் மாற்றப்பட்டனர். நில எடுப்பு வழக்கால், பணிகள் தாமதமானது. ஆறு ஆண்டு கால இழுபறிக்கு பின், இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை, துறையின் முக்கியப்புள்ளிக்கு நெருங்கிய நிறுவனம் செய்தது.
ஆண்டுக்கு ஆண்டு, கட்டுமானப் பொருட்கள் செலவு உயர்ந்த நிலையில், பணிகளை மேற்கொள்ள முடியாமல், இந்நிறுவனம் திணறியது.
ஆனால், 'திட்ட மதிப்பீட்டு நிதியிலேயே பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஒரு காசு கூட ஏற்றி தரக்கூடாது' என, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டார்.
இதையடுத்து, திட்ட மதிப்பீட்டு நிதியிலேயே பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, குறைந்தபட்சம், 50 கோடி ரூபாய் வரை அரசுக்கு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய அரசு உடனடியாக தீர்க்க வேண்டிய டாப் 10 பிரச்னைகள்!
» 70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்!
» வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள்.
» "தணியாத தாகம் "
» தாகம்
» 70 வயதாகும் பூண்டி நீர்த்தேக்கம்!
» வெள்ள நீர்த்தேக்கம் --நிவாரண பொருட்கள்.
» "தணியாத தாகம் "
» தாகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|