Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதுவாழ்வு பிறந்தது
2 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதுவாழ்வு பிறந்தது
புதுவாழ்வு பிறந்தது
கிராமங்களின் அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும். நான், நகரத்திலிருந்து சொந்த கிராமத்திற்கு ப் போக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அதை அனுபவிப்பது உண்டு . ஆனால் கிராமத்தின் அறியாமையை மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .
கதை ஆக்கம் : கந்தன்சாமி
கிராமங்களின் அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும். நான், நகரத்திலிருந்து சொந்த கிராமத்திற்கு ப் போக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அதை அனுபவிப்பது உண்டு . ஆனால் கிராமத்தின் அறியாமையை மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .
கதை ஆக்கம் : கந்தன்சாமி
- Code:
கதை புதுப்பிக்கப்பட்டு இன்று( 28/11/2020) தொடர்கிறது
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Re: புதுவாழ்வு பிறந்தது
நீங்கள் எழுதியுள்ள கதையை படித்தேன்.
படிப்பின் மீது அவனுக்கு இருந்த விருப்பம் தெரிந்தது . மறுநாள் முதல் அவனைப் பள்ளிக்கூடம் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
நீங்கள் சொன்ன ஒரு சொல்லுக்கே அவன் பள்ளி சென்றுவிட்டானா ? அவர் வீட்டில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ?
இந்த முக்கியமான பகுதியை இன்னும் விரிவு படுத்தி இருக்கலாமோ !
எந்தன் தனிப்பட்ட கருத்து உங்களை கட்டுப்படுத்தாது.
படிப்பின் மீது அவனுக்கு இருந்த விருப்பம் தெரிந்தது . மறுநாள் முதல் அவனைப் பள்ளிக்கூடம் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
நீங்கள் சொன்ன ஒரு சொல்லுக்கே அவன் பள்ளி சென்றுவிட்டானா ? அவர் வீட்டில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா ?
இந்த முக்கியமான பகுதியை இன்னும் விரிவு படுத்தி இருக்கலாமோ !
எந்தன் தனிப்பட்ட கருத்து உங்களை கட்டுப்படுத்தாது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: புதுவாழ்வு பிறந்தது
தங்களது கருத்துக்கு மிகவும் நன்றி ஐயா, நான் கதையை விரிவுபடுத்த விரும்புகிறேன், முன்பு பதிவிட்ட கதையிலேயே எடிட் செய்ய முடியுமா? அல்லது புதியதாக மீண்டும் பதிவு செய்ய வேண்டுமா ? வழிகாட்டி உதவினால்
மிகவும் நன்றி ஐயா !
அன்புடன்,
கந்தன்சாமி
மிகவும் நன்றி ஐயா !
அன்புடன்,
கந்தன்சாமி
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Re: புதுவாழ்வு பிறந்தது
சிறிய திருத்தங்கள் என்றால் கஷ்டப்படாமல் நிர்வாக குழுவினர் மாற்றமுடியும்.
கதையையே மாற்றுவது கடினமான ஒன்றே.
கதையின் பழைய பதிவிலேயே புதிய பதிவாக பதிவிடவும்.
அது (திருத்தப்பட்ட )பதிவான பின்பு,பழைய பதிவை நீக்கிவிடுகிறேன்.
சரியா?
கதையையே மாற்றுவது கடினமான ஒன்றே.
கதையின் பழைய பதிவிலேயே புதிய பதிவாக பதிவிடவும்.
அது (திருத்தப்பட்ட )பதிவான பின்பு,பழைய பதிவை நீக்கிவிடுகிறேன்.
சரியா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: புதுவாழ்வு பிறந்தது
மிகவும் நன்றி ஐயா !
அன்புடன்,
கந்தசாமி
கந்தசாமி
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
புதுவாழ்வு பிறந்தது
(ஆசிரியரால் புதுப்பிக்கப்பட்ட கதை )
புதுவாழ்வு பிறந்தது
கிராமங்களின் அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும். நான், நகரத்திலிருந்து சொந்த கிராமத்திற்குப் போக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அதை அனுபவிப்பது உண்டு . ஆனால் கிராமத்தின் அறியாமையை மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .
அன்று கிராமத்தில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து வாரப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது . அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரச்செக்கின் சத்தம் , மாடுகளின் சலங்கை ஒலியுடன் மாடுகளை அதட்டும் செக்கின் சொந்தக்காரர் குரலுடன் சேர்ந்து வந்தது .
புத்தகத்தை மூடிவிட்டு செக்கு இருக்கும் பக்கம் சென்றேன். மாடுகள் முழுவட்டமாய் இசைத்தட்டு போல் சுற்றி வந்து கொண்டிருந்தன.
அந்த செக்கின் சொந்தக்காரரின் பெயர் வெள்ளை . ஆனால் அவர் நிறம் அட்டைக்கருப்பு. படிப்பறிவு இல்லாதவர் , செக்கை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் குடும்பம் . சில நாட்கள் விடியற்காலையில் ஆரம்பிக்கும் செக்கின் ஒலி சில சமயங்களில் மாலை வந்து இருட்டிய பிறகுதான் முடிவுக்கு வரும். சில சமயம் ஒன்றும் வேலையில்லாமல் ஓலைக் கீற்றால் மூடப்பட்டிருக்கும் வேலை இல்லை என்றால் அன்று அவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது.
மாலை வேளைகளில் தவறாமல் அவர்கள் வீட்டில் சண்டை நடக்கும் . ஏழைகளின் வீட்டில் தரித்தரமும் சண்டையும் மட்டுமே எப்பொழுதும் குடியிருக்கும்?
ஒவ்வொரு முறை நான் ஊருக்கு வரும் போதும் சண்டை இல்லாத நல்ல நாள் ஒன்று உண்டா? என நன் நினைப்பதுண்டு ஆனால் ஏமாற்றம் அடைவதுதான் மிச்சம்.
ஒருமுறை மாடுகள் பிடிக்கச்சென்று பணத்தை எண்ணத் தெரியாமல் ஏமாந்த அனுபவம் வெள்ளைக்கு ஏற்பட்டது உண்டு . இவருக்கு படிக்கத்தெரியாது என்பதனாலேயே ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம். ஏமாந்த எரிச்சலில் வீட்டிற்கு வந்து கஷ்டபடுவார்.
பிள்ளைகளுக்கு படிக்க ஆசை, இவருக்கோ வீட்டில் இருந்து கொண்டு இவருடன் செக்கு உலக்கை மாற்ற ஒத்தாசையாக இருப்பதற்கு ஆட்கள் தேவை என்ற மனப்பான்மை தன் பிள்ளைகளையும் ஒரு நாள் தகராறு செய்து பள்ளிக்கூடம் அனுப்பாமலே நிறுத்திவிட்டார்.
வேர்கடலை, எள் வாங்கும் இடத்தில் வித்தியாசமான விலைகளைச் சொல்லி இவரை ஏமாற்றும் வணிகர்கள். சமயத்தில் என்னிடம் தினசரிகளைப் பார்த்து விலையைச்சொல்லச் சொல்வார் . விலைகளில் வித்தியாசம் இருந்தால் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் எல்லோர் மீதும் எரிந்து விழுவார் அல்லது மாடுகள் அடி வாங்கும் அலறி ஓடும் .
சாப்பாட்டிற்கே தினசரி கூலியில் இருந்துதான் பணம் தருவார் . பசி நேரத்திற்கு சரியான சாப்பாடு இல்லை என்றால் மனைவியிடம் தகராறு செய்வார்.
எரிச்சல், இயலாமை அவரை தகராறுக்கு அழைத்துச்சென்றுவிடும் .
ஒருநாள் அவர் பையன் செக்கு மாடுகளை விரட்டிக்கொண்டு இருந்தான் . அவனை கூப்பிட்டு விசாரித்தேன் . படிப்பின் மீது அவனுக்கு இருந்த ஆர்வமும் மிகுந்த விருப்பமும் தெரிந்தது . அவர்களது பெற்றோரை அணுகி கல்வி கற்பதனால் கிடைக்கும் பலன்களை எடுத்துக்கூறி, பிள்ளைகளை குறிப்பிட்ட வயதில் தான் படிக்க முடியும் “பருவத்தே பயிர் செய் “, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? போன்ற மூதோர் மொழிகளைக் கூறி அவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி அவன் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் படி வலியுறுத்தி கூறினேன்.
அவனது தந்தை யோசித்து பிறகு அவரது முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
இப்படியே பல நாட்கள் அவர்களை சந்தித்து அவர்கள் மனதை மாற்றி அவரது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றேன்.
நான் மறுநாள் முதல் அவனைப் பள்ளிக்கூடம் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
இன்னொரு முறை ஊருக்கு வந்தபோது பார்த்தேன் . வெள்ளையின் பையன்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். வெள்ளை தானும் முதியோர் பள்ளிக்கு ஒரு மாதமாய்ச் சென்று வருவதாய் சந்தோஷமாகச் சொன்னார் . இப்போதெல்லாம் தகறாரு ஏதும் இல்லாமல் குடும்பம் மகிழ்ச்சியாக நடப்பதைச் சொன்னார். கல்வி மூலமாக வாழ பல வழிகள் உள்ளதை தெரிந்து கொண்டேன். நவீன உலகத்தைத்தெரிந்துகொண்டேன். எந்திர செக்கு ஒன்று வாங்கிக்கொண்டால் என் பையனை மேலே படிக்கச் வைக்கலாம் என்று
மகிழ்ச்சி பொங்க வெள்ளை என்னிடம் கூறினார். என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
படிக்காதவர்களை படிக்கச்செய்ய படித்தவர்கள் தானே முன்னிற்க வேண்டும் . நான் என் கடமையைத்தானே செய்தேன்.
மீண்டும் கிராமத்தில் நான் வீட்டுத்திணையில் உட்கார்ந்து பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி மேய்ந்து கொண்டிருந்தது. அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரசெக்கின் சத்தம் மாடுகளின் சலங்கை ஒலியுடனும் மாடுகளை அதட்டும் வெள்ளையின் குரலுடனும் வெள்ளையின் மகன்கள் வீட்டுத்திண்ணையில் பாடபுத்தகத்தைபிடிக்கும் சப்தத்துடன் சேர்ந்து இனிமையாக வந்தது.
கதை ஆக்கம் : கந்தன்சாமி
புதுவாழ்வு பிறந்தது
கிராமங்களின் அழகு,தூய்மை, இன்னும் பல விஷயங்கள் எனக்குப்பிடிக்கும். நான், நகரத்திலிருந்து சொந்த கிராமத்திற்குப் போக வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் அதை அனுபவிப்பது உண்டு . ஆனால் கிராமத்தின் அறியாமையை மட்டுமே என்னால் ஜுரணிக்க முடிவதில்லை .
அன்று கிராமத்தில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து வாரப்பத்திரிகை படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது . அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரச்செக்கின் சத்தம் , மாடுகளின் சலங்கை ஒலியுடன் மாடுகளை அதட்டும் செக்கின் சொந்தக்காரர் குரலுடன் சேர்ந்து வந்தது .
புத்தகத்தை மூடிவிட்டு செக்கு இருக்கும் பக்கம் சென்றேன். மாடுகள் முழுவட்டமாய் இசைத்தட்டு போல் சுற்றி வந்து கொண்டிருந்தன.
அந்த செக்கின் சொந்தக்காரரின் பெயர் வெள்ளை . ஆனால் அவர் நிறம் அட்டைக்கருப்பு. படிப்பறிவு இல்லாதவர் , செக்கை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் குடும்பம் . சில நாட்கள் விடியற்காலையில் ஆரம்பிக்கும் செக்கின் ஒலி சில சமயங்களில் மாலை வந்து இருட்டிய பிறகுதான் முடிவுக்கு வரும். சில சமயம் ஒன்றும் வேலையில்லாமல் ஓலைக் கீற்றால் மூடப்பட்டிருக்கும் வேலை இல்லை என்றால் அன்று அவர்கள் வீட்டில் அடுப்பு எரியாது.
மாலை வேளைகளில் தவறாமல் அவர்கள் வீட்டில் சண்டை நடக்கும் . ஏழைகளின் வீட்டில் தரித்தரமும் சண்டையும் மட்டுமே எப்பொழுதும் குடியிருக்கும்?
ஒவ்வொரு முறை நான் ஊருக்கு வரும் போதும் சண்டை இல்லாத நல்ல நாள் ஒன்று உண்டா? என நன் நினைப்பதுண்டு ஆனால் ஏமாற்றம் அடைவதுதான் மிச்சம்.
ஒருமுறை மாடுகள் பிடிக்கச்சென்று பணத்தை எண்ணத் தெரியாமல் ஏமாந்த அனுபவம் வெள்ளைக்கு ஏற்பட்டது உண்டு . இவருக்கு படிக்கத்தெரியாது என்பதனாலேயே ஏமாற்றுவதற்கென்றே ஒரு கூட்டம். ஏமாந்த எரிச்சலில் வீட்டிற்கு வந்து கஷ்டபடுவார்.
பிள்ளைகளுக்கு படிக்க ஆசை, இவருக்கோ வீட்டில் இருந்து கொண்டு இவருடன் செக்கு உலக்கை மாற்ற ஒத்தாசையாக இருப்பதற்கு ஆட்கள் தேவை என்ற மனப்பான்மை தன் பிள்ளைகளையும் ஒரு நாள் தகராறு செய்து பள்ளிக்கூடம் அனுப்பாமலே நிறுத்திவிட்டார்.
வேர்கடலை, எள் வாங்கும் இடத்தில் வித்தியாசமான விலைகளைச் சொல்லி இவரை ஏமாற்றும் வணிகர்கள். சமயத்தில் என்னிடம் தினசரிகளைப் பார்த்து விலையைச்சொல்லச் சொல்வார் . விலைகளில் வித்தியாசம் இருந்தால் ஏமாந்துவிட்டோம் என்ற எண்ணத்தில் எல்லோர் மீதும் எரிந்து விழுவார் அல்லது மாடுகள் அடி வாங்கும் அலறி ஓடும் .
சாப்பாட்டிற்கே தினசரி கூலியில் இருந்துதான் பணம் தருவார் . பசி நேரத்திற்கு சரியான சாப்பாடு இல்லை என்றால் மனைவியிடம் தகராறு செய்வார்.
எரிச்சல், இயலாமை அவரை தகராறுக்கு அழைத்துச்சென்றுவிடும் .
ஒருநாள் அவர் பையன் செக்கு மாடுகளை விரட்டிக்கொண்டு இருந்தான் . அவனை கூப்பிட்டு விசாரித்தேன் . படிப்பின் மீது அவனுக்கு இருந்த ஆர்வமும் மிகுந்த விருப்பமும் தெரிந்தது . அவர்களது பெற்றோரை அணுகி கல்வி கற்பதனால் கிடைக்கும் பலன்களை எடுத்துக்கூறி, பிள்ளைகளை குறிப்பிட்ட வயதில் தான் படிக்க முடியும் “பருவத்தே பயிர் செய் “, ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ? போன்ற மூதோர் மொழிகளைக் கூறி அவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி அவன் வாழ்க்கையில் விளக்கு ஏற்றும் படி வலியுறுத்தி கூறினேன்.
அவனது தந்தை யோசித்து பிறகு அவரது முடிவை தெரிவிப்பதாக கூறினார்.
இப்படியே பல நாட்கள் அவர்களை சந்தித்து அவர்கள் மனதை மாற்றி அவரது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப நான் எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றேன்.
நான் மறுநாள் முதல் அவனைப் பள்ளிக்கூடம் செல்லுமாறு கேட்டுக்கொண்டேன்.
இன்னொரு முறை ஊருக்கு வந்தபோது பார்த்தேன் . வெள்ளையின் பையன்கள் பள்ளிக்கு செல்கிறார்கள். வெள்ளை தானும் முதியோர் பள்ளிக்கு ஒரு மாதமாய்ச் சென்று வருவதாய் சந்தோஷமாகச் சொன்னார் . இப்போதெல்லாம் தகறாரு ஏதும் இல்லாமல் குடும்பம் மகிழ்ச்சியாக நடப்பதைச் சொன்னார். கல்வி மூலமாக வாழ பல வழிகள் உள்ளதை தெரிந்து கொண்டேன். நவீன உலகத்தைத்தெரிந்துகொண்டேன். எந்திர செக்கு ஒன்று வாங்கிக்கொண்டால் என் பையனை மேலே படிக்கச் வைக்கலாம் என்று
மகிழ்ச்சி பொங்க வெள்ளை என்னிடம் கூறினார். என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.
படிக்காதவர்களை படிக்கச்செய்ய படித்தவர்கள் தானே முன்னிற்க வேண்டும் . நான் என் கடமையைத்தானே செய்தேன்.
மீண்டும் கிராமத்தில் நான் வீட்டுத்திணையில் உட்கார்ந்து பத்திரிகைகள் படித்துக்கொண்டிருந்தேன். என் காலருகே பல குஞ்சுகளுடன் கோழி மேய்ந்து கொண்டிருந்தது. அடர்த்தியான மரங்களின் வழியே வந்த காற்று என்னைப் பரவசப்படுத்தியது. அந்த விடியற்காலையில் எண்ணெய் எடுக்கும் மரசெக்கின் சத்தம் மாடுகளின் சலங்கை ஒலியுடனும் மாடுகளை அதட்டும் வெள்ளையின் குரலுடனும் வெள்ளையின் மகன்கள் வீட்டுத்திண்ணையில் பாடபுத்தகத்தைபிடிக்கும் சப்தத்துடன் சேர்ந்து இனிமையாக வந்தது.
கதை ஆக்கம் : கந்தன்சாமி
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Re: புதுவாழ்வு பிறந்தது
ஐயா, நான் என் கதையை விரிவு படுத்தி புதிதாக பதிவு செய்து இருக்கிறேன் , ஏற்கெனவே பதிவு செய்த கதையை நீக்கிவிடலாம் என்று
தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா !
மிகவும் நன்றி ஐயா !
தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா !
மிகவும் நன்றி ஐயா !
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Re: புதுவாழ்வு பிறந்தது
இப்போது படிப்பதற்கு நன்றாக இருப்பதாக நீங்கள் உணருகிறீர்களா?kandan samy wrote:ஐயா, நான் என் கதையை விரிவு படுத்தி புதிதாக பதிவு செய்து இருக்கிறேன் , ஏற்கெனவே பதிவு செய்த கதையை நீக்கிவிடலாம் என்று
தெரிவித்துக் கொள்கிறேன் ஐயா !
மிகவும் நன்றி ஐயா !
நான் உணருகிறேன்.
கூறியபடி பழைய பதிவு நீக்கலாம் என்றால் நீங்கள் கதையை புது பதிவாக போட்டு உள்ளீர். பழைய பதிவின் பின்னூட்டங்கள், நீங்கள் கதை மாற்றி அமைக்கவேண்டிய அவசியமெல்லாம் தெரியாதே அய்யா.
வேறொரு வழி பண்ணுவோம்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: புதுவாழ்வு பிறந்தது
கதை சிறப்பாக அமைய காரணமான தங்களுக்குத் தான் நான் மிகவும் நன்றி கூற
கடமைப்பட்டுள்ளேன் ஐயா.
நீங்கள் ஆசிரியரால் புதிப்பிக்கப்பட்ட கதை என்று
போட்டிருக்கிறீர்களே ஐயா,அதுவே
எனக்கு போதுமானது ஐயா.
பழைய பதிவை நீக்க முடிந்தால்
நீக்குங்கள் இல்லை என்றால்
தாங்கள் சிரமப்பட வேண்டாம்
ஐயா !
அன்புடன்,
கந்தன்சாமி
கடமைப்பட்டுள்ளேன் ஐயா.
நீங்கள் ஆசிரியரால் புதிப்பிக்கப்பட்ட கதை என்று
போட்டிருக்கிறீர்களே ஐயா,அதுவே
எனக்கு போதுமானது ஐயா.
பழைய பதிவை நீக்க முடிந்தால்
நீக்குங்கள் இல்லை என்றால்
தாங்கள் சிரமப்பட வேண்டாம்
ஐயா !
அன்புடன்,
கந்தன்சாமி
kandansamy- பண்பாளர்
- பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020
Re: புதுவாழ்வு பிறந்தது
உங்கள் பழைய பதிவு எங்கே ? தேடிப் பாருங்கள். கந்தன்சாமி அவர்களே.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» புகையில்லா புதுவாழ்வு!
» ஒளி பிறந்தது
» புத்தாண்டு பிறந்தது!
» வன வாசம் பிறந்தது..!
» காதல் பிறந்தது...!
» ஒளி பிறந்தது
» புத்தாண்டு பிறந்தது!
» வன வாசம் பிறந்தது..!
» காதல் பிறந்தது...!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|