ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்

Go down

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Empty ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்

Post by ayyasamy ram Thu Nov 19, 2020 7:55 am

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Tamil_News_large_2654819

ஆண்களுக்கென்று ஒரு தினம் உண்டா..
அது எப்போது என்று கேள்வி வருகிறது அல்லவா..
காரணம் ஆண்களுக்கான முக்கியத்துவத்தை
பெரும்பாலும் இந்த உலகம் கண்டு கொள்வதில்லை.

ஆண் என்பவன் கட்டடத்தின் அஸ்திவாரம்
போன்றவன் தான். மேலே தெரியும் கட்டடங்கள்
மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பெண்களைக்
கொண்டாடும் அளவிற்கு ஆண்களைக்
கொண்டாடுகிறோமா என்றால் பதில் இல்லை
என்பதாகவே இருக்கும்.

பெண்ணின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் சமூகம்
ஆண்களின் உணர்வுகளைப் பற்றி சிந்திப்பதே
இல்லை. ஆண்களை எப்படியாக இந்த சமூகம்
சித்தரித்து இருக்கின்றது...

ஆண் என்பவன் வீரமானவனாகவும், மன உறுதி
உடையவனாகவும் தலைமைப் பண்பு மிக்கவனாகவும்
சோதனைகள் மிகுந்த போதும் மனம் கலங்காதவனாக
மட்டுமே இந்த சமூகம் பார்த்து இருக்கின்றது.

மென்மை குணம்கொண்டவர்களையும், அழும்
ஆண்களையும் கோழை என்றே சொல்லி வருகிறோம்.
காரணம் மென்மை குணம்கொண்ட ஆண்களை நாம்
விரும்புவதில்லை. ஆண்பிள்ளை அழக்கூடாது.
ஆண் குழந்தையை தைரியமானவன் என்றே
பழக்கப்படுத்திவிட்டோம்.

ஆண்களுக்கான பிரச்னைகள்

ஆண்களுக்கென்றும் பிரச்னைகள் உண்டு தானே.
தனக்கான பிரச்னையை எழுதவோ, சொல்லவோ
விரும்பாத ஆண், பெண்களுக்கான பிரச்னைகளுக்காக
குரல் கொடுத்ததுண்டு.

ஆண்கள் பற்றி பெண்கள் எழுதியதாக பெரிய அளவில்
கவிதைகளோ, நுால்களோ இல்லை.ஆனால் ஆண்கள்,
பெண்களை பெரும்பாலும் புரிந்தவர்கள் தான்.
அவர்கள் அன்பை உள்ளேயே வைத்துக் கொண்டு
வெளியே அடையாளம் காட்டாதவர்கள்.

பெண்களின் செயல்களிலும் பின்னணியில் இருப்பவர்கள்
பெரும்பாலும் ஆண்கள்தான். தாய்மைப் பண்பு கொண்ட
ஆண்களும் உண்டு. பெண்களுக்கெதிராக தீங்கிழைக்கும்
ஆண்களும் உண்டு.

குற்றம் செய்யும் ஆண்களைத் தண்டிப்பது அவசியமானது.
அதே சமயத்தில் ஆண்களே இப்படித்தான் என்று
பொதுமைப்படுத்த வேண்டியதில்லை.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம் Empty Re: ஆண் என்னும் அற்புதம்- இன்று (நவ.19) ஆண்கள் தினம்

Post by ayyasamy ram Thu Nov 19, 2020 10:04 am

சமூக களைகளை கிள்ளி எடுக்க வேண்டிய
நேரத்தில், நல்ல செடிகளையும், களைகளாக
நினைத்து பிடுங்கி விடக் கூடாது.அப்படி என்னதான்
ஆண்களுக்கு பெரிய பிரச்னைகள் இருந்து விடப்
போகிறது என்றால் மனரீதியாக, உடல்ரீதியாக
பாதிக்கப்படும் ஆண்கள் அதிகம் உண்டு.

ஆண் என்பவனின் மீது சுமத்தப்படும் சுமைகள் அதிகம்.
அந்த சுமைகளை பிறப்பின் போதே ஏற்றி வைத்து
விடுகிறது சமூகம். சம்பாதிக்க சிங்க குட்டி பிறந்துட்டான்.
சாண் பிள்ளையானாலும் ஆண்பிள்ளை என்று அவன்
விரும்பியோ, விரும்பாமலோ தலைமைப் பண்பை ஏற்றி
விடுகிறோம்.

வாயற்று போனவர்கள்

சம்பாதிக்காத ஆடவனை பெண் விரும்புவதிலை
என்பதையே’இல்லானை இல்லாளும்வேண்டாள்
மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்செல்லா(து)
அவன்வாயிற் சொல்’
என்று நல் வழி கூறுகிறது.’வினையே ஆடவர்க்கு உயிரே’
என்று குறுந் தொகையும் ஆண் மகன் என்பவன்
பொருளீட்டுபவனாக இருக்க வேண்டும் என்று
நினைக்கிறது.

இல்லத்தரசியாக இருக்கிறேன் என்று சொல்லும்
பெண்ணை இயல்பாகவும், இல்லத்தரசனாக வீட்டைப்
பார்த்து, குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
என்று சொல்லும் ஆணை வித்தியாசமாகவும் தானே
நோக்குகிறோம்.கொரோனா காரணமாக தொழில்
நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த ஆண்கள்,
விரக்தி அடைந்து விபரீத முடிவு எடுக்கும் செய்திகளை
நாளிதழ்களில் பார்க்கும் போது சற்றே எனக்குள்
யோசனை தோன்றியது.

பெண்களுக்கான பல தளங்கள் இருக்கும் போது
ஆண்களின் பிரச்னைகளைப் பேசுவதற்கான தளங்கள்
ஏன் இல்லாமல் போனது.

‘கற்பென்று வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவில் வைப்போம்’ என்று சொன்ன பாரதி எங்கே..
வாயற்றுப் போன ஆண்களின் குரலை எப்போது
கேட்கப் போகிறோம்.

ஆணின் தியாகம்

எதிர்மறையான ஆண்களைப் பற்றியே பேசும்,
சித்தரிக்கும் சமூகம் நல்லமனம் கொண்ட
ஆண்களைப் பற்றி ஏன் உணர்வதில்லை.

ஆண் மகன் என்ற காரணத்திற்காக தள்ளாத
வயதிலும் குடும்பத்திற்காக உழைக்கும் ஆணின்
தியாகத்தை எப்போது சமூகம் பேசப்போகிறது.

குடும்ப வன்முறைச் சட்டம் பெண்களுக்கான
சரியான சட்டம் என்ற போதிலும், அதை தனக்கு
சாதகமாகப் பயன்படுத்தும் பெண்களும் உண்டு
தானே. அதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா.

ஆணின் பக்கமுள்ள நியாயங்களைக் கேட்டதுண்டா.
ஆண்கள் தவறு செய்யவில்லையா என்று இங்கே
ஒரு கேள்வி எழும்.ஆனால் எல்லா ஆண்களையும்
குற்றவாளிகள் என்ற பொதுதன்மைக்குள் அடக்கி
விட முடியாது.

குற்றம் செய்யும் ஆண்களின் விழுக்காடுகள்
பெரும்பான்மை உள்ளது என்று சொன்னாலும்,
அதனை மாற்றுவதற்கான ஆலோசனைகளை
அவர்களுக்கு வழங்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஆம்பள அப்படித் தான் இருப்பான் என்று ஆண்கள்
செய்யும் தவறுக்கு பரிந்து பேசும் நிலைமை மாற
வேண்டும். தனி மனித உணர்வுகள் மதிக்கப் பட
வேண்டும் என்பது இங்கு பேசப்பட வேண்டியவை.

.-ம.ஜெயமேரி, ஆசிரியை ஊ.ஒ.தொடக்க பள்ளி

க.மடத்துப்பட்டி- தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum